- Joined
- Nov 10, 2023
- Messages
- 69
- Thread Author
- #1
அத்தியாயம் 14
வழக்கமாய் அமுதனும் மௌனியும் சந்தித்துக் கொள்ளும் ஹோட்டல் முன்பு வேந்தனின் கார் படும் வேகத்தில் தரையை தேய்த்துக் கொண்டு நின்றது. நின்ற வேகமும் கதவை திறந்து அதை மூடிய சத்தமுமே வெளிச்சம் செய்தன அவனிருக்கும் கோவத்தை.
கொன்றும் போடும் கோவத்தை அடக்கிக் கொண்டு அவள் சொல்லிய தளத்தை வந்தடைந்த வேந்தன் கதவினை பலம் கொண்டு தட்டிட அடுத்த நிமிடம் திறந்து புன்னகை முகமாய் வரவேற்றவளின் கழுத்தை பற்றி உள்ளே தள்ளியவன் பல்லைக் கடித்து கோபத்தை கட்டுப்படுத்த முயன்றான்.
" உனக்கு எவ்ளோ பணம் வேணும்? "
" பணமா? "
" ரொம்ப நடிக்காத. சொல்லு உனக்கு எவ்ளோ பணம் வேணும்? " அடிக்குரலில் உருமியவன் கையை உதறி விட்டாள் மௌனி. அவளிடம் இல்லாத பணமா?
" யாருக்கு வேணும் உன் பணம்? பணம் பணம்னு அலையிறது நீதான் அமுதா. நான் உண்மையா உன் குழந்தையை தான் சுமக்குறேன். ப்ளீஸ் எதுமே தெரியாத மாதிரி பேசாத. இப்போவாச்சும் நம்ப விஷயத்தை வெளிய சொல்லி கல்யாணம் பண்ணிக்குலாம் அமு " என அவள் கையை பிடிக்க வர பின்னே விலகிக் கொண்டான் வேந்தன். அவள் சொல்லுவதை கேட்கவே கூசியவன் மறந்தும் அவள் முகத்தினை பார்க்கவில்லை.
கண்ணை மூடி நீண்ட மூச்சை விட்டவன் முடிவாய் " என்னால உன்னை எந்த சூழ்நிலையிலும் கல்யாணம் பண்ணிக்க முடியாது. இந்த குழந்தையை நீ வச்சிக்குறதும் வசிக்காததும் உன் விருப்பம். உனக்கு பணம் தேவைப்பட்டா உதவி கிடைக்கும். அதை விட்டு என் பொண்டாட்டி இடத்துல பங்கு கேட்ட கொன்னு போட்டுருவேன் உன்னை. இனி எனக்கு மெசேஜ் பண்ணுறது இதோட நிறுத்திக்கோ " விரல் நீட்டி எச்சரித்தவனை கண்கள் விரிய பார்த்தாள் மௌனி.
பல்லைக் கடித்தவள் " எல்லாம் கேவலம் பணத்துக்காக தானே. அமு போதும் உன் நாடகம். நான் ஒன்னும் அந்த பட்டிக்காட்டான் கிடையாது உன் நாடகத்தை நம்ப. இப்போ என்னைக் கல்யாணம் பண்ணப்போறியா இல்லையா? என்னை ஏமாத்த நினைக்காத அமுதா. எல்லாம் அந்த அசிங்கமானவளால. அவளை கொன்னா நீ திரும்ப கிடைப்பல்ல " என்றவள் கழுத்தை பற்றி சுவரோடு ஒட்டியவன் வயிற்றில் வளரும் சிசுவிற்காக பிடியை விலக்கினான் வேந்தன்.
"எனக்கு எந்த நியாபகமும் இல்லை "
" என்ன நியாபகம்? "
"ஹ்ம்... கொஞ்ச மாதத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டதுல எனக்கு எதுவும் நியாபகம் இல்லை. இதை வெளிய சொல்லல. உனக்கும் தெரிஞ்சிருக்கவும் வாய்ப்பில்லை. இதுக்கு முன்னாடி நான் உன்கூட எப்படி இருந்தேன்னு எனக்கு தெரியாது. தெரிஞ்சிக்கவும் விருப்பம் இல்லை. ஆனா இப்போ சொல்லுறேன். இனியும் என்னை தொடர்புக் கொள்ளுறத இத்தோட நிறுத்திக்கோ " இறுதி முறையாக பல்லிடுக்கில் எச்சரித்து கதவை நோக்கி நடந்தவனை கண்ணீரில் சிவந்த கண்களால் பார்த்தவள்
"உன்னால உண்டான இந்த குழந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லையா? பதில் சொல்லு அமுதா " கத்தி கேட்க நடையை ஒரு கணம் நிறுத்தியவன் திரும்பி பார்க்காது வெளியேறிட உடைந்து சரிந்தாள் மௌனி.
