அத்தியாயம் - 9

New member
Joined
Aug 14, 2025
Messages
11
உணவு மேஜைக்கு அனைவரும் வர நான்சி உணவுகளை இருவருக்கும் பரிமாற சாகித்யாவிடம் நின்று அவனுக்கு பரிமாறும் பொழுது சற்று அவனை உரசுவது போல் நின்று பரிமாற

வேண்டுமென்றே அந்த இடத்தில் இருந்து வசுந்தராவிற்கும் எக்கி எக்கி பரிமாறினாள்.

அதில் சாகித்யாவின் முகத்தில் கோபம் அப்பட்டமாக தெரிய ப்ச்.... அந்த பக்கம் தள்ளி எங்க அம்மா பக்கத்துல நின்னு பரிமாற தெரியாதா இப்படித்தான் மேல உரசி கிட்டே பரிமாறுவாங்களா அறிவில்ல? என்று கத்தினான்.

அதில் பயந்தவள் போல் தனது கைகளில் இருந்த கரண்டியை கீழே விட்டவள் காதை மூடிக்கொண்டு அப்படியே நின்றுவிட

அவனுக்கு அவள் இந்த நடவடிக்கை சற்று ஓவராக இருப்பது போல் தோன்ற அதைக் கண்டு பயந்த வசுந்தரா சாப்பிடுவதை விட்டுவிட்டு அவள் அருகில் வந்தவர்

ஒன்னும் இல்லமா ஒன்னும் இல்ல என்று அவள் முதுகை தட்டிக் கொடுத்தவர்

சாகி என்ன இது அந்த பொண்ணு ஏதோ தெரியாம பண்ணிட்டா எனக்கு பரிமாற வேலையில் கவனத்தில் இப்படி பண்ணிட்டா அதுக்காக இப்படி தான் அந்த பொண்ணுகிட்ட கடுமையா நடந்துக்கிறதா? பாரு அந்த பொண்ணு பயந்து போயிட்டா எவ்வளவு பயந்த சுபாவமா இருந்தா நீ இப்படி மெதுவா பேசினதுக்கு அந்த பொண்ணு பயந்து இருப்பா என்றார்.

அதைக் கண்டவன் அம்மா போதும் அந்த பொண்ணு ஓவரா சீன் கிரியேட் பண்றா அந்த அளவுக்கு ஒன்னும் நான் சத்தமா பேசல நீங்களே சொல்றீங்க நான் மெதுவா தான் பேசினேன்னு எனக்கு பிடிக்கலைன்னா நான் சொல்ல தான் செய்வேன். இதுக்கு தான் நான் கேர்ள் கேர்ட்டேக்கர் வேண்டான்னு சொன்னேன். நீங்கதான் கேட்கவே இல்ல தேவையில்லாம இப்ப எனக்கு தான் பிரச்சனை என்று கூறியவன் அங்கிருந்து சாப்பிடாமல் செல்ல பார்க்க

சாகி டேப்லெட் போடணும் ஒழுங்கா வந்து உட்கார்ந்து சாப்பிடு என்றார்.

டேப்லெட் டேப்லெட் கருமம் எரிச்சலா வருது என்று சொல்லிக்கொண்டே வேண்டாம் வெறுப்பாக வந்து மீண்டும் வீல்ச் சாரை தள்ளிக் கொண்டு வந்தவன் வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு முடித்துவிட்டு அறைக்குள் அடைந்து கொண்டான்.


அதுவரைக்கும் ஒரு ஓரமாக பயந்துது போல் நடித்துக் கொண்டு நின்று இருந்தவள் அவப்பொழுது அவனை கண்களால் பருகிக் கொண்டிருந்தால் யாரும் அறியா வண்ணம்.

அவன் அறைக்கு சென்று மாத்திரை கொடுக்கலாம் என்று பார்க்க அவன் அரை கதவு திறந்திருந்தது.

