- Joined
- Nov 10, 2023
- Messages
- 57
- Thread Author
- #1
அத்தியாயம் – 6
‘’ விசாரிச்சு பார்த்தேன் எனக்காக வேலை செய்ய கூடிய நன்றியுள்ள ஆள் கிடைக்குமான்னு.எல்லாரும் உன் பேர் தான் சொன்னாங்க. ஓகே தீரன் கம்மிங் டு த பாயிண்ட் எனக்காக நீ ஒரு பேவர் பண்ணனும். என்கிட்ட பணம் வாங்கி ஒருத்தன் தப்பிச்சிட்டான். அவன் உன் கண்ட்ரோல்ல இருக்குற ஏரியா தான்.நீ எனக்கு அவனை கண்டு புடிச்சி தரணும். அதோட எனக்கு அவன் பேமிலி டீடெயில்ஸும் வேனும் “ என்ற அமர்.எதிரில் இருந்தவனிடம் சில ஆயிரம் கட்டுகளைதூக்கி போட
பிடித்து கொண்ட தீரன் “ சொல்லிட்டீங்களே முடிச்சி கொடுக்குறது என் கடமை “ என பல்லிளித்து கூறியவன் அவனின் கடமையை மறந்து போனான் பணத்தை கண்டு.
“ எனக்கு பேசுற ஆள் பிடிக்காது செயல்ல காட்டு “ என்று அமர் குரலில் கடுமை கூட்டி சொல்லவே சிரிப்பதை நிறுத்திய தீரன்
“ உங்களுக்கு முடிச்சிட்டு சொல்ட்றேன் சார். எனக்கு அவங்க போட்டோ மட்டும் சென்ட் பண்ணிருங்க “ என்றவனுக்குஸ்டேஷனில் இருந்து கால் வரவே அமரிடம் இருந்து விடை பெற்று சென்றான்.
****************************************
மைதிலி கூறியதை கேட்டு அதிர்ச்சியான ராவணன் “ என்ன சொல்ற மைதிலி மேகன் இறந்துட்டான்னு உனக்கு யார் சொன்னா “ நம்பாமல் கேட்க மைதிலி என்ன சொன்னாளோ அவசரம் அவசரமாக வீட்டை நோக்கி சென்றான்.
மைதிலி வரவேற்பறையில் தான் அழுகையோடு இருந்தாள். வீட்டிற்குள் வந்தவன் அவளின் முன் வர அவனை அனைத்து கொண்டவள் “ பாவம்ங்க அத்தை. அவங்களுக்கு இருந்தே ஒரே புள்ளையையும் பறிகொடுத்துட்டாங்க. மதி சொன்னதும் என்னாலையே தாங்க முடியல. என்ன இப்போவே அத்தைகிட்ட கூட்டிட்டு போங்க “ என்று அழ
“ அழாதடா நா அழைச்சிட்டு போறேன் “ என்ற ராவணன் அந்த ஊரின் ஒதுக்கு புறம் இருந்த வீட்டை நோக்கி சென்றான். அங்கு தான் மேகனும் செத்து போய் கிடந்தான்.
காற்றில் நாற்றம் அடிக்கவே அக்கபக்கத்தில் இருந்தவர்கள் சென்று பார்க்க மிரண்டு போனார்கள். அவர்களுக்கு அங்கு கிடப்பவன் மேகன் என்று கண்டு கொள்ள மூர்த்திக்கும் காவல் துறைக்கும் அழைத்து விவரத்தை சொல்லி விட்டனர்.
விஷயம் அறிந்த மூர்த்தி குடும்பமோஸ்தம்பித்து போனார்கள். அவர்கள் யாராலும் மேகன் இறப்பை ஏற்று கொள்ள முடியவில்லை. மதிக்கு அவனை பிடிக்காது தான் ஆனால் அவன் இறக்க வேண்டும் என ஒரு நாளும் நினைத்தது இல்லை. உடனே மைதிலிக்குதகவலை சொல்லி விட்டு சம்பவ இடத்திற்கு வந்து விட்டனர் மொத்த குடும்பமும் .
ராவணனனும் மைதிலியும் அந்த இடத்திற்கு வர மொத்த ஊர் மக்களும் அங்கு தான் இருந்தார்கள்.
மதி அழுத அத்தையை ஆறுதல் படுத்தி கொண்டிருக்க மைதிலி அவளின் அத்தையை நோக்கி சென்றாள் .