அவளால் இந்த ஏமாற்றத்தை கொஞ்சமும் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. பணத்திற்காக அவளோடு நெருங்க வேண்டிய சூழ்நிலை வரும் என்று அமுதன் சொல்லிக் கேட்டிருக்கிறாள். அது வெறும் நடிப்பு தானே என்று நினைத்தவளுக்கு இன்று அவன் பேசிய பேச்சை நெஞ்சை பிசைந்தது ரணமாய்.
தன்னை வேண்டாமென தூக்கி எறிந்து விட்டான். தன் குழந்தையை அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லையே. கலங்கியவளின் கண்ணீர் குரோதமாக மாறியது அவன் மீது.
ஏமாற்றத்தின் வலி பழியாய் திரும்பியது அவன் மேல். கண்ணீரை கோவமாய் துடைத்து எறிந்த மௌனி தனக்கு தெரிந்த ரிப்போர்ட் ஒருவனுக்கு அழைத்து ஏதோ பேசினாள்.
" இங்க பாரு நான் கொடுக்குறது எல்லாம் பிரண்ட் பேஜ்ல வரணும். நான் சொன்ன மாதிரி செய் " கண்கள் பனிக்க சொல்லியவள் முகம் ஒருவித சந்தோஷத்தில் மின்னியது.
மௌனியால் வரப் போகும் ஆபத்தை உணராமல் வீட்டிற்கு வந்தவனை கேள்வியாய் ஆராய்ச்சி செய்தாள் அஞ்சலி.
" எங்கே முக்கியமான வேலைனு போனீங்க? அதுக்குள்ளே வந்துட்டிங்க? "
" போன வேலை முக்கியமானது இல்ல. அதான் " இறுக்கமான அவன் பதிலும் இறுகிய முகமும் சரியாய் படவில்லை அஞ்சலிக்கு.
அவன் முகத்தையும், நெற்றி சுருங்கிருக்கும் விதத்திலே புரிந்துவிட்டது ஏதோ சரியில்லை என்று. செய்யும் வேலையை அப்படியே போட்டு விட்டு வேந்தன் முன் வந்தவள்
"என்னாச்சு, தலை வலிக்குதா? நான் டீ எதும் போட்டு வரவா? " பரிவாய் கேட்பவளை இடுப்பை பற்றி தன் மடியில் அமர வைத்த வேந்தன் அவள் நெஞ்சிலே முகத்தை புதைத்துக் கொண்டான்.
அவன் செய்கையில் குழம்பிய அஞ்சலி " எதும் பிரச்சனையா? " மெல்லிய குரலில் அவன் தலைக்கோதி கேட்டிட சொல்ல முடியாமல் தவித்தவன்
"கொஞ்ச நேரம் என்னை இப்படியே விடு அஞ்சலி " கெஞ்சளில் மேலும் கேள்விகளை அடுக்கவில்லை அஞ்சலி.
ஏதோ பிரச்சனையில் இருக்கிறான் என்பது மட்டும் புரிந்தாலும் வாய் திறந்து என்னவென கேட்க பெண் மனம் முன்வரவில்லை. ஒருவேளை வேந்தன் நடந்ததை சொல்லிருந்தால் பின்வரும் பிரச்சனை அத்தனை பெரிதாய் வெடித்திருக்காதோ.
கொஞ்ச நேரம் அவன் போக்கில் விட்டவள் " போதும் போய் ரெப்பிரேஷ் ஆகிட்டு வாங்க. நான் டின்னெர் ரெடி பண்ணிட்டேன். சாப்பிடலாம் " எழுந்தவளை மீண்டும் இழுத்து அவள் வயிற்றில் முகம் புதைத்துக் கொள்ள நொந்துப் போய் பார்த்தாள் பாவை.
" என்ன??"
