- Thread Author
- #1
"சந்தானம், எங்களை எல்லாம் விட்டு போய்ட்டீயே!! என்று கத்திக் கொண்டே வந்தார்.... சந்தனாத்தின் அக்கா, ராஜலக்ஷ்மி....
அவருக்கு மாலை அணிவித்து, தன் தம்பியை ஒரு முறை பார்த்து விட்டு, அவரின் அருகே நின்றுக் கொண்டிருந்த, பாண்டியனையும் கட்டி அணைத்து அழ...
சரி அழதா விடு அத்தை.......
அவரும் தன் கண்ணீரைத் துடைத்து விட்டு,
சரி எப்ப எடுக்கறது,
அவ வரணும், அவ வந்தா தான்... எடுக்க முடியும்........
அவளா!! ஏன்டா... அவத் தான் பெரிய சீமாட்டி ஆச்சே...... வருவாளா!!
எல்லாம் வருவா, தகவல் குடுத்தாச்சு...... வந்துட்டே இருக்கா!!
ம்ம்ம்ம்..... சரி, சரி.... இதுக்கு எல்லாம் காசு,
எல்லாம் நேத்து நைட்டே அனுப்பி விட்டுட்டா!!! இப்போ வந்துட்டு இருக்கா!!!
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே!! அங்கே ஒரு கார் வந்து நிற்க..... அந்த திசையை நோக்கி அனைவரின் பார்வையும் திரும்ப.... எல்லாம் ஓடிச் சென்று அவளைக் கட்டியணைத்து அவ்ளோ??? கல்லுக்கு மறு உருவம் கொண்டதுப் போல், நின்றுக் கொண்டிருந்தாள்...... அவள் தான் நம் கதையின் நாயகி ஆழிச்செல்வி
அவளின் கண்களில் வருத்தமும் இல்லை கண்ணீரும் இல்லை......
அங்கு சுற்றி இருப்பவர்களோ!! அப்பன் சாவுக்கு, வந்ததே லேட்டு அழுகுதா பாரு......
அதானே!! அக்கா!!
என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்க அதையெல்லாம் காதில் வாங்கினாலும் அவள் என்னவோ தன்னை சுற்றி உள்ளவர்களை விளக்கி விட்டு அங்கு ஒரு ஓரமாய் போய் நின்று கொண்டாள்..... தன் தந்தையை கூட பார்க்கவில்லை......
அழுத்தமான பெண்ணின் கதை இது
"ஆசைகளோடும், கனவுகளுடன் தான் சுற்றித் திரிந்தால் அவள், ஏமாற்றோமோ?? வாழ்க்கையின் வலிகளோ?? எதுவோ?? கல்லாக மாறியவள், அவள் மாறவில்லை, அவள் அவளாகத் தான் இருக்கிறாள்.....
ஆனால், பார்ப்பவர்களுக்குத் தான் அவள் கல்லாகத் தெரிகிறாள்....
அவள், இழந்தது அத்தனை, ஆனால் அவள் தான் எதையும் பெறவே இல்லையே!!
கனவுகள் வெறும் கனவாகவே போய்விட, உணர்ச்சிகளற்ற ஜடமாக மாறிப்போனவளின் கதை இது....
தன் கண் முன்னே உயர் நிலையில் வாழ்ந்து தன் நிலை கண்டு தன்னை வேண்டாம் என்று சொன்னவர்களையும் தன் உழைப்பால் ஈர்த்து தன்னை நிலைப்படுத்தி கொண்ட அவள் அதற்காக பட்ட துயரங்களால் அவள் மனம் கல்லாய் போனதென்பதோ உண்மை தான்.
ஆனால் உள்ளத்தில் அவள் பட்ட அதே வேதனையின் ஊற்றும் தன்னை போல் யாரும் அவ்வேதனையை படக்கூடாது என்ற எண்ணமும் மேலோங்கி இருப்பதன் காரணமாகவே பசி என்று வந்தவர்கள் யாராயினும் அவள் பசியாற்ற மறுப்பதில்லை.
