அத்தியாயம் - 4

New member
Joined
Aug 14, 2025
Messages
13
சுகாசினி நல்லவள் போலவும் சாகித்ய அவளை தவறுதலாக புரிந்து கொண்டான் என்பது போலவும் அபிஜித் பேசிக் கொண்டிருக்க

அவன் கூறியதை கேட்டு நக்கலாக ஒரு புன்னகையை உதிர்த்தான். ஆனால் அது அவர்களுக்கு அவன் நார்மலாக சிரிப்பது போல் இருந்தது.

அதைக் கேட்ட சுகாசினி அபிஜித்தை பார்த்து புன்னகை சிந்தியவள் திரும்பி தனது காதலனை பார்த்தவள்

பாரு உன்னுடைய பிரண்டுக்கு கூட என்னுடைய மனசுக்கு புரியுது உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது? உன் உடம்பு சரியா போகட்டும் அதன் பிறகு பார்த்துக்கலாம் என்று அவள் மீண்டும் மழுப்ப

அதைக்கேட்ட சாகித்திய சரி உனக்கு எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்னு தோணுதோ அப்பவே பண்ணிக்கலாம் என்று சொன்னவன்

அங்க டேபிள் மேல இருக்கிற அந்த பைலை மட்டும் எடு! முக்கியமான ஒரு பைல் என்று கூற அதைக் கேட்ட சுகாசினி அதை எடுத்துக்கொண்டு நடந்து வந்து கொண்டிருக்க

நம்ம ரெண்டு பேரும் ஷாப்பிங் போலாமா சுகா என்று கேட்டான்.

அந்த சந்தோஷத்தில் வேகமாக ஓடி வந்தவள் கால் டேபிளில் இடித்து கையில் இருந்த பைல் கீழே விழுந்து விட

அதிலிருந்த அத்தனை பேப்பர்களும் காற்றில் பறந்தது.

அதையெல்லாம் பார்த்த சாகித்ய அய்யய்யோ அதெல்லாம் எடு இம்பார்டன்டான பேப்பர் என்று கூற

அவளும் என்னோட கால் இடிச்சுக்கிட்டேன் என்று சொன்னவள் தன் அருகில் யாரோ வர நிமிர்ந்து பார்க்க

அங்கே அபிஜித் வேகமாக ஓடி வந்தவன் ஐயோ என்னாச்சு சுஹா உனக்கு என்று கேட்டுக்கொண்டே அவள் இடித்த இடத்தை தடவி கொடுத்தான்.

அதைக் கண்ட சாகித்ய பல்லை கடிக்க

சுகாசினி தான் அபி என்ன பண்ற தேவ் பாத்துட்டு இருக்கான் என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறியவள்

ஒன்னும் பிரச்சனை இல்ல நான் பாத்துக்குறேன் என்று சமாளிக்கும் விதமாக சத்தமாக கூறியவள் அவனிடம் இருந்து தள்ளி நின்றாள்.

சரி இந்த பேப்பர் கொண்டு வந்து குடு என்று கேட்டவுடன் அப்பொழுது தான் அந்த ஞாபகம் வர இருவரும் பேப்பரை எடுத்துக் கொண்டிருக்க எதைச்சையாக அதில் ஒரு பேப்பரை பார்த்த சுகாசினி அதில் அவளும் அபிஜித்தும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இருப்பதே கண்டு அப்படியே அந்த பேப்பரை நழுவி விட்டு திரும்பி தேவை பார்க்க

தன்னையே முறைத்து பார்த்துக் கொண்டிருக்கும் சாகித்யாவை பார்வையை கண்டு அதிர்ச்சி அடைந்தால்.

அவன் அவளைப் பார்த்து நக்கல் சிரிப்பு ஒன்றை உதிர்த்தவன் என்னாச்சு சுகா அந்த பேப்பர் இங்க கொண்டு வா! ரொம்ப முக்கியமான பேப்பர்ஸ். என்று சொன்னபொழுதும் அவள் அசையாமல் நிற்க

அதனால் கோபம் அடைந்தவன் அதை இங்க கொண்டு வா.... என்று அந்த ஹாலே அதிரும் வண்ணம் கத்தினான்.

அவன் கத்தலில் அங்கே இருந்த அனைவரின் மனதிலும் அச்சம் ஏற்பட

அவன் கத்திய சத்தத்தில் உடல் தூக்கி வாரி போட அதிர்ச்சியாக அவனைப் பார்த்து நின்று கொண்டிருந்தவள் கைகள் நடுங்க பேப்பரைக் கொண்டு வந்து அவன் கைகளில் கொடுத்தாள்.

அப்படியே பார்வையை அபிஜித் மீதும் திருப்பினான்.

அவனும் அதில் இருந்தவைகளை பார்த்து அச்சத்துடன் நண்பனை நோக்க

என்ன மிஸ்டர் அபிஜித் அதுல இருக்கிற விஷயங்கள் உண்மைதானே உங்க ரெண்டு பேரோட வண்டவாளம் தண்டவாளம் ஏறிடுச்சா ?

எனக்கு தெரிஞ்ச இன்னும் அதுல எனக்கு தெரியாத விஷயங்கள் கண்டிப்பா இருக்கும்னு நினைக்கிறேன். பட் உங்க ரெண்டு பேரோட கள்ளத்தொடர்பு ப்ரூப் பண்றதுக்கு இது போதும்! என்று சொன்னவன் கண்களில் நெருப்பு மட்டும் வந்திருந்தால் அதை வைத்தே இருவரையும் அந்த இடத்திலேயே சாம்பலாக்கி இருப்பான்.

