Member
- Joined
- Aug 11, 2025
- Messages
- 32
- Thread Author
- #1
என் கனவோடு கைவீசும் காதல் இவள் யாரோ 💜
எபி 8
காலை கதிரவனின் பொன் கதிர்கள் முகத்தில் பட கண்களை திறந்தாள் காவ்யா. அவள் கண்டதோ தன் கையை பிடித்து கொண்டு அமர்ந்த படி மெத்தையில் தலை சாய்த்து உறங்கும் சித்தார்த்தை தான். மெதுவாக அவள் அசைய அந்த அசைவில் எழுந்த சித்தார்த் " என்னாச்சு கவி எதாவது வேணுமா இல்ல பெயின் மறுபடியும் இருக்கா " என்றான்
அவளோ ' அதெல்லாம் இல்ல இப்ப ஓகே ஐ பீல் பெட்டர், நீங்க என் இங்கயே தூங்கிட்டிங்க வீட்டுக்கு போய் இருக்கலாம்ல சாரி என்னால தான் உங்களுக்கு அலைச்சல் ' என்றாள்
அவனோ ' அப்படி எல்லாம் இல்ல கவி இதே எனக்கு ஒரு ப்ரோப்லேம் னா நீ ஹெல்ப் பண்ண மாட்டியா இதுவும் அப்படித்தான், சரியா ' என்றான்
அப்போது கதவை தட்டி விட்டு நிதி உள்ளே வந்தாள். நிதியோ ' ஹாய்! கைஸ், இப்ப எப்படி இருக்கு கவி ' என்றாள்
அவளோ ' யா பைன் நிதி, அப்பறம் மித்து கால் பண்ணாரா ' என்றாள்
நிதியோ ' ம்ம். நைட் பிலைட் ஏறுறதுக்கு முன்னாடி பண்ணான், சரி டாக்டர் என்ன சொன்னாங்க ' என்றாள்
அவளோ ' abortion pills சாப்டு ஓவர் டோஸ் ஆகி பிரியட்ஸ் வந்து இருக்குனு சொன்னாங்க ' என்றாள்
நிதியோ ' இருவரையும் பார்த்து யாரு இப்படி பண்ணாது ' என்றாள்
காவ்யா கண்ணில் வலியோடு ' கோதவரி ' என்றாள்
சித்தார்த் அதிர்ச்சியாக பார்க்க நிதியோ " இன்னும் என்ன தாண்டி அந்த பொம்பளைக்கு வேணுமா சும்மா உன்ன போட்டு கஷ்டப்படுத்திகிட்டே இருக்கு, அதான் அஞ்சு கிழவி மொத்த சொத்தையும் எழுதி வச்சிட்டு போய்டுச்சுல இன்னும் என்ன வேணுமா அவளுக்கு ' என்று கோபமாக கத்த
காவ்யாவோ ' நான் பிச்சைக்காரிய மாறி அவங்க கிட்ட கையெந்தி வாழற நிலைமை வரணும்னு எதிர் பாக்குறாங்க நிதி ஆனா என் மித்து இருக்க வர அப்படி ஒரு நிலைமை எனக்கு வராது நிதி அதனால நீ டென்ஷன் ஆகாத இந்நேரம் அந்த பொம்பளைக்கு இத விட அதிகமான வேதனையை மித்து கொடுத்து இருப்பான், அதனால பிரீயா விடு ' என்றாள்
நிதியோ இன்னும் கோபம் குறையாமல் 'அவ மட்டும் என் கையில கிடைச்ச அன்னக்கி தான் அவளுக்கு கடைசி நாள் ' என்றாள்
அப்போது சரியாக சித்தார்த் மொபைல் அடிக்க அவனோ அழைப்பை ஏற்று பேசினான் " ஆமா, சமர் ரூம் நம்பர் 103 தான் " என கூறி அழைப்பை தூண்டிக்க
காவ்யாவோ ' யார் சித்தார்த் சமரன்னா வா ' என்றாள்
அவனோ " ஆமா, கவி மார்னிங் கால் பண்ணி இருந்தான், நீ இங்க ஹாஸ்பிடல் ல இருக்கேன்னு சொன்னேன் சோ உன்ன பாக்க வரேன்னு ஒரே அடம் அதனால தான் உன்கிட்ட கேக்காம வர சொல்லிட்டேன் " என்றான்
அவளோ ' இட்ஸ் ஓகே ' என்றாள்
அப்போது சரியாக கதவை தட்டி கொண்டு உள்ளே வந்தான் சமர். நிதியின் கண்கள் ஒரு நிமிடம் சமரை ரசனையாக பார்க்க சமரோ மனதில் " இங்கேயும் இந்த ராங்கிய " என எண்ணி கொண்டான்.