"ம்ச் மனுஷன கொஞ்சம் நிம்மதியா இருக்க விடேன்டி " ஆழ புதைய, தடுமாறியவளின் தொண்டைக் குழி ஏறி இறங்கியது பெண்ணிற்கு.
"போதும். கொஞ்சம் விடுறிங்களா. எ... எனக்கு கூசுதுங்க " நெளிந்திட சற்று முன்பிருந்த கடுப்பு மறைந்து குறும்பாய் அவளை இன்னும் கூச செய்தான் வேந்தன்.
" ஐயோ என்ன சின்ன பிள்ளை மாதிரி. விடுங்க... ஆ.. ஐயோ... கூசுது.. ஹாஹா " சத்தமாய் சிரித்தவளை இருக்கையில் தள்ளி இன்னும் சிரிக்க வைத்தவன் அவள் சிரமப்படவே இதழில் புன்னகை தவழ விலகினான்.
" இதுக்கு தான் இவ்ளோ ட்ராமா பண்ணிங்களா? தெரிஞ்சிருந்தா பக்கத்துல கூட வந்திருக்க மாட்டேன். போய் முதல்ல ரெப்பிரேஷ் ஆகிட்டு வாங்க. எனக்கு பசிக்குது " இப்போதெல்லாம் பொண்டாட்டி உரிமையில் அவள் போடும் கட்டளைகள் அடிமையாய் ஏற்க துவங்கிவிட்டான் ஆடவன்.
இப்போதும் அவள் சொன்னதை மறுக்காமல் அறைக்கு ஏறியவன் அலறிய போனை எடுத்தான். மீண்டும் மௌனியே தான். பெயரை பார்த்ததும் பற்களை நறநறவென கடித்தவன் அட்டென்ட் செய்திட
"என்னை ஈஸியா தூக்கி போட்டுட்டல்ல அமுதா. இந்த மௌனி ஒன்னும் குப்பை இல்லை. நீ எனக்கு கொடுத்த வலிக்கு நான் திரும்பி கொடுக்க தான் போறேன் " அடிக்குரலில் அவள் பேசி முடிக்கும் வரை காத்திருந்தவன்
"பேசி முடிச்சிட்டினா போன் வைக்கிறியா? எது பண்ணுறதா இருந்தாலும் யோசிச்சு பண்ணு மௌனி "
" பல முறை யோசிச்சிட்டேன். உன் முகத்திரையை கிழிக்கிறேன். நீ யாருன்னு அந்த பட்டிக்காட்டுக்கும் காட்டுவேன் "
" உன்னால முடியுறத பண்ணிக்கோ " அழைப்பை துண்டித்த கையோடு போனை தூர எறிந்த வேந்தன் எந்த வருத்தமும், குற்றணர்வுமின்றி குளியலறைக்குள் நுழைய மௌனிக்கு தான் பற்றி எரிந்தது அவன் பேச்சில்.
அஞ்சலியால் குளிர்ந்த மனம் மீண்டும் நெருப்பு கங்குகளாய் எரிய, நீரின் கீழ் நின்றவன் அதன் குளுமையில் தணிக்க முயன்றான். ஆனாலும் அஞ்சலி அளவிற்கு அவைகள் இதம் தரவில்லை. அந்த தேன் கருப்பட்டி தரும் சுகத்தை இந்த நீர்களும் கொடுக்கவில்லை.
பேருக்கு ஒரு குளியல் போட்டு டீப் v நெக் ட்ஷர்ட், ட்ராக் பேண்ட்டும் அணிந்தவன் கீழே இறங்கிட உணவுகளை மேஜையில் அடுக்கி கணவனை இன்முகமாய் வரவேற்றாள் அப்பாவி பெண்.
"இவ்ளோ நேரமா? வாங்க சாப்பிடலாம் " உணவை அவனுக்கு பரிமாறி தனக்கு வைத்துக்கொண்டவள் வேந்தன் உணவில் கையை வைத்த பின்பு தான் அவளும் உண்ணத் துவங்கினாள்.
