- Joined
- Nov 10, 2023
- Messages
- 69
- Thread Author
- #1
அத்தியாயம் – 9
“ கடைசியா என் பையன் உன்ன பார்த்ததா தான் எனக்கு தகவல் வந்துச்சி. ஒழுங்கா உண்மைய சொல்லு அவனுக்கு என்ன ஆச்சு“ சிங்கத்தின் கர்ஜினை போல் அதிகாரம் குறையாமல் கேட்டவரை பயத்தோடு பார்த்தான் தீரன்.
அமரின் ஐடியை வைத்து விசாரித்ததில் அமர் தமிழ்நாடு வந்துள்ளான் என தெரிந்து கொண்டார் அமரின் தந்தை ரகுநாத். அதன் பின் தன்னுடைய அதிகாரம் பயன்படுத்தி விசாரித்ததில் அமர் தீரனை சந்தித்தது தெரிய வந்தது.
மகனிடம் இருந்து ஒரு தகவலும் கிடைக்காமல் போனதில் பயந்த ரகுநாத் தாமதிக்காமல் தமிழ்நாடு வந்துவிட்டார்.
ரகுநாத் அறுவது வயது என்று சொன்னால் சத்தியமாக யாரும் நம்ப மாட்டார்கள்.உடற்பயிற்சி செய்து உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பார். முகத்தில் இருக்கும் தாடி கொஞ்சமாக நரைத்திருக்கும். அதுவும் பார்க்க அழகாக தான் இருக்கும்.
சுத்தி கோர்ட் ஷூட் உடன் பணியாட்கள் இருக்க நடுநாயகமாகநின்று கொண்டிருந்த ரகுநாத்தை கொஞ்சம் பயத்தோடு பார்த்த தீரன்
“ சார் அது வந்து உங்க பையன கடைசியாராவணனோட பார்த்தேன் சார். அதுக்கு அப்றம்எனக்கு எதும் தெரியாது “ திக்கி திணறி கூற தீரனை நம்பாமல் பார்த்தவர்
“ யாரு அந்த ராவணன் “என்றவரிடம் ராவணன் பற்றி தகவலை கூறினான் தீரன்.
************************* *************
“அஜெய் இதுலாம் இப்போ ரொம்ப அவசியமா. எதுக்கு இவ்ளோ ஆடம்பரமா கல்யாணம். சிம்பிளா முடிச்சிரலாமே அஜெய் “ என்றவனின் பேச்சு ராவணனின் முறைப்பில் பாதியோடு நின்றது.
நகைக்கடை துணிக்கடை எல்லாம் வீட்டிற்கே வந்ததை கண்டு தான் மிதுன் கேட்டுவிட்டான்.
“என் கல்யாணம் தான் சிம்பிளா முடிஞ்சிது. பட் உனக்கு நா இருக்கேன். உன் கல்யாணம் ப்ரமாண்டமா நடக்கணும் அதான் என் விருப்பம். மைதிலி விருப்பமும் கூட “ ராவணன் சொல்லவே அமைதியாகி விட்டான் மிதுன்.
மைதிலியும் மதியும் கல்யாணத்திற்கு தேவையான உடைகளை தேர்ந்தெடுத்து கொண்டிருக்க திடுதிப்பென அனுமதி இல்லாமல் உள்ளே வந்தவர்களை கேள்வியாக முதலில் பார்த்தவர்கள் ரகுநாத்தை கண்டு மிரண்டு போனார்கள்.
ரகுநாத் பார்வையால் அங்கு இருப்பவர்களை பார்த்தவர் ஒருஇடத்தில் நிலைகுத்தி நின்றது பார்வை .
சிலையாகி நிற்கும் தன் கணவனின் அருகில் சென்ற மைதிலி ஆதரவாகராவணனின் கைகளை பற்றிக்கொள்ள கலங்கிய கண்களுடன் அவளின் முகம் பார்த்தான்.
“ யாருப்பா இவரு அப்டியே ராவணன் மாமா மாதிரியே இருக்காரு “ என்ற மதியின் வார்த்தையில் தான் எல்லாரும் நடப்புக்கு வந்தார்கள்.
