கனவு 3

New member
Joined
Aug 11, 2025
Messages
16
என் கனவோடு கைவீசும் காதல் இவள் யாரோ 💜


Screenshot_20250812_193903_Facebook.jpg

எபி 3

காவ்யா அப்படியே மயங்கி கீழே சரிய அவள் கீழே விழும் முன் இரு ஆண்களும் காவ்யா... யா..யா.. கவி.. வி.. விவீவீஇ... என்ற கூவளோடு அவளை இருபக்கமும் பிடித்து கொண்டனர். அவளை மடியில் தாங்கிய சித்தார்த்தோ காவ்யா... யா.. என்னாச்சு எழுந்திரி என அவள் கன்னம் தட்ட மித்ரனோ வேகமாக உள்ளே சென்றான். அங்கு வந்த நித்யாவோ அவள் முகத்தில் தண்ணீரினை தெளிக்க அப்போதும் அவள் அசைவின்றி கிடந்தாள். நித்யாவோ அவள் கையை தொட்டு பார்த்து மித்ரன்... மித்ரன்.... கொஞ்சம் வேகமா இங்க வாங்க என கத்த மித்ரனோ வேகமாக உள்ளே இருந்து கையில் மருந்து பெட்டியோடு வந்தான்.

நேராக சென்று காவ்யாவை பரிசோதனை செய்து விட்டு அவளுக்கு ஒரு ஊசியை போட்டு விட்ட மித்ரன் பின் நித்யாவை பார்த்து நிதி! மேடம் இன்னும் சாப்டாம இருகாங்க, அதான் லோ பிபி யாகி மயக்கம் ஆகிட்டா சோ எழுந்ததும் சாப்பிட சொல்லு இன்னும் அரை மணி நேரத்துல கண்ணு முழிச்சிடுவா என கூறி அவளை தூக்கி சென்று சோபாவில் படுக்க வைத்தான். சித்தார்த்தோ ஹலோ! யார் சார் நீங்க இங்க என்ன நடக்குது என கேக்க அவனோ கூலாக ஐ அம் தேவமித்ரன் அண்ட் ஷி இஸ் நித்யா எங்க பெஸ்ட் பிரின்ட் என கூற அவனோ ஓகே சார் அப்ப ஏன் நீங்க அன்னக்கி ஊருக்கு வராம இப்ப இங்க கூட்டிட்டு வந்து இருக்கீங்க என கேக்க

அவனோ அன்னக்கி நான் யூ. ஸ். போயிருந்தேன் அண்ட் இன்னும் நீங்க தெரிஞ்சுக்கணும் அப்படினா அவ கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க என உரையை முடித்தான். அரை மணி நேரம் கழித்து கண்விழித்த காவ்யா கண்டதோ தன்னை கண்டவாறு அமர்ந்து இருக்கும் சித்தார்த், நித்யா வை தான். அங்கே வந்த மித்ரனோ கவி முதல சாப்பிடு அப்பறம் சண்டை போடலாம் என கூறி தட்டில் உணவை வைத்து எடுத்து வந்து அவளுக்கு ஊட்டி விட்டான். அவளும் மறுக்காமல் முழுவதும் உண்டு முடித்து விட்டாள். அவளை பார்த்து போதுமா இல்ல இன்னும் கொஞ்சம் சாப்பாடு கொண்டு வரவா என கேக்க அவளோ போதும் மித்து என்றாள். சித்தார்த்தோ வெறும் பார்வையாளராக இதனை பார்த்து கொண்டு இருந்தான்.

மித்ரனோ உள்ளே சென்று தட்டை வைத்து விட்டு கைகளை கழுவி வந்தான். அப்பறம் சொல்லுங்க! காவ்யாஞ்சலி மேடம் என்ன முடிவு பண்ணி இருக்கீங்க என கேக்க அவளோ அன்று அப்பத்தாவின் இறப்பில் நடந்த கல்யாணம் முதல் நேற்று சித்தார்த் பேசியது வரை கூறினாள். பின் இன்னும் ஆறு மாசம் டைம் வேணும் மித்து எனக்கு அதுக்கு அப்பறம் நான் மொத்தமா வந்துடுவேன் என கூற

மித்ரனோ ஓகே. ஏன்? கவி உனக்கு இதுல ஒரு வாட்டி கூட என் நியாபகம் வரவே இல்லையா, என் கிட்ட சொல்லி இருந்த உனக்காக கணக்கே இல்லாம பல கோடி கணக்குல பணம் கொடுத்து இருப்பேனேடி இப்படி சாப்டியா அப்படினு கூட கேக்க ஆள் இல்லாத வீட்டுக்கு உன்ன வேண்டாம் சொல்ற ஒருத்தன நம்பி போய் இருக்க லூசா நீ என் கோபத்தில் ஆரம்பித்து வேதனையில் முடிக்க

