அத்தியாயம் 6

Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
77
அத்தியாயம் 6

ஆத்மி பார்வை சுழலவிட்டு பதட்டமாக வழியை பார்க்க அவளுக்கு பின்னால் இருந்த சகதியில் இருந்து ஒரு உருவம் ஆத்மியை நெருங்கி கால் கையால் ஊர்ந்து வந்தது.நீண்ட நகம் கொண்ட கைகளால் உடும்பு போல ஊர்ந்து ஆத்மியை நெருங்கியது.

சத்தம் கேட்டு பின்னால் திரும்பியவள் அந்த உருவத்தை கண்டு அரண்டு போனாள். தப்பிக்கலாம் என ஆத்மி காலை தூக்க அவளை அந்த சகதிக்குள் தரதரவென இழுத்து கொண்டு போனது.

" என்னைவிடு. என் கால விடு. எழில் என்னை காப்பாத்துங்க. என்னை விடு " ஆத்மி அலறிய அலறலில் சோபாவில் படுத்திருந்த எழில் பதறி விளக்கை போட வழக்கம் போல் மெத்தையில் ஏதோ கெட்ட கனவு கண்டு துடித்து கொண்டிருந்தாள் ஆத்மி.

அவள் அருகில் ஓடியவன் கன்னம் தட்டியபடி " ஆத்மி ஆத்மி. கண்ண திற. நா உன் பக்கத்துல தான் இருக்கேன். கண்ண திற ஆத்மி " என்று உலுக்கவே கனவில் இருந்து தெளிந்தவள் எழிலை தாவி அணைத்து கொண்டாள் பயத்தில். மூச்சு வாங்கி உடல் எல்லாம் அந்த குளிரிலும் வேர்த்து நடுங்கியது.

மெத்தையில் அமர்ந்து ஆத்மியை நெஞ்சில் தாங்கி கொண்டவன் அவளின் தலை வருட ஆத்மியின் உடல் பயத்தில் நடுங்கியது. அதை உணர்ந்தவன் " ஆத்மி ஏன் இப்டி பயபடுற.. இது ஒரு கனவு தான் ஆத்மி " என்று புரிய வைக்க

அவனை விட்டு இம்மியளவும் விலகாதவள் " இல்ல எழில் அது கனவா என்னால நெனைக்க முடியல. உண்மையா நடந்த மாதிரி பதறுது " என்று பயத்தில் நடுங்க அணைத்து கொண்டவன்

" அதான் நா உன் பக்கத்துல இருக்கேன்ல பயம் இல்லாம தூங்கு. கண்ண மூடு " என்று எழில் அவளை தட்டி கொடுக்க அவனின் சட்டையை ஒரு கையால் இறுக்க பிடித்து கொண்டே உறங்கி போனாள் ஆத்மி.

எழில் அவளின் முகத்தையே தான் பார்த்து கொண்டிருந்தான். அவன் அவளிடம் எடுத்து கொள்ளும் உரிமை எழிலுக்கு ஆச்சர்யத்தையும் வியப்பையும் தந்தது.

அவன் மனதில் பல கேள்விகள். இவளிடம் நான் ஏன் இத்தனை நெருக்கம் காட்ட வேண்டும். அவள் நடுங்கினாள் என் மனம் ஏன் துடிக்க வேண்டும். அவள் பயத்தில் பதறுகையில் அவளின் கையை பிடிக்க தூண்டும் என் மனதின் நோக்கம் என்ன? இப்படி அவளை அணைத்து பாதுகாப்பாய் இருக்க எங்கும் என் இதயத்தின் எண்ணம் என்ன? என எண்ணற்ற சிந்தனையில் மூழ்கியவன் அப்படியே உறங்கி போனான்.



எப்போ தூங்குனோம் என்று தெரியாமலே தூங்கி எழுந்தவன் முதலில் கண்டது ஆத்மியை தான். நல்ல கனவில் இருக்கிறாள் போல அவள் இதழில் புன்னைகை தவழ்ந்தது.