தன் மகனை தேடி கோவத்தோடு இந்த வீட்டில் நுழைந்தவர் ராவணனை கண்ட நொடி அனைத்தையும் மறந்து போனார். காணாத பொக்கிஷம் கிடைத்தது போல்மகிழ்ந்தவர் ஆசையாக ராவணனை நோக்கி அடி வைக்கராவணனின் பேச்சில் அப்படியே நின்றார்.
“ யாரு நீங்க எதுக்கு இங்க வந்துருக்கீங்க “என்ற ராவணன் வரியில் அடுத்த அடி வைக்காமல் அப்படியே நின்றார் ரகுநாத்.
மகனின் கோவம் கண்டு சிரித்தவர்உரிமை எடுத்து கொள்ளாமல் வந்த காரணத்தை கூற மைதிலி உடல் நடுக்கம் கொண்டது.
அதை உணர்ந்த ராவணன் அவளை அனைத்து படி எதிரில் இருந்தவரை அலட்சியமாக பார்த்தவன் “ அந்த கேடு கெட்டவனோட அப்பன் தான் நீயா “ நக்கலாக சிரிக்க ரகுநாத்க்கு கோவம் வந்து விட்டது. ஒரே ரத்தம் அல்லவா.
“ என் பையன் எங்கனு சொல்ல போறியா இல்லையா “ என்றவரை வெற்று புன்னகையோடு பார்த்தவன்
“ என் பொண்டாட்டிய தொட நினைச்ச உன் புள்ளைய என் கையாள தான் கொன்னு கொல்லி வச்சேன் “ என்ற ராவணன் வரியை கேட்டவருக்கு ஒரு நிமிடம் உலகம் நின்றது போல் ஆனது.
“ நீ நீ என்ன சொல்ற. என் பையன் அப்டி பன்றவன் இல்ல “ என்றவரை வெறுப்போடு பார்த்த ராவணன்
“ மிதுன் அத எடுத்துட்டு வா “ ராவணன் சொன்னதும் அமரை பற்றி கலெக்ட் செய்த அனைத்து விவரங்களையும் எடுத்து வந்து ரகுநாத் முன்னால் வைக்கஅதில் இருந்தவைகளை பார்த்தவர் ஒரு கணம் அதிர்ச்சியாகி தான் போனார்.
லீலாவின் பேச்சை கேட்டு அமரை சுதந்திரமாக விட்டது எவ்ளோ பெரிய தப்பாகி விட்டது. லீலா சில வாரங்களுக்கு முன் தான் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனாள். சரியான திமிர் பிடித்தவள் அதுனாலே ஒதுங்கி அமைதியாக இருப்பார் ரகுநாத்.அவள் இறந்து போன பின்பாவது தான் அவன்மேல் கவனமாக இருந்திருக்க வேண்டும்.சூரியன் மறைந்த பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதில் என்ன பலன்.
“ லீகுலாவோஇல்லீகுலாவோ உன்னால என்ன முடியுமோ அத நீ பண்ணிக்கோ. இப்போ நீங்க “ என்று வெளியே வாசலை நோக்கி கைநீட்ட வலியோடுராவணனை பார்த்தவர் எதும் பேசாமல் அமைதியாக சென்றார்.
“ ராவணா அவர் உன் அப்பா. இதுவரை உனக்கு உறவு இல்லன்னு வருத்த பட்டுட்டு இருந்த. இப்போ விதியே அவர உன் முன்னாடி கொண்டு வந்துருக்கு. அவர போக சொல்லாத ராவணா. அவர இருக்க சொல்லு டா “ என்றவளை வலியோடு பார்த்தவன்
“ எதுக்கு மைதிலி. நா அம்மா அப்பா இல்லாம அசிரமத்துல இருந்தப்போ வராதவரு. பசியில நான்துடிக்கும் போது வராதவரு. தத்தெடுத்து போனவங்க என்ன கொடுமை படுத்தும் போது வராதவருஇப்போநா என் குடும்பத்தோடு இருக்கும் போது எதுக்கு வந்தாரு. அதும் அவர் புள்ளைய தேடி தான் வந்தாரு என்ன இல்ல மைதிலி. எனக்கு நீ போதும் எனக்கு வேற எதுவும் வேணாம் அம்மு “ என்று அழுதவனை கட்டி அணைத்து கொண்டாள் மைதிலி.