அதனால் மெதுவாக இரண்டு தட்டு தட்டி விட்டு உள் நுழைந்தவள் கண்களுக்கு குளித்துவிட்டு வீழ்ச்சாரல் துண்டுடன் அமர்ந்த தலையை துவட்டி கொண்டிருக்கும் சாகித்யா தான்
கண்களில் பட்டான்.

அவனை பார்த்தவள் வேண்டுமென்றே அய்யய்யோ என்று கத்தி திரும்பி நின்று கொள்ள அவள் சத்தத்தில் திரும்பி பார்த்தவன் தனது மேனியை துண்டால் மூடிக்கொண்டு எதுக்காக அரை கதவை தட்டாமல் உள்ள வர இடியட் என்று கத்தினான்.

சார் நான் தட்டினேன் உங்களுக்கு கேட்கல சத்தம் வரல உங்களுக்கு ஏதோ ஆபத்து அப்படி என்று தான் மெதுவா உள்ள வந்தேன். நீங்க இப்படி இருப்பீங்கன்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணல சார் என்று அவள் வாய்வர்த்தையாக கூறினாலும் அவனை பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் அவள் மனதை வாட்டியது.

திரும்பி விடலாமா என்று தோன்றினாலும் தன் மேல் அவன் தப்பான அபிப்பிராயம் கொள்ள கூடாது என்ற ஒரே காரணத்திற்காக நல்லவள் போல் நடித்தால்.

சாரி சார் பதட்டத்துல தான் உள்ள வந்தேன் மன்னிச்சிருங்க. உங்களுக்கு டேப்லட் கொடுக்க தான் வந்தேன் என்றால் .

இத்தனை நாள் நீயா எனக்கு வந்து டேப்லெட் கொடுத்த நான் பார்த்துக்கிறேன். இப்ப முதல்ல தயவுசெய்து அறைய விட்டு வெளியே போ இனிமேல் நீ இந்த ரூம்குள்ள வரவே கூடாது என்றான்.

அதில் வேகமாக திரும்பியவள் சார் நான் ஒரு நர்ஸ் உங்கள பாத்துக்க தான் வந்து இருக்கேன் . இப்படி எந்த வேலையும் கொடுக்காமல் நீங்க உன்ன வெட்டியா வச்சு கருத்துக்கு வைக்காமலே இருக்கலாம் என்று ஒரு ஆதங்கத்தில் கத்தி விட

அதைத்தான் நானும் எங்க அம்மா கிட்ட சொல்லிட்டு இருக்கேன். அவங்க தான் கேட்க மாட்டேங்கிறாங்க. நீயே சொல்லிட்ட நாளைக்கு உன்னை வேலையை விட்டு தூக்கி விடுறேன் என்ற கூறியவனை பார்த்து அதிர்ந்தவள் தவளை தன் வாயால் விடுவது போல் நானே எனக்கு வேலை இல்லாமல் செய்து கொள்வேனோ என்று பயந்தவள்

தனக்கு இந்த வேலை கண்டிப்பாக வேண்டும் என்ற நிலையில் சார் மன்னிச்சிருங்க தயவுசெஞ்சு என்னை வேலையை விட்டு நிறுத்திராதீங்க கஷ்டப்படுற என் குடும்பத்தை நான் தான் பார்த்துக்கணும் இந்த வருமானத்தை வச்சு தான் எல்லாரையும் பார்த்துக்கிறேன் ப்ளீஸ் சார் என்று போலி கண்ணீர் வடித்து அவனது பாதங்களை பிடித்துக் கொள்ள தீ சுட்டது போல் அவளை தட்டி விட்டவன் செயலில் பெண்ணவள் கீழே விழுக

அவளைப் புழுவை போல் பார்த்தவன் மேல கை வைக்கிற வேலை வச்சுக்காத வேலையை விட்டு தூக்கல ஒழுங்கா என் ரூம விட்டு வெளியே போ அனுமதி இல்லாமல் உள்ள இனிமேல் வரக்கூடாது என்று கத்தி விட்டு திரும்பி தனது தலையை துவட்டிக் கொள்ள அவனை முறைத்து பார்த்துவிட்டு சென்றவள் தனது அறைக்குள் நுழைந்து வேகமாக கதவை அறைந்து சாத்தினாள்.

