எபிலாக் 40
மௌலியின் முட்டாள் தனமான பேச்சில் அத்திரமான அக்னி மேகாவை மெல்ல தரையில் கிடத்திவிட்டு " லுக் மௌலி . லூசு மாதிரி பேசிட்டு இருக்காத. கன்னை கீழ இறக்கு . எல்லாத்தையும் பொறுமையா பேசுலாம் . பிளீஸ் மௌலி ஏதும் பண்ணாத " பயந்து போனவன் அண்ணனை நோக்கி நடந்தான் பதட்டமாக .
" தேவையில்லாத யோசிக்காத மௌலி " பேச்சுக் குடுத்து கொண்டே வந்தவனின் கால்கள் ஆணி அடித்தார் போல் நின்றது மௌலி ட்ரிகரை அழுத்திய சத்தத்தில் .
" ஏய் .. ஏய் .. #***@" கெட்ட வார்த்தையில் அக்னி கத்த அசையாது நின்ற மௌலி
"என்னை காப்பாத்தணும்னு முயற்சி பண்ணாத அக்னி . நான் இவ்ளோ நேரம் உயிரோட இருந்தது காரணமே உனக்காக தான் . இப்போ உனக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கை கொடுத்துட்டேனு சந்தோஷத்திலே போறேன் அக்னி. என் தெய்வா தனியா இருப்பா " துடிக்கும் உதட்டை கடித்து சொல்லிட தடுமாறி நின்றான் அவன் .
அக்னிக்கு அண்ணனின் பேச்சு ஆத்திரத்தையும் அழுகையையும் ஒருசேர தர கேசத்தை அழுந்த கோதி மௌலியை நிதானமாய் பார்த்தான் .
" எதா இருந்தாலும் வீட்டுல போய் பேசிக்குலாம்.. அம்மாவுக்கு அப்றம் நீதானடா எனக்கு " பயத்தோடு ஒரு அடி எடுத்து முன்னே வைக்க
" அதான் இப்போ உன் பொண்டாட்டி இருக்காளே.. என்னால முடியல அக்னி . அவ இல்லாத இந்த உலகம் கூட எனக்கு நரகம் போல கொடுமையா இருக்கு . என்னால சரியா மூச்சி கூட விட முடியலடா .. வலிக்குது டா .. நான் இங்க சுவாசிக்கிற ஒவ்வொரு நொடியும் இதயத்தை இறுக்கி பிழியுறது போல வலிக்கிது அக்னி . இதே கொடுமையோட என்னால ஒரு நாள் கூட வாழ முடியல .. அப்றம் எப்டி டா பாதி காலத்தை வாழ போறேன் . சத்தியமா அக்னி என்னால என் தெய்வா இல்லாத இந்த உலகத்துல வாழ முடியாது . என் தெய்வா எனக்காக வெயிட் பண்ணுவா . நான் போறேன்டா . என் செல்லத்தை என்னால வெயிட் பண்ண வைக்க முடியாது . நீ சந்தோஷமா மேகா கூட நீண்ட வருஷம் வாழனும் . நானும் அம்மாவும் எப்பவும் உன்ன பார்த்துட்டு தான் இருப்போம் . ஃபைனலி ஐம் கோயிங் டு சீ மை தெய்வா " கண்களை சிமிட்டி மலர்ந்த இதழோடு வார்த்தைகளை உதிர்த்தவன் கண்களை மூட மௌலி வேணாம் என்ற அலறலோடு துப்பாக்கி சத்தமும் அந்த அறையில் ஓங்கி அடங்கியது .
அக்னிக்கு உடல் வேலை நிறுத்தம் செய்து விட்டது . கரு விழிகள் விரிய அண்ணனை பார்த்தவன் மெதுவாக மௌலி அருகில் அமர்ந்தான் . அவனின் கன்னம் தட்டியவன் " டேய் மௌலி . என்னை பயம்புறுத்தாத .. டேய் பொறுக்கி ன் கண்ணை திறந்து பாருடா . ஏன் ஏன் .. எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது .. அம்மாவை இழந்தேன், துணையா நீ இருந்த ...இப்போ என்ன மயிருக்குடா என்னை விட்டு போனா .. டேய் டேய் மௌலி கண்ணை திறந்து பாருடா " பித்து பிடித்தவன் போல் கதறிட மெல்ல மயக்கம் தெளிந்து எழுந்தாள் மேகா.
தன்னை சுற்றி இருக்கும் புது இடத்தை பயத்தோடு பார்த்தவள் தூரத்தில் கணவன் கதறுவதை அதிர்ச்சியாக " அக்னி ..அக்னி " என முழு பலத்தை திரட்டி அவனை நோக்கி ஓட அழுகையோடு மனைவியை திரும்பி பார்த்தான் .
"மேகா .. மேகா .. இங்க பாருடி .. என் அண்ணனை பாருடி . என் அண்ணன பாருடி . ஒன்னா குடும்பமா வாழனம்னு நிறைய கனவு கண்டேன்.. பாரு மேகா எப்டி கடக்குறானு " அடி தொண்டையில் இருந்து கத்தி கதறியவனை வாரி அணைத்து கொண்டவளுக்கும் அழுகையை தவிர எதுவும் வரவில்லை.
மௌலி கேட்டு கொண்டது போல் காதலர்கள் இருவர் உடலும் ஒன்றாகவே புதைக்கப்பட்டது. கௌரவ்வும் அதிர்ச்சி குறையாது பேயறைந்தது போல் மௌலி தெய்வாவின் கல்லறையை பார்த்தவனால் இன்னும் நம்ப முடியவில்லை நண்பன் இறந்து போனதை.
அழுகை தொண்டை வரும் வந்து அடக்கி கொண்டவன் " உனக்கு வாக்கு கொடுத்த மாதிரி நான் தெய்வா கூட இருந்தேன். நீ ஏன்டா திரும்பி வரல... ஏன்டா எங்கள விட்டு போன " வெடித்து அழ அக்னியும் நண்பனை அணைத்து கொண்டான் ஆறுதலாக.
எத்தனை நினைவுகள். எத்தனை செல்ல சண்டைகள் கோவங்கள். வாக்கு வாதங்கள். ஒன்றாக கூடி பேசிய நாட்கள் எல்லாம் கண் முன்னே வர அந்த இடத்தை விட்டு மறையும் வரை திரும்பி நண்பனின் கல்லறையையே பார்த்து சென்றான்.