சுற்றுப்புறத்தில் எவராலும் நிற்க முடியவில்லை காற்றில் பரவிய வாடையில். ராவணன் மூர்த்தி அருகில் சென்றவன் மிதுனுக்கும் விஷயத்தை சொல்லி வர சொல்லி விட்டான்
“ மாமா என்ன ஆச்சு. மேகன் மும்பை போனதாக தானே சொன்னிங்க “ சந்தேகமாக கேட்க
“ ஆமாம் பா அப்டி தான் லெட்டர் இருந்திச்சு. அதுனால தான் நாங்களும் சரின்னு விட்டுட்டோம். ஆனா இன்னைக்கு மேகன் இறந்துட்டான்னு கேட்கும் போது மனசு தாங்குல. அன்னைக்கே அந்த லெட்டர நம்பாம தேடி இருந்தா கூடவாவது இருந்திருப்பான் “ என்று வேதனையாக கூற அதற்குள்காவல் துறையிலும் தடவியல் நிபுணர்களும் வந்து அவர்கள் வேலையை செய்தனர்.
*********** ************* ***********
மிதுன் வருவதை கவனித்த ராவணன்கை காட்டி நிற்க சொல்லிவிட்டு மிதுனை நோக்கி சென்றான்.
“ என்னாச்சு அஜெய். இவன் ஓடி போய்ட்டானு தானே நெனச்சோம். இப்போ என்னனா யாரோ இவன கொலை பண்ணிருக்காங்க “ என்று சொல்ல குழப்பத்தில் இருந்த ராவணனோ
“ அதான் எனக்கும் புரியல மிதுன். சம்திங்வ்ரோங். நா சொன்ன வேலைய முடிச்சிட்டியா நீ “ என்று கேட்க
“ முடிச்சிட்டு கம்பெனி போகும் போது தான் இந்த விஷயத்தை சொல்லி வர சொன்ன “ என்று இருவரும் பேசி கொண்டிருக்க அங்குகேஸ் விஷயமாக வந்த தீரன்இவர்களை நோக்கி வந்தான்.
“ அட தி கிரேட் பிசினஸ் மேன் இங்க எதுக்கு நிக்குறீங்க “ நக்கலாக வந்த குரலை இருவருமே கண்டு கொண்டனர்யாரென .
“ நீ எதுக்காக இங்க வந்தியோ அந்த வேலையை மட்டும் பாரு “ என்ற மிதுனை முறைத்தவன்
“ தலையே கம்முனு இருக்கு வால் ஏன் துடிக்குது. ரொம்ப துடிக்காத ஒரு நாள் வெட்டிருவேன் “ என்ற தீரன் நெத்தியில் கன்னை லோட் செய்து ராவணன் வைத்ததில் மிரண்டு போனான்.
இவர்கள் மூவரும் ஒதுக்குபுறமாக நிற்கவே யாருக்கும் இவர்கள் செயல் தெரியவில்லை.
“ என்ன சொன்ன என்ன சொன்ன வாலைவெட்டிருவியா. சொன்னதுக்கே உன் நெத்தியில கன் இருக்கு. எதாச்சும் பன்னேனு வச்சுக்க என் துப்பாக்கில இருக்குற புல்லட்ஸ் எல்லாம் உன் மூளைக்கு ட்ராவல் பண்ணும். பாக்குறியா “ சொல்வதோடு நில்லாமல் ட்ரிக்கரை அழுத்த போக பதறி போன தீரன்
“ ஏய் நீ யாருகிட்ட மோதுற தெரியுமா. இந்த ஏரியா இன்ஸ்பெக்டர். நா நெனச்சா உன்ன ஜெயில்ல தள்ள முடியும் “ என்று பதற்றத்தில் பேசதுப்பாக்கியை நெற்றிக்கு முட்டுக்கொடுத்து சிரித்த ராவணன்
“ நா நெனச்சா உன்ன இந்த உலகத்தை விட்டு தள்ள முடியும். வீனா என் வழியில குறுக்க வந்து உன் ஆயுள குறைச்சிக்காத. கெளம்பு மேன் “ என்று ராவணன்சொல்ல பல்லைக்கடித்த தீரன் தீராத வன்மையுடன் அவ்விடம் விட்டுஅகன்றான்.
************ ************************
உள்ளே வந்த தீரன் செத்து கிடந்தவனை கண்டு மிரண்டு போனான். போனில்அமர் அனுப்பிய புகைப்படம் பார்த்தவனுக்கு எல்லாம் விளங்கி போனது.
