Member
- Joined
- Aug 11, 2025
- Messages
- 32
- Thread Author
- #1
என் கனவோடு கைவீசும் காதல் இவள் யாரோ 💜
எபி 13
மித்ரனோ " எனக்கும் அது தான் தெரியல ஆனா அவ கிட்ட நீயே கேளு உனக்காவது அவ உண்மைய சொல்லட்டும் " என்றான்
சித்தார்த் அவன் கண்ணை துடைத்து கொண்டு " இனிமே அவ என்னோட பொறுப்பு... என் அஞ்சு மித்து அவ... நீ கவலை படாத என் உயிர் இருக்க வர அவ கண்ணுல இருந்து ஒரு சொட்டு தண்ணி வராம என் நெஞ்சில வச்சு பார்த்துக்குறேன் " என்றான்
மித்ரனோ " நானும் இத நீ சொல்லுவனு நினைச்சேன், சீக்கிரமே அவ கிட்ட உன் காதல சொல்லிடு " என்றான்
சித்தார்த்தோ ' சரி நான் கிளம்புறேன் மித்து எனக்கு உண்மை தெரியும்னு அவளுக்கு தெரிய வேண்டாம் தெரிஞ்ச நான் எதோ அவ மேல பரிதாபத்துல பேசுறேன்னு நினைப்பா ' என்றான்
மித்ரனும் " சரி, நான் சொல்லல நீ பார்த்து போ " என்றான்
---
மித்ரனிடம் காவ்யாவின் உண்மைகளை அறிந்து கொண்ட சித்தார்த் கனத்த மனதோடு நேராக வீட்டிற்கு தான் சென்றான். வீட்டிற்குள் நுழைந்த அவன் கண்டதோ உடை கூட மாற்றாமல்.... அப்படியே காலை கட்டிய புடவையோடு சோபாவில் உறங்கும் அவன் பார்பி டால் யை தான்... முகத்தில் தூக்க சோர்வு இருந்தாலும்... அவளின் முகத்தில் ஒரு வித கலக்கத்தை அவனால் காண முடிந்தது.
மெதுவாக அவள் உறக்கம் கலைய வண்ணம் அவளை தூக்கி கொள்ள.... பாதி உறக்கத்தில் இருந்த அவளோ சித்தார்த் மார்பில் முகம் புதைத்து கொள்ள... அவன் முகத்தில் சிறிய புன்னகை அரும்பியது...
பின் அவளை தூக்கி சென்று மெத்தையில் படுக்க வைத்து... அவளை அணைத்து கொண்டு அவனும் படுத்து விட்டான். காலை முதல் வேலை செய்த களைப்பு... வண்டி ஒட்டி சென்றது என அனைத்தும் சேர்த்து அவன் பார்பி டால் அணைப்பில் நிம்மதியாக உறங்கியும் போனான்.
---
காலை கண் விழித்த காவ்யா கண்டதோ வழக்கம் போல தன்னை கட்டி கொண்டு உறங்கும் சித்தார்த்தை தான்... அவளோ அவனிடம் இருந்து விலக பார்க்க அதில் உறக்கம் கலைந்து எழுந்த சித்தார்த் " என்னாச்சு கவி தூங்க வேண்டிய தான ஏன் எழுந்துக்குற " என்றான்
காவ்யாவோ ' கொஞ்சம் கைய எடு சித்தார்த் ' என கூற
அவனோ ஏன் பிடிக்கலையா? என்றான்...