காவ்யாவை கண்ட சமரோ " என்னாச்சு காவ்யா மா இப்ப எப்படி இருக்கு உடம்பு ஓகே வா " என்றான் ஒரு உடன்பிறவா சகோதரனை போல
காவ்யாவோ " இப்ப ஓகே சமரன்னா, அப்பறம் நீங்க எப்படி இருக்கீங்க " என்றாள்
அவனோ ' நான் நல்லா இருக்கேன் காவியா மா ' என்றான்
காவ்யாவோ " சமரன்னா இது என் பிரண்ட் நித்யா அப்பறம் நிதி இது சமர் என்னோட புது அண்ணா " என்று இருவரையும் அறிமுகம் செய்து வைத்தாள்.
சமரோ ' எனக்கு உன் பிரண்ட் நிதிய ஏற்கனவே தெரியுமா, முன்னாடி ஒரு கம்பெனில வேலை பார்த்தேன் அங்க தான் ரெண்டு பெரும் பார்த்து இருக்கோம்' என்றான்
காவ்யா சமர் கூறியதை கேட்டு நிதியை பார்க்க அவளோ " ஆமா கவி நான் சி. சி. சொலுஷன்ஸ்ல வேலை பாக்கும் போது பாத்து இருக்கேன் " என்றாள்
காவ்யாவோ " சரி எப்படி இருந்தாலும் இனிமே நாம நாலு பெரும் பிரிஎண்ட்ஸ் " என்றாள்
மூவரும் அதற்கு சம்மதிப்பதாய் தலை அசைத்தனர்.
---
மாலை நேரம்...
அன்று மாலை போல காவ்யா சித்தார்த் இருவரும் வீட்டிற்கு வந்தனர். சித்தார்த்தோ காவ்யாவை பார்த்து " இன்னக்கி எதுவும் செய்ய வேணாம் கவி நீ ரெஸ்ட் எடுத்துக்கோ " என்றான்
அவளோ 'ம்ம். சரி ' என அமைதியாக ஒய்வு எடுத்து கொண்டு இருந்தாள். வழமை போல இரவு உணவை உண்டு விட்டு காவ்யா தரையில் படுத்து உறங்கி விட சித்தார்த் மீதம் இருந்த வேலை எல்லாம் முடித்து விட்டு அறைக்கு சென்றான். அங்கோ காவ்யா ஆழ்ந்த உறக்கத்தில் எதோ கூற சித்தார்த் அவள் அருகில் சென்று அவள் பேசுவதை கேட்டான்.
அவளோ " என்ன விடுங்க இனிமே இப்படி பண்ண மாட்டேன் வலிக்குது விடுங்க " என்று புலம்ப சித்தார்த்தோ அவள் கைகளை பிடித்து கொண்டு ' ஒன்னும் இல்ல கவி ' என கூறி அவள் அருகில் படுத்து அவளை இருக்கமாக அணைத்து கொண்டான். அவளோ அவனின் அணைப்பில் கட்டுண்டு அமைதியாக சித்தார்த் நெஞ்சில் தலை வைத்து உறங்க ஆரம்பித்தாள். சித்தார்த்தும் மென்மையாக அவள் தலையை வருடிய படியே உறங்கி விட்டான்.
---
மறுநாள் காலை...