*********** ********** **********
ஆறு வருடங்களுக்கு பிறகு....
சென்னை நகரம்... அக்னியின் பிறந்து வீட்டில் அவன் ஆசைப்பட்ட ஒரு அழகிய குடும்ப வாழ்க்கை. இரண்டு அறைகள் ஒரு ஹால் என்ற வீதம் சிறிய வீடே. அதுவே போதுமென்ற வாழ்க்கை தான்.
இன்றோடு மௌலி இறந்து ஆறு வருட நினைவு என்பதால் மும்பைக்கு சென்று அவர்களின் கல்லறையை பார்க்க கிளம்வி கொண்டிருந்தாள் மேகா. இந்த ஆறு வருடத்தில் நிறைய மாற்றங்கள்.
மேகா தன்னை தயார் செய்து கொண்டு வெளியே வர வாசலில் காலிங் பெல் சத்தம் கதவை திறந்தவள் முன் புன்னகை முகமாக நின்றான் விபின்.
"மும்பை போறதுக்கான டிக்கெட்ஸ் மேகா " என்று நீட்டிட வாங்கி கொண்டவள்
" வந்து உக்காரு விபின். அக்னி கிளம்பிட்டு இருக்காரு.. நான் அவனை பார்த்துட்டு வரேன் " மென்மையாக சொல்லியவள் மகன் அறைக்கு விரைந்தாள்.
மகனாக இருந்தாலும் அறைக்குள் அனுமதி கேட்டு தான் செல்வாள். " உள்ள வரலாமா மௌலி சார் " கதவை திறந்து எட்டி பார்க்க ஐந்து வயது மௌலி பெரிய மனிதன் போல் கிளம்பி தயாராக இருந்தான்.
" அம்மா.. நான் கிளம்பிட்டேன் போலாமா " குழந்தை குரலில் கேட்டிட அவனை தூக்கி மேசையில் நிற்க வைத்து சரியாக பொத்தாங்களை போட்டு வைத்த மேகா
" எங்க இருந்து தான் உனக்கு இந்த பழக்கம் வந்துச்சு தெரியல. இவ்ளோ சமத்தா இருந்தா அம்மா என்ன வேலை தான் செய்வேன் "
" நீயேன்ம்மா கஷ்ட படுற... நான் உன்ன பார்த்துப்பேன் " அந்த வயதில் தெளிவாக பேச உச்சி முகர்ந்து முத்தம் வைத்த மேகா
" தெரியும். இப்போ வாங்க போலாம் " மகனை இறக்கி விட்டு வெளியேற அக்னியும் தயாராகி தன் அறையை விட்டு வெளியே வந்தவன் தன்னையே பார்க்கும் மகனுக்கு சிறு புன்னகையை தந்து தூக்கி கொண்டான்.
நீண்ட பயணத்திற்கு பின் மௌலி தெய்வாவின் கல்லறைக்கு வந்து சேர சரியாக அதே நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தான் கௌரவ்.
நீண்ட நாட்கலுக்கு பின் நண்பர்கள் பார்த்து கொண்டதில் கட்டி அணைத்து விலகியவர்கள் கல்லறை முன் சில நொடி அமைதியாய் நிற்க குட்டி மௌலி கல்லறையையே வெறித்து பார்த்தான்.
மௌலி - தெய்வா என பெயர்கள் பொறிந்துருப்பதை கண் இமைக்காமல் குட்டி மௌலி பார்க்க மேகா மகன் தலையை வருடியவள் " போலாமா மௌலி " என்பவளை ஏக்கமாய் பார்த்தவன்
" அம்மா இன்னும் கொஞ்ச நேரம் " கெஞ்சலாய் கேட்டவன் மீண்டும் கல்லறையை பார்க்க அவன் போக்கிலே விட்டுவிட்டாள் அவளும்.
" அப்றம் லைப் எப்டி போகுது " நடந்து கொண்டே கௌரவ் கேட்க ஆழ மூச்சை விட்டவன்
" போகுது கௌரவ். மனைவி குழந்தைனு நான் நினைச்சத விட அழகான வாழ்க்கை. சொந்தமா ஆரம்பிச்ச கம்பெனியும் நல்ல வெற்றி. உன் வைஃப் ஸ்னேகா எப்டி இருக்காங்க. எப்போ டெலிவரி "
" இந்த வாரம் தான் டேட் கொடுத்திருக்காங்க அக்னி. சோ கொஞ்ச நாள் என்கூட தங்கு. குழந்தையை பார்த்துட்டு போலாம் " தவிப்பாய் கேட்டவனுக்கு மறுப்பு சொல்ல தயங்கிய அக்னியும் திரும்பி மனைவி குழந்தையை பார்த்தப்படி
" சரி கௌரவ் " மென்மையாக சம்மதம் சொல்ல சிணுங்கிய தன் போனை எடுத்த கௌரவ் முகம் தீவிரமாகியது.
வேகமாக அட்டென்ட் செய்தவனுக்கு நினைத்த செய்தி கிடைத்தததோ " அக்னி சினேகாக்கு டெலிவரி பெயின் வந்துருச்சு. கேர் டேக்கர் ஹாஸ்பிடல் கூட்டிட்டு பொய்ட்டு இருக்காங்கலாம் " பதட்டமாக
" ஒன்னும் இல்ல... நாம சீக்கிரம் போலாம்... மேகா... மௌலி.. சீக்கிரம் வாங்க " அக்னி குரலில் தெரிந்த அவசரத்தில் இருவரும் வர அனைவரையும் ஏற்றி கொண்ட கார் கௌரவ்வின் ஹாஸ்பிடல் நோக்கி விரைந்தது.
பிரசவ அறைக்குள் சினேகா அலற அவளின் கையை பிடித்து கொண்டு தன் பயத்தையும் மறைத்து ஆறுதல் சொல்லி கொண்டிருந்தான் கௌரவ்.
அறையின் கதவு அருகே அக்னி நிற்க மேகா மடியில் இருந்து இறங்கிய மௌலி அப்பாவை அடைந்தவன் " அப்பா என்ன தூக்கு " கை தூக்கியவனை புருவம் சுருக்கி பார்த்தவனும் தூக்கி கொள்ள கண்ணாடி வழியே சினேகா கதறுவதை கூர்ந்து பார்த்தான்.
