- Joined
- Nov 10, 2023
- Messages
- 77
- Thread Author
- #1
அத்தியாயம் 4
ஆரவ் கணபதியின் வாக்கு வாதத்தில் நிகழ்வுக்கு வந்தவன் அவர்கள் அருகில் சென்று
" எப்பா டேய் நீங்க ரெண்டு பேரும் ஒத்த புருஷனுக்கு சண்ட போடுற பொண்டாட்டிங்க மாதிரி அடிச்சிக்குறிங்க. உங்க கிட்ட ஒரு விஷயம் டிஸ்கஸ் பண்ணனும் மூடிட்டு வாங்க " என்ற எழில் முன்னால் செல்ல ஆரவும் கணபதியும் ஒருவரை ஒருவர் உதட்டை சுழித்து கொண்டவர்கள் எழில் பின்னால் சென்றனர்.
" என்னது ஆவியா. அடேய் அதுக்கு நா பேசாம கணபதி குடுத்த வடைய சாப்ட்டு அவன் கூட இருந்துருப்பேன். உன்ன பாக்க வந்ததுக்கு பேய் கூட கோத்து விட பாக்குறியே நீ எல்லாம் ஒரு நண்பனா " என்று எழில் இங்கு நடந்தவைகளை கூறியதில் மிரண்டு போய் ஆரவ் கத்த கணபதியோ
" டேய் உன் அண்ணா ருத்ரா நடிக்க சொன்னான்னு நாங்க பேய் ஓட்டுற மாதிரி நடிச்சா. எங்கள உண்மையாவே ஆவி ஓட்டுற மந்திரவாதிங்கனு முடிவே பண்ணிட்டியேடா. ஆள விடுடா " என்று இருவரும் சேர்ந்து போக
" டேய் கணபதி ஒழுங்கா நீங்க இங்க இருந்தா உன்ன இடிச்சிட்டு போனாளே அவ நேம் சொல்லுவேன். முடிஞ்சா ஒரு இன்ட்ரோ கூட குடுப்பேன் "
எழில் சொன்ன மறுகணம் கணபதி எழில் அருகில் இருக்க வாயை பிளந்து பார்த்த ஆரவ்
" டேய் பொண்ணும் பிசாசும் ஒன்னு ஒழுங்கா என் கூட வந்திரு. இல்ல நா மட்டும் போற " என்ற ஆரவ்வின் கழுத்தை பிடித்து கொண்ட கணபதி
" மச்சி நாங்க ஒரு ரவுண்டுஸ் பொய்ட்டு வரோம் " என்றவன் ஆரவை கதற கதற வெளியே இழுத்து சென்று விட சிரித்த எழில் ஆத்மியை காண சென்றான்.
இங்கு நோயாளி ஒருவரை பரிசோதித்து விட்டு தன் அறை நோக்கி வந்து கொண்டிருந்தாள் ஆத்மி.
திடீரென விளக்குகள் மின்னி மின்னி ஒளிர்ந்தது. பயந்து போனவள் சுற்றி முற்றி பார்க்க யாரும் அங்கு இல்லை.
தைரியத்தை வரவழைத்து கொண்டு நடந்து சென்று கொண்டிருக்க படாரென கதவு திறக்கும் சத்தத்தில் ஆடி போய் அப்படியே நின்றாள் ஆத்மி. இதயம் படுவேகமாக துடிக்க குழந்தையின் சிரிப்பு குரலில் இன்னும் மிரண்டு போனாள் ஆத்மி.
அவளின் மூச்சுக்காத்து அவளுக்கே பயத்தை ஏற்படுத்தியது. மெல்ல அந்த அறைக்குள் நுழைய ஒரே இருட்டாக இருந்தது.
தட்டு தடுமாறி விளக்கை போட அந்த அறையின் மெத்தையில் சுவர் பக்கம் பார்த்து ஒரு உருவம் அமர்ந்திருந்தது.
எச்சிலை விழுங்கியவள் மரண பீதியில் அதன் முன்னால் செல்ல செல்ல சவுக் சவுக் என்ற சத்தம் ஆத்மியை கதி கலங்க வைத்தது.