சூரியன் தன் காதலி தாமரையை காண குளிரும் நிலவை மேற்கு திசை நோக்கி விரட்டி விட்டு கிழக்கு வானில் ஒளிர்ந்தான் அதை கண்ட தாமரை மலரோ மொட்டு விரித்து அழகாய் சிரித்தாள். இங்கே முதலில் கண் விழித்த சித்தார்த் காவ்யா உறக்கம் கலையா வண்ணம் அவளை தலையணைக்கு மாற்றி விட்டு குளிக்க சென்றான். பின் அவனே சமைத்து வைத்து விட்டு அவன் அலுவலகம் செல்ல கிளம்பினான்.
அப்போது தான் எழுந்த காவ்யாவோ வேகமாக குளித்து விட்டு வெளியே வரவும் சித்தார்த் உள்ளே வரவும் சரியாக இருந்தது. காவ்யாவோ " குட் மார்னிங் சித்தார்த் " என்றாள்
அவனும் ' குட் மார்னிங் கவி, நான் கொஞ்சம் வேகமா கிளம்பனும், சாப்பாடு இருக்கு சாப்பிட்டு நீ பத்திரமா வீட்ல இரு, அப்பறம் எதாவது வேணும்னா மெசேஜ் போடு வரும் போது வாங்கிட்டு வரேன், பாய் ' என அவன் அலுவலக பாக் எடுத்து கொண்டு சென்று விட்டான்.
காவ்யாவும் அவன் பின்னால் வாசல் வரை சென்று வழி அனுப்பி வைத்தாள். அவன் பைக்கில் சென்றது வீட்டிற்குள் சென்று சின்ன சின்ன வேலை எல்லாம் முடித்து விட்டு அவன் சமைத்த உணவை உண்டு விட்டு அவள் லேப்டாப் எடுத்து அதில் வேலை செய்து கொண்டு இருந்தாள்.
---
இங்கே அலுவலகம் வந்த சித்தார்த்தோ வேகவேகமாக அந்த மேனேஜர் அறைக்குள் சென்றான். ' மே ஐ கம் இன் சார் ' என்றான்
உள்ளே இருந்து ' எஸ் கம் இன் ' என்ற குரல் வர அவனும் உள்ளே சென்றான்.
மேனேஜரோ ' சீ மிஸ்டர் சித்தார்த் வர வர உங்க ஒர்க் எனக்கு சட்டிஸ்பாக்ஷன் னா இல்ல சோ நீங்க ரிசைன் பண்ணிடுங்க ' என கூற
சித்தார்த்தோ ' சார் நான் ரீசன் அப்படினு தெரிஞ்சிக்கலாமா ' என்றான்
அவரோ ' தட் இஸ் கம்பெனி பர்சனல் அண்ட் யூ கேன் லீவு க்நொவ் ' என்றான்
அவனும் அமைதியாக அந்த கம்பெனியில் இருந்து வெளியேறி சமர் வீட்டிற்கு சென்றான்.
---
சமர் வீடு
சமர் மற்றும் சித்தார்த் இருவரும் சோபாவில் அமர்ந்து இருந்தனர். சமர் தான் பேச்சை ஆரம்பித்தான். ' என்னாச்சு மச்சான், ஏன் ஒரு மாதிரி இருக்க ' என்றான்
சித்தார்த்தோ அலுவலகத்தில் நடந்ததை கூறி ' எனக்கு இப்ப ஒரு வேலை வேணும் மச்சான் ' என்றான்
அவனோ ' சரி மச்சான் நான் தேடி பார்த்து சொல்றேன். அப்பறம் தங்கச்சிமா எப்படி இருகாங்க ' என்றான்
சித்தார்த்தோ ' இப்ப பரவா இல்ல டா, ' என்றான்
பின் இருவரும் பொதுவாக பேசி கொண்டு இருக்க மாலை போல சித்தார்த் சமரிடம் விடை பெற்று அவன் வீட்டிற்கு சென்றான்.
---
இரவு வீட்டில்...
காவ்யாவோ மாலை வீட்டிற்கு வந்தது முதல் சோகமாக இருக்கும் சித்தார்த் முகத்தை கண்டு எதோ யோசித்து கொண்டு இருந்தாள். பின் இரவு உணவை முடித்து கொண்ட காவ்யா மொட்டை மடியில் சென்று அங்கே அவள் அமைத்த சிறிய தோட்டம் அதில் திண்டு போல இருந்த நிழலான இடத்தில் அமர்ந்து வானை பார்த்து கொண்டு இருந்தாள்.