"இவ்ளோ பசி இருக்குறவ எனக்கு வெயிட் பண்ணாம சாப்பிட வேண்டியது தானே "
" அது எப்படி நீங்க இல்லாம "
"நான் இல்லாம இருந்தால் என்ன? உனக்கு பேசுச்சா எனக்காக வெயிட் பண்ணாம சாப்பிடு அஞ்சலி " அவளின் கன்னம் தொட வந்தவன் கையை தட்டி விட்டவள்
" இவ்ளோ சொல்லுற நீங்க நேரமா வந்துருவேன்னு ஏன் சொல்ல மாட்டேங்குறீங்க? நீங்க சரியான நேரத்துக்கு வந்தா நான் ஏன் வெயிட் பண்ண போறேன். இப்படியும் யோசிக்குலாம் " அழுத்தமாய் சொல்ல வியப்பாய் அவளை பார்த்தான் வேந்தன்.
நன்றாக தான் பேசுகிறாள். அந்த பழைய தயக்கம், பதட்டம் தான் எங்கே போனது என்று தெரியவில்லை. ஆனால் இந்த உரிமை பேச்சை விரும்பிய வேந்தன் " இப்போல்லாம் மேடம் ரொம்ப தான் மிரட்டுரிங்க " அப்பாவியான அவன் குரலில் சிரித்தவள்
" அதுக்கு காரணம் நீங்க தான் " உணவோடு சிரிப்பையும் அதக்கிக் கொண்டாள் அஞ்சலி.
அவன் கண்கள் வழியே தன் அழகை உணர்ந்தவளுக்கு இவன் முன் இப்போதெல்லாம் தாழ்வுணர்வு தோன்றுவதே இல்லை . தன் மதிப்பு என்ன என்பதை புரிய வைத்தவன். தன் பெண்மையை முழுதாய் பறித்து சிம்மாசனம் போட்டவன் இவன். கணவன் என்ற உரிமை கொடுக்காமலா அதையெல்லாம் அள்ளிக் கொடுத்தாள்.
மறைமுக சீண்டளில் இரவு உணவை முடித்து அறைக்கு திரும்பிய அஞ்சலி "இப்போ நாம வீட்டுக்கே போகிடலாம். இனி எனக்கு அங்க என்ன நடந்தாலும் நான் முன்ன மாதிரி வருத்தப்பட மாட்டேன். ப்ரோமிஸ் "
" நோ அஞ்சலி. நீ என்ன சொன்னாலும் அங்க நாம போறதா இல்லை "
"ஆனா நீங்க இல்லாம உங்க அம்மா வருத்தப்படுவாங்களே "
" அதை யோசிச்சிருந்தா அவங்க உன்னை காயப்படுத்திருக்க மாட்டாங்க அஞ்சலி. இந்த பேச்சை மட்டும் விட்டுடு. இனி நமக்கு இது தான் நம்ப வீடு " உறுதியாய் சொல்ல திகைத்தாள் அஞ்சலி.
" ஆனா கொஞ்ச நாளைக்கு தானே சொன்னிங்க "
" ஆமா. ஆனா இனி முழுசா நாம இங்கையே இருக்குலாம்னு முடிவு பண்ணிட்டேன். எல்லாம் சரியாக தான் இருக்கு அஞ்சலி. நீ தேவை இல்லாம கண்டதையும் யோசிச்சிட்டு இருக்காத. இங்க வா " பெரிதாய் கையை விரித்து அழைத்தவனை விழி அகல பார்த்தவளும் தவழ்ந்து அவன் மார்பை அடைய, அவளை மெத்தையில் புரட்டி மேலே படர்ந்த வேந்தன்
" எனக்கு குழந்தை வேணும் அஞ்சலி. உன்னைப் போலவே. என் அஞ்சலி போலவே. இந்த வயித்துல என் குழந்தை வளரனும் " விரல்கள் அவள் வெற்று வயிறை வருட தொண்டை வறண்டது போல் உணர்ந்த அஞ்சலி வார்த்தைகள் வராமல் தடுமாறினாள்.
" எனக்கும் ஆசை தான். ஆனா இப்போ " ஏதோ சொல்ல வந்தவளின் இதழ் மேல் விரல் வைத்து மூடிய வேந்தன்
" இனி பேச்சுக்கு இடமில்ல. இது குழந்தை மேல இருக்குற ஆசைக்கு மட்டுமல்ல. உனக்கும் எனக்குமான உறவை இன்னும் ஆழமாக்க அஞ்சலி. ஐ வாண்ட் அ பேபி " காற்று ததும்பும் குரலில் காதில் கிசுகிசுத்த வேந்தன் தன் வேட்கையை அவள் மீது துவங்கினான்.