கொஞ்சம் முன்னால் போய் பார்க்க அந்த உருவம் ரத்த கலறியோடு இருக்கும் சதைகளை மென்று தின்பதை பார்த்தவளுக்கு இதயமே நின்று விடுவது போல் ஆனது.
சட்டென அந்த உருவம் வாய் முழுக்க ரத்ததுடன் ஆத்மி மீது பாய பயந்து போனவள் தப்பி ஓடுவதர்குள் சடாரென கதவு மூடு விட ஆத்மி காலை பிடிக்க அடி தொண்டையில் இருந்து கத்த அந்த உருவம் ஆத்மியை இருளுக்கு இழுத்து சென்றது .
" என்ன விட்ரு என்ன எதும் பண்ணிராத. காப்பாத்துங்க காப்பாத்துங்க " என்று கதறி கொண்டிருந்தவள் எழிலின் குரலில் திடுக்கிட்டு கண் விழித்தாள் .
அது கனவு என்றே உணராமல் " எழில் எழில் பேயி பேயி. என் கால புடிச்சி. ரத்தம்லாம் " மூச்சு விட முடியாமல் திணறி கூற அவள் முகத்தை தன் வயிற்றில் புதைத்து அணைத்து கொண்டவன்
" ஆத்மி ஒன்னும் இல்ல.... நா உன் பக்கத்துல தான் இருக்கேன்.... பயப்படாத... கூல் டவுன் ஆத்மி " என்று அவளின் தலைவருட பயத்தில் எழிலை இடையோடு இறுக்க அணைத்து கொண்டாள் ஆத்மி.
எழிலும் அவள் பயம் தனியும் வரை அவள் தலை வருடி கொடுத்தவன் ஆத்மி நிதானம் ஆன பின்னே அவளை விட்டு விலகியவன் ஆத்மிக்கு அருகில் அமர்ந்து
" என்னாச்சு ஆத்மி? உன்ன பாக்குலாம்னு உள்ளே வந்தா நீ ஏதோ கனவு கண்டு அலறி கத்துற. எதும் கெட்ட கனவா " என்று மிக மெல்லிய குரலில் கேட்க அதில் இன்னும் மனம் லேசானவள்
" அது எழில் ஒரு கெட்ட கனவு. அதான் பயத்துல கத்திட்டேன்" என்று மென்மையாக கூற சிரித்தவன்
" ஆத்மி பயம் ஒரு பெரிய விஷம். அது நம்மளையே கொல்ல கூடிய எதிரி. எதையும் நேருக்கு நேரா சந்தி. பயத்தை தூக்கி எறி. நா எப்பவும் உன் கூடவே இருப்பேன் " என்று சொல்ல அதற்கு அர்த்தம் என்ன என்பதை எழில் மட்டுமே அறிவான்.
" மச்சி அவ கண்ணு இருக்கே கண்ணு கேசரில போட்ட முந்திரி மாதிரிடா. அவ கன்னம் இருக்கே கன்னம் அது என் ஹோட்டல்ல செய்யுற பன்னு மாதிரி அப்டி ஒரு மென்மைடா. அவ மூக்கு இருக்கே மூக்கு அது ப்லாக் பெர்ரி கேக் மச்சி. அவ உதடு இருக்கே உதடு அது " என்று கணபதி அவன் பாட்டிற்கு காமினியை வர்ணிக்க எரிச்சலான ஆரவ்
" எப்பா டேய் செஃப் எரும. நீ என்ன வேணா சொல்லுடா உன்ன நண்பனா கூட வச்சிட்டு சுத்துற பாவத்துக்கு கேட்குறேன். ஆனா நீ வர்ணிச்சு சொல்ற பாத்தியா அந்த கருமத்த மட்டும் என்னால காது குடுத்து கூட கேட்க முடியல மச்சி " என்று கையெடுத்து கும்பிட மீண்டும் ஒருவரை ஒருவர் வாக்குவாதம் செய்து கொண்டே பைத்தியங்கள் ஏழாவது மாடிக்கு சென்று விட்டனர்.