அவளோ ' இல்ல ஆனா இது சரியா வரும்னு தோணல நான் இனிமே வெளிய படுத்துக்குறேன்.... இன்னோரு முறை அன்பை காட்டி ஏமாந்து போக முடியாது ' என்றாள்
அவனோ இப்ப உன் பிரச்சனை என்ன நான் உன் கிட்ட உரிமை எடுத்துக்குறது பிடிக்கலையா?... இல்ல என்னயவே பிடிக்கலையா?... என வினவ
காவ்யாவோ இல்ல உன்ன பிடிக்காம எல்லாம் இல்ல.... ஆனா இப்படி தினமும் உன் அன்புக்கு பழகிட்டு.... நாளைக்கி இது எல்லாம் பொய்னு சொன்ன என்னால தாங்க முடியாது சித்தார்த்... அதனால நாம பிரிஞ்சிடலாம்... என்றாள்
சித்தார்த்தோ அவள் கண்களை பார்த்து " ஒன்னு என் மேல உனக்கு நம்பிக்கை இல்லனா தரலாமா நீ வெளியே போய்ட்டு... நான் எதுவும் கேக்கல... ஆனா இப்படி பின்னாடி என்ன நடக்கும்னு... நினைச்சி உன்ன நீயே கஷ்ட படுத்திக்காத.... " என்றான்
அவளோ " நாம பிரிஞ்சி தான ஆகணும் சித்தார்த்... இதுல தேவை இல்லாத ஆசை எல்லாம் எதுக்கு.... " என்றாள்
அவனோ ' அத பிரியும் போது பாத்துக்கலாம் கவி... இந்த நிமிஷம் தான் நிஜம் அதுல நீ சந்தோசமா இருந்தியான்னு மட்டும் யோசிடி... இப்படி எல்லாத்தையும் போட்டு குழப்பிகாத புரிஞ்சிதா... ' என்றான்
அவளோ குழப்பமான நிலையில் அவனை காண சித்தார்த்தோ " முதல தூங்கு எப்பிடியும் நேத்து நிறைய வேலை செஞ்சி இருப்ப... அதனால ரெஸ்ட் எடு... மதியானமா நாம வேலை எல்லாம் பார்த்துக்கலாம் " என்றான்
அவளோ ' இல்ல எனக்கு எண்ணமோ இது... உங்க வீட்ல என்ன சொல்லுவீங்க.... இதனால உனக்கு பிரச்சனை வராத... ' என கேக்க
அவனும் அவளை இன்னும் அணைத்த கொண்டு ' இந்த குட்டி முளைக்கு ரொம்ப வேலை கொடுக்காம தூங்கு கவி... ஏற்கனவே ரொம்ப சோர்வா இருக்கு ' என்றான்
அவளோ அவனின் இறுகிய அணைப்பில் கவலை எல்லாம் கொஞ்ச நேரம் மறந்து நிம்மதியாக உறங்கி போனாள். பெண் அவள் உறங்கியத்தை உறுதி செய்து கொண்ட சித்தார்த் மெல்ல அவளை விட்டு பிரிந்து வெளியே சென்றான்.
அவன் முகத்தில் இருந்த அமைதியால் அவன் உள்ளுக்குள் இருந்த கலக்கத்தை மறைக்க முடியவில்லை. காவ்யா சொன்ன “நாம பிரியணும்” என்ற வார்த்தை அவனது இதயத்தில் வலியை உண்டாகியது.
வீட்டின் வெளிப்புறம் வந்த அவனுக்கு, நேற்று மித்ரன் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. “சித்தார்த், நாளைக்கே நான் இல்லனா என் காவ்யா வா நீ தான் பார்த்துக்கணும்... அவளுக்கு இது தான் வேணும்னு கேக்க தெரியாது ஆனா அவளுக்கு ஒன்னு வேணும்னா கடைசி வர போராடுவா.... நீ தான் அவள நல்லா பார்த்துக்கணும... ”
அந்த நினைவுகளோடு சித்தார்த் கண்ணை மூடி ஆழமாய் மூச்சை இழுத்து விட்டான். “ ஹேய்! அஞ்சு பொண்ணே இனிமே உனக்கு எல்லாமுமா இந்த சித்தார்த் இருப்பேன். அப்படி ஒரு நம்பிக்கை உனக்கு வர்ற வரைக்கும்… நான் காத்திருப்பேன். ” என்று மனதில் உறுதி கொண்டான்.
---
இவர்கள் இப்படி இருக்க மறுபுறம் சமர் வீட்டில்.....
" என்ன விசியம் நிதி, சொல்லுங்க " என்றான் சமர்..