ஏன்?? அவர்கள் அந்த உயர் நிலையில் இருந்தவரானாலும் தற்பொழுது தன் நிலை தாழ்ந்தவரானாலும் சரி.
கல் வெளி என்பது, அவள் உள்ளத்தின் திடம் தானே தவிர அவள் கண்கள் பசியில் ஒருநாளும், வெறுப்பைக் கண்டதில்லை.
காரணம் அவள் இன்னல்களை அனுபவித்த காலத்தில் அது மற்றவர்களுக்கு ஒருவேளை உணவு ஆனால், அவளுக்கு அது தன் உயிர் தன்னை விட்டு போய்விடக் கூடாதென்ற உணர்வு.
மனம் கல்லாய் போனாலும், நேர்மையும்... ஒழுங்க்கத்தையும் விட்டுக் கொடுக்காதவள்..... தன்னை சுற்றி ஆயிரம் உறவினர்கள் பலர் இருந்தும், தனிமையை தத்து எடுத்துக் கொண்டாள்..... அதற்காகப் படித்து பல பட்டங்களைப் பெற்றவாளா என்றால் அது தான் இல்லை....
அப்படி அவள் கல்லாக மாறும் அளவிற்கு அவள் வாழ்வில்.... என்ன நடந்தது என்பதையும், அவளின் காதல், திருமணம் போன்ற நிகழ்வுகள் எல்லாம் நடந்ததா???
தனது உழைப்பால் பல பேரை வாழ வைத்தவள்.... ....யாரும் அறியா புதுமை பெண்ணவள்..... இவளும் உலகிற்கு தெரிந்திருந்தால் ஒருவேளை இவள் வாழ்க்கையும் ஒரு வரலாறாகி இருக்குமோ?? என்னவோ??? அது கேள்விக் குறி தான், அதை நீங்கள் தான் எனக்கு சொல்ல வேண்டும்.....
இது ஒரு பெண்ணின் உண்மைக் கதையை, கொஞ்சம் கற்பனை கலந்து, விறுவிறுப்பான, கதைக்களத்துடன்..... தர முயற்சிக்கிறேன்.....
உங்களின், ஆதரவை தாருங்கள்....
ரோஜா 🌹
அவருக்கு மாலை அணிவித்து, தன் தம்பியை ஒரு முறை பார்த்து விட்டு, அவரின் அருகே நின்றுக் கொண்டிருந்த, பாண்டியனையும் கட்டி அணைத்து அழ...
சரி அழதா விடு அத்தை.......
அவரும் தன் கண்ணீரைத் துடைத்து விட்டு,
சரி எப்ப எடுக்கறது,
அவ வரணும், அவ வந்தா தான்... எடுக்க முடியும்........
அவளா!! ஏன்டா... அவத் தான் பெரிய சீமாட்டி ஆச்சே...... வருவாளா!!
எல்லாம் வருவா, தகவல் குடுத்தாச்சு...... வந்துட்டே இருக்கா!!
ம்ம்ம்ம்..... சரி, சரி.... இதுக்கு எல்லாம் காசு,
எல்லாம் நேத்து நைட்டே அனுப்பி விட்டுட்டா!!! இப்போ வந்துட்டு இருக்கா!!!
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே!! அங்கே ஒரு கார் வந்து நிற்க..... அந்த திசையை நோக்கி அனைவரின் பார்வையும் திரும்ப.... எல்லாம் ஓடிச் சென்று அவளைக் கட்டியணைத்து அவ்ளோ??? கல்லுக்கு மறு உருவம் கொண்டதுப் போல், நின்றுக் கொண்டிருந்தாள்...... அவள் தான் நம் கதையின் நாயகி ஆழிச்செல்வி
அவளின் கண்களில் வருத்தமும் இல்லை கண்ணீரும் இல்லை......
அங்கு சுற்றி இருப்பவர்களோ!! அப்பன் சாவுக்கு, வந்ததே லேட்டு அழுகுதா பாரு......
அதானே!! அக்கா!!
என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்க அதையெல்லாம் காதில் வாங்கினாலும் அவள் என்னவோ தன்னை சுற்றி உள்ளவர்களை விளக்கி விட்டு அங்கு ஒரு ஓரமாய் போய் நின்று கொண்டாள்..... தன் தந்தையை கூட பார்க்கவில்லை......