அக்னியால் மகனின் முகத்தை படிக்க முடியவில்லை. அவன் என்ன நினைக்கிறான் என்பது எப்போதும் புரியாத புதிரே. அடிக்கடி குட்டி மௌலியின் செய்கை அச்சு பிசறாமல் அண்ணனை தான் நினைவு படுத்தும். அக்னியின் சந்தேகத்தை வலுபடுத்தவது போல் மகனுக்கு வலது நெற்றியில் பிறப்பு அடையாளமும் உண்டு.
ஒரு வழியாக கௌரவ்வை பதற வைத்து புவியில் உதித்தாள் தாரகை. " சார் பெண் குழந்தை" என மருத்துவர்கள் சொல்ல சந்தோஷத்தில் கண்ணீர் வழிந்த கண்களை துடைத்த கௌரவ் தாங்க்ஸ்டி மனைவி நெற்றிக்கு முத்தம் பதித்து தன் நன்றியை தெரிவித்தான்.
தாயும் சேயும் நலமாகிட அக்னியும் மேகாவும் மகனோடு பிறந்த குழந்தையை பார்க்க சென்றனர்.
" காங்கிரஸ் சினேகா... என் அண்ணன் கௌரவ்வ ரொம்ப பயப்பு வச்சிட்ட. பாவம் கார்ல வரும் போதே அழ ஆரம்பிச்சிட்டாரு " கிண்டலாய் மேகா சொல்ல தங்கையை முறைத்தவன் அக்னி பார்வையில் மாற்றி கொண்டு பல்லை காட்டினான்.
" இவன் ஒருத்தன். நான் உன் பொண்டாட்டிய எதும் சொல்லுல. எப்டியோ நான் ஆசைப்பட்ட மாதிரி பொண்ணு பொறந்துருச்சு "
" ஆசைப்பட்டது இருக்கட்டும். உங்க பொண்ணுக்கு ஏதோ பேர்லாம் ஸ்பெஷளா யோசிச்சு வச்சிருக்கேனு சொன்னிங்களே... அத இப்போவாச்சும் சொல்லுங்க கௌரவ் " சினேகா கணவனிடன் ஆசையாய் கேட்க
" அதுவா சொல்லுறேன்.. நீங்க எல்லாரும் கேட்டு ஆச்சர்யபடுவீங்க... என் பொண்ணு பேர் " அவன் சொல்லி முடிக்கும் முன்னே
" தெய்வா " என ஒலித்தது குட்டி மௌலியின் குரல்.
கௌரவ் அதிர்ந்து போக அக்னி திகைப்பில் மனைவியை பார்க்க அவளும் அதே திகைப்பில் இருந்தவள் " ஏன் அந்த பேர்... உனக்கு ஏன் இந்த பெயர் வைக்கணும்னு தோணுச்சு " கண்களில் முட்டும் கண்ணீரில் மேகா கேட்டிட குழந்தையை இதழ்கள் விரித்து வச்சக்கண் வாங்காமல் பார்த்த குட்டி மௌலி
" தெரியலம்மா... ஆனா இந்த பெயர் நல்லாருக்கு. அப்பா அங்கிள் கிட்ட சொல்லி இந்த பெயரை வைக்க சொல்லுங்க " யாரிடம் சொன்னால் நினைத்தது நடக்கும் தெரிந்தே குட்டி மௌலி கெஞ்சிட சிலையாய் நின்ற அக்னி வேகமாய் கௌரவ் குழந்தையின் முகத்தை பார்த்தான்.
கௌரவ்வும் குழப்பமாய் குழந்தையை பார்த்தவன் அப்போது தான் கவனித்தான் இடது நெற்றியில் மகளுக்கு இருக்கு பர்த் மார்க்.
" அக்னி " நம்ப முடியா அதிர்ச்சியில் அழைக்க
" எனக்கு பொதுவா இதுல நம்பிக்கை இல்ல. ஆனா இத பார்க்கும் போது என்னால நம்பாம இருக்க முடியல" வியப்பில் சொன்னவன் முதல் முறையாக சிரிக்கும் தன் மகனை கண் கொட்டாமல் பார்த்தான்.
இங்க வாழ நினைத்த உயிர்கள் இறந்த பின்பும் கூட கடவுள் மற்றொரு வாய்ப்பை கொடுத்து விட்டார் போல. சாத்தியமா என ஆராய விரும்பவில்லை அக்னி. ஆனால் ஒன்று மட்டும் உறுதி கொண்டான். இனி இந்த காதலை பாதியில் முடிக்க விடமாட்டேன் என்பது.
மருத்துவமனை விட்டு வீட்டிற்கும் வந்தும் கூட குழந்தையோடே சேர்ந்து உறங்கிய மௌலியை தனக்கான அறைக்குள் படுக்க வைத்த மேகா மகனுக்கு போர்த்தி விட்டு பால்கனியில் நிற்கும் கணவனை தேடி வந்தாள்.
ஆழ்ந்த யோசனையில் வானத்தை இலக்கற்று அவன் பார்க்க " என்ன யோசனை அக்னி " மெல்லிய குரலில் கேட்பவளின் இடையை வளைத்து அணைத்து கொண்ட ஆடவன் எதுவும் பேசிடவில்லை.
சில நிமிடம் நீண்ட அமைதி நீடிக்க மெல்ல அக்னியை விலக்கியவள் " எனக்கு தெரியும் உன் மனசுல என்ன ஓடுதுனு.. நீ அதைப்பற்றி யோசிக்காம அது போக்குல விடு அக்னி. இனி நீ மௌலியை நினைச்சு கவலைப்பட தேவையில்லை " கன்னம் தாங்கிட தேங்கிய கண்ணீரை துடைத்து கொண்டான் சந்தோஷத்தில்.
" ஆமால்ல... நான் ஏன் இனி அழனும். அழகான பொண்டாட்டி.. அழகான புள்ளை... என் மௌலியும் என் கூட தான் இருக்கான். இனியும் நான் வருந்த தேவையில்லை... மேகா இன்னைக்கு மௌலி சிரிச்சதை பார்த்தியா... அவன் சிரிச்சே இன்னைக்கு தான்டி பார்க்குறேன். நாம இனி சென்னை போக வேணாம். மௌலி எப்படி தெய்வாவை பிரிஞ்சி இருப்பான். இன்னகையே ஒரு வீடு வாங்கி பக்கத்துலயே வந்திருவோம்... இல்லனா தெய்வாவை நாமளே தூக்கிட்டு போகிருவோம்.. நாம வளர்த்துக்குலாம் " அடுக்கி கொண்டே போகும் அக்னியின் பேச்சை பற்கள் தெரிய சிரித்து கொண்டே கேட்டாள்.