இங்கு ஆத்மி அருகில் இருந்த எழில் நியாபகம் வந்தவனாக பதறி எழ புரியாமல் பார்த்த ஆத்மியிடம் " ஆத்மி என் பிரண்ட்ஸ் இங்க தான் இருக்கானுங்க. அவங்க கிட்ட அந்த ஏழாவது மாடிக்கு போக கூடாதுனு வேற சொல்ல மறந்துட்டேன். அவனுங்க அங்க போறதுக்குள்ள போய் தடுக்கணும் " என்று எழில் பதட்டமாக கூற
" எழில் வாங்க சீக்கிரம் போய். அவங்க மாட்டிக்கிறதுக்குள்ள அவங்கள பார்ப்போம் " என்ற இருவரும் கணபதி ஆரவை தேடி கொண்டு சென்றனர். செல்லும் வழியில் எழில் இருவர் செல்லுக்கும் தொடர்பு கொள்ள ஒரு பெண் கணினி குரல் மட்டுமே கேட்டு அணைந்தது.
ஏழாவது தளம் மயான அமைதியில் இருப்பது, ஆரவையும் கணபதியையும் சண்டையை நிறுத்திவிட்டு சுற்றி பார்க்க வைத்தது. காற்றில் வந்த வாடை வேறு குடலை பிரட்டி கொண்டே வந்தது.
" டேய் ஒரு ஹாஸ்பிடல்ல கூட ஒழுங்கா கழுவாமா வச்சிருக்கானுங்க இடியட் " என்று ஆரவ் திட்ட கணபதியும் சும்மா இருக்காமல்
" ஏன் நீ பொறுமையா கழுவிட்டு வரியா நா வெயிட் பன்றேன் " என்று சொல்ல மீண்டும் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஆரம்பித்தது.
மை மைண்ட் வாய்ஸ் : அட சொறி புடிச்ச மொன்ன நாய்களா பேய் இருக்குற எடத்துல எகத்தால பேச்சு தேவையாடா..... உயிரே உயிரே தப்பிச்சி எப்படியாது ஓடி போயிரு வருதே முண்டம் இல்லாத தலை வருதே....
" டேய் மச்சி உனக்கு அந்த ரைட்டர் ஜீ வாய்ஸ் கேட்குது? " கணபதி கூற திமிரு புடிச்ச ஆரவ்
" அந்த லூசு எதாவது ஒளறிட்டு இருக்கும்.... அத கண்டுக்காத மச்சி " என்று ஆரவ் கூறியதில் கணபதியும் அந்த வராண்டாவை நோட்டமிட்டான்.
திடீரென ஒரு பெண்ணின் அழுகுரல் இருவருக்கும் கேட்டது. கணபதி ஆரவ்க்கு ஒரு நிமிடம் அந்த குரலில் ஜர்க் ஆனது. இருவருக்கும் இந்த தளம் தடை செய்யப்பட்டது தெரியாது.
" டேய் என்னடா யாரோ அழறாங்க " என்று திகிலாக கணபதி கேட்க
" உன் கவிதை கேட்டு நா அழுத மாதிரி யாரோ அழறாங்க வா போய் பாப்போம் " என்று சனியனை சட்டைப்பையில் தூக்கி வைத்த ஆரவ் குரல் வந்த திசை நோக்கி செல்ல கணபதியும் பயத்தோடு ஆரவ் பின்னால் சென்றான்.
ஆரவ் இப்டிலாம் பேசுறானு தைரியசாலின்னு நெனைக்காதிங்க. இந்த பைத்தியம் இதே மாதிரி அங்க ஒரு பைத்தியம் தான் இருக்குனு நெனச்சி போகுது. ஆனா அங்க தலை கொண்ட தாய்கிழவி இருக்குறது நமக்கு மட்டும் தானே தெரியும். நாம சொன்னாலும் இந்த லூசு பய நம்மள லூசுன்னு சொல்லுவான் எதுக்கு வம்பு வாங்க நாம வேடிக்கை மட்டும் பாப்போம்.
