எபிலாக்

Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
57
கல்யாண நாள் வந்து விட்டது. வீட்டிலே தான் கல்யாணம். தொழில் வட்டார பெரிய ஆட்கள் எல்லாம் வந்து விட்டனர். தோ மிதுன் பட்டு வேட்டி சட்டையில் மேடையில் அமர்ந்துஅய்யர் கூறும் மந்திரத்தை சிரத்தோடு சொல்லி கொண்டிருந்தான் மிதுன்.

திருமணம் முடிந்த இரவே மிதுனுக்கு ஹனிமூன் செல்வதற்க்கான வசதியை செய்து கையோடு அனுப்பி வைத்து விட்டு எல்லாரும் வீடு வந்து சேர்ந்தனர்.

கல்யாண வேலை செய்த களைப்பில் பெரியவர்கள் அவரவர்கள் அறைக்குள் அடைந்து கொள்ளமைதிலி தன்னறைக்குள் வந்தவள் குளியலறை புகுந்து கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து வெளியே வர மெத்தையில் இரண்டு லக்கேஜ் இருப்பதை கண்டு கணவனை பார்க்க அவனோசிரித்தவன்

“நாமளும் இன்னும் ஹனிமூன் போகலள அதுக்கு தான் இந்த ஏற்பாடு. இன்னும் ஒன் ஹௌர்ல ஏர்போர்ட்ல இருக்கணும் “ என்று பேசியவன் மைதிலியை கண்டு கொள்ளாமல்லக்கேஜை தானே காருக்கு எடுத்து செல்லவெட்கம் கொண்டவள் பயணத்திற்கு தயாரானாள்.

*********************************

விமான பயணம் முடிந்து கார் பயணம் செல்ல களைப்பில் உறங்கி போனாள் மைதிலி. அவளின் தலையை வருடியவன் மிதமான வேகத்தில் காரை இயக்க சொல்லி கட்டளை குடுக்க அதன் படியே சென்றது.

நீண்ட நேர பயணத்திற்கு பின்ராவணன் வரவேண்டிய இடம் வர மைதிலி இன்னும் உறங்கி கொண்டிருக்கவே அவளை கையில் ஏந்தி கொண்டு அந்த வீட்டினுள் நுழைந்தான். ராவணனின் லக்கேஜ் ஏற்கனவே அந்த வீட்டில் வைக்க பட்டிருந்தது.

உறங்கிய மனைவியை மெத்தையில் கிடத்தியவன் குளியலறைக்குள் புகுந்து தன்னை சுத்தப்படுத்தி கொண்டான். குளித்து முடித்து வந்தவன் மணியை பார்த்து விட்டுமைதிலி அருகில் சென்றான்.

கையை தலைக்கு முட்டுக்கொடுத்து மனைவியை பார்த்தவனின் தலை முடியில் இருந்து சொட்டிய ஈரத்தில் கண் விழித்தாள் மைதிலி.

ராவணனை கண்டு சிரித்தவள் பின் தான் இருக்கும் இடத்தை பார்த்து “ நாம வந்துட்டோமா மாமு. இது என்ன இடம் “ என்று கேட்டவளுக்கு பதில் கூறாது

“ நீ போய் பிரெஷ் அப் ஆகிட்டு வா உனக்கு ஒன்னு காட்றேன் “ என்று ராவணன் சொல்ல சரியென்றவள் தனக்கான உடைகளை எடுத்து கொண்டு குளியலறையில் புகுந்து கொண்டாள்.

ராவணன் வாங்கி குடுத்த இளஞ்சிவப்பு நிற புடைவையில் வந்தவளை இமைக்க மறந்து பார்த்தவன் முன் நின்றவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்னது.

அவளின் காது மடல் சிவந்ததை கண்டு சிரித்தவன் அவளை அழைத்து கொண்டு மூடிய சாளரம் முன் நின்றவன் திரைகளை விளக்க அவள் கண்ட காட்சியில்அதிசயித்து போனாள் மைதிலி.

இப்போது ராவணன் இருப்பது ஆசியாவில் காதலர்களுக்கு விருப்பமான பாலி என்ற இடம். அமைதியான கடல் மிதமான வெப்பம்விழி விரிக்க செய்யும் சூரிய அஸ்தமனம் காதலர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று.

சரியாக ராவணனும் சூரிய அஸ்தமனத்தை மைதிலிக்கு காட்டஅந்த அழகிய காட்சிகளை ரசித்து பார்த்தவளின் கழுத்தில் ஒரு ஜெயினை அணிவித்தான் ராவணன்.

“ எனக்காக என்ன நேசிக்கிற உறவு கிடைக்காதானு ஏங்கிட்டு இருந்தேன். ஆனா நீ எனக்கு எல்லாமுமாய் கெடைச்சடி அம்மு. ஒவ்வொருநாளும் உன்அன்புல தொலைஞ்சி போறேன் அம்மு.என் மூச்சு உள்ள வரைக்கும் உன்ன காதலிச்சிட்டே இருப்பேன் அம்மு. ஐ லவ் யூ “ என்று சொல்ல

தன்னவனை காதலோடு பார்த்தவள் “ ஐ லவ் யூ மாமு “ என்ற மறுகணம் தன்னவளின் செவ்விதழை கவ்வினான்மைதிலியின் ராவணன் .

*******❤️இனி எல்லாம் சுபமே❤️********​
 

Author: Thanimai Kadhali
Article Title: எபிலாக்
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Active member
Joined
Nov 26, 2023
Messages
48
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Top