கான்ஸ்டபிளை அழைத்தவன் இறந்தவனை பற்றி விசாரிக்க சொல்ல. அவர் கூறிய தகவலை கேட்டதீரனும்அமருக்கு அழைப்பை விடுத்தான்.
“ சொல்லு தீரன். இப்போ எதுக்கு கால் பண்ண. பணம் வேணும்னா விஷயம் முடிஞ்சதும் தரேன் “ என்று வார்த்தையில் எரிச்சலை கூட்டிசொல்ல
“ அய்யோ சார் அதுக்கு கால் பண்ணுல. நீங்க காணும்னுதேட சொன்ன ஆள் செத்து போய் ஒரு வாரம் ஆகுது. இப்போ அவன் டெட் பாடிக்கு முன்னால நின்னு தான் உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன்.இத பத்தி விசாரிக்க சொல்லிருக்கேன் சார் “ என்று தீரன் சொல்லியதில் அதிர்ந்து போன அமர்
“ அது எந்த இடம் சொல்லு. உடனே நா வரேன் “ என சொல்ல ராவணனை நினைத்து மறுத்த தீரன்
“ சார் நீங்கஇங்க வர்றது உங்களுக்கு பாதுகாப்பு இல்ல. இங்க அந்த ராவணன் இருக்கான் “ என தீரன் சொல்லியதில் புரியாதவன்
“ ராவணனா அவன் யாரு. அவனுக்கு எதுக்கு நா பயப்படனும் “ அசட்டையாக கூற
“ சார் அவன் தான் இறந்து போன மோகனோட மாமா பொண்ண கல்யாணம் பண்ணிருக்கான். அவங்க பேமிலி பத்தி வேற நீங்க விசாரிக்க சொன்னது அவனுக்கு தெரிஞ்சிது தொலைச்சி கட்டிருவான். மோசமானவன் சார் அவன் “ என்று ராவணனை பற்றி தெரிந்து கூற ஆத்திரமான அமர்
“ என்கிட்ட காசு வாங்கிட்டு அவனை பத்தி என்கிட்ட பேசுற. இந்தபூச்சாண்டிக்குலாம் நா பயப்பட மாட்டேன். ஒன்னு பன்னு இந்த மோகனோடகொலையை ராவணன் தான் செய்திருப்பானு பழியை தூக்கி போடு. எனக்கு அந்த ராவணன் ஜெயிலுக்கு போகணும்“ என்று பூடகமாக பேச
“ சார் அது அவ்ளோ ஈசி இல்ல. இருந்தாலும் என்னால முடிஞ்சத பன்றேன் “
“ முடிச்சிட்டு சொல்லு நீ எதிர்பார்க்காத வாழ்க்கையை நா உனக்கு தரேன் “
“ சார் ராவணன் ஜெயிலுக்கு போய்ட்டானு நெனச்சுக்கோங்க “ என்று சிரித்த தீரன்ஒரு முடிவோடு அந்த இடம் விட்டு வெளியேறினான்.
************* *************************
உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல கதறி அழுதவாசுகியை சமாதானம் செய்து கொண்டிருந்தனர் மதியும் மைதிலியும்.
கணவனையும் இழந்து இப்போது தன் ஒரே மகனையும் இழந்து கண்ணீர் விடும் தங்கையை கண்டு சத்தமில்லாமல் அழுதார்.
மிதுன் உடன் இருந்து உடலை வாங்கி கொண்டு மூர்த்தி வீட்டிற்கு வர மோகனுக்கு இறுதி சடங்கு நடந்தது.
அழும் மைதிலியை பார்க்கவும் முடியாமல் தடுக்கவும் முடியாமல் ஒரு ஓரமாக நின்று கொண்டான் ராவணன்.
எல்லாம் முடிய இவ்ளோ நேரம் அமைதியாக இருந்த தீரன் ராவணனை நோக்கி நடந்தான் . அக்கம் பக்கத்தில் கொஞ்ச பேர்கள் மட்டும் இருந்தனர்.