வழக்கமாய் அமுதனும் மௌனியும் சந்தித்துக் கொள்ளும் ஹோட்டல் முன்பு வேந்தனின் கார் படும் வேகத்தில் தரையை தேய்த்துக் கொண்டு நின்றது. நின்ற வேகமும் கதவை திறந்து அதை மூடிய சத்தமுமே வெளிச்சம் செய்தன அவனிருக்கும் கோவத்தை.
கொன்றும் போடும் கோவத்தை அடக்கிக் கொண்டு அவள் சொல்லிய தளத்தை வந்தடைந்த வேந்தன் கதவினை பலம் கொண்டு தட்டிட அடுத்த நிமிடம் திறந்து புன்னகை முகமாய் வரவேற்றவளின் கழுத்தை பற்றி உள்ளே தள்ளியவன் பல்லைக் கடித்து கோபத்தை கட்டுப்படுத்த முயன்றான்.
" உனக்கு எவ்ளோ பணம் வேணும்? "
" பணமா? "
" ரொம்ப நடிக்காத. சொல்லு உனக்கு எவ்ளோ பணம் வேணும்? " அடிக்குரலில் உருமியவன் கையை உதறி விட்டாள் மௌனி. அவளிடம் இல்லாத பணமா?
" யாருக்கு வேணும் உன் பணம்? பணம் பணம்னு அலையிறது நீதான் அமுதா. நான் உண்மையா உன் குழந்தையை தான் சுமக்குறேன். ப்ளீஸ் எதுமே தெரியாத மாதிரி பேசாத. இப்போவாச்சும் நம்ப விஷயத்தை வெளிய சொல்லி கல்யாணம் பண்ணிக்குலாம் அமு " என அவள் கையை பிடிக்க வர பின்னே விலகிக் கொண்டான் வேந்தன். அவள் சொல்லுவதை கேட்கவே கூசியவன் மறந்தும் அவள் முகத்தினை பார்க்கவில்லை.
கண்ணை மூடி நீண்ட மூச்சை விட்டவன் முடிவாய் " என்னால உன்னை எந்த சூழ்நிலையிலும் கல்யாணம் பண்ணிக்க முடியாது. இந்த குழந்தையை நீ வச்சிக்குறதும் வசிக்காததும் உன் விருப்பம். உனக்கு பணம் தேவைப்பட்டா உதவி கிடைக்கும். அதை விட்டு என் பொண்டாட்டி இடத்துல பங்கு கேட்ட கொன்னு போட்டுருவேன் உன்னை. இனி எனக்கு மெசேஜ் பண்ணுறது இதோட நிறுத்திக்கோ " விரல் நீட்டி எச்சரித்தவனை கண்கள் விரிய பார்த்தாள் மௌனி.
பல்லைக் கடித்தவள் " எல்லாம் கேவலம் பணத்துக்காக தானே. அமு போதும் உன் நாடகம். நான் ஒன்னும் அந்த பட்டிக்காட்டான் கிடையாது உன் நாடகத்தை நம்ப. இப்போ என்னைக் கல்யாணம் பண்ணப்போறியா இல்லையா? என்னை ஏமாத்த நினைக்காத அமுதா. எல்லாம் அந்த அசிங்கமானவளால. அவளை கொன்னா நீ திரும்ப கிடைப்பல்ல " என்றவள் கழுத்தை பற்றி சுவரோடு ஒட்டியவன் வயிற்றில் வளரும் சிசுவிற்காக பிடியை விலக்கினான் வேந்தன்.
"எனக்கு எந்த நியாபகமும் இல்லை "
" என்ன நியாபகம்? "
"ஹ்ம்... கொஞ்ச மாதத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டதுல எனக்கு எதுவும் நியாபகம் இல்லை. இதை வெளிய சொல்லல. உனக்கும் தெரிஞ்சிருக்கவும் வாய்ப்பில்லை. இதுக்கு முன்னாடி நான் உன்கூட எப்படி இருந்தேன்னு எனக்கு தெரியாது. தெரிஞ்சிக்கவும் விருப்பம் இல்லை. ஆனா இப்போ சொல்லுறேன். இனியும் என்னை தொடர்புக் கொள்ளுறத இத்தோட நிறுத்திக்கோ " இறுதி முறையாக பல்லிடுக்கில் எச்சரித்து கதவை நோக்கி நடந்தவனை கண்ணீரில் சிவந்த கண்களால் பார்த்தவள்
"உன்னால உண்டான இந்த குழந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லையா? பதில் சொல்லு அமுதா " கத்தி கேட்க நடையை ஒரு கணம் நிறுத்தியவன் திரும்பி பார்க்காது வெளியேறிட உடைந்து சரிந்தாள் மௌனி.
