உன்னில் என்னை மீட்பாயாக! 5

Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
69
அத்தியாயம் – 5

அடுத்த நாள் விடிந்தும் விடியாததுமாய் ராவணன் வீட்டிற்கு வந்தான்மிதுன்.

அப்போதுதான் ராவணன் தன்னுடைய கார்டனில் அமைக்க பட்ட பார்க்கில்வாக்கிங் போக ராவணனை நோக்கி ஓடி வந்தான் மிதுன்.

“ என்னாச்சு மிதுன் என்ன இந்த நேரத்துல “ என்றவனுக்கு பதில் சொல்லாமல் கையில் இருந்ததை குடுக்க அதை வாங்கி பார்த்தவன் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றான் ராவணன்.

சுட சுட நேற்று ராவணன் மைதிலியுடன் சென்ற புகைப்படம் முதல் பக்கத்தில் “ராவணன் சம்பிராஜ்யத்தின் கிங் தெ ராவணன் அஜெயன் ரகசியமாக கல்யாணம் செய்துள்ளார்.அவரின் மனைவியுடன் கோவில் வந்த புகைப்படத்தை நீங்கள் காணலாம் “ என்றதை பார்த்த ராவணன்நறநறவென பல்லைகடித்தான்.

“மிதுன் இந்த வேலைய எவன் பண்ணானோ அவன என் முன்னாடி இன்னும் ஒரு மணி நேரத்துல கொண்டு வரணும் “ என்று உறுதியாக கடுமையை கூட்டி சொல்ல அவனின் வார்த்தையின் வீரியம் புரிந்தவன் சரியென கிளம்பினான்.

கையில் இருந்த செய்தி தாளை கசக்கி எறிந்தவன் கோவமாக வீட்டினுள் நுழைந்தான் இராவணன் . அறைக்குள் விறைப்பாக சென்றவன் குளித்துதலையில் துண்டை சுற்றி வந்தவளை பார்த்த மறுகணமே ஹீரோவின் பார்வை மாறியது.

ராவணனின் மனம் மைதிலி அறியமாட்டாளா என்ன. அவன் முகம் பார்த்தவள் “ என்னாச்சு மாமு. ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு எதும் பிரச்சனையா “ அவனின் கன்னம் தாங்கி கேட்கசிரித்தவன் அவளின் இடையில் கை வைத்து தன்னோடு இறுக்கி கொண்டான்.


“ ஸ்ஸ்ஸ் ஆஆஆஆ என்ன பன்ற. தள்ளி போ. நா போய் உனக்கு சமைக்கனும் “ என்றவளை விடாது பிடித்து கொண்டவன்

“இப்போ இருக்குற பசிக்கு சாப்பாடு வேணாம் நீ தான் வேனும் “ என்றவன் அவள் எதிர்பாராத நேரத்தில் இதழை கவ்வினான்.

அவனின் செயலில் அதிர்ந்து பார்க்க அவள் வெற்றிடையில் விரல் கொண்டு இறுக்கியவன் அவள் இதழை கொய்ய அவனுள் இணங்கி போனாள் அவனின் மைதிலி.

அவள் மூச்சுக்கு சிரமப்படவேசிரிப்போடு அவள் இதழை விடுவித்தவனைமுறைத்தவள் “ “ பொறுக்கி ரவுடி சீ போடா “ என்று ராவணனை திட்டிவிட்டு செல்ல மைதிலி அறையை விட்டு விலகிய மறு நொடி ராவணனின் முகம் மாறியது.

போனை எடுத்த ராவணன் மிதுனுக்கு அழைத்தவன் “ என்னாச்சு மிதுன் அவன புடிச்சியா. இந்த நியூஸ் வேற எதுல பப்லிஷ் ஆகியிருக்கு “ என்று கேட்க மிதுன் சொன்ன விஷயத்தில் ஆத்திரமடைந்தான் ராவணன்.