நிதியோ சிறிது யோசனைக்கு பின் ' ஐ திங்க் ஐ அம் இன் லவ் வித் யூ ' என்றாள்
அந்த வார்த்தைகளில் அதிர்ந்த சமரோ கோபமாக ' என்ன பேசுற நிதி... ஹான் நான் யாருனு தெரியுமா? இல்ல எனக்கு என்ன பிடிக்கும்... பிடிக்காதுனாவது... தெரியுமா? எதோ பிரண்ட் ன்னு கொஞ்சம் சிரிச்சு பேசுனா இப்படி லவ் சொல்ற... ' என கேக்க
நிதியோ ' இப்ப என்ன தெரியணும் சமர்... உனக்கு அம்மா அப்பா இல்ல... இப்ப தான் ஒரு பொண்ணு உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியாதுனு சொல்லிட்டு போய்ட்டா... இப்ப சித்தார்த் கூட ஹோட்டல் ல பார்ட்னரா வேலை பாக்குற... பொய் சொன்ன பிடிக்காது...
யாரு கூடவும் கம்பர் பண்ண பிடிக்காது... பிரவுனி.... பிரவுன் கலர்... குலாப் ஜாமுன்... சாக்கோ பார்... இப்படி எல்லாமே உனக்கு பிடிக்கும்... சரியா ' என கேக்க
சமரோ பெண் அவளின் பதிலில் வாய் அடைத்து தான் போனான். பின்ன அவனை பற்றி இவ்வளவு தெளிவாக அவன் பெற்றோர் இருந்தால் கூட புரிந்து கொண்டு இருக்க மாட்டார்கள். பின்
ஒரு முடிவோடு அவளை பார்த்து " இப்படி எல்லாம் தெரியும்னு உன்ன லவ் பண்ண முடியாது " என கூற
அவளோ ' பச்! நான் உன்ன இப்பவே லவ் பண்ணனும்னு சொல்லல ஆனா நோன்னு சொல்லாம நல்லா யோசிச்சு சொல்லு... எனக்கும் உன்ன மாதிரி தான் அம்மா இல்ல அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கட்டு என்ன விட்டு தனியா போய்ட்டாரு...
அதுக்கு அப்பறம் தான் மித்ரன், காவ்யா கூட பிரிஎண்ட்ஸ் ஆனேன், அண்ட் இப்ப நான் அஞ்சலி குரூப்ஸ் ல பி. ஏ. வா வேலை பாக்குறேன்..., அவ்ளோதான் என்ன பத்தி சொல்ல வேற ஒன்னும் இல்ல ' என முடிக்க
சமரோ ஒரு நீண்ட பெரு மூச்சை விட்டு ' இங்க பாரு நிதி உனக்கு இப்ப உனக்கு வந்து இருக்குறது... ஒரு அற்றக்ஷன் அதாவது என் மேல ஒரு வகை ஈர்ப்பு... இது காதல் இல்ல மா... ஒரு வேல நாளைக்கி என்ன விட நல்ல பையன பாத்தா நீ நான் வேணாம்னு கூட சொல்லலாம் ' என கூற
நிதியோ ' இல்ல எனக்கு நீ மட்டும் போதும் வேற எதுவும் வேண்டாம் சமர் ' என்றாள்
சமரோ ' இன்னக்கி நான் மட்டும் போதும்னு சொல்லுவா... ஆனா பின்னாடி எதிர் பார்ப்புகள் அதிகம் ஆகும் போது உனக்கு நான் வேண்டாம்னு தோணும் சோ பெட்டர் நீ நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ ' என கூற
அவளோ ' நான் குண்டா... இப்படி கருப்பா இருக்கனு வேணாம்னு சொல்றியா சமர்... ' என்றாள்
ஆம், நிதி பார்க்க கொஞ்சம் பருமனாக பிரவுனி நிறத்தில் இருப்பாள்...
சமரோ அவசரமாக ' அப்படி எல்லாம் இல்ல நிதி... நான் அப்படி எல்லாம் நினைக்கல.... ஒருத்தரோட உருவத்தையோ... நிறத்தையோ... நான் கேலி பண்ண மாட்டேன்... ஆனா நீ என்ன லவ் பண்றது மட்டும் வேணாம் மா...