தான் போட்டுக் கொண்டிருந்த நைட்டியை கழட்டியவள் உள்ளே ஒரு ஷார்ட் டாப்பும் ஒரு ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்திருந்தாள்.

இப்படியேதான் அவன் முன்பு செல்ல ஆசை ஆனால் தன்னை தவறாக நினைத்துக் கொள்ள கூடும் என்று வேண்டுமென்றே தளர்வான நைட்டி போன்ற ஸ்லீவ்லஸ் உடைய அணிந்தவள்

அவன் முன்பு சென்று நின்றால் அவன் கண்டிப்பாக தன் அழகில் மயங்கி விடுவான் என்று அவள் பிளான் செய்திருக்க அவனும் இவளை அருவருப்பாக பார்த்தது அவளுக்குள் இருக்கும் ஈகோவை தூண்டி விட்டது.

கண்டிப்பாக அவனை பழிவாங்க வேண்டும் அவள் என்னவோ வந்தது பணக்கார இடம் இருக்கும் வரை அனைவரையும் அதிகாரம் செய்து கொண்டு நிம்மதியாக இருக்கலாம் அப்படியே அவனை வைத்து ஒரு சில காரியங்களையும் செய்துவிட்டு நல்லவள் போல் காட்டிக்கொண்டு ஆறுதல் அளித்த இங்கேயே செட்டில் ஆகிவிடலாம் என்ற யோசனையில் வந்திருக்க

நானே போர்ஜரி பண்ணி நர்சாகி இத்தனை வருஷம் வேலைய ஓட்டிட்டு இருக்கேன் இங்க வந்து இந்த மாதிரி பணக்கார பையன அட்டென்ட் பண்ணி செட்டில் ஆகிடலாம்னு பார்த்தா இவன் நம்மள ஒரு ம*** கூட மதிக்க மாட்டேங்கிறான் கண்டிப்பா இவன வச்சு செய்யணும் என் காலிலேயே விழுந்து கிடக்கிற மாதிரி பண்றேன் என்று அரை அதிர கத்தியவள்

காலையில் அழைத்த அதே நம்பருக்கு போன் செய்து மீண்டும் சிறிது நேரம் பேசிவிட்டு அவர்கள் சொன்ன இன்ஸ்ட்ரக்ஷனையும் கேட்டுக் கொண்டவள் கூடிய விரைவில் காரியத்தை முடிப்பதாக சொன்னாள்.

அடுத்த நாள் கல்லூரிக்கு வந்தவன் வேலை வரிசையாக இருக்க ஆராதனாவை தண்டிக்க வேண்டும் கண்டிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவன் நினைப்பே அவனுக்கு எழாமல் போக அந்த ஒரு வாரம் அப்படியே கடந்தது இந்த ஒரு வாரமும் நான்சி வீட்டில் அவர்கள் இல்லாத போது தனது வேலையை வேலைக்காரர்களிடம் காட்டிக் கொண்டிருந்தாள் அவர்களை மிரட்டுவது தான் இதுவரை சாப்பிடாத உணவுகளை சாப்பிட வேண்டும் என்று நினைத்த ரெசிபிகளை எல்லாம் சொல்லி சமையல் பெண்மணியே youtube இல் பார்த்து ரெசிபி செய்யும் அளவு அவரை ஒரு வழியாக்கி விட்டால்

இதற்கு மேல் பொறுக்க முடியாதவர் அன்று காலையில் உடம்பு காய்ச்சல் எடுத்து விட்டது என்று சொல்லி படுத்துக்கொள்ளும் அளவு இருந்தது அவளுடைய கொடுமை.