அவளோ இல்ல மித்து இது அப்பத்தா வோட கடைசி ஆசை அதை மறுக்க தோணல. பெத்தவங்களே என்ன வேணாம்னு சொன்ன அப்ப எனக்காக வாழ்த்தங்க மித்து அவங்க, அதான் முடியாதுனு சொல்ல முடியாம ஓகே சொல்லிட்டேன் என முடிக்க

மித்ரனோ கோபமாக சித்தார்த்தை பார்த்து ஏன் மிஸ்டர்? இதுவே உங்க அக்கா, தங்கச்சிக்கு இந்த மாறி நடந்த சும்மா இருப்பிங்களா ஹான்! சொல்லுங்க இதுவே கேக்க ஆள் இல்லனா என்ன வேணா பண்ணுவீங்களா என கேக்க சித்தார்த்தோ சார் நான் ஒன்னும் முழு மனசோட இதுக்கு ஒத்துக்கள எனக்கே நேத்து தான் இவங்களுக்கு ஒன்னும் தெரியாதுன்னு தெரியும் அண்ட் நான் ஏற்கனவே இவங்க அப்பா கிட்ட இவங்க முழு மனசா ஒத்துக்கிட்ட மட்டும் கல்யாணம் அப்படினு சொன்னேன் அவங்க இப்படி போர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணுவாங்கனு தெரியாது சார் அன்னக்கி கூட எதோ பாட்டி லாஸ்ட் விஷ் அதனால தான் உடனே கல்யாணம் அப்படினு சொன்னாங்க நானும் ஒரு ட்ராமா கல்யாணம் தான் நினைச்சி நான் தாலி காட்டினேன் இல்லனா அன்னைக்கே நான் வேணாம்னு சொல்லி இருப்பேன் என முடிக்க

மித்ரனோ அப்ப நெஸ்ட் என்ன பண்ண போறீங்க என கேக்க அவனோ நான் டிவோர்ஸ் கொடுத்துறேன் சார் இனிமே யாவது அவங்க அவங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு லைப் அமைச்சுகிட்டு வாழ சொல்லுங்க ஆன அதுக்கு நாங்க ஆறு மாசம் ஓரே வீட்ல இருக்கனும் என முடிக்க
மித்ரன் காவ்யாவை பார்த்து நீ என்ன பண்ண போற கவி என கேக்க அவளோ நான் போறேன் மித்து என்னால உனக்கு எந்த பிரச்சனையும் வேணாம். யாருக்கும் பிடிக்காத என்ன மஹாராணி மாதிரி வாழ வைக்க ஆசை பட்ட ஆனா என் விதி எப்போதும் எதுக்கும் ஆசை படாத, யாரும் நிரந்தரம் இல்லனு எழுதி இருக்கு சோ முடிஞ்சா ஆறு மாசம் கழிச்சி பாக்கலாம் என கூற

மித்ரனோ நீ என்ன வேணாம்னு சொன்னாலும் பரவாயில்ல, உனக்காக நான் வெயிட் பண்ணுவேன் கவி என்ன பிரச்சனை எந்த நேராமநாலும் எனக்கு ஒரு போன் பண்ணு நான் வந்து நிப்பேன் டா உனக்காக. உனக்காக மட்டும் என முடிக்க
அவளோ மித்து என அவனை அணைத்து கொண்டு சாரி அண்ட் தேங்க்ஸ் எல்லாத்துக்கும் என கூறி அவன் மொறைப்பையும் பரிசாக வாங்கி கொண்டாள்.
அவன் கையசைக்க நிதியும் அவர்களுடன் இணைந்து கொண்டாள். நண்பர்கள் மூவரும் பல நாட்கள் கழித்து கட்டி கொண்டு நின்றனர். பின் மித்ரன், நித்யா இருவரும் சேர்ந்து காவ்யாவை சித்தார்த்தோடு அனுப்பி வைத்தனர்.


காவ்யா கார் ஓட்ட பக்கத்தில் சித்தார்த் அமர்ந்து இருந்தான். இருவரும் வந்த காரிலே சித்தார்த்தின் வீட்டுக்கு சென்றனர். வீட்டை அடைந்ததும் உள்ளே சென்று வீட்டை சுற்றி பார்த்து கொண்டு இருந்தாள் காவ்யா. அழகான ஒரு மாடி கொண்ட தனி வில்லா, ஒரு படுக்கை அரை, கிட்சேன், ஹால், பூஜை அரை, நவீன பாத்ரூம் என வீடு பார்க்க நன்றாக இருந்தது. காவ்யா வீட்டை பார்த்து விட்டு நல்லா மைண்டைன் பண்ணிக்கிட்டு இருக்கிங்க சித்தார்த் அண்ட் நான் இங்க இருக்குற வர கொஞ்சம் எனக்கு பிடிச்ச மாதிரி மாத்திக்கலாமா என அனுமதி கேக்க அவனோ ஓகே ஆனா எனக்கு ஒரு சில பொருளா மட்டும் எடுத்த எடதுலேயே வச்சிடணும் அப்பத்தான் எனக்கு ஈசியா இருக்கும் அண்ட் இங்க ஒரு பெட் தான் இருக்கு ஷேர் பண்ணிக்கலாம இல்ல நான் கீழே படுத்துக்காவ என கேக்க அவளோ கீழே வேணாம் ஷேர் பண்ணிக்கலாம் அண்ட் ஒரு விஷயம் இப்ப மித்துவா பார்த்ததா மட்டும் உங்க மாமியார் வீட்ல சொல்லிடாதீங்க என கேக்க அவனோ கேள்வி கேக்காமல் அவள் மாமியார் வீடு என்றதில் சிரித்து கொண்டே சரி என தலை அசைத்தான்.