ராவணன் பேசிய அனைத்தையும் கேட்டு கொண்டு இருந்த ரகுநாத்தின் மனமும் ரணமானது.மனைவியை அனைத்து அழுதவனின் அருகில் சென்றவர்ராவணனின் தலையை வருட கை உயர்த்த என்ன நினைத்தாரோ கையை இறக்கி கொண்டார்.
“ உன் அம்மா மாதிரியே ரோஷக்காரன் தான் நீ “ என்றவரை நிமிர்ந்து பார்த்த ராவணன்எதும் பேசவில்லை.
“ உன் அம்மாவை உயிரா காதலிச்சேன். அவளும் தான். எங்க காதல் விஷயம் அவளோட வீட்டுல தெரிஞ்சிருச்சின்னு சொன்னா. அன்னைக்கு தான் கடைசியா அவளோட குரல் கேட்டேன் அதுக்கு அப்றம் அவளை தேடாத இடம் இல்ல. அவ வீட்ல இருந்தவர்களும் அவளை கூட்டிட்டு எங்கையோ போய்ட்டாங்க. பக்கத்துல தெரிஞ்சவங்ககேட்டும் எனக்கு எந்த தகவலும் கிடைக்குல. காலம் ஓட அதோட நானும் ஓட ஆரம்பிச்சேன். ஆனா இன்னைக்கு உன்ன பார்க்கும் போது. அப்போனா நீ எனக்கும் சுகந்திக்கும் பிறந்தவன். என் வாரிசு “ கண்கள் பனிக்க ரகுநாத்ராவணனின் கன்னம் தொட போக ஒரு அடி பின்னால் போய்நின்றான் ராவணன்.
“ என்ன மன்னிச்சிருபா.ஒரு அப்பனா உன் கூட என்னால இருக்க முடியல “ என்றவரை விரல் நீட்டி கோவமாக பார்த்தவன்
“ யாரும் எனக்கு அப்பா இல்ல. என் அப்பா அம்மா எப்போவோ செத்துட்டாங்க “ என்றவன் வாசல் புறம் கை நீட்ட வெளியே செல்ல எத்தனித்தவரை தடுத்து நிறுத்தினாள் மைதிலி.
“என் தங்கச்சிக்கு கல்யாணம் முடியுற வரைக்கும் நீங்க இங்க இருங்க “ என்றவளின் வார்த்தையைஎதிர்த்து பேச வில்லை ராவணன். அமைதியாக அவனின் அறைக்கு சென்று விட போகும் அவனையே பார்த்து கொண்டிருந்த ரகுநாத்திடம்
“ எந்த உறவு இல்லாத என் ராவணனுக்கு எல்லாமா நா இருந்தாலும். அவன் பிறப்புக்கு காரணமான நீங்க கூட இருக்கணும்னு என் ஆசை. இந்த கல்யாணம் முடியுற வரை எனக்காக இருங்க “ என்ற மைதிலியைஅன்போடு பார்த்தவர்
“ உன் பேர் என்னமா “ என்றவரிடம்தன்னையும் மற்றவர்களையும் அறிமுக படுத்தி வைத்தாள் மைதிலி.
மதியும்“ எவ்ளோ பேர் இருந்தாலும் பெத்தவங்க இருக்குற அளவுக்கு வராது. எங்க மாமாக்குஒரு அப்பாவா உங்க அன்பு கிடைக்கணும். அது தான் எங்க ஆசையும் கூட “என்று சொல்லவே யோசித்தவர்
“ அங்கிள் யோசிக்காதிங்க. ப்ளீஸ் இங்க இருக்க ஓத்துக்கோங்க “ என்று மிதுனும் சொல்லவே பெரு மூச்சு விட்டவர்தன் பணியாட்களைமும்பை போக சொல்லி விட்டு இங்கையே தங்கிக்கொள்ள முடிவு செய்தார்.
ஆனால் அங்கு இருவரின் முகம்மாறி போனதை யாரும் கவனிக்கவில்லை.
