உன்னில் என்னை மீட்பாயாக! 4

Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
69
அத்தியாயம் – 4

நான் சோபாவிலே உறங்குகிறேன் என்று பழைய நாடக கதை போல் பேசியவனை முறைத்துபார்த்த மைதிலி “ இவ்ளோ பெரிய மெத்தை இருக்குல்ல. இங்கையே வந்து தூங்கலாம். நா உங்கள எதும் கடிச்சி தின்னுற மாட்டேன் “ என்று சொல்ல சிங்கம் பூனையாகமைதிலி அருகில் படுத்துக்கொண்டது.

காலையில்தூக்கம் கலைந்து எழுந்தவன் முதலில் தேடியது அவனின் மைதிலி தான். அவள் அறையில் இல்லாமல் போகவே வேகமாக கீழே இறங்கி வந்தவன் மைதிலியை கண்டு உறைந்து தான் போனான் .

புது மனைவிக்கு உரித்தான அழகில்கையில் காபிகோப்பையுடன்ராவணன்வருகையை கண்டு எடுத்து வர பாவம் ராவணன் தான் அவள் செயலில் திக்கு முக்காடி போனான்.

நடப்பது எல்லாம் கனவு போல் தோன்ற. “ ஹெலோ சார். தூங்கி எழுந்து எந்த கனவுல இருக்கீங்க. இந்தாங்க காபி “ என்று அவன் கையில் குடுத்தவள்“ உங்களுக்கு பிரேக்பாஸ்ட் என்ன வேனும் “ என்றவளை விழி விரித்து பார்த்தான்.

அவளின் புருவ அசைவுக்கு பொம்மை போல் கட்டுண்டவன் “ எது எது வேணாலும் ஓகே “ என்க. சிரித்தவள் சமையலறைக்கு சென்று விட அவளின் சிரிப்பில் ராவணன் தான் தன்னை தொலைத்துபோனான்.

அவள் குடுத்த காபியை ரசித்து ருசித்து பருகியவன் மனம் எல்லை இல்லா மகிழ்ச்சி. அவனே அவனுக்காக அவன் மேல் அக்கறை காட்ட கிடைத்த ஒரு உறவு நினைக்க நினைக்க ராவணனுக்குசந்தோசம் தாளவில்லை .

அலுவலகம் செல்லதயாராகி வர அதற்குள் மைதிலி அவனுக்கு தேவையான உணவை எடுத்து வைத்தாள். ராவணன் வர அவனுக்கு சாப்பாடு பரிமாற எதர்ச்சையாக ராவணனின் பார்வை மைதிலியின் இடையில் பட்டது.

பாவம் பதிந்த அவனின் பார்வையை அவளின் இடையில் இருந்து விலக்க பெரும்பாடு பட்டான் ஆடவன் .எச்சிலை விழுங்கியவன் எவ்ளோ தான் முயன்றும் அவளின் பளிங்கு இடையில் இருந்துபார்வை மீட்க முடிய வில்லை.

ப்லேட்டில் சாப்பாடுவைத்தும் சாப்பிடாமல் இருப்பவனின் பார்வை போன திசையில் பார்த்து அதிர்ந்தவள் புடவையை இழுத்து விடவே பட்டென குனிந்து சாப்பிட ஆரம்பித்த ராவணன் திருட்டு முழியை மறைக்க ரொம்பவே கடினப்பட்டு போனான்.

“ நீயும் என்கூடவே சாப்டு “ என்று ராவணன் சொல்ல சரியென அவனுக்கு அருகில் அமர்ந்து சாப்பிட்டவள் என்ன நினைத்தாளோ ஒருவாய் உணவை கையில் எடுத்து ராவணன் முன் நீட்ட திகைத்து போனான்.

ராவணனின் கண்ணெல்லாம் கலங்கி போனது. இதுவரை இவன் அனுபவிக்காத ஒன்று. இப்போது மைதிலி செய்ததில் சந்தோசமும் கண்ணீரும் வந்தது.