அதுக்கு பதிலா நாம நல்ல பிரிஎண்ட்ஸ் ஹா இருக்கலாம்... சொன்ன புரிஞ்சிக்கோ... என்னால உனக்கு எந்த வித சந்தோஷமும் கொடுக்க முடியாது....' என்றான்
அவன் பதிலில் குழம்பி போன நிதியோ ' என்ன சொல்ற சமர்... எனக்கு புரியல ' என்றாள்
அவனோ ' ம்ம். என்னால ஒரு பொண்ணுக்கு திருப்பதியா தர முடியாது... என்னா நான் ஒரு உணர்ச்சி இல்லாத ஜடம்... இதுக்கு மேல எதுவும் கேக்காத ' என கூற
அவளோ ' ஏன்டா கேக்க கூடாது... ஹான் எனக்கு இது முன்னாடியே தெரியும்... உனக்கு பார்த்த பொண்ணு தான இப்படி சொன்ன... ஆனா இது எத பத்தியும் எனக்கு கவலை இல்ல... ' என கூற
சமரோ அவளை வித்தியாசமாக பார்த்து " என்ன தாண்டி உனக்கு வேணும் எதுக்கு இப்படி என்ன போட்டு சாவடிக்குற... " என்றான்
அவளோ ' நாளைக்கி நமக்கு பசங்க யாரும் பொறக்கலானாலும் பரவா இல்ல... ஆனா நீ தான் எனக்கு வேணும்... இதுக்கு மேல உன் முடிவு... நான் உன்ன கட்டாய படுத்தல... ' என முடிக்க
சமரோ ' பச்! என்ன டி சொன்னதையே சொல்ற... நாளைக்கி நீயும் இதையே ஒரு காரணமா சொல்லி விட்டுட்டு போக மாட்டேன்னு என்ன நிச்சயம்... ஹான் சொல்லு டி...
எதோ பெரிய *** இன்னக்கி நான் தான் வேணும்னு சொல்லுவா... அதுவே நாளைக்கி வேற எதுவும் சொல்ல மாட்டியா... சொல்லு டி... ' என கேக்க
நிதி சொன்ன பதிலில் ஒரு நிமிடம் உறைந்து தான் போனான் சமர்.... அப்படி என்ன சொல்லி இருப்பாள்?...
காதல் கூடுமா 💞...
எபி 13
மித்ரனோ " எனக்கும் அது தான் தெரியல ஆனா அவ கிட்ட நீயே கேளு உனக்காவது அவ உண்மைய சொல்லட்டும் " என்றான்
சித்தார்த் அவன் கண்ணை துடைத்து கொண்டு " இனிமே அவ என்னோட பொறுப்பு... என் அஞ்சு மித்து அவ... நீ கவலை படாத என் உயிர் இருக்க வர அவ கண்ணுல இருந்து ஒரு சொட்டு தண்ணி வராம என் நெஞ்சில வச்சு பார்த்துக்குறேன் " என்றான்
மித்ரனோ " நானும் இத நீ சொல்லுவனு நினைச்சேன், சீக்கிரமே அவ கிட்ட உன் காதல சொல்லிடு " என்றான்
சித்தார்த்தோ ' சரி நான் கிளம்புறேன் மித்து எனக்கு உண்மை தெரியும்னு அவளுக்கு தெரிய வேண்டாம் தெரிஞ்ச நான் எதோ அவ மேல பரிதாபத்துல பேசுறேன்னு நினைப்பா ' என்றான்
மித்ரனும் " சரி, நான் சொல்லல நீ பார்த்து போ " என்றான்
---
மித்ரனிடம் காவ்யாவின் உண்மைகளை அறிந்து கொண்ட சித்தார்த் கனத்த மனதோடு நேராக வீட்டிற்கு தான் சென்றான். வீட்டிற்குள் நுழைந்த அவன் கண்டதோ உடை கூட மாற்றாமல்.... அப்படியே காலை கட்டிய புடவையோடு சோபாவில் உறங்கும் அவன் பார்பி டால் யை தான்... முகத்தில் தூக்க சோர்வு இருந்தாலும்... அவளின் முகத்தில் ஒரு வித கலக்கத்தை அவனால் காண முடிந்தது.