" அக்னி சார் ஒரு குறிக்கோளோட இருந்திங்களே... இரண்டு குழந்தை.. சின்ன வீடு.. மறந்து போச்சா " எங்கோ பார்த்து உதட்டை சுழித்து கேட்டவள் பேச்சில் அர்த்தமாய் இதழ் விரித்தான்.
என்ன கேட்ட கேள்விக்கு பதில் வரல சந்தேகமாய் திரும்பியவளின் இதழை நொடியில் கவ்வி கொண்டான்.
உடும்பு பிடியாய் இடையை பிடித்து இறுக்கிட பரந்த அவன் தோள்பட்டையில் விரல்கள் கொண்டு அணைத்து கொண்டவளும் அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க இதழோடு நாவும் இணைந்து சத்தமில்லா யுத்தத்தை அரங்கேற்றியது.
************* ********* **********
இருபத்திரண்டு வருடங்களுக்கு பிறகு..
பூக்களால் அலங்காரம் செய்த அந்த மாளிகை வரும் விருந்தாளிகளை வியக்க வைக்க வெள்ளை வெளிர் ரோஸ் நிறத்தில் சுற்றி அலங்கரித்த தூண்கள் பார்ப்பவர் கண்களை மின்ன செய்தது.
" நேரம் ஆகிடுச்சு பொண்ணு பையனை அழைச்சிட்டு வாங்க " அய்யர் கத்திட தன் பெற்றவர்கள் காலில் ஆசிர்வாதம் வாங்கி நிமிர்ந்து நின்றான் மௌலி அக்னித்ரன்.
பெயர் மட்டும் மௌலி அல்ல. முக ஜாடையுமே அண்ணனை போன்று இருக்க கட்டி தழுவி கொண்ட அக்னி " இனியும் உன்ன காக்க வைக்க மாட்டோம். போடா... போய் உன் தெய்வாவை பிடிச்சிக்கோ " தட்டி கொடுக்க வெட்கம் கலந்த சிரிப்போடு மனமேடை நோக்கி நடந்தான் மௌலி.
" அப்பா... அம்மா உங்கள பார்க்குற பார்வை பார்த்தா. அவங்களுக்கும் உங்கள திரும்ப கல்யாணம் செய்யணும்னு ஆசை இருக்கு போல... அங்க பாருங்க " மகள் ருத்திரா தாயை போட்டு கொடுக்க
" ஆமான்டி. என் புருஷன் எவ்ளோ முறை வேணாலும் கல்யாணம் பண்ணிப்பேன். முதல உன்ன அடிக்கணும். படிக்கிரத தவிர எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிக்கோ. என்னை எதுக்கு பார்க்குறீங்க... வாங்க " வெளியே போக மேகா என அக்னி அழைத்ததில் திரும்பியவளின் கண்களை பார்த்தவனுக்கு இன்னும் காதல் குறையவில்லை.
" ஐ லவ் யூ பொண்டாட்டி " மகள் முன்னே சொன்னதில் மேகாவுக்கு வெட்கம் வர மறைத்து கொண்டவள்..
" உங்கள... மகன் கல்யாணத்துல பேச்சை பாரு.. வாங்க " அதட்டி சென்றவளுக்கும் வெட்கம் பிடுங்கி தின்றது.
" அம்மா கோவமா போறாங்கப்பா " மகள் அப்பாவியாய் சொல்ல சிரிப்பை அடக்கிய அக்னி
" அவ கோவமா போல.. வெட்கத்துல போறா. வா நாம போவோம் " மகள் கையை பிடித்து மன மேடைக்கு வர அங்கு மௌலி இழுத்து பிடித்த பொறுமையில் மந்திரங்களை சொல்லி கொண்டிருந்தான்.
" பொண்ண அழைச்சிட்டு வாங்க.. நாழி ஆகுது " அய்யர் குரலில் மௌலியின் தேவதை தங்க ஜரிகையாய் வர கண் இமைக்காமல் பார்த்தவன் அருகில் வந்து அமர்ந்தாள் தெய்வா.
" எல்லாரும் நம்பள தான் பார்க்குறாங்க மௌலி " பெண்ணின் குரல் அவனை சுயவுக்கு கொண்டு வரவில்லை.
அதில் இன்னும் பேதை சிவந்திட கௌரவ் தான் " மருமகனே ரொம்ப நேரமா அய்யர் தாலியை நீட்டிட்டு இருக்காரு... கட்டிட்டு பாருடா " அப்பாவியாய் சொல்ல சினேகா கணவரை தீயாய் முறைத்து வைத்தாள்.
மஞ்சள் தாலி மௌலி வாங்கிட கெட்டி மேளம் ஒலிக்க தன் அப்பாவை புன்னகையாக பார்த்தவன் கண்ணால் ஏதோ பேசி கொண்டான். என்ன பேசினார்கள் என்பது அவர்கள் மட்டுமே அறிவார்கள்.
தாலிக்கு ஏங்கி அமர்ந்திருக்கும் தன்னவளை பார்த்த மௌலி " தெய்வா " ஆழமான குரலில் அழைக்க அவளும் கட்டுப்பட்டு விழி உயர்த்தி பார்த்தாள்.
" என்ன? "
" நான் இன்னும் அதை சொல்லவே இல்ல "
" எது மௌலி "
" ஐ லவ் யூ தெய்வா "
" ஐ லவ் யூ மௌலி "
இனிதே முடிந்து போன அவர்கள் காதல் மீண்டும் இப்புவியில் தொடர்ந்தது. காலத்தால் சேராத இவர்கள் காதல் காலம் கடந்து சேர்ந்து விட்டதே சந்தோசம்.
கடவுளும் இவர்களுக்கு இனிய முடிவை கொடுக்க நினைத்தாரோ. இனி மௌலி தெய்வா காதல் காலம் கடந்தும் நிலைக்கும். வாழ நினைத்த ஆசைகளை இனி தன் காதலால் மூச்சி முட்ட செய்து விடுவான் அவன்.
அவளும் அதற்கு சளைத்தவள் அல்ல. மௌலிக்கு இணையாக தன் காதலோடு தன்னையும் தந்து உடல் இரண்டு உயிர் ஒன்று என்பதை வாழ்ந்து காட்ட போகிறாள். சொல்ல நினைத்த காதல் இனிதே இணைந்து விட்டது.