அவள் தூக்கத்தை கலைக்கும் எண்ணம் சிறிதும் எழிலுக்கு இல்லை.

அவனை மேலும் சிரமமாக்காமல் தூக்கம் கலைந்தவள் அருகில் எழிலை கண்டு பதறி விலகினாள்.

" ஹேய் டோன்ட் பேனிக். நீ ஏதோ கெட்ட கனவு கண்டு பயந்து கத்துன.... அதான் துணைக்கு உன் பக்கத்துல ஒக்காந்தேன் நீயும் தூங்கிட்ட நானும் தூங்கிட்டேன் " என்று எழில் அவளின் பயம் கண்டு விளக்கம் குடுக்க சங்கடமாக பார்த்தவள்

" சாரி சார் உங்கள ரொம்ப தொல்ல பண்ணிட்டேன்..... ஐ அம் எஸ்ட்ரீமிலி சாரி " என்றவளை பார்த்து சிரித்தவன் மெத்தையில் இருந்து எழ அவனின் வலது தோள் பட்டை நன்றாக வலித்தது.


" ஹா அம்மா " என்று வலியில் சிறு முனகல் வெளிப்பட பதறியவள்

" அச்சோ.... என்னாச்சு சார்.... ரொம்ப வலிக்குதா.... என்னால தான் " கண்ணெல்லாம் கலங்க அதை காண முடியாதவன்


" ஹேய் ஆத்மி அதுலாம் ஒன்னும் இல்ல..... இது கொஞ்ச நேரத்துல சரி ஆகிரும்..... நீ ரெடியாகு நாம சீக்கிரம் அந்த முனிவர பாக்கனும் " என்றவன் ஒரு சிரிப்போடு வெளியேற ஆத்மிக்கு தான் ஒரு மாதிரி ஆகி போனது.

************ ************ ************

எல்லாரும் சாப்பிட்டு முடித்து அந்த காட்டை நோக்கி சென்றனர். உள்ளே நடந்து செல்ல மட்டுமே முடியும் என்பதால் நால்வரும் காரை ஓரமாக நிறுத்திவிட்டு காட்டிற்குள் நடந்து சென்றனர்.

ஆத்மிக்கு எங்கு கனவில் தொலைந்தது போல் தொலைந்து விடுவோமோ என்ற பயம். அதனாலே எழிலின் கையை இறுக்கி பிடித்து கொள்ள எழில் பெரிதாக ஒன்றும் நினைக்காமல் அவள் கையை பிடித்து கொண்டு செல்ல பின்னால் ஆரவும் கணபதியும் குறுகுறுவென பார்த்தனர்.

" டேய் இவன் அந்த பொண்ணுக்கு பாதுகாப்பா இருப்பான்னு பார்த்தா... பாய்பிரண்ட் அளவுக்கு போறான்.... இது சரி இல்லையே " என்ற ஆரவின் தலையில் தட்டிய கணபதி

" நீ சிங்கிளா இருக்கேனு வயித்தெரிச்சல்டா.... அதான் அவன அப்டி பார்த்ததும் உனக்கு இங்க பொகையுது " என்றவனின் கிண்டலில் காண்டானவன் எனக்குன்னு ஒருத்தி பொறந்திருப்பா என்ற ஆரவ்,

'' எனக்கென ஏற்கனவே பிறந்தவள் எவளோ இதயத்தை கயிருகட்டி இழுத்தவள் எவளோ" என்று ஆரவ் பாட கணபதி சும்மா இல்லாமல்

" மச்சி அந்த இவ எவன்னு நா சொல்லவா "என்றவனின் நோக்கம் அறியாமல் ஆரவும் ஆர்வமாய் " யாரு மச்சி " என இளித்து கொண்டே கேட்க சகிக்க முடியாத கணபதி

" உனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவள் தான் இதயத்தை குடலை கட்டி துரத்துபவள் அவள் தான் " அவனை போலவே பாடி காட்ட ஏகத்துக்கும் வெறியான ஆரவ்

" டேய் அடங்கு... நேத்து ரைட்டர் லூசுகிட்ட ஒரு டீலிங் போட்ருக்கேன்...... என்னி ஒரே வாரத்துல "