மெதுவாக அவள் உறக்கம் கலைய வண்ணம் அவளை தூக்கி கொள்ள.... பாதி உறக்கத்தில் இருந்த அவளோ சித்தார்த் மார்பில் முகம் புதைத்து கொள்ள... அவன் முகத்தில் சிறிய புன்னகை அரும்பியது...
பின் அவளை தூக்கி சென்று மெத்தையில் படுக்க வைத்து... அவளை அணைத்து கொண்டு அவனும் படுத்து விட்டான். காலை முதல் வேலை செய்த களைப்பு... வண்டி ஒட்டி சென்றது என அனைத்தும் சேர்த்து அவன் பார்பி டால் அணைப்பில் நிம்மதியாக உறங்கியும் போனான்.
---
காலை கண் விழித்த காவ்யா கண்டதோ வழக்கம் போல தன்னை கட்டி கொண்டு உறங்கும் சித்தார்த்தை தான்... அவளோ அவனிடம் இருந்து விலக பார்க்க அதில் உறக்கம் கலைந்து எழுந்த சித்தார்த் " என்னாச்சு கவி தூங்க வேண்டிய தான ஏன் எழுந்துக்குற " என்றான்
காவ்யாவோ ' கொஞ்சம் கைய எடு சித்தார்த் ' என கூற
அவனோ ஏன் பிடிக்கலையா? என்றான்...
அவளோ ' இல்ல ஆனா இது சரியா வரும்னு தோணல நான் இனிமே வெளிய படுத்துக்குறேன்.... இன்னோரு முறை அன்பை காட்டி ஏமாந்து போக முடியாது ' என்றாள்
அவனோ இப்ப உன் பிரச்சனை என்ன நான் உன் கிட்ட உரிமை எடுத்துக்குறது பிடிக்கலையா?... இல்ல என்னயவே பிடிக்கலையா?... என வினவ
காவ்யாவோ இல்ல உன்ன பிடிக்காம எல்லாம் இல்ல.... ஆனா இப்படி தினமும் உன் அன்புக்கு பழகிட்டு.... நாளைக்கி இது எல்லாம் பொய்னு சொன்ன என்னால தாங்க முடியாது சித்தார்த்... அதனால நாம பிரிஞ்சிடலாம்... என்றாள்
சித்தார்த்தோ அவள் கண்களை பார்த்து " ஒன்னு என் மேல உனக்கு நம்பிக்கை இல்லனா தரலாமா நீ வெளியே போய்ட்டு... நான் எதுவும் கேக்கல... ஆனா இப்படி பின்னாடி என்ன நடக்கும்னு... நினைச்சி உன்ன நீயே கஷ்ட படுத்திக்காத.... " என்றான்
அவளோ " நாம பிரிஞ்சி தான ஆகணும் சித்தார்த்... இதுல தேவை இல்லாத ஆசை எல்லாம் எதுக்கு.... " என்றாள்
அவனோ ' அத பிரியும் போது பாத்துக்கலாம் கவி... இந்த நிமிஷம் தான் நிஜம் அதுல நீ சந்தோசமா இருந்தியான்னு மட்டும் யோசிடி... இப்படி எல்லாத்தையும் போட்டு குழப்பிகாத புரிஞ்சிதா... ' என்றான்
அவளோ குழப்பமான நிலையில் அவனை காண சித்தார்த்தோ " முதல தூங்கு எப்பிடியும் நேத்து நிறைய வேலை செஞ்சி இருப்ப... அதனால ரெஸ்ட் எடு... மதியானமா நாம வேலை எல்லாம் பார்த்துக்கலாம் " என்றான்
அவளோ ' இல்ல எனக்கு எண்ணமோ இது... உங்க வீட்ல என்ன சொல்லுவீங்க.... இதனால உனக்கு பிரச்சனை வராத... ' என கேக்க
அவனும் அவளை இன்னும் அணைத்த கொண்டு ' இந்த குட்டி முளைக்கு ரொம்ப வேலை கொடுக்காம தூங்கு கவி... ஏற்கனவே ரொம்ப சோர்வா இருக்கு ' என்றான்
அவளோ அவனின் இறுகிய அணைப்பில் கவலை எல்லாம் கொஞ்ச நேரம் மறந்து நிம்மதியாக உறங்கி போனாள். பெண் அவள் உறங்கியத்தை உறுதி செய்து கொண்ட சித்தார்த் மெல்ல அவளை விட்டு பிரிந்து வெளியே சென்றான்.