அதைக் கேட்டு நான்சி நான் வேணா போய் அவங்கள பார்த்துட்டு வரேன் என்று கூறியவள் சமையல் கார பெண்மணி இருக்கும் அறைக்குள் நுழைந்தவள் என்ன மேடம் எனக்கு சமைச்சு போடுறதுக்கு முடப்பட்டுகிட்டு காய்ச்சல் என்று சொல்லி படுத்துகிட்டியா அதை எப்படி துரத்துறேன்னு மட்டும் பாரு என்று வஞ்சகமாக எண்ணியவள்

அக்கா உங்களுக்கு காய்ச்சல் என்று கேள்விப்பட்டேன் நானே நர்ஸ் தானே அதுதான் உங்களுக்கு இன்ஜெக்ஷன் போட்டு உடம்ப குணப்படுத்தலாம் என்று வந்தேன் என்று அவள் தனது கையில் வைத்திருந்த இன்ஜெக்ஷனை எடுக்க

அதை பார்த்து அலறியவர் அய்யோ எனக்கு உடம்பு நல்லா இருக்குமா என்று சொல்லிக்கொண்டே அவளுக்கு முன்பு அரை கதவை திறந்து கொண்டு வெளியே ஓடிவிட

அதைக் கண்டு பலமாக சிரித்தவள் என்கிட்டே வா நானே நான் இருக்கிற இடத்துல எத்தனை பேர உருட்டி மெரட்டி வேலை வாங்கியிருக்கேன் என்கிட்டயே உங்களோட பொய் பித்தலாட்டம் எல்லாம் பலிக்காது ஏன்னா நான் அதுல ஊறிப்போனவ. என்று தன்னை பற்றி மனதிற்குள் பெருமையாக நினைத்துக் கொண்டவள் வெளியே வந்து வசுந்தராவிடம்

அம்மா அவங்களுக்கு நான் ஒரு டேப்லட் கொடுத்தேன் அதை போட்டு கொஞ்ச நேரத்திலேயே சரியாயிட்டாங்க அவங்க சமைச்சுடு வாங்க நானும் அவங்களுக்கு உதவி பண்றேன் என்று கூறியவள் அடுக்கலைக்குள் வந்து அவர்களை திட்டிக் கொண்டே வேலை ஏவிக் கொண்டிருந்தாள் மெதுவான குரலில்.

இத்தனை ஆண்டுகள் அவர் வேலை செய்து இருக்கிறார் ஒருமுறை கூட வசுந்திரா இப்படி அடிமை போல் நடத்தியது இல்லை சாகித்ய அய்யாவிற்கு குணவாக வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தான் அந்த சமையல்கார பெண்மணியும் அமைதியாக இருந்தார் .

அவளும் அவர் அமைதியாக இருப்பதை பார்த்துவிட்டு அங்கே இருந்த மேடையில் ஏறி அமர்ந்து கொண்டவள் கையில் இருந்த ஒரு கேரட்டையும் சாப்பிட்டுக் கொண்டே அவரை வேலை வாங்கிக் கொண்டிருந்தாள்.

அவனும் இந்த ஒரு வாரமும் வேலை பளுவில் எதை பற்றியும் நினைக்காமல் வேலைகளை செய்து கொண்டிருந்தவன் நான்சியின் களவாணித்தனங்களை கவனிக்க முடியாமல் போனது.

அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டவள் நாளொரு மேனி அவனுடைய மேனி மேல் அவள் வைத்திருந்த பார்வை இன்று மோகபித்து அதிகமாகி அவனை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று எண்ணத்தை தூண்ட

அதற்கு ஏதுவாக அன்று இரவு உணவு அனைத்தையும் ஏழு மணிக்குள் சமைக்க சொல்லி சொன்னவள் அவர்களையும் சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு அறைக்குள் அடைந்து கொள்ள கூறினாள்.