“ மிஸ்டர் ராவணன் யூ ஆர் அர்ரெஸ்ட்டட். நீங்க தான் சொந்த காரணத்துக்காக மேகன கொன்னுருக்கிங்க” என்று தீரன் பேசியதை பெரியதாக எடுத்து கொள்ளாதவன்
“ நா எதுக்கு அவன கொலை பண்ணனும். அவனால எனக்கு என்ன பிரச்சனை “ என்று ராவணன் பதில் கேட்க சிரித்த தீரன்
“ ஏன்னா நீங்க மைதிலியை விரும்பிருக்கிங்க. அவங்கள அடையறதுக்கு தடையா இருந்த மேகன கொன்னுருக்கிங்க “ என்று சொல்ல பதறி போன மைதிலி
“ இன்ஸ்பெக்டர் என் கணவன் அப்டிலாம் பண்ண மாட்டார். நீங்க முதல்ல நல்லா விசாரிங்க “ என்றுராவணனின் முன்னால் வந்து நிற்க
“ நீங்க எதா இருந்தாலும் ஸ்டேஷன்ல வந்து பேசுங்க. இப்போ கெளம்பலாமா “ என கேலியாக கேட்ட தீரனை சிரிப்போடு பார்த்த ராவணன்
“ மிதுன் நீ கூட இரு நா பொய்ட்டு வரேன். அம்மு தைரியமா இருடா “என்றவன்செல்ல அவனை அனைத்து கொண்டு கண்ணீர் விட்டாள் மைதிலி.
“ என்ன விட்டு போகாத . நானும் உன்கூடவே வரேன். என்னையும்கூட்டிட்டு போ “ என்றவள் முகம் நிமிர்த்தியவன்
‘’ உன் ராவணன் மேலநம்பிக்கை இல்லையா “ என்று கேட்க அவனின் முகத்தை பார்த்தவள்
“ இருக்கு நெறையா இருக்கு “ என்று அழுகையூடே சொல்ல அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தவன்
“ அப்போ அழாமல்இரு. உன் ராவணன் சீக்கிரம் உன்கிட்ட வந்துருவான் “என்றவன்அருகில் தன்னை தவிப்போடு பார்த்தவருக்கு ஒரு சிரிப்பை தந்து விட்டு தீரனுடன் போலீஸ் ஸ்டேஷன் சென்றான்.
பாவம் மைதிலி தான் கதறி அழுதாள். மதி அவளை சமாதானம் செய்ய ஒரு பயனும் இல்லை.
**************************************
மிதுனால் வீட்டில் இருக்க முடியவில்லை. போனை எடுத்தவன் அகிலை மூர்த்தி வீட்டிற்கு வர சொல்லி விட்டு பாதுகாப்பைசரி பார்த்தவன் லாயர்க்கு கால் செய்து ஸ்டேஷன் வர சொல்லி தானும் சென்றான்.
ராவணன் அப்போதுதான் ஸ்டேஷன் வந்தான் பின்னாலே மிதுன் லாயருடன் வந்து விட்டான். தீரனுக்கு மிதுன் மேல் ஆத்திரம் வந்தது.
லாயர் வந்தவரோ “ சார் ஆதாரம் இல்ல இவர நீங்க அர்ரெஸ்ட் பண்ண கூடாது. தகுந்த ஆதாரம் கிடைச்சதும் அர்ரெஸ்ட் பண்ணுங்க “ என்று சொல்ல
“ சார் இது நா சொல்லல ஊர் மக்கள் சொன்னது. அது எப்டி மாப்ள காணா போவாராம் இவர் வந்து கல்யாணம் பண்ணுவாரா. இவர் தான் கொன்னுருப்பாரு “ என்று சொல்லவே
“ சார் கண்ணால் பார்த்த சாட்சி ஆதாரம் இல்லாம நீங்க இவர் மேல கேஸ் போட முடியாது.எந்த வாரண்ட்டும் இல்லாமல் அர்ரெஸ்ட் பண்ண யாரு உங்களுக்கு ரைட்ஸ் கொடுத்தா . இதே மாதிரி நீங்க பண்ணீங்க அப்றம் நாங்க எங்க வேலைய செய்ய வேண்டியதா போகும் “ என்று சொல்லவே வேறு வழி இல்லாமல் ராவணனைவிட்டுவிட்டான் தீரன்.
மிதுன் இப்போதான் ராவணனின் கோவ முகத்தை கண்டான்.
வக்கீலை அனுப்பி வைத்தவன் ராவணன் அருகில் வர ஒரே அறை மிதுன் கன்னத்தில்.
“ உன்கிட்ட என்ன சொல்லிட்டு வந்தேன். மைதிலி விட்டு விலகாதன்னுசொன்னேன்ல. யார கேட்டு நீ இங்க வந்த “கர்ஜித்தவன் அலறிய போனை எடுத்து பேச எதிர்முனையில் கூற பட்ட செய்தியில் மிதுனை அழைத்து கொண்டு கிளம்பினான் ராவணன் .