“ இங்க பாரு மிதுன். நீ என்ன பண்ணுவியோ தெரியாது. இனி இந்த நேம் நியூஸ் பேப்பர் இனி வரவே கூடாது. என் அனுமதி இல்லாம என் மனைவி போட்டோ போட்ட அந்த நிறுவனம் இனி இருக்க கூடாது . நா சொன்னது உனக்கு புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். முடிச்சிட்டு கால் பன்னு “ என்று போனை அனைத்து தூக்கி போட்டவன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

************ ************* *************

மும்பையில்.

“ இல்ல இது எப்டி நடந்துச்சு. அப்போ அந்த முட்டாள் என்ன தான் பண்ணான். ஒரு வேலை என்கிட்ட பணம் வாங்கி ஏமாத்திட்டானா. நோ நா ஏமாந்து போக மாட்டேன் “ என்று வெறி பிடித்தவன் போல் கத்தினான் கையில் இருந்த செய்தி தாளை கண்டு.

இவன் அமர்நாத். பெரிய பணக்காரன். இவன் போதைக்கும் பெண்ணின் மோகத்திற்கும் அடிமையானவன். இவனுக்கு பெண்களை பிடித்து தரும் வேலையை சிரத்தோடு செய்தவன் தான் மேகன்.

மீண்டும் மீண்டும் மேகன் எண்ணுக்கு அழைத்து ஏமாந்து தான் போனான் அமர். போனா போகுதென்று அவனால் விட முடியவில்லையே. அவள் முகத்தை எப்போது பார்த்தானோ அப்போதே அவளை ஒரு முறையாவது புசிக்க வேண்டும் என்ற வெறி . ஆனால் இன்று அவள் வேறு ஒருவனோட மனைவி என்று கண்டதும் அவனால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை.

“ இனியும் நா இங்க இருக்குறது வேஸ்ட். நானே போறேன். அவளை தூக்கிட்டு வரேன் “ என்று பல்லை கடித்து வெறியோடு பேசியவன் மேகனைத் தேடி கிளம்பினான்.

இவன்அறியவில்லை தூக்க போவது ராமனின் மைதிலி இல்லை ராவணனின் மைதிலி என்று.

************************* **************

போலீஸ் டூட்டிக்கு கிளம்பியவன் வெளியில் கிடந்த செய்தித்தாளை புரட்டி கொண்டே வந்தான். கலைந்து கிடந்ததை ஒழுங்குபடுத்தி முதல் பக்கத்தை பார்த்தவன் விழி பிதுங்கி நின்றான்.

எங்கு அவனை லாக் செய்ய எதாவது கிடைக்காதா என காத்திருந்த தீரனுக்கு லட்டு கிடைத்தது போல் ஆனது ராவணன் மைதிலிபுகைப்படத்தை கண்டு.

முப்பத்திரண்டு பற்களும் தெரிய சிரித்தவன் “ ஒரு பொண்ண தொட்டத்துக்கு போலீஸ்னு கூட பார்க்காம என்ன அடிச்சி அசிங்க படுத்தினல. உன்ன விட மாட்டேன்டா. இந்த தீரன் உன்ன கதற வைப்பான்டா “ என்று வஞ்சகமாக பேசியவன் கத்தி சிரித்தான்ராவணனை பழிவாங்கும் சந்தோஷத்தில்.

************* ************ ***********
அலுவலகம் கிளம்பியவனை இழுத்து வந்து சாப்பிட வைத்தாள் மைதிலி. ஏதோ சலசலப்பு கேட்க ராவணனின் வீட்டில் பணிபுரிபவன் பம்மி கொண்டு ராவணன் முன் வந்து நின்றான்.

“ என்ன அகில் வெளிய சத்தம் “ என்று ராவணன் கேட்க சொல்ல பயந்தவன் “ அது வந்து சார் . நியூஸ் சேனல்ல இருந்து வந்துருக்காங்க சார். உங்க கிட்ட பேசணுமாம் “ என்று சொல்ல ராவணனுக்கு கோவம் வந்தது.