அமர் ஒன்றும் ரகுநாத்தின் ரத்த சொந்தம் இல்லை. லீலாவின் கார்டியன் என ஒப்பந்தம் வைத்து கொண்டார் . யாரோ ஒருவனின் குழந்தைக்கு தாயாகி போன தன்னுடைய நண்பனின் தங்கைக்கு வாழ்க்கை குடுத்தார் ரகுநாத். அவரின் விரல் கூட லீலா இறக்கும் வரை பட்டது இல்லை. அவரின் மனமும் உடலும் அவரின் ஆசைகாதலி சுகந்தி மீது தான் சுற்றி திரிந்தது. தன்னால் முடிந்த வரை சுகந்தியை தேடி கொண்டு தான் இருந்தார் ரகுநாத். ஆனால் கல்யாணம் செய்வதற்கு முன்னே ரகுநாத்தின் வாரிசு சுகந்தி வயிற்றில் வளருவதை அவளின் குடும்பம் தெரிந்து கொண்டு ராவோடு ராவாகஅவளை அழைத்து கொண்டு சென்றனர். பத்து மாதம் யாருக்கும் தெரியாமல் சுகந்தியை பார்த்து கொண்டவர்கள் குழந்தை பிறந்ததும்தூக்கி கொண்டு ஆசிரமத்தின் முன் போட்டு விட்டு சுகந்திக்கு வேறு கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்யகாதலனை பிரிந்து பெத்த குழந்தையையும் பிரிந்து வாழ்க்கை வெறுத்து போய் தற்கொலை செய்து கொண்டார் சுகந்தி. பாவம் அது தெரியாமல்ரகுநாத்தும் சுகந்தியை பார்க்க மாட்டோமா என்று ஏங்கி தேடிகொண்டிருக்கிறார்.
மாமனாரை புது அறையில் விட்டவள் “ நீங்க ஓய்வெடுங்க மாமா. எல்லாம் சரியாகும் “ என்றவளின் தலையை வருடியவர்
“ உனக்கு நா என்னைக்கும் நன்றி கடன் பட்ருக்கேன். ரொம்ப தேங்க்ஸ்மா “ என்றவருக்கு சிரிப்பை தந்தவள்அவளின் அறை நோக்கி ஓடினாள்.
எதாவது கோவப்படுவான் அடிப்பான் என எதிர்பார்த்து உள்ளே வந்தவள் சோபாவில் அமர்ந்தவனின் அருகில் செல்ல அவள் நினைத்ததற்கு எதிராமாராகஅவளின் இடையை கட்டிக்கொண்டு அவள் வயிற்றில் முகம் புதைத்து அழுதான் ராவணன்.
“ கடைசியா என் பையன் உன்ன பார்த்ததா தான் எனக்கு தகவல் வந்துச்சி. ஒழுங்கா உண்மைய சொல்லு அவனுக்கு என்ன ஆச்சு“ சிங்கத்தின் கர்ஜினை போல் அதிகாரம் குறையாமல் கேட்டவரை பயத்தோடு பார்த்தான் தீரன்.
அமரின் ஐடியை வைத்து விசாரித்ததில் அமர் தமிழ்நாடு வந்துள்ளான் என தெரிந்து கொண்டார் அமரின் தந்தை ரகுநாத். அதன் பின் தன்னுடைய அதிகாரம் பயன்படுத்தி விசாரித்ததில் அமர் தீரனை சந்தித்தது தெரிய வந்தது.
மகனிடம் இருந்து ஒரு தகவலும் கிடைக்காமல் போனதில் பயந்த ரகுநாத் தாமதிக்காமல் தமிழ்நாடு வந்துவிட்டார்.
ரகுநாத் அறுவது வயது என்று சொன்னால் சத்தியமாக யாரும் நம்ப மாட்டார்கள்.உடற்பயிற்சி செய்து உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பார். முகத்தில் இருக்கும் தாடி கொஞ்சமாக நரைத்திருக்கும். அதுவும் பார்க்க அழகாக தான் இருக்கும்.
சுத்தி கோர்ட் ஷூட் உடன் பணியாட்கள் இருக்க நடுநாயகமாகநின்று கொண்டிருந்த ரகுநாத்தை கொஞ்சம் பயத்தோடு பார்த்த தீரன்
“ சார் அது வந்து உங்க பையன கடைசியாராவணனோட பார்த்தேன் சார். அதுக்கு அப்றம்எனக்கு எதும் தெரியாது “ திக்கி திணறி கூற தீரனை நம்பாமல் பார்த்தவர்
“ யாரு அந்த ராவணன் “என்றவரிடம் ராவணன் பற்றி தகவலை கூறினான் தீரன்.