‘’ விசாரிச்சு பார்த்தேன் எனக்காக வேலை செய்ய கூடிய நன்றியுள்ள ஆள் கிடைக்குமான்னு.எல்லாரும் உன் பேர் தான் சொன்னாங்க. ஓகே தீரன் கம்மிங் டு த பாயிண்ட் எனக்காக நீ ஒரு பேவர் பண்ணனும். என்கிட்ட பணம் வாங்கி ஒருத்தன் தப்பிச்சிட்டான். அவன் உன் கண்ட்ரோல்ல இருக்குற ஏரியா தான்.நீ எனக்கு அவனை கண்டு புடிச்சி தரணும். அதோட எனக்கு அவன் பேமிலி டீடெயில்ஸும் வேனும் “ என்ற அமர்.எதிரில் இருந்தவனிடம் சில ஆயிரம் கட்டுகளைதூக்கி போட
பிடித்து கொண்ட தீரன் “ சொல்லிட்டீங்களே முடிச்சி கொடுக்குறது என் கடமை “ என பல்லிளித்து கூறியவன் அவனின் கடமையை மறந்து போனான் பணத்தை கண்டு.
“ எனக்கு பேசுற ஆள் பிடிக்காது செயல்ல காட்டு “ என்று அமர் குரலில் கடுமை கூட்டி சொல்லவே சிரிப்பதை நிறுத்திய தீரன்
“ உங்களுக்கு முடிச்சிட்டு சொல்ட்றேன் சார். எனக்கு அவங்க போட்டோ மட்டும் சென்ட் பண்ணிருங்க “ என்றவனுக்குஸ்டேஷனில் இருந்து கால் வரவே அமரிடம் இருந்து விடை பெற்று சென்றான்.
****************************************
மைதிலி கூறியதை கேட்டு அதிர்ச்சியான ராவணன் “ என்ன சொல்ற மைதிலி மேகன் இறந்துட்டான்னு உனக்கு யார் சொன்னா “ நம்பாமல் கேட்க மைதிலி என்ன சொன்னாளோ அவசரம் அவசரமாக வீட்டை நோக்கி சென்றான்.
மைதிலி வரவேற்பறையில் தான் அழுகையோடு இருந்தாள். வீட்டிற்குள் வந்தவன் அவளின் முன் வர அவனை அனைத்து கொண்டவள் “ பாவம்ங்க அத்தை. அவங்களுக்கு இருந்தே ஒரே புள்ளையையும் பறிகொடுத்துட்டாங்க. மதி சொன்னதும் என்னாலையே தாங்க முடியல. என்ன இப்போவே அத்தைகிட்ட கூட்டிட்டு போங்க “ என்று அழ
“ அழாதடா நா அழைச்சிட்டு போறேன் “ என்ற ராவணன் அந்த ஊரின் ஒதுக்கு புறம் இருந்த வீட்டை நோக்கி சென்றான். அங்கு தான் மேகனும் செத்து போய் கிடந்தான்.
காற்றில் நாற்றம் அடிக்கவே அக்கபக்கத்தில் இருந்தவர்கள் சென்று பார்க்க மிரண்டு போனார்கள். அவர்களுக்கு அங்கு கிடப்பவன் மேகன் என்று கண்டு கொள்ள மூர்த்திக்கும் காவல் துறைக்கும் அழைத்து விவரத்தை சொல்லி விட்டனர்.
விஷயம் அறிந்த மூர்த்தி குடும்பமோஸ்தம்பித்து போனார்கள். அவர்கள் யாராலும் மேகன் இறப்பை ஏற்று கொள்ள முடியவில்லை. மதிக்கு அவனை பிடிக்காது தான் ஆனால் அவன் இறக்க வேண்டும் என ஒரு நாளும் நினைத்தது இல்லை. உடனே மைதிலிக்குதகவலை சொல்லி விட்டு சம்பவ இடத்திற்கு வந்து விட்டனர் மொத்த குடும்பமும் .
ராவணனனும் மைதிலியும் அந்த இடத்திற்கு வர மொத்த ஊர் மக்களும் அங்கு தான் இருந்தார்கள்.
மதி அழுத அத்தையை ஆறுதல் படுத்தி கொண்டிருக்க மைதிலி அவளின் அத்தையை நோக்கி சென்றாள் .