அப்போது அங்கே வந்த சித்தார்த்தோ ' இங்க என்ன பண்றிங்க மேடம் ' என கேட்டு கொண்டே அவள் அருகில் அமர்ந்து கொள்ள அவளோ " நான் ஒன்னும் பண்ணல சித்தார்த், ஆமா நீ ஏன் ஒரு மாதிரி இருக்க ' என்றாள்
அவனோ எப்படி கூறுவது என யோசித்து கொண்டு இருக்க அவளோ " சொல்ல விருப்பம் இல்லனா சொல்ல வேண்டாம் " என்றாள்
சித்தார்த்தோ ' அப்படி எல்லாம் இல்ல, அது வந்து நான் ஜோப் ரிசைன் பண்ணிட்டேன், அதான் நெக்ஸ்ட் என்ன பண்றதுனு தெரியல ' என்றான்
அவளோ ' வேற வேலைக்கு போறதுக்கு பதிலா சொந்தமா பிஸ்ஸின்ஸ் பன்றியா ' என்றாள்
அவனோ ' எனக்கு ஒரு ஹோட்டல் ஆரம்பிக்கணும்னு ஆசை கவி ஆனா வீட்ல ஒத்துக்கள அண்ட் என்கிட்ட அவளோ காசும் இல்ல, அதனால கிடைச்ச வேலையை செஞ்சிகிட்டு இருந்தேன், இப்ப அதுவும் போச்சு ' என்றான் கவலையோடு
காவ்யாவோ " உனக்கு ஹோட்டல் ஆரம்பிக்க ஓகே னா நாம கண்டிப்பா ஒரு ஹோட்டல் ஆரம்பிக்கலாம் சித்தார்த் என்கிட்ட கொஞ்சம் சேவிங்ஸ் இருக்கு அத வச்சி நீ உன் ஹோட்டல் ஆரம்பி எப்ப உனக்கு லாபம் வருதோ அப்ப திருப்பி கொடுத்து விடு " என்றாள்
அவனோ ' அது சரியா வாராது கவி, உனக்காக நான் எதாவது வாங்கி கொடுத்தா பரவாயில்லை ஆனா உன் பணத்தையும் சேர்த்து நானே யூஸ் பண்ண கூடாது ' என்றான்
அவளோ " ஏன்? நான் உன் பிரண்ட் தான நான் கொடுத்தா வாங்கிக்க மாட்டியா " என்றாள்
அவனோ ' ஆமா, நீ என் பிரண்ட் இல்லனு சொல்லல ஆனா இப்படி பணம் எல்லாம் வேண்டாம் கவி ' என்றான்
அவளோ ' அது எல்லாம் முடியாது, நீ ஹோட்டல் ஆரம்பிக்குற ஓகே ' என்றாள்
அவனோ ' பச்! சொன்ன கேளு இந்த ஐடியா இதோட விட்டுடு அண்ட் இந்த மாசம் ஊருக்கு 20 ஆயிரம் அனுப்பனும் என்கிட்ட காசு இல்ல சோ அந்த அமௌன்ட் மட்டும் கொடு அது போதும் ' என்றான்
அவளோ ' முடியாது, ' என முகத்தை திருப்பி கொள்ள
அவனோ அவள் குழந்தை தனமான செயலில் உள்ளே ரசித்து கொண்டு வெளியே அமைதியான முகத்தோடு அவள் கைகளை பிடித்து கொண்டு " இத பத்தி முதல மித்து கிட்ட பேசு அவன் ஓகே சொன்ன நான் வாங்கிக்குறேன் " என அவளுக்கு செக் வைப்பதாய் நினைத்து அவனுக்கு அவனே செக் வைத்து கொண்டான்.
அவளோ ' அப்ப மித்து ஓகே சொன்ன உனக்கு ஓகேவா ' என்றாள்
அவனோ ' சரி ஓகே ' என்றான்
காதல் கூடுமா 💞...