ஆரவ் முன்னால் செல்ல செல்ல அழுகை குரல் அதிகமானது. கணபதிக்கு ஹார்ட் அட்டாக் வருவது போல் இதயம் வேகமாக துடித்தது. இருவரும் அந்த கடைசி அறைக்கு முன்னால் சென்று விட்டனர்.
அப்பா டக்கர் அரை ட்ரவுசர் ஆரவ் " ஹெலோ யாருங்க.... ஏன் அழறீங்க " என்று கேட்க அடுத்த கணம் அழுகுரல் நின்றது. குழப்பமான ஆரவ் கணபதியை பார்த்து முன்னால் பார்க்க கதவில் இருந்த கண்ணாடியில் ஒரு கொடூரமான முகம் " ஆஆஆஆ " என வெறிபிடித்து கத்த அதுக்கு டப் குடுக்கும் வகையில் இருவரும் கத்தியவர்கள் பின்னங்கால் பிடரியில் அடிக்க தெறித்து ஓடி வந்தனர்.
அப்போவது வாய் சும்மா இருந்துச்சா " டேய் மச்சி முன்னால எது வந்தாலும் இடிச்சு தள்ளிட்டு நிக்காம ஓடுடேய்ய்ய் " என்ற ஆரவ் கணபதியோடு பின்னால் திரும்பி பார்க்காமல் ஓடியவர்கள் எத்தனை மாடி இறங்கினோம் என்றே தெரியாமல் ஓட
எதிரில் தேடி வந்த எழிலை பார்த்த பின் கணபதி நின்று விட பக்கி ஆரவ் கணபதி மேல் மோதி இருவரும் தரையில் டமாரென விழுந்தார்கள்.
எழிலுக்கும் ஆத்மிக்கு இவர்கள் தலை தெறிக்க ஓடிவந்ததிலே எல்லாம் புரிந்து விட்டது. ஒருவரை பார்த்து கொண்டவர்கள் கீழே விழுந்தவர்களை மெல்ல தூக்கி விட்டனர்.
" டேய் உங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சு. ஏன் இப்டி ஓடி வந்திங்க " என்று எழில் கேட்டதுக்கு பதில் கூறாமல் இருவரும்
த த த என்ற சரணம் மட்டுமே வந்தது.எழிலுக்கு ஒன்றும் மட்டும் விளங்கியது தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் ஆத்மி உயிருக்கு ஆபத்து என.
பயந்து நடுங்கிய இரு பைத்தியங்களையும் அவனின் அறைக்கு அழைத்து சென்றான் எழில். ஆத்மி இருவருக்கும் குடிக்க தண்ணீர் குடுக்க ஒரே கப்பில் காலி செய்தனர்.
" டேய் நீங்க எத பார்த்து பயந்து ஓடிவந்திங்க " என்று எழில் பயந்து போனவர்களை பார்த்து கேட்க கடுப்பான ஆரவ்
" ஹான் நீ சோறு போட்டு வளக்குறியே தலை வச்ச தாய்க்கிழவி அத பார்த்து தான் பயந்து வந்தோம் " என்றவன் தலையில் கொட்டு வைத்த கணபதி
" மச்சி இத இப்டியே விட்டா இங்க இருக்குற எல்லாருக்கும் ஆபத்து. இதுக்கு ஒரு முடிவே உடனே கட்டணும் " என்று கணபதி ஆபத்தை அறிந்து சொல்ல எழில் ஆத்மியை ஒரு கணம் பார்த்தவன்
" மச்சி நாளைக்கு எல்லாரும் கொல்லிமலை போறோம்..... நீங்களும் எங்க கூட வரணும் " என்றதும் பதறிய ஆரவ்
" தோ பாருடா..... நீ வேணா தனியா போ நா வரமாட்டேன் " என்று எஸ்ஸாக எழிலும் கணபதியும் சிரித்ததில் மிரண்டு போனான் ஆரவ் .