அழுத்தமான பெண்ணின் கதை இது
"ஆசைகளோடும், கனவுகளுடன் தான் சுற்றித் திரிந்தால் அவள், ஏமாற்றோமோ?? வாழ்க்கையின் வலிகளோ?? எதுவோ?? கல்லாக மாறியவள், அவள் மாறவில்லை, அவள் அவளாகத் தான் இருக்கிறாள்.....
ஆனால், பார்ப்பவர்களுக்குத் தான் அவள் கல்லாகத் தெரிகிறாள்....
அவள், இழந்தது அத்தனை, ஆனால் அவள் தான் எதையும் பெறவே இல்லையே!!
கனவுகள் வெறும் கனவாகவே போய்விட, உணர்ச்சிகளற்ற ஜடமாக மாறிப்போனவளின் கதை இது....
தன் கண் முன்னே உயர் நிலையில் வாழ்ந்து தன் நிலை கண்டு தன்னை வேண்டாம் என்று சொன்னவர்களையும் தன் உழைப்பால் ஈர்த்து தன்னை நிலைப்படுத்தி கொண்ட அவள் அதற்காக பட்ட துயரங்களால் அவள் மனம் கல்லாய் போனதென்பதோ உண்மை தான்.
ஆனால் உள்ளத்தில் அவள் பட்ட அதே வேதனையின் ஊற்றும் தன்னை போல் யாரும் அவ்வேதனையை படக்கூடாது என்ற எண்ணமும் மேலோங்கி இருப்பதன் காரணமாகவே பசி என்று வந்தவர்கள் யாராயினும் அவள் பசியாற்ற மறுப்பதில்லை.
ஏன்?? அவர்கள் அந்த உயர் நிலையில் இருந்தவரானாலும் தற்பொழுது தன் நிலை தாழ்ந்தவரானாலும் சரி.
கல் வெளி என்பது, அவள் உள்ளத்தின் திடம் தானே தவிர அவள் கண்கள் பசியில் ஒருநாளும், வெறுப்பைக் கண்டதில்லை.
காரணம் அவள் இன்னல்களை அனுபவித்த காலத்தில் அது மற்றவர்களுக்கு ஒருவேளை உணவு ஆனால், அவளுக்கு அது தன் உயிர் தன்னை விட்டு போய்விடக் கூடாதென்ற உணர்வு.
மனம் கல்லாய் போனாலும், நேர்மையும்... ஒழுங்க்கத்தையும் விட்டுக் கொடுக்காதவள்..... தன்னை சுற்றி ஆயிரம் உறவினர்கள் பலர் இருந்தும், தனிமையை தத்து எடுத்துக் கொண்டாள்..... அதற்காகப் படித்து பல பட்டங்களைப் பெற்றவாளா என்றால் அது தான் இல்லை....
அப்படி அவள் கல்லாக மாறும் அளவிற்கு அவள் வாழ்வில்.... என்ன நடந்தது என்பதையும், அவளின் காதல், திருமணம் போன்ற நிகழ்வுகள் எல்லாம் நடந்ததா???
தனது உழைப்பால் பல பேரை வாழ வைத்தவள்.... ....யாரும் அறியா புதுமை பெண்ணவள்..... இவளும் உலகிற்கு தெரிந்திருந்தால் ஒருவேளை இவள் வாழ்க்கையும் ஒரு வரலாறாகி இருக்குமோ?? என்னவோ??? அது கேள்விக் குறி தான், அதை நீங்கள் தான் எனக்கு சொல்ல வேண்டும்.....
இது ஒரு பெண்ணின் உண்மைக் கதையை, கொஞ்சம் கற்பனை கலந்து, விறுவிறுப்பான, கதைக்களத்துடன்..... தர முயற்சிக்கிறேன்.....
உங்களின், ஆதரவை தாருங்கள்....
ரோஜா 🌹
Author: Roja
Article Title: கல் வெளி (டீஸர்)
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கல் வெளி (டீஸர்)
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.