அவளால் இந்த ஏமாற்றத்தை கொஞ்சமும் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. பணத்திற்காக அவளோடு நெருங்க வேண்டிய சூழ்நிலை வரும் என்று அமுதன் சொல்லிக் கேட்டிருக்கிறாள். அது வெறும் நடிப்பு தானே என்று நினைத்தவளுக்கு இன்று அவன் பேசிய பேச்சை நெஞ்சை பிசைந்தது ரணமாய்.
தன்னை வேண்டாமென தூக்கி எறிந்து விட்டான். தன் குழந்தையை அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லையே. கலங்கியவளின் கண்ணீர் குரோதமாக மாறியது அவன் மீது.
ஏமாற்றத்தின் வலி பழியாய் திரும்பியது அவன் மேல். கண்ணீரை கோவமாய் துடைத்து எறிந்த மௌனி தனக்கு தெரிந்த ரிப்போர்ட் ஒருவனுக்கு அழைத்து ஏதோ பேசினாள்.
" இங்க பாரு நான் கொடுக்குறது எல்லாம் பிரண்ட் பேஜ்ல வரணும். நான் சொன்ன மாதிரி செய் " கண்கள் பனிக்க சொல்லியவள் முகம் ஒருவித சந்தோஷத்தில் மின்னியது.
மௌனியால் வரப் போகும் ஆபத்தை உணராமல் வீட்டிற்கு வந்தவனை கேள்வியாய் ஆராய்ச்சி செய்தாள் அஞ்சலி.
" எங்கே முக்கியமான வேலைனு போனீங்க? அதுக்குள்ளே வந்துட்டிங்க? "
" போன வேலை முக்கியமானது இல்ல. அதான் " இறுக்கமான அவன் பதிலும் இறுகிய முகமும் சரியாய் படவில்லை அஞ்சலிக்கு.
அவன் முகத்தையும், நெற்றி சுருங்கிருக்கும் விதத்திலே புரிந்துவிட்டது ஏதோ சரியில்லை என்று. செய்யும் வேலையை அப்படியே போட்டு விட்டு வேந்தன் முன் வந்தவள்
"என்னாச்சு, தலை வலிக்குதா? நான் டீ எதும் போட்டு வரவா? " பரிவாய் கேட்பவளை இடுப்பை பற்றி தன் மடியில் அமர வைத்த வேந்தன் அவள் நெஞ்சிலே முகத்தை புதைத்துக் கொண்டான்.
அவன் செய்கையில் குழம்பிய அஞ்சலி " எதும் பிரச்சனையா? " மெல்லிய குரலில் அவன் தலைக்கோதி கேட்டிட சொல்ல முடியாமல் தவித்தவன்
"கொஞ்ச நேரம் என்னை இப்படியே விடு அஞ்சலி " கெஞ்சளில் மேலும் கேள்விகளை அடுக்கவில்லை அஞ்சலி.
ஏதோ பிரச்சனையில் இருக்கிறான் என்பது மட்டும் புரிந்தாலும் வாய் திறந்து என்னவென கேட்க பெண் மனம் முன்வரவில்லை. ஒருவேளை வேந்தன் நடந்ததை சொல்லிருந்தால் பின்வரும் பிரச்சனை அத்தனை பெரிதாய் வெடித்திருக்காதோ.
கொஞ்ச நேரம் அவன் போக்கில் விட்டவள் " போதும் போய் ரெப்பிரேஷ் ஆகிட்டு வாங்க. நான் டின்னெர் ரெடி பண்ணிட்டேன். சாப்பிடலாம் " எழுந்தவளை மீண்டும் இழுத்து அவள் வயிற்றில் முகம் புதைத்துக் கொள்ள நொந்துப் போய் பார்த்தாள் பாவை.
" என்ன??"