ஆரவ் கணபதியின் வாக்கு வாதத்தில் நிகழ்வுக்கு வந்தவன் அவர்கள் அருகில் சென்று
" எப்பா டேய் நீங்க ரெண்டு பேரும் ஒத்த புருஷனுக்கு சண்ட போடுற பொண்டாட்டிங்க மாதிரி அடிச்சிக்குறிங்க. உங்க கிட்ட ஒரு விஷயம் டிஸ்கஸ் பண்ணனும் மூடிட்டு வாங்க " என்ற எழில் முன்னால் செல்ல ஆரவும் கணபதியும் ஒருவரை ஒருவர் உதட்டை சுழித்து கொண்டவர்கள் எழில் பின்னால் சென்றனர்.
" என்னது ஆவியா. அடேய் அதுக்கு நா பேசாம கணபதி குடுத்த வடைய சாப்ட்டு அவன் கூட இருந்துருப்பேன். உன்ன பாக்க வந்ததுக்கு பேய் கூட கோத்து விட பாக்குறியே நீ எல்லாம் ஒரு நண்பனா " என்று எழில் இங்கு நடந்தவைகளை கூறியதில் மிரண்டு போய் ஆரவ் கத்த கணபதியோ
" டேய் உன் அண்ணா ருத்ரா நடிக்க சொன்னான்னு நாங்க பேய் ஓட்டுற மாதிரி நடிச்சா. எங்கள உண்மையாவே ஆவி ஓட்டுற மந்திரவாதிங்கனு முடிவே பண்ணிட்டியேடா. ஆள விடுடா " என்று இருவரும் சேர்ந்து போக
" டேய் கணபதி ஒழுங்கா நீங்க இங்க இருந்தா உன்ன இடிச்சிட்டு போனாளே அவ நேம் சொல்லுவேன். முடிஞ்சா ஒரு இன்ட்ரோ கூட குடுப்பேன் "
எழில் சொன்ன மறுகணம் கணபதி எழில் அருகில் இருக்க வாயை பிளந்து பார்த்த ஆரவ்
" டேய் பொண்ணும் பிசாசும் ஒன்னு ஒழுங்கா என் கூட வந்திரு. இல்ல நா மட்டும் போற " என்ற ஆரவ்வின் கழுத்தை பிடித்து கொண்ட கணபதி
" மச்சி நாங்க ஒரு ரவுண்டுஸ் பொய்ட்டு வரோம் " என்றவன் ஆரவை கதற கதற வெளியே இழுத்து சென்று விட சிரித்த எழில் ஆத்மியை காண சென்றான்.
இங்கு நோயாளி ஒருவரை பரிசோதித்து விட்டு தன் அறை நோக்கி வந்து கொண்டிருந்தாள் ஆத்மி.
திடீரென விளக்குகள் மின்னி மின்னி ஒளிர்ந்தது. பயந்து போனவள் சுற்றி முற்றி பார்க்க யாரும் அங்கு இல்லை.
தைரியத்தை வரவழைத்து கொண்டு நடந்து சென்று கொண்டிருக்க படாரென கதவு திறக்கும் சத்தத்தில் ஆடி போய் அப்படியே நின்றாள் ஆத்மி. இதயம் படுவேகமாக துடிக்க குழந்தையின் சிரிப்பு குரலில் இன்னும் மிரண்டு போனாள் ஆத்மி.
அவளின் மூச்சுக்காத்து அவளுக்கே பயத்தை ஏற்படுத்தியது. மெல்ல அந்த அறைக்குள் நுழைய ஒரே இருட்டாக இருந்தது.
தட்டு தடுமாறி விளக்கை போட அந்த அறையின் மெத்தையில் சுவர் பக்கம் பார்த்து ஒரு உருவம் அமர்ந்திருந்தது.
எச்சிலை விழுங்கியவள் மரண பீதியில் அதன் முன்னால் செல்ல செல்ல சவுக் சவுக் என்ற சத்தம் ஆத்மியை கதி கலங்க வைத்தது.