ஆனால் எதையும் வெளிக்காட்டாதவன் அமைதியாக அவள் கொடுத்ததை வாங்கி சாப்பிட்டவன் மீண்டும் அவள் முகம் பார்க்க சிரித்தவள் அவளே அவனுக்கு ஊட்டியும் விட்டாள் .

அப்போது தான் ராவணனை பார்க்க வந்த மிதுன் இந்த காட்சியை கண்டு மனம் குளிர்ந்து போனான் . பின் மைதிலி மிதுனையும் அமர வைத்து விட்டு சாப்பிட வைத்து தான் அனுப்பினாள்.

காரில் ராவணனும் மிதுனும் செல்ல “ மிதுன் இப்போதைக்கு எந்த சோசியல் மீடியா இண்டஸ்ட்ரியல் பார்ட்னர்ஸ்யாருக்கும் எனக்கு கல்யாணம் ஆனதோ என் மனைவி மைதிலி என்பதோ தெரிய கூடாது மைண்ட் இட் “என இறுக்கமான குரலில் கூற

“ஓகே பாஸ். இந்த விஷயம் வெளிய லீக் ஆகாம நா பாத்துக்குறேன் “ என்று சொல்லவே ராவணன் நிம்மதியாகி போனான்.
********** *********************
ஒரு வாரத்திற்கு பிறகு.

ஒரு முக்கியமான பைல் தன் அறையிலே விட்டு போனதால் மீண்டும் வீட்டுக்கு வந்தான் ராவணன்.

வேக எட்டுக்கள் வைத்து தன் அறைக்குள் வந்தவன் உறைந்து போனான் எதிரில் இருப்பவளை கண்டு.

சமைத்து முடித்து எப்போதும் போல் குளித்தவள் ராவணன் வருவான் என்று அறியாமல் டவலோடு நிற்க பாவம் ராவணன்மிரண்டு போனான் மனைவியின் அரைகுறையில் .

காலடி சத்தத்தில் திரும்பியவள் கணவனை கண்டு முதுகை காட்டியவள் உறைந்து நிற்க.

பெண்ணவளை நோக்கி மெல்ல அடிவைத்து செல்ல மைதிலியின் இதயம்படபடத்தது.அவனாலும் தான் எத்தனை நாளைக்கு உணர்ச்சியைஅடக்க முடியும்.

அவளின் முதுகுக்கு பின்னால் நின்றவன் அள்ளி கிளிப் செய்த அவளின் கூந்தலுக்கு விடுதலை குடுக்க முதுகில் படர்ந்த அவளின் கூந்தலை ராவணன் அவனின் விரலால் முன் புறம்விலக்க சிலிர்த்து போனாள் மைதிலி.

அவனின் சூடான மூச்சுக்காற்று அவளின் முதுகில் பட தவித்து நின்றவளின் முதுகில் முதல் முத்தம் அழுத்தமாக பதித்தான் ராவணன்.

“ ஸ்ஸ் ஆஆஆஆ “ என்ற முனகியவள்அவளின் கீழ் உதட்டை பற்களால்கடித்து தவிப்பை அடக்க .

கழுத்து பக்கவாட்டில் முத்தம் வைத்தவன் அவளின் காதில் முத்தம் வைத்து “ ஐ லவ் யூ அம்மு “ என்று சொல்ல அதிர்ந்து பார்த்தவளின் இதழை கொய்தான் ராவணன்.

அவள் தடுக்கவில்லை மாறாக அவனுக்கு இசைந்து கொடுக்க அவர்களுக்குள்ளான அழகிய தாம்பத்யம் அரங்கேறியது இனிமையாக.

அங்கு பாவம் மீட்டிங்காக பைல் எடுக்க போன ராவணன் வராமல் முழித்து கொண்டிருந்தான் மிதுன்.