************************* *************
“அஜெய் இதுலாம் இப்போ ரொம்ப அவசியமா. எதுக்கு இவ்ளோ ஆடம்பரமா கல்யாணம். சிம்பிளா முடிச்சிரலாமே அஜெய் “ என்றவனின் பேச்சு ராவணனின் முறைப்பில் பாதியோடு நின்றது.
நகைக்கடை துணிக்கடை எல்லாம் வீட்டிற்கே வந்ததை கண்டு தான் மிதுன் கேட்டுவிட்டான்.
“என் கல்யாணம் தான் சிம்பிளா முடிஞ்சிது. பட் உனக்கு நா இருக்கேன். உன் கல்யாணம் ப்ரமாண்டமா நடக்கணும் அதான் என் விருப்பம். மைதிலி விருப்பமும் கூட “ ராவணன் சொல்லவே அமைதியாகி விட்டான் மிதுன்.
மைதிலியும் மதியும் கல்யாணத்திற்கு தேவையான உடைகளை தேர்ந்தெடுத்து கொண்டிருக்க திடுதிப்பென அனுமதி இல்லாமல் உள்ளே வந்தவர்களை கேள்வியாக முதலில் பார்த்தவர்கள் ரகுநாத்தை கண்டு மிரண்டு போனார்கள்.
ரகுநாத் பார்வையால் அங்கு இருப்பவர்களை பார்த்தவர் ஒருஇடத்தில் நிலைகுத்தி நின்றது பார்வை .
சிலையாகி நிற்கும் தன் கணவனின் அருகில் சென்ற மைதிலி ஆதரவாகராவணனின் கைகளை பற்றிக்கொள்ள கலங்கிய கண்களுடன் அவளின் முகம் பார்த்தான்.
“ யாருப்பா இவரு அப்டியே ராவணன் மாமா மாதிரியே இருக்காரு “ என்ற மதியின் வார்த்தையில் தான் எல்லாரும் நடப்புக்கு வந்தார்கள்.
தன் மகனை தேடி கோவத்தோடு இந்த வீட்டில் நுழைந்தவர் ராவணனை கண்ட நொடி அனைத்தையும் மறந்து போனார். காணாத பொக்கிஷம் கிடைத்தது போல்மகிழ்ந்தவர் ஆசையாக ராவணனை நோக்கி அடி வைக்கராவணனின் பேச்சில் அப்படியே நின்றார்.
“ யாரு நீங்க எதுக்கு இங்க வந்துருக்கீங்க “என்ற ராவணன் வரியில் அடுத்த அடி வைக்காமல் அப்படியே நின்றார் ரகுநாத்.
மகனின் கோவம் கண்டு சிரித்தவர்உரிமை எடுத்து கொள்ளாமல் வந்த காரணத்தை கூற மைதிலி உடல் நடுக்கம் கொண்டது.
அதை உணர்ந்த ராவணன் அவளை அனைத்து படி எதிரில் இருந்தவரை அலட்சியமாக பார்த்தவன் “ அந்த கேடு கெட்டவனோட அப்பன் தான் நீயா “ நக்கலாக சிரிக்க ரகுநாத்க்கு கோவம் வந்து விட்டது. ஒரே ரத்தம் அல்லவா.
“ என் பையன் எங்கனு சொல்ல போறியா இல்லையா “ என்றவரை வெற்று புன்னகையோடு பார்த்தவன்
“ என் பொண்டாட்டிய தொட நினைச்ச உன் புள்ளைய என் கையாள தான் கொன்னு கொல்லி வச்சேன் “ என்ற ராவணன் வரியை கேட்டவருக்கு ஒரு நிமிடம் உலகம் நின்றது போல் ஆனது.
“ நீ நீ என்ன சொல்ற. என் பையன் அப்டி பன்றவன் இல்ல “ என்றவரை வெறுப்போடு பார்த்த ராவணன்
“ மிதுன் அத எடுத்துட்டு வா “ ராவணன் சொன்னதும் அமரை பற்றி கலெக்ட் செய்த அனைத்து விவரங்களையும் எடுத்து வந்து ரகுநாத் முன்னால் வைக்கஅதில் இருந்தவைகளை பார்த்தவர் ஒரு கணம் அதிர்ச்சியாகி தான் போனார்.