" உனக்கும் அந்த தலை வச்ச தாய்க்கிழவிக்கும் கல்யாணம் அதானே " என்று சொல்லிய கணபதியை மிரண்டு பார்த்த ஆரவ்

" இப்போ எதுக்குடா அவளை நியாபக படுத்துற..... என்ன மூஞ்சி அது ப்ப்ப்பா " சிலாகித்து ஆரவ் சொல்ல சிரித்த கணபதி

" மச்சி எனக்கென்னவோ அந்த தாய்க்கிழவிக்கு உன்மேல ஒரு அது இருக்குமோ... இல்ல இது இருக்குமோ " என்ற கணபதியை கோவம் தீர அடித்த ஆரவ்

உன்கூட மனுஷன் வருவானா போய் தொலை என்ற ஆரவ் வேக வேகமாக செல்ல சிரித்த கணபதி பின்னாலே சென்றான்.



************ *********** ************

ஒரு இடத்தில் ஆணி அடித்தாற்போல் ஆத்மி நின்றதில் குழம்பி போனவன் என்னவென்று கேட்க ஒரு இடத்தை சுட்டி காட்டியவள் அவள் கனவை கூற அவளின் பயத்துக்கு ஆறுதல் கூறியவன் முனிவரின் குடிசைக்கு சென்றான்.

நால்வரும் அந்த நடுக்காட்டில் இருக்கும் குடிசைக்கு வந்து விட்டனர். முன்னால் வந்ததும் உள்ளே இருந்து அவரின் உதவியாளர் ஒருவர் வந்தவன்

'' சாமி உங்கள உள்ளே வர சொன்னாங்க " என்றதும் நால்வருக்கும் பேர் அதிர்ச்சி. எந்த ஒரு தகவலும் இல்லாமல் வந்தவர்களை அந்த முனிவர் அறிந்து கொண்டதில் வியப்பு தான்.
 

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 6
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Mar 6, 2025
Messages
31
அத்தியாயம் 6

ஆத்மி பார்வை சுழலவிட்டு பதட்டமாக வழியை பார்க்க அவளுக்கு பின்னால் இருந்த சகதியில் இருந்து ஒரு உருவம் ஆத்மியை நெருங்கி கால் கையால் ஊர்ந்து வந்தது.நீண்ட நகம் கொண்ட கைகளால் உடும்பு போல ஊர்ந்து ஆத்மியை நெருங்கியது.

சத்தம் கேட்டு பின்னால் திரும்பியவள் அந்த உருவத்தை கண்டு அரண்டு போனாள். தப்பிக்கலாம் என ஆத்மி காலை தூக்க அவளை அந்த சகதிக்குள் தரதரவென இழுத்து கொண்டு போனது.

" என்னைவிடு. என் கால விடு. எழில் என்னை காப்பாத்துங்க. என்னை விடு " ஆத்மி அலறிய அலறலில் சோபாவில் படுத்திருந்த எழில் பதறி விளக்கை போட வழக்கம் போல் மெத்தையில் ஏதோ கெட்ட கனவு கண்டு துடித்து கொண்டிருந்தாள் ஆத்மி.

அவள் அருகில் ஓடியவன் கன்னம் தட்டியபடி " ஆத்மி ஆத்மி. கண்ண திற. நா உன் பக்கத்துல தான் இருக்கேன். கண்ண திற ஆத்மி " என்று உலுக்கவே கனவில் இருந்து தெளிந்தவள் எழிலை தாவி அணைத்து கொண்டாள் பயத்தில். மூச்சு வாங்கி உடல் எல்லாம் அந்த குளிரிலும் வேர்த்து நடுங்கியது.