சுற்றுப்புறத்தில் எவராலும் நிற்க முடியவில்லை காற்றில் பரவிய வாடையில். ராவணன் மூர்த்தி அருகில் சென்றவன் மிதுனுக்கும் விஷயத்தை சொல்லி வர சொல்லி விட்டான்
“ மாமா என்ன ஆச்சு. மேகன் மும்பை போனதாக தானே சொன்னிங்க “ சந்தேகமாக கேட்க
“ ஆமாம் பா அப்டி தான் லெட்டர் இருந்திச்சு. அதுனால தான் நாங்களும் சரின்னு விட்டுட்டோம். ஆனா இன்னைக்கு மேகன் இறந்துட்டான்னு கேட்கும் போது மனசு தாங்குல. அன்னைக்கே அந்த லெட்டர நம்பாம தேடி இருந்தா கூடவாவது இருந்திருப்பான் “ என்று வேதனையாக கூற அதற்குள்காவல் துறையிலும் தடவியல் நிபுணர்களும் வந்து அவர்கள் வேலையை செய்தனர்.
*********** ************* ***********
மிதுன் வருவதை கவனித்த ராவணன்கை காட்டி நிற்க சொல்லிவிட்டு மிதுனை நோக்கி சென்றான்.
“ என்னாச்சு அஜெய். இவன் ஓடி போய்ட்டானு தானே நெனச்சோம். இப்போ என்னனா யாரோ இவன கொலை பண்ணிருக்காங்க “ என்று சொல்ல குழப்பத்தில் இருந்த ராவணனோ
“ அதான் எனக்கும் புரியல மிதுன். சம்திங்வ்ரோங். நா சொன்ன வேலைய முடிச்சிட்டியா நீ “ என்று கேட்க
“ முடிச்சிட்டு கம்பெனி போகும் போது தான் இந்த விஷயத்தை சொல்லி வர சொன்ன “ என்று இருவரும் பேசி கொண்டிருக்க அங்குகேஸ் விஷயமாக வந்த தீரன்இவர்களை நோக்கி வந்தான்.
“ அட தி கிரேட் பிசினஸ் மேன் இங்க எதுக்கு நிக்குறீங்க “ நக்கலாக வந்த குரலை இருவருமே கண்டு கொண்டனர்யாரென .
“ நீ எதுக்காக இங்க வந்தியோ அந்த வேலையை மட்டும் பாரு “ என்ற மிதுனை முறைத்தவன்
“ தலையே கம்முனு இருக்கு வால் ஏன் துடிக்குது. ரொம்ப துடிக்காத ஒரு நாள் வெட்டிருவேன் “ என்ற தீரன் நெத்தியில் கன்னை லோட் செய்து ராவணன் வைத்ததில் மிரண்டு போனான்.
இவர்கள் மூவரும் ஒதுக்குபுறமாக நிற்கவே யாருக்கும் இவர்கள் செயல் தெரியவில்லை.
“ என்ன சொன்ன என்ன சொன்ன வாலைவெட்டிருவியா. சொன்னதுக்கே உன் நெத்தியில கன் இருக்கு. எதாச்சும் பன்னேனு வச்சுக்க என் துப்பாக்கில இருக்குற புல்லட்ஸ் எல்லாம் உன் மூளைக்கு ட்ராவல் பண்ணும். பாக்குறியா “ சொல்வதோடு நில்லாமல் ட்ரிக்கரை அழுத்த போக பதறி போன தீரன்
“ ஏய் நீ யாருகிட்ட மோதுற தெரியுமா. இந்த ஏரியா இன்ஸ்பெக்டர். நா நெனச்சா உன்ன ஜெயில்ல தள்ள முடியும் “ என்று பதற்றத்தில் பேசதுப்பாக்கியை நெற்றிக்கு முட்டுக்கொடுத்து சிரித்த ராவணன்
“ நா நெனச்சா உன்ன இந்த உலகத்தை விட்டு தள்ள முடியும். வீனா என் வழியில குறுக்க வந்து உன் ஆயுள குறைச்சிக்காத. கெளம்பு மேன் “ என்று ராவணன்சொல்ல பல்லைக்கடித்த தீரன் தீராத வன்மையுடன் அவ்விடம் விட்டுஅகன்றான்.
************ ************************
உள்ளே வந்த தீரன் செத்து கிடந்தவனை கண்டு மிரண்டு போனான். போனில்அமர் அனுப்பிய புகைப்படம் பார்த்தவனுக்கு எல்லாம் விளங்கி போனது.
கான்ஸ்டபிளை அழைத்தவன் இறந்தவனை பற்றி விசாரிக்க சொல்ல. அவர் கூறிய தகவலை கேட்டதீரனும்அமருக்கு அழைப்பை விடுத்தான்.