“என்னாச்சு மாமு எதுக்கு வந்துருக்காங்க. உன் முகமே காலைல இருந்து சரி இல்ல “ என்றவள் முகம் வாடி விட அகிலை போகும் படி கண்காட்டியவன் மனைவியை இழுத்து மடியில் வைத்து கொண்டு “ அது ஒண்ணுமில்ல அம்மு. நம்ப கல்யாண விஷயம் வெளிய லீக் ஆகிருச்சி. ஏதோ ஒரு மூதேவி நேத்து நம்ப கோவில் போனத போட்டோ எடுத்து நியூஸ்ல முதல் பக்கத்துல போட்டுட்டான். அதான் எப்போ அப்டி ஏன்னு கேட்க வந்துருக்காங்க “ என்று சொல்லியவனை கவலையோடு பார்த்தவள்

“ சாரி என்னால தானே உனக்கு இந்த ப்ரோப்லேம்.சாரி “ என்று கண்கலங்க அதை காண முடியாதவன் அவளின் வெம்பிய உதட்டை கவ்வினான் ராவணன்.

அவளுக்கும் அது தேவைப்பட்டது போல அவன் கழுத்தை கட்டிக்கொண்டு அவனோடு ஒட்டிக்கொண்டாள் ராவணனின் மைதிலி.

************** *************************

ராவணன் வெளியே வந்ததும் வந்தவர்கள் கேள்வியை கேட்க ஆரம்பித்தனர். “ சார் நீங்கபிஸ்னஸ் இண்டஸ்ட்ரியல்ல எவ்ளோ பெரிய ஆள் நீங்க எதுக்கு யாருக்கும் சொல்லாம கல்யாணம் பன்னிங்க. இதோட நோக்கம் என்ன. உங்க கூட இருந்த அந்த பொண்ணு உங்கமனைவி தானா. நீங்க ஏன் இத ரகசியமா வச்சிருக்கீங்க. அந்த பொண்ணும் உங்க அளவுக்கு வசதியா. இந்த திடீர் கல்யாணத்துக்கு காரணம் என்னானு சொல்லுங்க “ என்று மாறி மாறி கேட்க கடுப்பானவன்

“ ஜஸ்ட் சட் அப். அவ என் மனைவி. அவளை உங்ககிட்ட காட்டணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல. ஏன் எங்களுக்கு பர்சனல் இருக்க கூடாதா. எல்லாத்தையும் ஊடகத்துக்கு முன்னால காட்ட எனக்கு விருப்பம் இல்ல. அண்ட் இந்த டாபிக்க இதோட விட்டா உங்களுக்கும் நல்லது உங்க சேனல்க்கும் நல்லது “ என்ற ராவணன் நில்லாமல் சென்று விட அவனை பற்றி தெரிந்தவர்களும் அமைதியாக சென்று விட்டனர்.

உள்ளே இருந்து ராவணன் பேசுவதை கேட்டு கொண்டு இருந்தவள் முகம் வாடி போக அதை கண்டவனுக்கோ மனம் வலித்தது.

அவள் முன் சென்று அவளின் கன்னம்தாங்கியவன் “ அம்மு நீ இப்டி இருக்குறது எனக்கு கஷ்டமா இருக்கு. இது பெரிய பிரச்சனையே இல்ல. உன் ராவணன் மேல நம்பிக்கை இல்லையா “ என்றதில் அவன் முகம் பார்த்தவள்

“ என் ராவணன் மேல நா வைக்காத நம்பிக்கையா. நெறைய இருக்கு. நா பீல் பண்ணுல நீங்க ஆபீஸ் போங்க “ என்றவளின் நெற்றியில் முத்தம் வைத்தவன்

“ ஓகே அம்மு எங்கையும் தனியா போகாத. எனக்கு ஒரு கால் பன்னு ரொம்ப அவசரம்னா அகில் இருக்கான். பத்திரம் அம்மு “ என்றவன் மைதிலியிடம் இருந்து விடை பெற்றான்.