எபி 8
காலை கதிரவனின் பொன் கதிர்கள் முகத்தில் பட கண்களை திறந்தாள் காவ்யா. அவள் கண்டதோ தன் கையை பிடித்து கொண்டு அமர்ந்த படி மெத்தையில் தலை சாய்த்து உறங்கும் சித்தார்த்தை தான். மெதுவாக அவள் அசைய அந்த அசைவில் எழுந்த சித்தார்த் " என்னாச்சு கவி எதாவது வேணுமா இல்ல பெயின் மறுபடியும் இருக்கா " என்றான்
அவளோ ' அதெல்லாம் இல்ல இப்ப ஓகே ஐ பீல் பெட்டர், நீங்க என் இங்கயே தூங்கிட்டிங்க வீட்டுக்கு போய் இருக்கலாம்ல சாரி என்னால தான் உங்களுக்கு அலைச்சல் ' என்றாள்
அவனோ ' அப்படி எல்லாம் இல்ல கவி இதே எனக்கு ஒரு ப்ரோப்லேம் னா நீ ஹெல்ப் பண்ண மாட்டியா இதுவும் அப்படித்தான், சரியா ' என்றான்
அப்போது கதவை தட்டி விட்டு நிதி உள்ளே வந்தாள். நிதியோ ' ஹாய்! கைஸ், இப்ப எப்படி இருக்கு கவி ' என்றாள்
அவளோ ' யா பைன் நிதி, அப்பறம் மித்து கால் பண்ணாரா ' என்றாள்
நிதியோ ' ம்ம். நைட் பிலைட் ஏறுறதுக்கு முன்னாடி பண்ணான், சரி டாக்டர் என்ன சொன்னாங்க ' என்றாள்
அவளோ ' abortion pills சாப்டு ஓவர் டோஸ் ஆகி பிரியட்ஸ் வந்து இருக்குனு சொன்னாங்க ' என்றாள்
நிதியோ ' இருவரையும் பார்த்து யாரு இப்படி பண்ணாது ' என்றாள்
காவ்யா கண்ணில் வலியோடு ' கோதவரி ' என்றாள்
சித்தார்த் அதிர்ச்சியாக பார்க்க நிதியோ " இன்னும் என்ன தாண்டி அந்த பொம்பளைக்கு வேணுமா சும்மா உன்ன போட்டு கஷ்டப்படுத்திகிட்டே இருக்கு, அதான் அஞ்சு கிழவி மொத்த சொத்தையும் எழுதி வச்சிட்டு போய்டுச்சுல இன்னும் என்ன வேணுமா அவளுக்கு ' என்று கோபமாக கத்த
காவ்யாவோ ' நான் பிச்சைக்காரிய மாறி அவங்க கிட்ட கையெந்தி வாழற நிலைமை வரணும்னு எதிர் பாக்குறாங்க நிதி ஆனா என் மித்து இருக்க வர அப்படி ஒரு நிலைமை எனக்கு வராது நிதி அதனால நீ டென்ஷன் ஆகாத இந்நேரம் அந்த பொம்பளைக்கு இத விட அதிகமான வேதனையை மித்து கொடுத்து இருப்பான், அதனால பிரீயா விடு ' என்றாள்
நிதியோ இன்னும் கோபம் குறையாமல் 'அவ மட்டும் என் கையில கிடைச்ச அன்னக்கி தான் அவளுக்கு கடைசி நாள் ' என்றாள்
அப்போது சரியாக சித்தார்த் மொபைல் அடிக்க அவனோ அழைப்பை ஏற்று பேசினான் " ஆமா, சமர் ரூம் நம்பர் 103 தான் " என கூறி அழைப்பை தூண்டிக்க
காவ்யாவோ ' யார் சித்தார்த் சமரன்னா வா ' என்றாள்
அவனோ " ஆமா, கவி மார்னிங் கால் பண்ணி இருந்தான், நீ இங்க ஹாஸ்பிடல் ல இருக்கேன்னு சொன்னேன் சோ உன்ன பாக்க வரேன்னு ஒரே அடம் அதனால தான் உன்கிட்ட கேக்காம வர சொல்லிட்டேன் " என்றான்
அவளோ ' இட்ஸ் ஓகே ' என்றாள்
அப்போது சரியாக கதவை தட்டி கொண்டு உள்ளே வந்தான் சமர். நிதியின் கண்கள் ஒரு நிமிடம் சமரை ரசனையாக பார்க்க சமரோ மனதில் " இங்கேயும் இந்த ராங்கிய " என எண்ணி கொண்டான்.