“ சொல்லு தீரன். இப்போ எதுக்கு கால் பண்ண. பணம் வேணும்னா விஷயம் முடிஞ்சதும் தரேன் “ என்று வார்த்தையில் எரிச்சலை கூட்டிசொல்ல
“ அய்யோ சார் அதுக்கு கால் பண்ணுல. நீங்க காணும்னுதேட சொன்ன ஆள் செத்து போய் ஒரு வாரம் ஆகுது. இப்போ அவன் டெட் பாடிக்கு முன்னால நின்னு தான் உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன்.இத பத்தி விசாரிக்க சொல்லிருக்கேன் சார் “ என்று தீரன் சொல்லியதில் அதிர்ந்து போன அமர்
“ அது எந்த இடம் சொல்லு. உடனே நா வரேன் “ என சொல்ல ராவணனை நினைத்து மறுத்த தீரன்
“ சார் நீங்கஇங்க வர்றது உங்களுக்கு பாதுகாப்பு இல்ல. இங்க அந்த ராவணன் இருக்கான் “ என தீரன் சொல்லியதில் புரியாதவன்
“ ராவணனா அவன் யாரு. அவனுக்கு எதுக்கு நா பயப்படனும் “ அசட்டையாக கூற
“ சார் அவன் தான் இறந்து போன மோகனோட மாமா பொண்ண கல்யாணம் பண்ணிருக்கான். அவங்க பேமிலி பத்தி வேற நீங்க விசாரிக்க சொன்னது அவனுக்கு தெரிஞ்சிது தொலைச்சி கட்டிருவான். மோசமானவன் சார் அவன் “ என்று ராவணனை பற்றி தெரிந்து கூற ஆத்திரமான அமர்
“ என்கிட்ட காசு வாங்கிட்டு அவனை பத்தி என்கிட்ட பேசுற. இந்தபூச்சாண்டிக்குலாம் நா பயப்பட மாட்டேன். ஒன்னு பன்னு இந்த மோகனோடகொலையை ராவணன் தான் செய்திருப்பானு பழியை தூக்கி போடு. எனக்கு அந்த ராவணன் ஜெயிலுக்கு போகணும்“ என்று பூடகமாக பேச
“ சார் அது அவ்ளோ ஈசி இல்ல. இருந்தாலும் என்னால முடிஞ்சத பன்றேன் “
“ முடிச்சிட்டு சொல்லு நீ எதிர்பார்க்காத வாழ்க்கையை நா உனக்கு தரேன் “
“ சார் ராவணன் ஜெயிலுக்கு போய்ட்டானு நெனச்சுக்கோங்க “ என்று சிரித்த தீரன்ஒரு முடிவோடு அந்த இடம் விட்டு வெளியேறினான்.
************* *************************
உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல கதறி அழுதவாசுகியை சமாதானம் செய்து கொண்டிருந்தனர் மதியும் மைதிலியும்.
கணவனையும் இழந்து இப்போது தன் ஒரே மகனையும் இழந்து கண்ணீர் விடும் தங்கையை கண்டு சத்தமில்லாமல் அழுதார்.
மிதுன் உடன் இருந்து உடலை வாங்கி கொண்டு மூர்த்தி வீட்டிற்கு வர மோகனுக்கு இறுதி சடங்கு நடந்தது.
அழும் மைதிலியை பார்க்கவும் முடியாமல் தடுக்கவும் முடியாமல் ஒரு ஓரமாக நின்று கொண்டான் ராவணன்.
எல்லாம் முடிய இவ்ளோ நேரம் அமைதியாக இருந்த தீரன் ராவணனை நோக்கி நடந்தான் . அக்கம் பக்கத்தில் கொஞ்ச பேர்கள் மட்டும் இருந்தனர்.