************** *************************

ராவணன் நேராக சென்றது அந்த போட்டோவை எடுத்தவனை தான். ராவணன் சொன்னது போல் மிதுன் பேசிய பேச்சில் அந்த நிறுவனம் தானாகவே இழுத்து மூடி கொண்டது.

அவன் மூடவில்லை என்றால் மிதுன் ஆள் செட் செய்து பகைமை தீர்த்து கொள்ள பழி என்று சம்பவம் செய்திருப்பான். நல்லவேளை அந்த நிறுவனத்தின் எம். டியே மூடி சாத்தி விட்டார்.

ஆனால் இதில் முக்கியமான ஆளே அந்த ரிப்போட்டர் தானே. அதான் பாவம் பார்க்காமல் கொத்தாக தூக்கி வந்து விட்டான் மிதுன்.

ராவணன் வந்ததும் எதும் விசாரிக்க வில்லைகன்னை எடுத்து அவனின் இரு கைகளிலும் உள்ள பெருவிரலையும் ஆள்க்காட்டி விரலையும் ஷூட் செய்து துண்டிக்க மிதுன் மிரண்டு போனான் ராவணனின் கோவத்தில்.

காயம் பட்டவனோ வலியில் துடிக்க அவனின் கையை காலால் நசுக்கியவன்“ இந்த விரல் தானே போட்டோ எடுத்துச்சு. உனக்கு எவ்ளோ தைரியம். என் அனுமதி இல்லாமநீ பண்ண வேலைக்குஎனக்கு வந்த கோவத்துக்கு கொன்னு பொதச்சிருப்பேன். இனி உன் பேர் என் காதுல விழுந்துச்சு சமாதி கட்டிருவேன். போடா *****’’ என்ற ராவணனின் கர்ஜனையில் ரத்தம் வழியும் கைகளோடு ஓடினான்.

இன்னும் ஆத்திரம் அடங்கவில்லை ராவணனுக்கு. “ அஜெய் எதுக்கு இப்டி ரியாக்ட் பன்ற. கொஞ்சம் நிதானமா இரு “ என்றவனை முறைத்துபார்த்த ராவணன்

“ மிதுன் இப்டி நிதானமா இருந்ததால தான். எது நடக்க கூடாதுனு நெனைச்சேனோ அது நடந்துருச்சி. என்ன பழிவாங்க நினைக்கிறவங்க முதல்ல டார்கெட் பண்ணுறது மைதிலியா தான் இருப்பா . அவளுக்கு கஷ்டம் குடுக்குற எது நடந்தாலும் என்னால ரியாக்ட் பண்ணாம இருக்க முடியாது. இனி வீட்ல செக்யூரிட்டி ஸ்ட்ரோங் பன்னு. அண்ட்எல்லார் கையிலும் ஒரு வெப்பன் வச்சிருக்கணும். அதுக்கு தேவையான லீகேள்ஒர்க் எல்லாம் முடிச்சிட்டு கம்பெனி வா “ என்றவன் அவனின் அலுவலகம் நோக்கி சென்று விட மிதுன் ராவணன் சொன்னதை செய்ய சென்றான்.

************************** *************

தனது அறையில் அலுவலக வேலைகளை பார்த்து கொண்டிருந்த ராவணனின் போன் சிணுங்கியது. அவனின் மைதிலி தான் அழைத்திருந்தாள் .

இதுவரை இறுக்கத்தில் இருந்தவன் முகம் பிரகாசமாகஅட்டென்ட் செய்து பேச போனவனிடம் மைதிலி என்ன சொன்னாளோ அதிர்ந்து போனான் ராவணன்.
 
Member
Joined
Nov 26, 2023
Messages
25
💕💕💕💕💕💕💕💕💕
 
Top