அவன் முகத்தில் இருந்த அமைதியால் அவன் உள்ளுக்குள் இருந்த கலக்கத்தை மறைக்க முடியவில்லை. காவ்யா சொன்ன “நாம பிரியணும்” என்ற வார்த்தை அவனது இதயத்தில் வலியை உண்டாகியது.
வீட்டின் வெளிப்புறம் வந்த அவனுக்கு, நேற்று மித்ரன் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. “சித்தார்த், நாளைக்கே நான் இல்லனா என் காவ்யா வா நீ தான் பார்த்துக்கணும்... அவளுக்கு இது தான் வேணும்னு கேக்க தெரியாது ஆனா அவளுக்கு ஒன்னு வேணும்னா கடைசி வர போராடுவா.... நீ தான் அவள நல்லா பார்த்துக்கணும... ”
அந்த நினைவுகளோடு சித்தார்த் கண்ணை மூடி ஆழமாய் மூச்சை இழுத்து விட்டான். “ ஹேய்! அஞ்சு பொண்ணே இனிமே உனக்கு எல்லாமுமா இந்த சித்தார்த் இருப்பேன். அப்படி ஒரு நம்பிக்கை உனக்கு வர்ற வரைக்கும்… நான் காத்திருப்பேன். ” என்று மனதில் உறுதி கொண்டான்.
---
இவர்கள் இப்படி இருக்க மறுபுறம் சமர் வீட்டில்.....
" என்ன விசியம் நிதி, சொல்லுங்க " என்றான் சமர்..
நிதியோ சிறிது யோசனைக்கு பின் ' ஐ திங்க் ஐ அம் இன் லவ் வித் யூ ' என்றாள்
அந்த வார்த்தைகளில் அதிர்ந்த சமரோ கோபமாக ' என்ன பேசுற நிதி... ஹான் நான் யாருனு தெரியுமா? இல்ல எனக்கு என்ன பிடிக்கும்... பிடிக்காதுனாவது... தெரியுமா? எதோ பிரண்ட் ன்னு கொஞ்சம் சிரிச்சு பேசுனா இப்படி லவ் சொல்ற... ' என கேக்க
நிதியோ ' இப்ப என்ன தெரியணும் சமர்... உனக்கு அம்மா அப்பா இல்ல... இப்ப தான் ஒரு பொண்ணு உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியாதுனு சொல்லிட்டு போய்ட்டா... இப்ப சித்தார்த் கூட ஹோட்டல் ல பார்ட்னரா வேலை பாக்குற... பொய் சொன்ன பிடிக்காது...
யாரு கூடவும் கம்பர் பண்ண பிடிக்காது... பிரவுனி.... பிரவுன் கலர்... குலாப் ஜாமுன்... சாக்கோ பார்... இப்படி எல்லாமே உனக்கு பிடிக்கும்... சரியா ' என கேக்க
சமரோ பெண் அவளின் பதிலில் வாய் அடைத்து தான் போனான். பின்ன அவனை பற்றி இவ்வளவு தெளிவாக அவன் பெற்றோர் இருந்தால் கூட புரிந்து கொண்டு இருக்க மாட்டார்கள். பின்
ஒரு முடிவோடு அவளை பார்த்து " இப்படி எல்லாம் தெரியும்னு உன்ன லவ் பண்ண முடியாது " என கூற
அவளோ ' பச்! நான் உன்ன இப்பவே லவ் பண்ணனும்னு சொல்லல ஆனா நோன்னு சொல்லாம நல்லா யோசிச்சு சொல்லு... எனக்கும் உன்ன மாதிரி தான் அம்மா இல்ல அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கட்டு என்ன விட்டு தனியா போய்ட்டாரு...