கொஞ்சம் முன்னால் போய் பார்க்க அந்த உருவம் ரத்த கலறியோடு இருக்கும் சதைகளை மென்று தின்பதை பார்த்தவளுக்கு இதயமே நின்று விடுவது போல் ஆனது.
சட்டென அந்த உருவம் வாய் முழுக்க ரத்ததுடன் ஆத்மி மீது பாய பயந்து போனவள் தப்பி ஓடுவதர்குள் சடாரென கதவு மூடு விட ஆத்மி காலை பிடிக்க அடி தொண்டையில் இருந்து கத்த அந்த உருவம் ஆத்மியை இருளுக்கு இழுத்து சென்றது .
" என்ன விட்ரு என்ன எதும் பண்ணிராத. காப்பாத்துங்க காப்பாத்துங்க " என்று கதறி கொண்டிருந்தவள் எழிலின் குரலில் திடுக்கிட்டு கண் விழித்தாள் .
அது கனவு என்றே உணராமல் " எழில் எழில் பேயி பேயி. என் கால புடிச்சி. ரத்தம்லாம் " மூச்சு விட முடியாமல் திணறி கூற அவள் முகத்தை தன் வயிற்றில் புதைத்து அணைத்து கொண்டவன்
" ஆத்மி ஒன்னும் இல்ல.... நா உன் பக்கத்துல தான் இருக்கேன்.... பயப்படாத... கூல் டவுன் ஆத்மி " என்று அவளின் தலைவருட பயத்தில் எழிலை இடையோடு இறுக்க அணைத்து கொண்டாள் ஆத்மி.
எழிலும் அவள் பயம் தனியும் வரை அவள் தலை வருடி கொடுத்தவன் ஆத்மி நிதானம் ஆன பின்னே அவளை விட்டு விலகியவன் ஆத்மிக்கு அருகில் அமர்ந்து
" என்னாச்சு ஆத்மி? உன்ன பாக்குலாம்னு உள்ளே வந்தா நீ ஏதோ கனவு கண்டு அலறி கத்துற. எதும் கெட்ட கனவா " என்று மிக மெல்லிய குரலில் கேட்க அதில் இன்னும் மனம் லேசானவள்
" அது எழில் ஒரு கெட்ட கனவு. அதான் பயத்துல கத்திட்டேன்" என்று மென்மையாக கூற சிரித்தவன்
" ஆத்மி பயம் ஒரு பெரிய விஷம். அது நம்மளையே கொல்ல கூடிய எதிரி. எதையும் நேருக்கு நேரா சந்தி. பயத்தை தூக்கி எறி. நா எப்பவும் உன் கூடவே இருப்பேன் " என்று சொல்ல அதற்கு அர்த்தம் என்ன என்பதை எழில் மட்டுமே அறிவான்.
" மச்சி அவ கண்ணு இருக்கே கண்ணு கேசரில போட்ட முந்திரி மாதிரிடா. அவ கன்னம் இருக்கே கன்னம் அது என் ஹோட்டல்ல செய்யுற பன்னு மாதிரி அப்டி ஒரு மென்மைடா. அவ மூக்கு இருக்கே மூக்கு அது ப்லாக் பெர்ரி கேக் மச்சி. அவ உதடு இருக்கே உதடு அது " என்று கணபதி அவன் பாட்டிற்கு காமினியை வர்ணிக்க எரிச்சலான ஆரவ்
" எப்பா டேய் செஃப் எரும. நீ என்ன வேணா சொல்லுடா உன்ன நண்பனா கூட வச்சிட்டு சுத்துற பாவத்துக்கு கேட்குறேன். ஆனா நீ வர்ணிச்சு சொல்ற பாத்தியா அந்த கருமத்த மட்டும் என்னால காது குடுத்து கூட கேட்க முடியல மச்சி " என்று கையெடுத்து கும்பிட மீண்டும் ஒருவரை ஒருவர் வாக்குவாதம் செய்து கொண்டே பைத்தியங்கள் ஏழாவது மாடிக்கு சென்று விட்டனர்.