******Happy Ending❤️******
மௌலியின் முட்டாள் தனமான பேச்சில் அத்திரமான அக்னி மேகாவை மெல்ல தரையில் கிடத்திவிட்டு " லுக் மௌலி . லூசு மாதிரி பேசிட்டு இருக்காத. கன்னை கீழ இறக்கு . எல்லாத்தையும் பொறுமையா பேசுலாம் . பிளீஸ் மௌலி ஏதும் பண்ணாத " பயந்து போனவன் அண்ணனை நோக்கி நடந்தான் பதட்டமாக .
" தேவையில்லாத யோசிக்காத மௌலி " பேச்சுக் குடுத்து கொண்டே வந்தவனின் கால்கள் ஆணி அடித்தார் போல் நின்றது மௌலி ட்ரிகரை அழுத்திய சத்தத்தில் .
" ஏய் .. ஏய் .. #***@" கெட்ட வார்த்தையில் அக்னி கத்த அசையாது நின்ற மௌலி
"என்னை காப்பாத்தணும்னு முயற்சி பண்ணாத அக்னி . நான் இவ்ளோ நேரம் உயிரோட இருந்தது காரணமே உனக்காக தான் . இப்போ உனக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கை கொடுத்துட்டேனு சந்தோஷத்திலே போறேன் அக்னி. என் தெய்வா தனியா இருப்பா " துடிக்கும் உதட்டை கடித்து சொல்லிட தடுமாறி நின்றான் அவன் .
அக்னிக்கு அண்ணனின் பேச்சு ஆத்திரத்தையும் அழுகையையும் ஒருசேர தர கேசத்தை அழுந்த கோதி மௌலியை நிதானமாய் பார்த்தான் .
" எதா இருந்தாலும் வீட்டுல போய் பேசிக்குலாம்.. அம்மாவுக்கு அப்றம் நீதானடா எனக்கு " பயத்தோடு ஒரு அடி எடுத்து முன்னே வைக்க
" அதான் இப்போ உன் பொண்டாட்டி இருக்காளே.. என்னால முடியல அக்னி . அவ இல்லாத இந்த உலகம் கூட எனக்கு நரகம் போல கொடுமையா இருக்கு . என்னால சரியா மூச்சி கூட விட முடியலடா .. வலிக்குது டா .. நான் இங்க சுவாசிக்கிற ஒவ்வொரு நொடியும் இதயத்தை இறுக்கி பிழியுறது போல வலிக்கிது அக்னி . இதே கொடுமையோட என்னால ஒரு நாள் கூட வாழ முடியல .. அப்றம் எப்டி டா பாதி காலத்தை வாழ போறேன் . சத்தியமா அக்னி என்னால என் தெய்வா இல்லாத இந்த உலகத்துல வாழ முடியாது . என் தெய்வா எனக்காக வெயிட் பண்ணுவா . நான் போறேன்டா . என் செல்லத்தை என்னால வெயிட் பண்ண வைக்க முடியாது . நீ சந்தோஷமா மேகா கூட நீண்ட வருஷம் வாழனும் . நானும் அம்மாவும் எப்பவும் உன்ன பார்த்துட்டு தான் இருப்போம் . ஃபைனலி ஐம் கோயிங் டு சீ மை தெய்வா " கண்களை சிமிட்டி மலர்ந்த இதழோடு வார்த்தைகளை உதிர்த்தவன் கண்களை மூட மௌலி வேணாம் என்ற அலறலோடு துப்பாக்கி சத்தமும் அந்த அறையில் ஓங்கி அடங்கியது .
அக்னிக்கு உடல் வேலை நிறுத்தம் செய்து விட்டது . கரு விழிகள் விரிய அண்ணனை பார்த்தவன் மெதுவாக மௌலி அருகில் அமர்ந்தான் . அவனின் கன்னம் தட்டியவன் " டேய் மௌலி . என்னை பயம்புறுத்தாத .. டேய் பொறுக்கி ன் கண்ணை திறந்து பாருடா . ஏன் ஏன் .. எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது .. அம்மாவை இழந்தேன், துணையா நீ இருந்த ...இப்போ என்ன மயிருக்குடா என்னை விட்டு போனா .. டேய் டேய் மௌலி கண்ணை திறந்து பாருடா " பித்து பிடித்தவன் போல் கதறிட மெல்ல மயக்கம் தெளிந்து எழுந்தாள் மேகா.
தன்னை சுற்றி இருக்கும் புது இடத்தை பயத்தோடு பார்த்தவள் தூரத்தில் கணவன் கதறுவதை அதிர்ச்சியாக " அக்னி ..அக்னி " என முழு பலத்தை திரட்டி அவனை நோக்கி ஓட அழுகையோடு மனைவியை திரும்பி பார்த்தான் .
"மேகா .. மேகா .. இங்க பாருடி .. என் அண்ணனை பாருடி . என் அண்ணன பாருடி . ஒன்னா குடும்பமா வாழனம்னு நிறைய கனவு கண்டேன்.. பாரு மேகா எப்டி கடக்குறானு " அடி தொண்டையில் இருந்து கத்தி கதறியவனை வாரி அணைத்து கொண்டவளுக்கும் அழுகையை தவிர எதுவும் வரவில்லை.
மௌலி கேட்டு கொண்டது போல் காதலர்கள் இருவர் உடலும் ஒன்றாகவே புதைக்கப்பட்டது. கௌரவ்வும் அதிர்ச்சி குறையாது பேயறைந்தது போல் மௌலி தெய்வாவின் கல்லறையை பார்த்தவனால் இன்னும் நம்ப முடியவில்லை நண்பன் இறந்து போனதை.
அழுகை தொண்டை வரும் வந்து அடக்கி கொண்டவன் " உனக்கு வாக்கு கொடுத்த மாதிரி நான் தெய்வா கூட இருந்தேன். நீ ஏன்டா திரும்பி வரல... ஏன்டா எங்கள விட்டு போன " வெடித்து அழ அக்னியும் நண்பனை அணைத்து கொண்டான் ஆறுதலாக.
எத்தனை நினைவுகள். எத்தனை செல்ல சண்டைகள் கோவங்கள். வாக்கு வாதங்கள். ஒன்றாக கூடி பேசிய நாட்கள் எல்லாம் கண் முன்னே வர அந்த இடத்தை விட்டு மறையும் வரை திரும்பி நண்பனின் கல்லறையையே பார்த்து சென்றான்.