அதுக்கு அப்பறம் தான் மித்ரன், காவ்யா கூட பிரிஎண்ட்ஸ் ஆனேன், அண்ட் இப்ப நான் அஞ்சலி குரூப்ஸ் ல பி. ஏ. வா வேலை பாக்குறேன்..., அவ்ளோதான் என்ன பத்தி சொல்ல வேற ஒன்னும் இல்ல ' என முடிக்க
சமரோ ஒரு நீண்ட பெரு மூச்சை விட்டு ' இங்க பாரு நிதி உனக்கு இப்ப உனக்கு வந்து இருக்குறது... ஒரு அற்றக்ஷன் அதாவது என் மேல ஒரு வகை ஈர்ப்பு... இது காதல் இல்ல மா... ஒரு வேல நாளைக்கி என்ன விட நல்ல பையன பாத்தா நீ நான் வேணாம்னு கூட சொல்லலாம் ' என கூற
நிதியோ ' இல்ல எனக்கு நீ மட்டும் போதும் வேற எதுவும் வேண்டாம் சமர் ' என்றாள்
சமரோ ' இன்னக்கி நான் மட்டும் போதும்னு சொல்லுவா... ஆனா பின்னாடி எதிர் பார்ப்புகள் அதிகம் ஆகும் போது உனக்கு நான் வேண்டாம்னு தோணும் சோ பெட்டர் நீ நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ ' என கூற
அவளோ ' நான் குண்டா... இப்படி கருப்பா இருக்கனு வேணாம்னு சொல்றியா சமர்... ' என்றாள்
ஆம், நிதி பார்க்க கொஞ்சம் பருமனாக பிரவுனி நிறத்தில் இருப்பாள்...
சமரோ அவசரமாக ' அப்படி எல்லாம் இல்ல நிதி... நான் அப்படி எல்லாம் நினைக்கல.... ஒருத்தரோட உருவத்தையோ... நிறத்தையோ... நான் கேலி பண்ண மாட்டேன்... ஆனா நீ என்ன லவ் பண்றது மட்டும் வேணாம் மா...
அதுக்கு பதிலா நாம நல்ல பிரிஎண்ட்ஸ் ஹா இருக்கலாம்... சொன்ன புரிஞ்சிக்கோ... என்னால உனக்கு எந்த வித சந்தோஷமும் கொடுக்க முடியாது....' என்றான்
அவன் பதிலில் குழம்பி போன நிதியோ ' என்ன சொல்ற சமர்... எனக்கு புரியல ' என்றாள்
அவனோ ' ம்ம். என்னால ஒரு பொண்ணுக்கு திருப்பதியா தர முடியாது... என்னா நான் ஒரு உணர்ச்சி இல்லாத ஜடம்... இதுக்கு மேல எதுவும் கேக்காத ' என கூற
அவளோ ' ஏன்டா கேக்க கூடாது... ஹான் எனக்கு இது முன்னாடியே தெரியும்... உனக்கு பார்த்த பொண்ணு தான இப்படி சொன்ன... ஆனா இது எத பத்தியும் எனக்கு கவலை இல்ல... ' என கூற
சமரோ அவளை வித்தியாசமாக பார்த்து " என்ன தாண்டி உனக்கு வேணும் எதுக்கு இப்படி என்ன போட்டு சாவடிக்குற... " என்றான்
அவளோ ' நாளைக்கி நமக்கு பசங்க யாரும் பொறக்கலானாலும் பரவா இல்ல... ஆனா நீ தான் எனக்கு வேணும்... இதுக்கு மேல உன் முடிவு... நான் உன்ன கட்டாய படுத்தல... ' என முடிக்க
சமரோ ' பச்! என்ன டி சொன்னதையே சொல்ற... நாளைக்கி நீயும் இதையே ஒரு காரணமா சொல்லி விட்டுட்டு போக மாட்டேன்னு என்ன நிச்சயம்... ஹான் சொல்லு டி...
எதோ பெரிய *** இன்னக்கி நான் தான் வேணும்னு சொல்லுவா... அதுவே நாளைக்கி வேற எதுவும் சொல்ல மாட்டியா... சொல்லு டி... ' என கேக்க
நிதி சொன்ன பதிலில் ஒரு நிமிடம் உறைந்து தான் போனான் சமர்.... அப்படி என்ன சொல்லி இருப்பாள்?...
காதல் கூடுமா 💞...
Author: velvizhiyaal
Article Title: கனவு 13
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கனவு 13
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.