ராவணனின் நெஞ்சை மஞ்சமென நினைத்து தலைவைத்து படுத்திருக்க ராவணனால் அவன் மனதில் உண்டான மகிழ்ச்சியை வார்த்தையால் கூட விவரிக்க முடியவில்லை.

இது எல்லாம் என் வாழ்வில் நடக்குமா என்று நினத்தவனுக்கு இன்று எல்லாம் நடந்து விட நம்பாமல் இருந்தவனின்தோளில் நறுக்கென கிள்ள கத்தியவன்

“ என்ன பொண்டாட்டி “ என்றவன் முகம் பார்த்தவள்

“ இல்ல இது எல்லாம் கனவா நிஜமானு யோசிச்சுட்டு இருந்ததில்ல. அதான் கிள்ளி நினைவுனு காட்டினேன் “ என்றவளின் முகம் நிமிர்த்தியவன்

“ சாரி இப்போ கேட்க கூடாது தான். இருந்தாலும் கேட்கிறேன். உனக்கு என்ன பிடிக்குமா. நா ஏதோ “ என்றவனின் வாய் பொத்தியவள்

“ புடிச்சதால தான் நீ என்ன நெருங்கும் போது விலகல. நீ என் ராவணன் . இந்த மைதிலி உன் கையாள தாலி வாங்கி நொடியில் இருந்தே உனக்கானவை. இனி நம்ப வாழ்க்கை ஒரு அழகான குடும்ப வாழ்க்கையா இன்னையில இருந்து தொடங்கலாம் “ என்றதில் சிரித்தவன் மீண்டும் அவளை ஆட் கொண்டான்மைதிலியின் ராவணன்.

************* ************ ***********

உணவு உறக்கம் எல்லாம் மறந்து கூடலில் இருந்தவர்கள் காலையில் சூரியன் வந்த பின் தான் தூங்கலாம் என உறங்கினார்கள்.

கொஞ்ச நேரத்துக்கு மேல் மைதிலியால் தூங்க முடியவில்லை. ராவணனின் கை வளைவில் இருந்து விடுபட்டவள் ஒரு துணியால் போத்தி கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் .

குளிர்ந்த நீர் உடலில் பட்டதும் உண்டான எரிச்சல் கூட சுகமாய் போனது மைதிலுக்கு. அது எல்லாம் அவளின் ராவணன் குடுத்த பரிசல்லவாஅவளுக்கு இன்பமாக தானே இருக்கும்.

குளித்து முடித்தவள் ஒரு சேலையை அணிந்து கொண்டு அசந்து தூங்கும் ராவணன் அருகில் வந்தாள்.” செய்வதை எல்லாம் செய்து விட்டு ஒன்னும் அறியாதவன் போல் தூங்குவதை பார் ‘’என்று செல்லமாக திட்டியவள் அவனின் கன்னத்தில் முத்தம் குடுத்து

“ மாமு எழுந்திரிங்க “ என்றவளை இழுத்து அவளின் இடையை கட்டி கொண்டவன் மீண்டும் தூங்க

கடுப்பானவள் “ எவ்ளோ அழகா மாமுனு கூப்ட்டா நீ என்னனா தூங்குற. இப்போ எழ போறியா இல்லையா “ என்று மைதிலி சொல்ல உச்சு கொட்டியவன்

“நைட் முழுக்க தூங்கலடி . ஒரே டயர்டா இருக்கு தூங்க விடு “ என்றதில் ஏகத்துக்கும் கோவமானவள்

“ நைட் முழுக்க என்ன தூங்க விடாம பண்ணிட்டு இப்போ சார்க்குதூக்கம் கேட்குதா“ என்றவள் அவனின் தோளில் கடிக்கவே பதறி எழுந்தான் ராவணன்.