*********** ********** **********
ஆறு வருடங்களுக்கு பிறகு....
சென்னை நகரம்... அக்னியின் பிறந்து வீட்டில் அவன் ஆசைப்பட்ட ஒரு அழகிய குடும்ப வாழ்க்கை. இரண்டு அறைகள் ஒரு ஹால் என்ற வீதம் சிறிய வீடே. அதுவே போதுமென்ற வாழ்க்கை தான்.
இன்றோடு மௌலி இறந்து ஆறு வருட நினைவு என்பதால் மும்பைக்கு சென்று அவர்களின் கல்லறையை பார்க்க கிளம்வி கொண்டிருந்தாள் மேகா. இந்த ஆறு வருடத்தில் நிறைய மாற்றங்கள்.
மேகா தன்னை தயார் செய்து கொண்டு வெளியே வர வாசலில் காலிங் பெல் சத்தம் கதவை திறந்தவள் முன் புன்னகை முகமாக நின்றான் விபின்.
"மும்பை போறதுக்கான டிக்கெட்ஸ் மேகா " என்று நீட்டிட வாங்கி கொண்டவள்
" வந்து உக்காரு விபின். அக்னி கிளம்பிட்டு இருக்காரு.. நான் அவனை பார்த்துட்டு வரேன் " மென்மையாக சொல்லியவள் மகன் அறைக்கு விரைந்தாள்.
மகனாக இருந்தாலும் அறைக்குள் அனுமதி கேட்டு தான் செல்வாள். " உள்ள வரலாமா மௌலி சார் " கதவை திறந்து எட்டி பார்க்க ஐந்து வயது மௌலி பெரிய மனிதன் போல் கிளம்பி தயாராக இருந்தான்.
" அம்மா.. நான் கிளம்பிட்டேன் போலாமா " குழந்தை குரலில் கேட்டிட அவனை தூக்கி மேசையில் நிற்க வைத்து சரியாக பொத்தாங்களை போட்டு வைத்த மேகா
" எங்க இருந்து தான் உனக்கு இந்த பழக்கம் வந்துச்சு தெரியல. இவ்ளோ சமத்தா இருந்தா அம்மா என்ன வேலை தான் செய்வேன் "
" நீயேன்ம்மா கஷ்ட படுற... நான் உன்ன பார்த்துப்பேன் " அந்த வயதில் தெளிவாக பேச உச்சி முகர்ந்து முத்தம் வைத்த மேகா
" தெரியும். இப்போ வாங்க போலாம் " மகனை இறக்கி விட்டு வெளியேற அக்னியும் தயாராகி தன் அறையை விட்டு வெளியே வந்தவன் தன்னையே பார்க்கும் மகனுக்கு சிறு புன்னகையை தந்து தூக்கி கொண்டான்.
நீண்ட பயணத்திற்கு பின் மௌலி தெய்வாவின் கல்லறைக்கு வந்து சேர சரியாக அதே நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தான் கௌரவ்.
நீண்ட நாட்கலுக்கு பின் நண்பர்கள் பார்த்து கொண்டதில் கட்டி அணைத்து விலகியவர்கள் கல்லறை முன் சில நொடி அமைதியாய் நிற்க குட்டி மௌலி கல்லறையையே வெறித்து பார்த்தான்.
மௌலி - தெய்வா என பெயர்கள் பொறிந்துருப்பதை கண் இமைக்காமல் குட்டி மௌலி பார்க்க மேகா மகன் தலையை வருடியவள் " போலாமா மௌலி " என்பவளை ஏக்கமாய் பார்த்தவன்
" அம்மா இன்னும் கொஞ்ச நேரம் " கெஞ்சலாய் கேட்டவன் மீண்டும் கல்லறையை பார்க்க அவன் போக்கிலே விட்டுவிட்டாள் அவளும்.
" அப்றம் லைப் எப்டி போகுது " நடந்து கொண்டே கௌரவ் கேட்க ஆழ மூச்சை விட்டவன்
" போகுது கௌரவ். மனைவி குழந்தைனு நான் நினைச்சத விட அழகான வாழ்க்கை. சொந்தமா ஆரம்பிச்ச கம்பெனியும் நல்ல வெற்றி. உன் வைஃப் ஸ்னேகா எப்டி இருக்காங்க. எப்போ டெலிவரி "
" இந்த வாரம் தான் டேட் கொடுத்திருக்காங்க அக்னி. சோ கொஞ்ச நாள் என்கூட தங்கு. குழந்தையை பார்த்துட்டு போலாம் " தவிப்பாய் கேட்டவனுக்கு மறுப்பு சொல்ல தயங்கிய அக்னியும் திரும்பி மனைவி குழந்தையை பார்த்தப்படி
" சரி கௌரவ் " மென்மையாக சம்மதம் சொல்ல சிணுங்கிய தன் போனை எடுத்த கௌரவ் முகம் தீவிரமாகியது.
வேகமாக அட்டென்ட் செய்தவனுக்கு நினைத்த செய்தி கிடைத்தததோ " அக்னி சினேகாக்கு டெலிவரி பெயின் வந்துருச்சு. கேர் டேக்கர் ஹாஸ்பிடல் கூட்டிட்டு பொய்ட்டு இருக்காங்கலாம் " பதட்டமாக
" ஒன்னும் இல்ல... நாம சீக்கிரம் போலாம்... மேகா... மௌலி.. சீக்கிரம் வாங்க " அக்னி குரலில் தெரிந்த அவசரத்தில் இருவரும் வர அனைவரையும் ஏற்றி கொண்ட கார் கௌரவ்வின் ஹாஸ்பிடல் நோக்கி விரைந்தது.
பிரசவ அறைக்குள் சினேகா அலற அவளின் கையை பிடித்து கொண்டு தன் பயத்தையும் மறைத்து ஆறுதல் சொல்லி கொண்டிருந்தான் கௌரவ்.
அறையின் கதவு அருகே அக்னி நிற்க மேகா மடியில் இருந்து இறங்கிய மௌலி அப்பாவை அடைந்தவன் " அப்பா என்ன தூக்கு " கை தூக்கியவனை புருவம் சுருக்கி பார்த்தவனும் தூக்கி கொள்ள கண்ணாடி வழியே சினேகா கதறுவதை கூர்ந்து பார்த்தான்.