லீலாவின் பேச்சை கேட்டு அமரை சுதந்திரமாக விட்டது எவ்ளோ பெரிய தப்பாகி விட்டது. லீலா சில வாரங்களுக்கு முன் தான் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனாள். சரியான திமிர் பிடித்தவள் அதுனாலே ஒதுங்கி அமைதியாக இருப்பார் ரகுநாத்.அவள் இறந்து போன பின்பாவது தான் அவன்மேல் கவனமாக இருந்திருக்க வேண்டும்.சூரியன் மறைந்த பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதில் என்ன பலன்.
“ லீகுலாவோஇல்லீகுலாவோ உன்னால என்ன முடியுமோ அத நீ பண்ணிக்கோ. இப்போ நீங்க “ என்று வெளியே வாசலை நோக்கி கைநீட்ட வலியோடுராவணனை பார்த்தவர் எதும் பேசாமல் அமைதியாக சென்றார்.
“ ராவணா அவர் உன் அப்பா. இதுவரை உனக்கு உறவு இல்லன்னு வருத்த பட்டுட்டு இருந்த. இப்போ விதியே அவர உன் முன்னாடி கொண்டு வந்துருக்கு. அவர போக சொல்லாத ராவணா. அவர இருக்க சொல்லு டா “ என்றவளை வலியோடு பார்த்தவன்
“ எதுக்கு மைதிலி. நா அம்மா அப்பா இல்லாம அசிரமத்துல இருந்தப்போ வராதவரு. பசியில நான்துடிக்கும் போது வராதவரு. தத்தெடுத்து போனவங்க என்ன கொடுமை படுத்தும் போது வராதவருஇப்போநா என் குடும்பத்தோடு இருக்கும் போது எதுக்கு வந்தாரு. அதும் அவர் புள்ளைய தேடி தான் வந்தாரு என்ன இல்ல மைதிலி. எனக்கு நீ போதும் எனக்கு வேற எதுவும் வேணாம் அம்மு “ என்று அழுதவனை கட்டி அணைத்து கொண்டாள் மைதிலி.
ராவணன் பேசிய அனைத்தையும் கேட்டு கொண்டு இருந்த ரகுநாத்தின் மனமும் ரணமானது.மனைவியை அனைத்து அழுதவனின் அருகில் சென்றவர்ராவணனின் தலையை வருட கை உயர்த்த என்ன நினைத்தாரோ கையை இறக்கி கொண்டார்.
“ உன் அம்மா மாதிரியே ரோஷக்காரன் தான் நீ “ என்றவரை நிமிர்ந்து பார்த்த ராவணன்எதும் பேசவில்லை.
“ உன் அம்மாவை உயிரா காதலிச்சேன். அவளும் தான். எங்க காதல் விஷயம் அவளோட வீட்டுல தெரிஞ்சிருச்சின்னு சொன்னா. அன்னைக்கு தான் கடைசியா அவளோட குரல் கேட்டேன் அதுக்கு அப்றம் அவளை தேடாத இடம் இல்ல. அவ வீட்ல இருந்தவர்களும் அவளை கூட்டிட்டு எங்கையோ போய்ட்டாங்க. பக்கத்துல தெரிஞ்சவங்ககேட்டும் எனக்கு எந்த தகவலும் கிடைக்குல. காலம் ஓட அதோட நானும் ஓட ஆரம்பிச்சேன். ஆனா இன்னைக்கு உன்ன பார்க்கும் போது. அப்போனா நீ எனக்கும் சுகந்திக்கும் பிறந்தவன். என் வாரிசு “ கண்கள் பனிக்க ரகுநாத்ராவணனின் கன்னம் தொட போக ஒரு அடி பின்னால் போய்நின்றான் ராவணன்.
“ என்ன மன்னிச்சிருபா.ஒரு அப்பனா உன் கூட என்னால இருக்க முடியல “ என்றவரை விரல் நீட்டி கோவமாக பார்த்தவன்
“ யாரும் எனக்கு அப்பா இல்ல. என் அப்பா அம்மா எப்போவோ செத்துட்டாங்க “ என்றவன் வாசல் புறம் கை நீட்ட வெளியே செல்ல எத்தனித்தவரை தடுத்து நிறுத்தினாள் மைதிலி.