காவ்யாவை கண்ட சமரோ " என்னாச்சு காவ்யா மா இப்ப எப்படி இருக்கு உடம்பு ஓகே வா " என்றான் ஒரு உடன்பிறவா சகோதரனை போல
காவ்யாவோ " இப்ப ஓகே சமரன்னா, அப்பறம் நீங்க எப்படி இருக்கீங்க " என்றாள்
அவனோ ' நான் நல்லா இருக்கேன் காவியா மா ' என்றான்
காவ்யாவோ " சமரன்னா இது என் பிரண்ட் நித்யா அப்பறம் நிதி இது சமர் என்னோட புது அண்ணா " என்று இருவரையும் அறிமுகம் செய்து வைத்தாள்.
சமரோ ' எனக்கு உன் பிரண்ட் நிதிய ஏற்கனவே தெரியுமா, முன்னாடி ஒரு கம்பெனில வேலை பார்த்தேன் அங்க தான் ரெண்டு பெரும் பார்த்து இருக்கோம்' என்றான்
காவ்யா சமர் கூறியதை கேட்டு நிதியை பார்க்க அவளோ " ஆமா கவி நான் சி. சி. சொலுஷன்ஸ்ல வேலை பாக்கும் போது பாத்து இருக்கேன் " என்றாள்
காவ்யாவோ " சரி எப்படி இருந்தாலும் இனிமே நாம நாலு பெரும் பிரிஎண்ட்ஸ் " என்றாள்
மூவரும் அதற்கு சம்மதிப்பதாய் தலை அசைத்தனர்.
---
மாலை நேரம்...
அன்று மாலை போல காவ்யா சித்தார்த் இருவரும் வீட்டிற்கு வந்தனர். சித்தார்த்தோ காவ்யாவை பார்த்து " இன்னக்கி எதுவும் செய்ய வேணாம் கவி நீ ரெஸ்ட் எடுத்துக்கோ " என்றான்
அவளோ 'ம்ம். சரி ' என அமைதியாக ஒய்வு எடுத்து கொண்டு இருந்தாள். வழமை போல இரவு உணவை உண்டு விட்டு காவ்யா தரையில் படுத்து உறங்கி விட சித்தார்த் மீதம் இருந்த வேலை எல்லாம் முடித்து விட்டு அறைக்கு சென்றான். அங்கோ காவ்யா ஆழ்ந்த உறக்கத்தில் எதோ கூற சித்தார்த் அவள் அருகில் சென்று அவள் பேசுவதை கேட்டான்.
அவளோ " என்ன விடுங்க இனிமே இப்படி பண்ண மாட்டேன் வலிக்குது விடுங்க " என்று புலம்ப சித்தார்த்தோ அவள் கைகளை பிடித்து கொண்டு ' ஒன்னும் இல்ல கவி ' என கூறி அவள் அருகில் படுத்து அவளை இருக்கமாக அணைத்து கொண்டான். அவளோ அவனின் அணைப்பில் கட்டுண்டு அமைதியாக சித்தார்த் நெஞ்சில் தலை வைத்து உறங்க ஆரம்பித்தாள். சித்தார்த்தும் மென்மையாக அவள் தலையை வருடிய படியே உறங்கி விட்டான்.
---
மறுநாள் காலை...
சூரியன் தன் காதலி தாமரையை காண குளிரும் நிலவை மேற்கு திசை நோக்கி விரட்டி விட்டு கிழக்கு வானில் ஒளிர்ந்தான் அதை கண்ட தாமரை மலரோ மொட்டு விரித்து அழகாய் சிரித்தாள். இங்கே முதலில் கண் விழித்த சித்தார்த் காவ்யா உறக்கம் கலையா வண்ணம் அவளை தலையணைக்கு மாற்றி விட்டு குளிக்க சென்றான். பின் அவனே சமைத்து வைத்து விட்டு அவன் அலுவலகம் செல்ல கிளம்பினான்.