அக்னியால் மகனின் முகத்தை படிக்க முடியவில்லை. அவன் என்ன நினைக்கிறான் என்பது எப்போதும் புரியாத புதிரே. அடிக்கடி குட்டி மௌலியின் செய்கை அச்சு பிசறாமல் அண்ணனை தான் நினைவு படுத்தும். அக்னியின் சந்தேகத்தை வலுபடுத்தவது போல் மகனுக்கு வலது நெற்றியில் பிறப்பு அடையாளமும் உண்டு.
ஒரு வழியாக கௌரவ்வை பதற வைத்து புவியில் உதித்தாள் தாரகை. " சார் பெண் குழந்தை" என மருத்துவர்கள் சொல்ல சந்தோஷத்தில் கண்ணீர் வழிந்த கண்களை துடைத்த கௌரவ் தாங்க்ஸ்டி மனைவி நெற்றிக்கு முத்தம் பதித்து தன் நன்றியை தெரிவித்தான்.
தாயும் சேயும் நலமாகிட அக்னியும் மேகாவும் மகனோடு பிறந்த குழந்தையை பார்க்க சென்றனர்.
" காங்கிரஸ் சினேகா... என் அண்ணன் கௌரவ்வ ரொம்ப பயப்பு வச்சிட்ட. பாவம் கார்ல வரும் போதே அழ ஆரம்பிச்சிட்டாரு " கிண்டலாய் மேகா சொல்ல தங்கையை முறைத்தவன் அக்னி பார்வையில் மாற்றி கொண்டு பல்லை காட்டினான்.
" இவன் ஒருத்தன். நான் உன் பொண்டாட்டிய எதும் சொல்லுல. எப்டியோ நான் ஆசைப்பட்ட மாதிரி பொண்ணு பொறந்துருச்சு "
" ஆசைப்பட்டது இருக்கட்டும். உங்க பொண்ணுக்கு ஏதோ பேர்லாம் ஸ்பெஷளா யோசிச்சு வச்சிருக்கேனு சொன்னிங்களே... அத இப்போவாச்சும் சொல்லுங்க கௌரவ் " சினேகா கணவனிடன் ஆசையாய் கேட்க
" அதுவா சொல்லுறேன்.. நீங்க எல்லாரும் கேட்டு ஆச்சர்யபடுவீங்க... என் பொண்ணு பேர் " அவன் சொல்லி முடிக்கும் முன்னே
" தெய்வா " என ஒலித்தது குட்டி மௌலியின் குரல்.
கௌரவ் அதிர்ந்து போக அக்னி திகைப்பில் மனைவியை பார்க்க அவளும் அதே திகைப்பில் இருந்தவள் " ஏன் அந்த பேர்... உனக்கு ஏன் இந்த பெயர் வைக்கணும்னு தோணுச்சு " கண்களில் முட்டும் கண்ணீரில் மேகா கேட்டிட குழந்தையை இதழ்கள் விரித்து வச்சக்கண் வாங்காமல் பார்த்த குட்டி மௌலி
" தெரியலம்மா... ஆனா இந்த பெயர் நல்லாருக்கு. அப்பா அங்கிள் கிட்ட சொல்லி இந்த பெயரை வைக்க சொல்லுங்க " யாரிடம் சொன்னால் நினைத்தது நடக்கும் தெரிந்தே குட்டி மௌலி கெஞ்சிட சிலையாய் நின்ற அக்னி வேகமாய் கௌரவ் குழந்தையின் முகத்தை பார்த்தான்.
கௌரவ்வும் குழப்பமாய் குழந்தையை பார்த்தவன் அப்போது தான் கவனித்தான் இடது நெற்றியில் மகளுக்கு இருக்கு பர்த் மார்க்.
" அக்னி " நம்ப முடியா அதிர்ச்சியில் அழைக்க
" எனக்கு பொதுவா இதுல நம்பிக்கை இல்ல. ஆனா இத பார்க்கும் போது என்னால நம்பாம இருக்க முடியல" வியப்பில் சொன்னவன் முதல் முறையாக சிரிக்கும் தன் மகனை கண் கொட்டாமல் பார்த்தான்.
இங்க வாழ நினைத்த உயிர்கள் இறந்த பின்பும் கூட கடவுள் மற்றொரு வாய்ப்பை கொடுத்து விட்டார் போல. சாத்தியமா என ஆராய விரும்பவில்லை அக்னி. ஆனால் ஒன்று மட்டும் உறுதி கொண்டான். இனி இந்த காதலை பாதியில் முடிக்க விடமாட்டேன் என்பது.
மருத்துவமனை விட்டு வீட்டிற்கும் வந்தும் கூட குழந்தையோடே சேர்ந்து உறங்கிய மௌலியை தனக்கான அறைக்குள் படுக்க வைத்த மேகா மகனுக்கு போர்த்தி விட்டு பால்கனியில் நிற்கும் கணவனை தேடி வந்தாள்.
ஆழ்ந்த யோசனையில் வானத்தை இலக்கற்று அவன் பார்க்க " என்ன யோசனை அக்னி " மெல்லிய குரலில் கேட்பவளின் இடையை வளைத்து அணைத்து கொண்ட ஆடவன் எதுவும் பேசிடவில்லை.
சில நிமிடம் நீண்ட அமைதி நீடிக்க மெல்ல அக்னியை விலக்கியவள் " எனக்கு தெரியும் உன் மனசுல என்ன ஓடுதுனு.. நீ அதைப்பற்றி யோசிக்காம அது போக்குல விடு அக்னி. இனி நீ மௌலியை நினைச்சு கவலைப்பட தேவையில்லை " கன்னம் தாங்கிட தேங்கிய கண்ணீரை துடைத்து கொண்டான் சந்தோஷத்தில்.
" ஆமால்ல... நான் ஏன் இனி அழனும். அழகான பொண்டாட்டி.. அழகான புள்ளை... என் மௌலியும் என் கூட தான் இருக்கான். இனியும் நான் வருந்த தேவையில்லை... மேகா இன்னைக்கு மௌலி சிரிச்சதை பார்த்தியா... அவன் சிரிச்சே இன்னைக்கு தான்டி பார்க்குறேன். நாம இனி சென்னை போக வேணாம். மௌலி எப்படி தெய்வாவை பிரிஞ்சி இருப்பான். இன்னகையே ஒரு வீடு வாங்கி பக்கத்துலயே வந்திருவோம்... இல்லனா தெய்வாவை நாமளே தூக்கிட்டு போகிருவோம்.. நாம வளர்த்துக்குலாம் " அடுக்கி கொண்டே போகும் அக்னியின் பேச்சை பற்கள் தெரிய சிரித்து கொண்டே கேட்டாள்.