மெத்தையில் அமர்ந்து ஆத்மியை நெஞ்சில் தாங்கி கொண்டவன் அவளின் தலை வருட ஆத்மியின் உடல் பயத்தில் நடுங்கியது. அதை உணர்ந்தவன் " ஆத்மி ஏன் இப்டி பயபடுற.. இது ஒரு கனவு தான் ஆத்மி " என்று புரிய வைக்க

அவனை விட்டு இம்மியளவும் விலகாதவள் " இல்ல எழில் அது கனவா என்னால நெனைக்க முடியல. உண்மையா நடந்த மாதிரி பதறுது " என்று பயத்தில் நடுங்க அணைத்து கொண்டவன்

" அதான் நா உன் பக்கத்துல இருக்கேன்ல பயம் இல்லாம தூங்கு. கண்ண மூடு " என்று எழில் அவளை தட்டி கொடுக்க அவனின் சட்டையை ஒரு கையால் இறுக்க பிடித்து கொண்டே உறங்கி போனாள் ஆத்மி.

எழில் அவளின் முகத்தையே தான் பார்த்து கொண்டிருந்தான். அவன் அவளிடம் எடுத்து கொள்ளும் உரிமை எழிலுக்கு ஆச்சர்யத்தையும் வியப்பையும் தந்தது.

அவன் மனதில் பல கேள்விகள். இவளிடம் நான் ஏன் இத்தனை நெருக்கம் காட்ட வேண்டும். அவள் நடுங்கினாள் என் மனம் ஏன் துடிக்க வேண்டும். அவள் பயத்தில் பதறுகையில் அவளின் கையை பிடிக்க தூண்டும் என் மனதின் நோக்கம் என்ன? இப்படி அவளை அணைத்து பாதுகாப்பாய் இருக்க எங்கும் என் இதயத்தின் எண்ணம் என்ன? என எண்ணற்ற சிந்தனையில் மூழ்கியவன் அப்படியே உறங்கி போனான்.



எப்போ தூங்குனோம் என்று தெரியாமலே தூங்கி எழுந்தவன் முதலில் கண்டது ஆத்மியை தான். நல்ல கனவில் இருக்கிறாள் போல அவள் இதழில் புன்னைகை தவழ்ந்தது.

அவள் தூக்கத்தை கலைக்கும் எண்ணம் சிறிதும் எழிலுக்கு இல்லை.

அவனை மேலும் சிரமமாக்காமல் தூக்கம் கலைந்தவள் அருகில் எழிலை கண்டு பதறி விலகினாள்.

" ஹேய் டோன்ட் பேனிக். நீ ஏதோ கெட்ட கனவு கண்டு பயந்து கத்துன.... அதான் துணைக்கு உன் பக்கத்துல ஒக்காந்தேன் நீயும் தூங்கிட்ட நானும் தூங்கிட்டேன் " என்று எழில் அவளின் பயம் கண்டு விளக்கம் குடுக்க சங்கடமாக பார்த்தவள்

" சாரி சார் உங்கள ரொம்ப தொல்ல பண்ணிட்டேன்..... ஐ அம் எஸ்ட்ரீமிலி சாரி " என்றவளை பார்த்து சிரித்தவன் மெத்தையில் இருந்து எழ அவனின் வலது தோள் பட்டை நன்றாக வலித்தது.


" ஹா அம்மா " என்று வலியில் சிறு முனகல் வெளிப்பட பதறியவள்

" அச்சோ.... என்னாச்சு சார்.... ரொம்ப வலிக்குதா.... என்னால தான் " கண்ணெல்லாம் கலங்க அதை காண முடியாதவன்


" ஹேய் ஆத்மி அதுலாம் ஒன்னும் இல்ல..... இது கொஞ்ச நேரத்துல சரி ஆகிரும்..... நீ ரெடியாகு நாம சீக்கிரம் அந்த முனிவர பாக்கனும் " என்றவன் ஒரு சிரிப்போடு வெளியேற ஆத்மிக்கு தான் ஒரு மாதிரி ஆகி போனது.

************ ************ ************

எல்லாரும் சாப்பிட்டு முடித்து அந்த காட்டை நோக்கி சென்றனர். உள்ளே நடந்து செல்ல மட்டுமே முடியும் என்பதால் நால்வரும் காரை ஓரமாக நிறுத்திவிட்டு காட்டிற்குள் நடந்து சென்றனர்.