“ மிஸ்டர் ராவணன் யூ ஆர் அர்ரெஸ்ட்டட். நீங்க தான் சொந்த காரணத்துக்காக மேகன கொன்னுருக்கிங்க” என்று தீரன் பேசியதை பெரியதாக எடுத்து கொள்ளாதவன்
“ நா எதுக்கு அவன கொலை பண்ணனும். அவனால எனக்கு என்ன பிரச்சனை “ என்று ராவணன் பதில் கேட்க சிரித்த தீரன்
“ ஏன்னா நீங்க மைதிலியை விரும்பிருக்கிங்க. அவங்கள அடையறதுக்கு தடையா இருந்த மேகன கொன்னுருக்கிங்க “ என்று சொல்ல பதறி போன மைதிலி
“ இன்ஸ்பெக்டர் என் கணவன் அப்டிலாம் பண்ண மாட்டார். நீங்க முதல்ல நல்லா விசாரிங்க “ என்றுராவணனின் முன்னால் வந்து நிற்க
“ நீங்க எதா இருந்தாலும் ஸ்டேஷன்ல வந்து பேசுங்க. இப்போ கெளம்பலாமா “ என கேலியாக கேட்ட தீரனை சிரிப்போடு பார்த்த ராவணன்
“ மிதுன் நீ கூட இரு நா பொய்ட்டு வரேன். அம்மு தைரியமா இருடா “என்றவன்செல்ல அவனை அனைத்து கொண்டு கண்ணீர் விட்டாள் மைதிலி.
“ என்ன விட்டு போகாத . நானும் உன்கூடவே வரேன். என்னையும்கூட்டிட்டு போ “ என்றவள் முகம் நிமிர்த்தியவன்
‘’ உன் ராவணன் மேலநம்பிக்கை இல்லையா “ என்று கேட்க அவனின் முகத்தை பார்த்தவள்
“ இருக்கு நெறையா இருக்கு “ என்று அழுகையூடே சொல்ல அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தவன்
“ அப்போ அழாமல்இரு. உன் ராவணன் சீக்கிரம் உன்கிட்ட வந்துருவான் “என்றவன்அருகில் தன்னை தவிப்போடு பார்த்தவருக்கு ஒரு சிரிப்பை தந்து விட்டு தீரனுடன் போலீஸ் ஸ்டேஷன் சென்றான்.
பாவம் மைதிலி தான் கதறி அழுதாள். மதி அவளை சமாதானம் செய்ய ஒரு பயனும் இல்லை.
**************************************
மிதுனால் வீட்டில் இருக்க முடியவில்லை. போனை எடுத்தவன் அகிலை மூர்த்தி வீட்டிற்கு வர சொல்லி விட்டு பாதுகாப்பைசரி பார்த்தவன் லாயர்க்கு கால் செய்து ஸ்டேஷன் வர சொல்லி தானும் சென்றான்.
ராவணன் அப்போதுதான் ஸ்டேஷன் வந்தான் பின்னாலே மிதுன் லாயருடன் வந்து விட்டான். தீரனுக்கு மிதுன் மேல் ஆத்திரம் வந்தது.
லாயர் வந்தவரோ “ சார் ஆதாரம் இல்ல இவர நீங்க அர்ரெஸ்ட் பண்ண கூடாது. தகுந்த ஆதாரம் கிடைச்சதும் அர்ரெஸ்ட் பண்ணுங்க “ என்று சொல்ல
“ சார் இது நா சொல்லல ஊர் மக்கள் சொன்னது. அது எப்டி மாப்ள காணா போவாராம் இவர் வந்து கல்யாணம் பண்ணுவாரா. இவர் தான் கொன்னுருப்பாரு “ என்று சொல்லவே
“ சார் கண்ணால் பார்த்த சாட்சி ஆதாரம் இல்லாம நீங்க இவர் மேல கேஸ் போட முடியாது.எந்த வாரண்ட்டும் இல்லாமல் அர்ரெஸ்ட் பண்ண யாரு உங்களுக்கு ரைட்ஸ் கொடுத்தா . இதே மாதிரி நீங்க பண்ணீங்க அப்றம் நாங்க எங்க வேலைய செய்ய வேண்டியதா போகும் “ என்று சொல்லவே வேறு வழி இல்லாமல் ராவணனைவிட்டுவிட்டான் தீரன்.
மிதுன் இப்போதான் ராவணனின் கோவ முகத்தை கண்டான்.
வக்கீலை அனுப்பி வைத்தவன் ராவணன் அருகில் வர ஒரே அறை மிதுன் கன்னத்தில்.
“ உன்கிட்ட என்ன சொல்லிட்டு வந்தேன். மைதிலி விட்டு விலகாதன்னுசொன்னேன்ல. யார கேட்டு நீ இங்க வந்த “கர்ஜித்தவன் அலறிய போனை எடுத்து பேச எதிர்முனையில் கூற பட்ட செய்தியில் மிதுனை அழைத்து கொண்டு கிளம்பினான் ராவணன் .
Author: Thanimai Kadhali
Article Title: உன்னில் என்னை மீட்பாயாக! 6
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: உன்னில் என்னை மீட்பாயாக! 6
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.