" அக்னி சார் ஒரு குறிக்கோளோட இருந்திங்களே... இரண்டு குழந்தை.. சின்ன வீடு.. மறந்து போச்சா " எங்கோ பார்த்து உதட்டை சுழித்து கேட்டவள் பேச்சில் அர்த்தமாய் இதழ் விரித்தான்.
என்ன கேட்ட கேள்விக்கு பதில் வரல சந்தேகமாய் திரும்பியவளின் இதழை நொடியில் கவ்வி கொண்டான்.
உடும்பு பிடியாய் இடையை பிடித்து இறுக்கிட பரந்த அவன் தோள்பட்டையில் விரல்கள் கொண்டு அணைத்து கொண்டவளும் அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க இதழோடு நாவும் இணைந்து சத்தமில்லா யுத்தத்தை அரங்கேற்றியது.
************* ********* **********
இருபத்திரண்டு வருடங்களுக்கு பிறகு..
பூக்களால் அலங்காரம் செய்த அந்த மாளிகை வரும் விருந்தாளிகளை வியக்க வைக்க வெள்ளை வெளிர் ரோஸ் நிறத்தில் சுற்றி அலங்கரித்த தூண்கள் பார்ப்பவர் கண்களை மின்ன செய்தது.
" நேரம் ஆகிடுச்சு பொண்ணு பையனை அழைச்சிட்டு வாங்க " அய்யர் கத்திட தன் பெற்றவர்கள் காலில் ஆசிர்வாதம் வாங்கி நிமிர்ந்து நின்றான் மௌலி அக்னித்ரன்.
பெயர் மட்டும் மௌலி அல்ல. முக ஜாடையுமே அண்ணனை போன்று இருக்க கட்டி தழுவி கொண்ட அக்னி " இனியும் உன்ன காக்க வைக்க மாட்டோம். போடா... போய் உன் தெய்வாவை பிடிச்சிக்கோ " தட்டி கொடுக்க வெட்கம் கலந்த சிரிப்போடு மனமேடை நோக்கி நடந்தான் மௌலி.
" அப்பா... அம்மா உங்கள பார்க்குற பார்வை பார்த்தா. அவங்களுக்கும் உங்கள திரும்ப கல்யாணம் செய்யணும்னு ஆசை இருக்கு போல... அங்க பாருங்க " மகள் ருத்திரா தாயை போட்டு கொடுக்க
" ஆமான்டி. என் புருஷன் எவ்ளோ முறை வேணாலும் கல்யாணம் பண்ணிப்பேன். முதல உன்ன அடிக்கணும். படிக்கிரத தவிர எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிக்கோ. என்னை எதுக்கு பார்க்குறீங்க... வாங்க " வெளியே போக மேகா என அக்னி அழைத்ததில் திரும்பியவளின் கண்களை பார்த்தவனுக்கு இன்னும் காதல் குறையவில்லை.
" ஐ லவ் யூ பொண்டாட்டி " மகள் முன்னே சொன்னதில் மேகாவுக்கு வெட்கம் வர மறைத்து கொண்டவள்..
" உங்கள... மகன் கல்யாணத்துல பேச்சை பாரு.. வாங்க " அதட்டி சென்றவளுக்கும் வெட்கம் பிடுங்கி தின்றது.
" அம்மா கோவமா போறாங்கப்பா " மகள் அப்பாவியாய் சொல்ல சிரிப்பை அடக்கிய அக்னி
" அவ கோவமா போல.. வெட்கத்துல போறா. வா நாம போவோம் " மகள் கையை பிடித்து மன மேடைக்கு வர அங்கு மௌலி இழுத்து பிடித்த பொறுமையில் மந்திரங்களை சொல்லி கொண்டிருந்தான்.
" பொண்ண அழைச்சிட்டு வாங்க.. நாழி ஆகுது " அய்யர் குரலில் மௌலியின் தேவதை தங்க ஜரிகையாய் வர கண் இமைக்காமல் பார்த்தவன் அருகில் வந்து அமர்ந்தாள் தெய்வா.
" எல்லாரும் நம்பள தான் பார்க்குறாங்க மௌலி " பெண்ணின் குரல் அவனை சுயவுக்கு கொண்டு வரவில்லை.
அதில் இன்னும் பேதை சிவந்திட கௌரவ் தான் " மருமகனே ரொம்ப நேரமா அய்யர் தாலியை நீட்டிட்டு இருக்காரு... கட்டிட்டு பாருடா " அப்பாவியாய் சொல்ல சினேகா கணவரை தீயாய் முறைத்து வைத்தாள்.
மஞ்சள் தாலி மௌலி வாங்கிட கெட்டி மேளம் ஒலிக்க தன் அப்பாவை புன்னகையாக பார்த்தவன் கண்ணால் ஏதோ பேசி கொண்டான். என்ன பேசினார்கள் என்பது அவர்கள் மட்டுமே அறிவார்கள்.
தாலிக்கு ஏங்கி அமர்ந்திருக்கும் தன்னவளை பார்த்த மௌலி " தெய்வா " ஆழமான குரலில் அழைக்க அவளும் கட்டுப்பட்டு விழி உயர்த்தி பார்த்தாள்.
" என்ன? "
" நான் இன்னும் அதை சொல்லவே இல்ல "
" எது மௌலி "
" ஐ லவ் யூ தெய்வா "
" ஐ லவ் யூ மௌலி "
இனிதே முடிந்து போன அவர்கள் காதல் மீண்டும் இப்புவியில் தொடர்ந்தது. காலத்தால் சேராத இவர்கள் காதல் காலம் கடந்து சேர்ந்து விட்டதே சந்தோசம்.
கடவுளும் இவர்களுக்கு இனிய முடிவை கொடுக்க நினைத்தாரோ. இனி மௌலி தெய்வா காதல் காலம் கடந்தும் நிலைக்கும். வாழ நினைத்த ஆசைகளை இனி தன் காதலால் மூச்சி முட்ட செய்து விடுவான் அவன்.
அவளும் அதற்கு சளைத்தவள் அல்ல. மௌலிக்கு இணையாக தன் காதலோடு தன்னையும் தந்து உடல் இரண்டு உயிர் ஒன்று என்பதை வாழ்ந்து காட்ட போகிறாள். சொல்ல நினைத்த காதல் இனிதே இணைந்து விட்டது.
******Happy Ending❤️******