"ம்ச் மனுஷன கொஞ்சம் நிம்மதியா இருக்க விடேன்டி " ஆழ புதைய, தடுமாறியவளின் தொண்டைக் குழி ஏறி இறங்கியது பெண்ணிற்கு.
"போதும். கொஞ்சம் விடுறிங்களா. எ... எனக்கு கூசுதுங்க " நெளிந்திட சற்று முன்பிருந்த கடுப்பு மறைந்து குறும்பாய் அவளை இன்னும் கூச செய்தான் வேந்தன்.
" ஐயோ என்ன சின்ன பிள்ளை மாதிரி. விடுங்க... ஆ.. ஐயோ... கூசுது.. ஹாஹா " சத்தமாய் சிரித்தவளை இருக்கையில் தள்ளி இன்னும் சிரிக்க வைத்தவன் அவள் சிரமப்படவே இதழில் புன்னகை தவழ விலகினான்.
" இதுக்கு தான் இவ்ளோ ட்ராமா பண்ணிங்களா? தெரிஞ்சிருந்தா பக்கத்துல கூட வந்திருக்க மாட்டேன். போய் முதல்ல ரெப்பிரேஷ் ஆகிட்டு வாங்க. எனக்கு பசிக்குது " இப்போதெல்லாம் பொண்டாட்டி உரிமையில் அவள் போடும் கட்டளைகள் அடிமையாய் ஏற்க துவங்கிவிட்டான் ஆடவன்.
இப்போதும் அவள் சொன்னதை மறுக்காமல் அறைக்கு ஏறியவன் அலறிய போனை எடுத்தான். மீண்டும் மௌனியே தான். பெயரை பார்த்ததும் பற்களை நறநறவென கடித்தவன் அட்டென்ட் செய்திட
"என்னை ஈஸியா தூக்கி போட்டுட்டல்ல அமுதா. இந்த மௌனி ஒன்னும் குப்பை இல்லை. நீ எனக்கு கொடுத்த வலிக்கு நான் திரும்பி கொடுக்க தான் போறேன் " அடிக்குரலில் அவள் பேசி முடிக்கும் வரை காத்திருந்தவன்
"பேசி முடிச்சிட்டினா போன் வைக்கிறியா? எது பண்ணுறதா இருந்தாலும் யோசிச்சு பண்ணு மௌனி "
" பல முறை யோசிச்சிட்டேன். உன் முகத்திரையை கிழிக்கிறேன். நீ யாருன்னு அந்த பட்டிக்காட்டுக்கும் காட்டுவேன் "
" உன்னால முடியுறத பண்ணிக்கோ " அழைப்பை துண்டித்த கையோடு போனை தூர எறிந்த வேந்தன் எந்த வருத்தமும், குற்றணர்வுமின்றி குளியலறைக்குள் நுழைய மௌனிக்கு தான் பற்றி எரிந்தது அவன் பேச்சில்.
அஞ்சலியால் குளிர்ந்த மனம் மீண்டும் நெருப்பு கங்குகளாய் எரிய, நீரின் கீழ் நின்றவன் அதன் குளுமையில் தணிக்க முயன்றான். ஆனாலும் அஞ்சலி அளவிற்கு அவைகள் இதம் தரவில்லை. அந்த தேன் கருப்பட்டி தரும் சுகத்தை இந்த நீர்களும் கொடுக்கவில்லை.
பேருக்கு ஒரு குளியல் போட்டு டீப் v நெக் ட்ஷர்ட், ட்ராக் பேண்ட்டும் அணிந்தவன் கீழே இறங்கிட உணவுகளை மேஜையில் அடுக்கி கணவனை இன்முகமாய் வரவேற்றாள் அப்பாவி பெண்.
"இவ்ளோ நேரமா? வாங்க சாப்பிடலாம் " உணவை அவனுக்கு பரிமாறி தனக்கு வைத்துக்கொண்டவள் வேந்தன் உணவில் கையை வைத்த பின்பு தான் அவளும் உண்ணத் துவங்கினாள்.