“நா பாவம் இல்லையா “ என்றவனின் கன்னம் பிடித்து ஆட்டியவள்“ என் தங்கமே என் கூட கோவில் வந்துட்டு அப்றம் வந்து தூங்குங்க. இல்லன்னா நீ தூங்கு நா மட்டும் போறேன் “ என்று எழ போக தடுத்தவன்

“ வரேன் நானும் “ என்று குளியலறைக்குள் புகுந்து கொண்டான் ராவணன்.

************* *********** ************

பின் இருவரும் ஒன்றாக அம்மன் கோவிலுக்கு சென்றனர். கல்யாணம் ஆகி வெளியே சேர்ந்து வந்தது இதுவே முதல் முறை. இது ஆபத்து தான். இருந்தாலும் மைதிலி வார்த்தையை மறுக்க முடியவில்லை ராவணனால்.

நெற்றியில் செந்தூரம் முகத்தில் ஒருவித பொலிவு என இளம் சிவப்பு புடவையில் இருந்தவளை பார்க்கவே கிக் ஆனது ராவணனுக்கு. அவனின்பார்வை கண்டவள்“ ஒழுங்கா கோவில் பொய்ட்டு வர்ற வரைக்கும் ஒழுங்கா இரு “ என்று சொல்ல நல்ல பிள்ளைபோல் இருந்து கொண்டான் அவனும் .

இருவரின் பெயருக்கும் அர்ச்சனை செய்ய சொல்லியவள் ஆண்டவனிடம் கை கூப்பி “எனக்கு வாழ்க்கைனு ஒன்னு இல்லாம போகிறும்னு நினைக்கும் போது எதிர்பாராத விதமா இவர் என் கழுத்துல தாலி கட்டினாரு. இவர எனக்கு தெரியும். நா போகுற ஆசிரமத்துக்கு வேண்டியதை செய்ற நல்ல மனுஷன். ஆனா இவருக்கு யாரும் இல்லனு நினைக்கும் போது தான் கஷ்டமா இருக்கு. இனி என் ராவணனுக்கு எல்லாமுமாய் நா இருப்பேன். இன்னைக்கு மனசால உயிராலஇணைஞ்ச எங்க வாழ்க்கை நல்லா இருக்க நீ தான் துணை புரியனும் “ என்று பெரிய வேண்டுதல் வைத்தவள் கணவனை பார்க்க

அவனோ இவளை தான்பார்த்து கொண்டிருந்தான். “ என்ன பன்ற கடவுளை கும்பிடு “ என்றதில் மறுப்பாகதலையாட்டியவன்“ எனக்கு அம்மா அப்பா மனைவி தெய்வம் தோழி எல்லாமே நீ மட்டும் தான் உன்ன தவிர இந்த ராவணன் யாரிடமும் அடிபணியமாட்டான் “ என்றவனிடம் என்ன சொல்வதென்றே தெரியாமல் இருக்க அய்யர் அர்ச்சனை தட்டை மைதிலி இடம் நீட்டினார்.

அதை வாங்கி கொண்டவள்ராவணன் நெற்றியில் திருநீர் வைத்து விட்டு அவனுடன் சிறிது நேரம் கோவிலில் இருந்து விட்டு மைதிலி போலாம் என்ற சொன்ன பின்னே வீட்டுக்கு அழைத்து வந்தான்.

*********************************

அடுத்த நாள் விடிந்தும் விடியாததுமாய் ராவணன் வீட்டிற்கு வந்தான் மிதுன்.

அப்போதுதான்ராவணன் தன்னுடையபிரமாண்டகார்டனில் அமைக்க பட்ட பார்க்கில்வாக்கிங் போக ராவணனை நோக்கி ஓடி வந்தான் மிதுன்.

“ என்னாச்சு மிதுன் என்ன இந்த நேரத்துல “ என்றவனுக்கு பதில் சொல்லாமல் கையில் இருந்ததை குடுக்க அதை வாங்கி பார்த்தவன் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றான் ராவணன்.
 
Member
Joined
Nov 26, 2023
Messages
25
💖💖💖💖💖💖💖💖
 
Top