ஆத்மிக்கு எங்கு கனவில் தொலைந்தது போல் தொலைந்து விடுவோமோ என்ற பயம். அதனாலே எழிலின் கையை இறுக்கி பிடித்து கொள்ள எழில் பெரிதாக ஒன்றும் நினைக்காமல் அவள் கையை பிடித்து கொண்டு செல்ல பின்னால் ஆரவும் கணபதியும் குறுகுறுவென பார்த்தனர்.

" டேய் இவன் அந்த பொண்ணுக்கு பாதுகாப்பா இருப்பான்னு பார்த்தா... பாய்பிரண்ட் அளவுக்கு போறான்.... இது சரி இல்லையே " என்ற ஆரவின் தலையில் தட்டிய கணபதி

" நீ சிங்கிளா இருக்கேனு வயித்தெரிச்சல்டா.... அதான் அவன அப்டி பார்த்ததும் உனக்கு இங்க பொகையுது " என்றவனின் கிண்டலில் காண்டானவன் எனக்குன்னு ஒருத்தி பொறந்திருப்பா என்ற ஆரவ்,

'' எனக்கென ஏற்கனவே பிறந்தவள் எவளோ இதயத்தை கயிருகட்டி இழுத்தவள் எவளோ" என்று ஆரவ் பாட கணபதி சும்மா இல்லாமல்

" மச்சி அந்த இவ எவன்னு நா சொல்லவா "என்றவனின் நோக்கம் அறியாமல் ஆரவும் ஆர்வமாய் " யாரு மச்சி " என இளித்து கொண்டே கேட்க சகிக்க முடியாத கணபதி

" உனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவள் தான் இதயத்தை குடலை கட்டி துரத்துபவள் அவள் தான் " அவனை போலவே பாடி காட்ட ஏகத்துக்கும் வெறியான ஆரவ்

" டேய் அடங்கு... நேத்து ரைட்டர் லூசுகிட்ட ஒரு டீலிங் போட்ருக்கேன்...... என்னி ஒரே வாரத்துல "

" உனக்கும் அந்த தலை வச்ச தாய்க்கிழவிக்கும் கல்யாணம் அதானே " என்று சொல்லிய கணபதியை மிரண்டு பார்த்த ஆரவ்

" இப்போ எதுக்குடா அவளை நியாபக படுத்துற..... என்ன மூஞ்சி அது ப்ப்ப்பா " சிலாகித்து ஆரவ் சொல்ல சிரித்த கணபதி

" மச்சி எனக்கென்னவோ அந்த தாய்க்கிழவிக்கு உன்மேல ஒரு அது இருக்குமோ... இல்ல இது இருக்குமோ " என்ற கணபதியை கோவம் தீர அடித்த ஆரவ்

உன்கூட மனுஷன் வருவானா போய் தொலை என்ற ஆரவ் வேக வேகமாக செல்ல சிரித்த கணபதி பின்னாலே சென்றான்.



************ *********** ************

ஒரு இடத்தில் ஆணி அடித்தாற்போல் ஆத்மி நின்றதில் குழம்பி போனவன் என்னவென்று கேட்க ஒரு இடத்தை சுட்டி காட்டியவள் அவள் கனவை கூற அவளின் பயத்துக்கு ஆறுதல் கூறியவன் முனிவரின் குடிசைக்கு சென்றான்.

நால்வரும் அந்த நடுக்காட்டில் இருக்கும் குடிசைக்கு வந்து விட்டனர். முன்னால் வந்ததும் உள்ளே இருந்து அவரின் உதவியாளர் ஒருவர் வந்தவன்

'' சாமி உங்கள உள்ளே வர சொன்னாங்க " என்றதும் நால்வருக்கும் பேர் அதிர்ச்சி. எந்த ஒரு தகவலும் இல்லாமல் வந்தவர்களை அந்த முனிவர் அறிந்து கொண்டதில் வியப்பு தான்.
என்னடா நடக்குது இங்க 🙄🙄🙄
 
Top