இங்கு ஆத்மி அருகில் இருந்த எழில் நியாபகம் வந்தவனாக பதறி எழ புரியாமல் பார்த்த ஆத்மியிடம் " ஆத்மி என் பிரண்ட்ஸ் இங்க தான் இருக்கானுங்க. அவங்க கிட்ட அந்த ஏழாவது மாடிக்கு போக கூடாதுனு வேற சொல்ல மறந்துட்டேன். அவனுங்க அங்க போறதுக்குள்ள போய் தடுக்கணும் " என்று எழில் பதட்டமாக கூற
" எழில் வாங்க சீக்கிரம் போய். அவங்க மாட்டிக்கிறதுக்குள்ள அவங்கள பார்ப்போம் " என்ற இருவரும் கணபதி ஆரவை தேடி கொண்டு சென்றனர். செல்லும் வழியில் எழில் இருவர் செல்லுக்கும் தொடர்பு கொள்ள ஒரு பெண் கணினி குரல் மட்டுமே கேட்டு அணைந்தது.
ஏழாவது தளம் மயான அமைதியில் இருப்பது, ஆரவையும் கணபதியையும் சண்டையை நிறுத்திவிட்டு சுற்றி பார்க்க வைத்தது. காற்றில் வந்த வாடை வேறு குடலை பிரட்டி கொண்டே வந்தது.
" டேய் ஒரு ஹாஸ்பிடல்ல கூட ஒழுங்கா கழுவாமா வச்சிருக்கானுங்க இடியட் " என்று ஆரவ் திட்ட கணபதியும் சும்மா இருக்காமல்
" ஏன் நீ பொறுமையா கழுவிட்டு வரியா நா வெயிட் பன்றேன் " என்று சொல்ல மீண்டும் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஆரம்பித்தது.
மை மைண்ட் வாய்ஸ் : அட சொறி புடிச்ச மொன்ன நாய்களா பேய் இருக்குற எடத்துல எகத்தால பேச்சு தேவையாடா..... உயிரே உயிரே தப்பிச்சி எப்படியாது ஓடி போயிரு வருதே முண்டம் இல்லாத தலை வருதே....
" டேய் மச்சி உனக்கு அந்த ரைட்டர் ஜீ வாய்ஸ் கேட்குது? " கணபதி கூற திமிரு புடிச்ச ஆரவ்
" அந்த லூசு எதாவது ஒளறிட்டு இருக்கும்.... அத கண்டுக்காத மச்சி " என்று ஆரவ் கூறியதில் கணபதியும் அந்த வராண்டாவை நோட்டமிட்டான்.
திடீரென ஒரு பெண்ணின் அழுகுரல் இருவருக்கும் கேட்டது. கணபதி ஆரவ்க்கு ஒரு நிமிடம் அந்த குரலில் ஜர்க் ஆனது. இருவருக்கும் இந்த தளம் தடை செய்யப்பட்டது தெரியாது.
" டேய் என்னடா யாரோ அழறாங்க " என்று திகிலாக கணபதி கேட்க
" உன் கவிதை கேட்டு நா அழுத மாதிரி யாரோ அழறாங்க வா போய் பாப்போம் " என்று சனியனை சட்டைப்பையில் தூக்கி வைத்த ஆரவ் குரல் வந்த திசை நோக்கி செல்ல கணபதியும் பயத்தோடு ஆரவ் பின்னால் சென்றான்.
ஆரவ் இப்டிலாம் பேசுறானு தைரியசாலின்னு நெனைக்காதிங்க. இந்த பைத்தியம் இதே மாதிரி அங்க ஒரு பைத்தியம் தான் இருக்குனு நெனச்சி போகுது. ஆனா அங்க தலை கொண்ட தாய்கிழவி இருக்குறது நமக்கு மட்டும் தானே தெரியும். நாம சொன்னாலும் இந்த லூசு பய நம்மள லூசுன்னு சொல்லுவான் எதுக்கு வம்பு வாங்க நாம வேடிக்கை மட்டும் பாப்போம்.