"இவ்ளோ பசி இருக்குறவ எனக்கு வெயிட் பண்ணாம சாப்பிட வேண்டியது தானே "
" அது எப்படி நீங்க இல்லாம "
"நான் இல்லாம இருந்தால் என்ன? உனக்கு பேசுச்சா எனக்காக வெயிட் பண்ணாம சாப்பிடு அஞ்சலி " அவளின் கன்னம் தொட வந்தவன் கையை தட்டி விட்டவள்
" இவ்ளோ சொல்லுற நீங்க நேரமா வந்துருவேன்னு ஏன் சொல்ல மாட்டேங்குறீங்க? நீங்க சரியான நேரத்துக்கு வந்தா நான் ஏன் வெயிட் பண்ண போறேன். இப்படியும் யோசிக்குலாம் " அழுத்தமாய் சொல்ல வியப்பாய் அவளை பார்த்தான் வேந்தன்.
நன்றாக தான் பேசுகிறாள். அந்த பழைய தயக்கம், பதட்டம் தான் எங்கே போனது என்று தெரியவில்லை. ஆனால் இந்த உரிமை பேச்சை விரும்பிய வேந்தன் " இப்போல்லாம் மேடம் ரொம்ப தான் மிரட்டுரிங்க " அப்பாவியான அவன் குரலில் சிரித்தவள்
" அதுக்கு காரணம் நீங்க தான் " உணவோடு சிரிப்பையும் அதக்கிக் கொண்டாள் அஞ்சலி.
அவன் கண்கள் வழியே தன் அழகை உணர்ந்தவளுக்கு இவன் முன் இப்போதெல்லாம் தாழ்வுணர்வு தோன்றுவதே இல்லை . தன் மதிப்பு என்ன என்பதை புரிய வைத்தவன். தன் பெண்மையை முழுதாய் பறித்து சிம்மாசனம் போட்டவன் இவன். கணவன் என்ற உரிமை கொடுக்காமலா அதையெல்லாம் அள்ளிக் கொடுத்தாள்.
மறைமுக சீண்டளில் இரவு உணவை முடித்து அறைக்கு திரும்பிய அஞ்சலி "இப்போ நாம வீட்டுக்கே போகிடலாம். இனி எனக்கு அங்க என்ன நடந்தாலும் நான் முன்ன மாதிரி வருத்தப்பட மாட்டேன். ப்ரோமிஸ் "
" நோ அஞ்சலி. நீ என்ன சொன்னாலும் அங்க நாம போறதா இல்லை "
"ஆனா நீங்க இல்லாம உங்க அம்மா வருத்தப்படுவாங்களே "
" அதை யோசிச்சிருந்தா அவங்க உன்னை காயப்படுத்திருக்க மாட்டாங்க அஞ்சலி. இந்த பேச்சை மட்டும் விட்டுடு. இனி நமக்கு இது தான் நம்ப வீடு " உறுதியாய் சொல்ல திகைத்தாள் அஞ்சலி.
" ஆனா கொஞ்ச நாளைக்கு தானே சொன்னிங்க "
" ஆமா. ஆனா இனி முழுசா நாம இங்கையே இருக்குலாம்னு முடிவு பண்ணிட்டேன். எல்லாம் சரியாக தான் இருக்கு அஞ்சலி. நீ தேவை இல்லாம கண்டதையும் யோசிச்சிட்டு இருக்காத. இங்க வா " பெரிதாய் கையை விரித்து அழைத்தவனை விழி அகல பார்த்தவளும் தவழ்ந்து அவன் மார்பை அடைய, அவளை மெத்தையில் புரட்டி மேலே படர்ந்த வேந்தன்
" எனக்கு குழந்தை வேணும் அஞ்சலி. உன்னைப் போலவே. என் அஞ்சலி போலவே. இந்த வயித்துல என் குழந்தை வளரனும் " விரல்கள் அவள் வெற்று வயிறை வருட தொண்டை வறண்டது போல் உணர்ந்த அஞ்சலி வார்த்தைகள் வராமல் தடுமாறினாள்.
" எனக்கும் ஆசை தான். ஆனா இப்போ " ஏதோ சொல்ல வந்தவளின் இதழ் மேல் விரல் வைத்து மூடிய வேந்தன்
" இனி பேச்சுக்கு இடமில்ல. இது குழந்தை மேல இருக்குற ஆசைக்கு மட்டுமல்ல. உனக்கும் எனக்குமான உறவை இன்னும் ஆழமாக்க அஞ்சலி. ஐ வாண்ட் அ பேபி " காற்று ததும்பும் குரலில் காதில் கிசுகிசுத்த வேந்தன் தன் வேட்கையை அவள் மீது துவங்கினான்.
Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 14
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் 14
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.