“என் தங்கச்சிக்கு கல்யாணம் முடியுற வரைக்கும் நீங்க இங்க இருங்க “ என்றவளின் வார்த்தையைஎதிர்த்து பேச வில்லை ராவணன். அமைதியாக அவனின் அறைக்கு சென்று விட போகும் அவனையே பார்த்து கொண்டிருந்த ரகுநாத்திடம்
“ எந்த உறவு இல்லாத என் ராவணனுக்கு எல்லாமா நா இருந்தாலும். அவன் பிறப்புக்கு காரணமான நீங்க கூட இருக்கணும்னு என் ஆசை. இந்த கல்யாணம் முடியுற வரை எனக்காக இருங்க “ என்ற மைதிலியைஅன்போடு பார்த்தவர்
“ உன் பேர் என்னமா “ என்றவரிடம்தன்னையும் மற்றவர்களையும் அறிமுக படுத்தி வைத்தாள் மைதிலி.
மதியும்“ எவ்ளோ பேர் இருந்தாலும் பெத்தவங்க இருக்குற அளவுக்கு வராது. எங்க மாமாக்குஒரு அப்பாவா உங்க அன்பு கிடைக்கணும். அது தான் எங்க ஆசையும் கூட “என்று சொல்லவே யோசித்தவர்
“ அங்கிள் யோசிக்காதிங்க. ப்ளீஸ் இங்க இருக்க ஓத்துக்கோங்க “ என்று மிதுனும் சொல்லவே பெரு மூச்சு விட்டவர்தன் பணியாட்களைமும்பை போக சொல்லி விட்டு இங்கையே தங்கிக்கொள்ள முடிவு செய்தார்.
ஆனால் அங்கு இருவரின் முகம்மாறி போனதை யாரும் கவனிக்கவில்லை.
அமர் ஒன்றும் ரகுநாத்தின் ரத்த சொந்தம் இல்லை. லீலாவின் கார்டியன் என ஒப்பந்தம் வைத்து கொண்டார் . யாரோ ஒருவனின் குழந்தைக்கு தாயாகி போன தன்னுடைய நண்பனின் தங்கைக்கு வாழ்க்கை குடுத்தார் ரகுநாத். அவரின் விரல் கூட லீலா இறக்கும் வரை பட்டது இல்லை. அவரின் மனமும் உடலும் அவரின் ஆசைகாதலி சுகந்தி மீது தான் சுற்றி திரிந்தது. தன்னால் முடிந்த வரை சுகந்தியை தேடி கொண்டு தான் இருந்தார் ரகுநாத். ஆனால் கல்யாணம் செய்வதற்கு முன்னே ரகுநாத்தின் வாரிசு சுகந்தி வயிற்றில் வளருவதை அவளின் குடும்பம் தெரிந்து கொண்டு ராவோடு ராவாகஅவளை அழைத்து கொண்டு சென்றனர். பத்து மாதம் யாருக்கும் தெரியாமல் சுகந்தியை பார்த்து கொண்டவர்கள் குழந்தை பிறந்ததும்தூக்கி கொண்டு ஆசிரமத்தின் முன் போட்டு விட்டு சுகந்திக்கு வேறு கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்யகாதலனை பிரிந்து பெத்த குழந்தையையும் பிரிந்து வாழ்க்கை வெறுத்து போய் தற்கொலை செய்து கொண்டார் சுகந்தி. பாவம் அது தெரியாமல்ரகுநாத்தும் சுகந்தியை பார்க்க மாட்டோமா என்று ஏங்கி தேடிகொண்டிருக்கிறார்.
மாமனாரை புது அறையில் விட்டவள் “ நீங்க ஓய்வெடுங்க மாமா. எல்லாம் சரியாகும் “ என்றவளின் தலையை வருடியவர்
“ உனக்கு நா என்னைக்கும் நன்றி கடன் பட்ருக்கேன். ரொம்ப தேங்க்ஸ்மா “ என்றவருக்கு சிரிப்பை தந்தவள்அவளின் அறை நோக்கி ஓடினாள்.
எதாவது கோவப்படுவான் அடிப்பான் என எதிர்பார்த்து உள்ளே வந்தவள் சோபாவில் அமர்ந்தவனின் அருகில் செல்ல அவள் நினைத்ததற்கு எதிராமாராகஅவளின் இடையை கட்டிக்கொண்டு அவள் வயிற்றில் முகம் புதைத்து அழுதான் ராவணன்.