இத்தனை நாள் இருந்த சோர்வு மற்றும் களைப்பில் காவ்யா படுத்ததும் உறங்கி விட சித்தார்த்தோ உறங்காமல் யோசித்து கொண்டு இருந்தான். அவன் மூளையோ யார் இந்த பொண்ணு தினமும் புதுசு புதுசா தெரியுறா அவ லைப் மேல கவலை இல்ல ஏன்? யாரோ ஒருத்தர் கேட்ட கேள்விய கூட அவ என்ன பார்த்து கேக்கல எதோ ஒன்னு இருக்கு என் அப்பா அம்மாக்கு கூட இல்லாத கரிசனம் ஏன்? இவளுக்கு என் மேல இருக்கு என யோசித்து கொண்டே உறங்கி விட்டான்.


நடு இரவில் தன் மேல் எதோ அழுத்துவத்தை போல இருக்க கண்களை திறந்தான் சித்தார்த். அவன் கண்டதோ தன்னை அணைத்து கொண்டு குழந்தை போல உறங்கும் காவ்யாவை தான். அவள் கையை விலக்க மனம் இன்றி அப்படியே அவள் மதி முகத்தை பார்த்து கொண்டு இருந்தவன். தீடீரென அவள் அ..ஆ...அம்ம்.. மா..ஆ.. விட்ருங்க வலிகுது இனிமே இங்க வந்து சாப்பிட மாட்டேன். தெரியாம பண்ணிட்டேன் விடுங்க என தூக்கத்தில் அலற அதை கேட்ட அவனோ அவள் கையை பிடித்து கொண்டு காவ்யா... காவ்யா என்ன பாருங்க ஒன்னும் இல்லங்க உங்களுக்கு என கூறி அவளை எழுப்ப

அவளோ நன்றாக கண்களை திறந்து பார்த்தாள் அப்போது தான் சித்தார்த்தின் அருகில் இருப்பதை கண்டு அவனிடம் இருந்து விலகி அமர்ந்து கொள்ள சித்தார்த்தின் மனதோ எதோ அவனுக்கு பிடித்த பொம்மையை அவனிடம் இருந்து பிடிங்கியது போல உணர்ந்தான்.
காவ்யாவோ சாரி! சாரி! சாரி! அது நான் எதோ கெட்ட கனவு அதான் உங்க தூக்கத்தையும் சேர்த்து கெடுத்துட்டேன் சாரி என தயக்கத்துடன் கூற

அவனோ எதுக்கு இத்தன சாரி! ஒரு பிரச்சணையும் இல்ல இப்ப ஓகே வா நீங்க என கேக்க யா! பைன் என கூறி அவனுக்கு முதுகு காட்டியது போல படுத்து கொண்டாள். அவனும் படுத்து கொண்டு எதாவது தேவை பட்டா கூப்பிடுங்க என கூறி உறங்கி விட்டான்.

படுத்தாளே தவிர காவ்யாவிற்கு உறக்கம் தான் வரவில்லை. அவள் மனமோ வழக்கம் போல வெறுமையை தான் உணர்ந்தது. இதுவரை அப்பா,அம்மா, என உறவுகள் இருந்தும் அனாதை போலவே இருந்தவள் இப்போது வாழ்க்கை துணை என வந்தவனும் பாதியில் சென்று விடுவேன் என கூறியத்தில் இனி யாரையும் நிரந்தரம் என நம்பி நம்பிக்கை வைக்க கூடாது என மனதுக்குள் முடிவு எடுத்து கொண்டாள். கல் பாறை போல இருக்கும் இவள் மனதில் காதல் என்னும் பூ பூக்குமா? இவள் மனதை கட்டி ஆளா போகும் அந்த ராஜகுமாரன் யார்? காண்போம் காலை விடியல் இருவருக்கும் வைத்து இருக்கும் திருப்பம் என்ன?

காதல் கூடுமா 💞...
 

Author: velvizhiyaal
Article Title: கனவு 3
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Nov 26, 2023
Messages
47
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Top