அந்த வேலைக்காரர்களும் தற்பொழுது வசுந்தராவிற்கு மேல் இவளை பார்த்து பயப்பட ஆரம்பித்து விட அவள் சொன்னதை தட்டாமல் செய்தனர் வீட்டிற்குள் வசுந்தரா வரும்பொழுது வீடே அமைதியாக இருக்க இவள் மட்டும் கலைக்குள் இருந்து பொருட்களை எடுத்து வருவதை பார்த்த வசுந்தரா என்னம்மா வேலைக்காரங்க யாரும் இல்லையா என்று கேட்டார்.

இல்லாட்டி அவங்க சமைச்சு வச்சுட்டாங்க நான் தான் உங்க ரெண்டு பேருக்கு தானே நானே பரிமாறுகிறேன் அவங்களும் பாவம் காலையிலிருந்து வேலை பார்க்கிறார்கள் அதனாலதான் அனுப்பிச்சு வச்சுட்டேன் நீங்க ரெப்ரஷ் ஆயிட்டு வாங்க என்றவள் அவர் சென்றவுடன்

வெஜ் சூப் செய்திருக்க அதை இரண்டு பவுலில் வைத்தவள் ஒரு பவுலில் வசுந்திரா நன்கு தூங்க வேண்டும் என்று மயக்க மருந்தை கலந்து கொடுக்க அதை தனியாக வைத்தவள்

சாகித்யாவிற்கு உணர்வுகளை தூண்டும் மாத்திரையை பொடி பண்ணி அவனுடைய சூப்பில் கலந்தால்.

இருவர் சாப்பிட வந்ததும் இருவருக்கும் பரிமாறியவள் அவர்கள் சாப்பிட்டு முடித்து மேலே சென்றவுடன்

வெற்றி சிரிப்பொன்று சிரித்தவள் மீதம் இருந்த உணவுகளை சாப்பிட்டு முடித்து விட்டு அப்படியே வைத்துவிட்டு அவள் தனதரைக்கு வந்தவள் அவன் சரியாக அரை மணி நேரத்தில் உணர்வுகள் வர ஆரம்பிக்கும் என்பதை ஊகித்துக் கொண்டு சீக்கிரமாக குளித்து முடித்து தன்னை மிகவும் ஒரு செக்ஸியான ஆடைக்குள் புகுத்திக் கொண்டவள் அதற்கு மேல் ஓவர் கோட் போல் ஒன்று போட்டுக் கொண்டாள்.

அவன் கதவு மட்டும் பூட்டாமல் இரவு படுப்பான் என்பதை இந்த ஒரு வார காலத்தில் தெரிந்து கொண்டிருந்தவள் தைரியமாக அவன் அறைக்கு வெளியே நின்று கதவில் காதை வைக்க எந்த சத்தமும் கேட்காமல் இருந்ததால் மெதுவாக கதவை திறக்க

பாத்ரூமில் தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்க கண்டிப்பாக அவன் உணர்வு வர ஆரம்பித்தவுடன் அதை அடக்கிக் கொள்ளத்தான் சவருக்கடியில் நிற்கிறான் என்பதை உணர்ந்து கொண்டவள் தனது திட்டம் இன்று வெற்றி அடையப் போவதை எண்ணி சந்தோஷம் கொண்டவள் அவன் இன்று தன்வசமாக போகிறான் என்ற கற்பனையில் அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டவள்

அவனுக்கு மாத்திரைகள் எடுத்து வைக்கலாம் என்று அதை செய்து கொண்டு இருக்க

அவன் மெதுவாக பாத்ரூம் கதவை திறந்து கொண்டு வெளியேறினான்.



இதன் தொடர்ச்சி அடுத்த அத்தியாயத்தில்.....
 

Author: kadhaa
Article Title: அத்தியாயம் - 9
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top