அப்போது தான் எழுந்த காவ்யாவோ வேகமாக குளித்து விட்டு வெளியே வரவும் சித்தார்த் உள்ளே வரவும் சரியாக இருந்தது. காவ்யாவோ " குட் மார்னிங் சித்தார்த் " என்றாள்
அவனும் ' குட் மார்னிங் கவி, நான் கொஞ்சம் வேகமா கிளம்பனும், சாப்பாடு இருக்கு சாப்பிட்டு நீ பத்திரமா வீட்ல இரு, அப்பறம் எதாவது வேணும்னா மெசேஜ் போடு வரும் போது வாங்கிட்டு வரேன், பாய் ' என அவன் அலுவலக பாக் எடுத்து கொண்டு சென்று விட்டான்.
காவ்யாவும் அவன் பின்னால் வாசல் வரை சென்று வழி அனுப்பி வைத்தாள். அவன் பைக்கில் சென்றது வீட்டிற்குள் சென்று சின்ன சின்ன வேலை எல்லாம் முடித்து விட்டு அவன் சமைத்த உணவை உண்டு விட்டு அவள் லேப்டாப் எடுத்து அதில் வேலை செய்து கொண்டு இருந்தாள்.
---
இங்கே அலுவலகம் வந்த சித்தார்த்தோ வேகவேகமாக அந்த மேனேஜர் அறைக்குள் சென்றான். ' மே ஐ கம் இன் சார் ' என்றான்
உள்ளே இருந்து ' எஸ் கம் இன் ' என்ற குரல் வர அவனும் உள்ளே சென்றான்.
மேனேஜரோ ' சீ மிஸ்டர் சித்தார்த் வர வர உங்க ஒர்க் எனக்கு சட்டிஸ்பாக்ஷன் னா இல்ல சோ நீங்க ரிசைன் பண்ணிடுங்க ' என கூற
சித்தார்த்தோ ' சார் நான் ரீசன் அப்படினு தெரிஞ்சிக்கலாமா ' என்றான்
அவரோ ' தட் இஸ் கம்பெனி பர்சனல் அண்ட் யூ கேன் லீவு க்நொவ் ' என்றான்
அவனும் அமைதியாக அந்த கம்பெனியில் இருந்து வெளியேறி சமர் வீட்டிற்கு சென்றான்.
---
சமர் வீடு
சமர் மற்றும் சித்தார்த் இருவரும் சோபாவில் அமர்ந்து இருந்தனர். சமர் தான் பேச்சை ஆரம்பித்தான். ' என்னாச்சு மச்சான், ஏன் ஒரு மாதிரி இருக்க ' என்றான்
சித்தார்த்தோ அலுவலகத்தில் நடந்ததை கூறி ' எனக்கு இப்ப ஒரு வேலை வேணும் மச்சான் ' என்றான்
அவனோ ' சரி மச்சான் நான் தேடி பார்த்து சொல்றேன். அப்பறம் தங்கச்சிமா எப்படி இருகாங்க ' என்றான்
சித்தார்த்தோ ' இப்ப பரவா இல்ல டா, ' என்றான்
பின் இருவரும் பொதுவாக பேசி கொண்டு இருக்க மாலை போல சித்தார்த் சமரிடம் விடை பெற்று அவன் வீட்டிற்கு சென்றான்.
---
இரவு வீட்டில்...
காவ்யாவோ மாலை வீட்டிற்கு வந்தது முதல் சோகமாக இருக்கும் சித்தார்த் முகத்தை கண்டு எதோ யோசித்து கொண்டு இருந்தாள். பின் இரவு உணவை முடித்து கொண்ட காவ்யா மொட்டை மடியில் சென்று அங்கே அவள் அமைத்த சிறிய தோட்டம் அதில் திண்டு போல இருந்த நிழலான இடத்தில் அமர்ந்து வானை பார்த்து கொண்டு இருந்தாள்.