ஆரவ் முன்னால் செல்ல செல்ல அழுகை குரல் அதிகமானது. கணபதிக்கு ஹார்ட் அட்டாக் வருவது போல் இதயம் வேகமாக துடித்தது. இருவரும் அந்த கடைசி அறைக்கு முன்னால் சென்று விட்டனர்.
அப்பா டக்கர் அரை ட்ரவுசர் ஆரவ் " ஹெலோ யாருங்க.... ஏன் அழறீங்க " என்று கேட்க அடுத்த கணம் அழுகுரல் நின்றது. குழப்பமான ஆரவ் கணபதியை பார்த்து முன்னால் பார்க்க கதவில் இருந்த கண்ணாடியில் ஒரு கொடூரமான முகம் " ஆஆஆஆ " என வெறிபிடித்து கத்த அதுக்கு டப் குடுக்கும் வகையில் இருவரும் கத்தியவர்கள் பின்னங்கால் பிடரியில் அடிக்க தெறித்து ஓடி வந்தனர்.
அப்போவது வாய் சும்மா இருந்துச்சா " டேய் மச்சி முன்னால எது வந்தாலும் இடிச்சு தள்ளிட்டு நிக்காம ஓடுடேய்ய்ய் " என்ற ஆரவ் கணபதியோடு பின்னால் திரும்பி பார்க்காமல் ஓடியவர்கள் எத்தனை மாடி இறங்கினோம் என்றே தெரியாமல் ஓட
எதிரில் தேடி வந்த எழிலை பார்த்த பின் கணபதி நின்று விட பக்கி ஆரவ் கணபதி மேல் மோதி இருவரும் தரையில் டமாரென விழுந்தார்கள்.
எழிலுக்கும் ஆத்மிக்கு இவர்கள் தலை தெறிக்க ஓடிவந்ததிலே எல்லாம் புரிந்து விட்டது. ஒருவரை பார்த்து கொண்டவர்கள் கீழே விழுந்தவர்களை மெல்ல தூக்கி விட்டனர்.
" டேய் உங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சு. ஏன் இப்டி ஓடி வந்திங்க " என்று எழில் கேட்டதுக்கு பதில் கூறாமல் இருவரும்
த த த என்ற சரணம் மட்டுமே வந்தது.எழிலுக்கு ஒன்றும் மட்டும் விளங்கியது தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் ஆத்மி உயிருக்கு ஆபத்து என.
பயந்து நடுங்கிய இரு பைத்தியங்களையும் அவனின் அறைக்கு அழைத்து சென்றான் எழில். ஆத்மி இருவருக்கும் குடிக்க தண்ணீர் குடுக்க ஒரே கப்பில் காலி செய்தனர்.
" டேய் நீங்க எத பார்த்து பயந்து ஓடிவந்திங்க " என்று எழில் பயந்து போனவர்களை பார்த்து கேட்க கடுப்பான ஆரவ்
" ஹான் நீ சோறு போட்டு வளக்குறியே தலை வச்ச தாய்க்கிழவி அத பார்த்து தான் பயந்து வந்தோம் " என்றவன் தலையில் கொட்டு வைத்த கணபதி
" மச்சி இத இப்டியே விட்டா இங்க இருக்குற எல்லாருக்கும் ஆபத்து. இதுக்கு ஒரு முடிவே உடனே கட்டணும் " என்று கணபதி ஆபத்தை அறிந்து சொல்ல எழில் ஆத்மியை ஒரு கணம் பார்த்தவன்
" மச்சி நாளைக்கு எல்லாரும் கொல்லிமலை போறோம்..... நீங்களும் எங்க கூட வரணும் " என்றதும் பதறிய ஆரவ்
" தோ பாருடா..... நீ வேணா தனியா போ நா வரமாட்டேன் " என்று எஸ்ஸாக எழிலும் கணபதியும் சிரித்ததில் மிரண்டு போனான் ஆரவ் .
Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 4
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் 4
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.