அப்போது அங்கே வந்த சித்தார்த்தோ ' இங்க என்ன பண்றிங்க மேடம் ' என கேட்டு கொண்டே அவள் அருகில் அமர்ந்து கொள்ள அவளோ " நான் ஒன்னும் பண்ணல சித்தார்த், ஆமா நீ ஏன் ஒரு மாதிரி இருக்க ' என்றாள்
அவனோ எப்படி கூறுவது என யோசித்து கொண்டு இருக்க அவளோ " சொல்ல விருப்பம் இல்லனா சொல்ல வேண்டாம் " என்றாள்
சித்தார்த்தோ ' அப்படி எல்லாம் இல்ல, அது வந்து நான் ஜோப் ரிசைன் பண்ணிட்டேன், அதான் நெக்ஸ்ட் என்ன பண்றதுனு தெரியல ' என்றான்
அவளோ ' வேற வேலைக்கு போறதுக்கு பதிலா சொந்தமா பிஸ்ஸின்ஸ் பன்றியா ' என்றாள்
அவனோ ' எனக்கு ஒரு ஹோட்டல் ஆரம்பிக்கணும்னு ஆசை கவி ஆனா வீட்ல ஒத்துக்கள அண்ட் என்கிட்ட அவளோ காசும் இல்ல, அதனால கிடைச்ச வேலையை செஞ்சிகிட்டு இருந்தேன், இப்ப அதுவும் போச்சு ' என்றான் கவலையோடு
காவ்யாவோ " உனக்கு ஹோட்டல் ஆரம்பிக்க ஓகே னா நாம கண்டிப்பா ஒரு ஹோட்டல் ஆரம்பிக்கலாம் சித்தார்த் என்கிட்ட கொஞ்சம் சேவிங்ஸ் இருக்கு அத வச்சி நீ உன் ஹோட்டல் ஆரம்பி எப்ப உனக்கு லாபம் வருதோ அப்ப திருப்பி கொடுத்து விடு " என்றாள்
அவனோ ' அது சரியா வாராது கவி, உனக்காக நான் எதாவது வாங்கி கொடுத்தா பரவாயில்லை ஆனா உன் பணத்தையும் சேர்த்து நானே யூஸ் பண்ண கூடாது ' என்றான்
அவளோ " ஏன்? நான் உன் பிரண்ட் தான நான் கொடுத்தா வாங்கிக்க மாட்டியா " என்றாள்
அவனோ ' ஆமா, நீ என் பிரண்ட் இல்லனு சொல்லல ஆனா இப்படி பணம் எல்லாம் வேண்டாம் கவி ' என்றான்
அவளோ ' அது எல்லாம் முடியாது, நீ ஹோட்டல் ஆரம்பிக்குற ஓகே ' என்றாள்
அவனோ ' பச்! சொன்ன கேளு இந்த ஐடியா இதோட விட்டுடு அண்ட் இந்த மாசம் ஊருக்கு 20 ஆயிரம் அனுப்பனும் என்கிட்ட காசு இல்ல சோ அந்த அமௌன்ட் மட்டும் கொடு அது போதும் ' என்றான்
அவளோ ' முடியாது, ' என முகத்தை திருப்பி கொள்ள
அவனோ அவள் குழந்தை தனமான செயலில் உள்ளே ரசித்து கொண்டு வெளியே அமைதியான முகத்தோடு அவள் கைகளை பிடித்து கொண்டு " இத பத்தி முதல மித்து கிட்ட பேசு அவன் ஓகே சொன்ன நான் வாங்கிக்குறேன் " என அவளுக்கு செக் வைப்பதாய் நினைத்து அவனுக்கு அவனே செக் வைத்து கொண்டான்.
அவளோ ' அப்ப மித்து ஓகே சொன்ன உனக்கு ஓகேவா ' என்றாள்
அவனோ ' சரி ஓகே ' என்றான்
காதல் கூடுமா 💞...
Author: velvizhiyaal
Article Title: கனவு 8
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கனவு 8
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.