அந்த கையில் இருந்த பேப்பரை கீழே போட்ட அபிஜித், சுஹாவின் அருகில் வந்தவன் அவள் தோள்களில் கையை போட்டுக்கொண்டு மற்றொரு கையை தனது பாக்கெட்டுக்குள் விட்டு தைரியமாக இவன் முன்பு நின்றவன்

ஆமா நானும் இவளும் காதலிக்கிறோம் அதுக்கு என்ன இப்போ நீ இல்லாத நேரத்துல அவ எனக்கு கம்பெனி கொடுத்தா ! அதனால இப்ப என்ன ? நீயே நொண்டி ஆகிட்ட? உன்னைய கட்டிக்கிட்டு காலம் புல்லா அவ எந்த சந்தோஷத்தையும் பார்க்காமல் இருக்கணுமா? அது மட்டும் இல்லாம மிலிட்டரிக்கு போயி உன் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வேலை பார்க்கிற உனக்கு எல்லாம் காதல் ஒரு கேடா டா! தேவ்வை பார்த்து கேட்டான்.

அதில் கோபமடைந்தவன் முறைத்து பார்க்க தற்பொழுது சுகாசினையும் தைரியத்தை வாரவழைத்துக்கொண்டு

அபி சொல்றதுல என்ன தப்பு இருக்கு! நீ விடுமுறைக்கு வந்தப்ப எல்லாம் உன்கிட்ட கிஸ் பண்ண ட்ரை பண்ணி இருக்கேன் ? எப்பவாவது விட்டு இருக்கியா? நீ சரியான பூமர் டா கல்யாணத்துக்கு அப்புறம் பாத்துக்கலாம்னு சொல்லி என்னோட உயிரை வாங்குவ? இந்த காலத்துல எல்லாரும் அப்படியா இருக்காங்க இவன் வருஷத்துக்கு போயிடுவானா அதுக்கப்புறம் இவன் வர்றப்ப நான் இவனை லவ் பண்ணனும் அதுவரைக்கும் எந்த சுகம் துக்கமும் இல்லாமல் நான் பாட்டுக்கு ஜடமா வாழ்றதுக்கு நான் என்ன கல்லா ? எனக்கு தெரிஞ்சு போச்சு உன்னால இனிமே எழுந்து நடக்கவே முடியாது அப்படி இருக்கிறப்போ நீ எப்படி கல்யாணத்தை பத்தி பேசலாம் அதுக்கெல்லாம் முதல்ல உனக்கு தகுதி இருக்கா? எத்தனை நாள் உன் பின்னாடி கெஞ்சி இருப்பேன் கல்யாணம் பண்ணிக்கலாம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு. அப்ப எல்லாம் பெரிய இவன் மாதிரி பேசுன? இப்ப சாருக்கு என்ன கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை வந்து இருக்கு முடியாதப்போ ? என்று அவள் குரல் உயர்த்த

கோபத்தில் தனது பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து அவர்கள் முன்பு நீட்ட அப்படியே கப்சிப் என்று அமைதியானது.

குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு இருந்தது அந்த அறை.

சுகாசினி ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "நீ ஒரு கோழை உண்மைய அக்சப்ட் பண்ண தெரியாதவன் அதனாலதான் நான் சொல்றத உன்னால ஏத்துக்க முடியல. இதுக்கு மேல உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை. நான் ஒன்னும் ஒன்னும் உண்மையா எல்லாம் காதலிக்கல! நீ ஒரு பெரிய பணக்கார வீட்டு பையன் ஒழுங்கா கட்டி கிட்ட சந்தோஷமா இருக்கலாம்னு நினைச்சு தான் காதலிச்சேன்.

ஆனா நீயும் இப்படி கால ஒடச்சுக்கிட்டு ஊனம் ஆகி வந்து நிக்குற இனிமேட்டு இவ்வளவு பணம் இருந்தா என்ன ஒரு பொண்ணுக்கு சுகம் கொடுக்க முடியாதவன் உனக்கெல்லாம் எதுக்கு மீசை அதை வழிச்சு எடுத்துடு வந்துட்டான் பெருசா பேசறதுக்கு! என்று கூறியவள்

நீ உண்மையான ஆம்பளையா? உங்க அம்மாவுக்கு மட்டும் பொறந்தவனா இருந்தனா இதுக்கு மேல என்ன தொல்லை பண்ணாத என்று அவள் வார்த்தைகளை விட

தனது கையில் இருந்து துப்பாக்கியை எடுத்து சீலிங்கை பார்த்து இரண்டு முறை சுட்டான்.

அதில் அனைவருக்கும் சர்வமும் அடங்கிவிட ரெண்டு பேரும் வாய மூடிட்டு ஒழுங்கா மரியாதையா வெளியில போயிடுங்க. இதுக்கு மேல உங்களோட முகத்தை நான் பார்க்கவே கூடாது மீறி பார்த்தேன்னா அன்னைக்கு தான் உங்க ரெண்டு பேரோட கடைசி நாளா இருக்கும்! என்று சொன்னவன் பார்வையை திருப்பிக் கொள்ள

விட்டால் போதும் என்று இருவரும் அங்கிருந்து செல்ல முற்பட

சுகாசினியை சத்தமாக அழைத்து அவள் நடையை நிறுத்தியவன் ஒரு நிமிஷம்

என்ன என்பது போல் அவனை திரும்பி பார்க்க அந்த கண்களில் பயம் மட்டும்தான் இருந்தது அதை கண்டு நக்கலாக சிரித்தவன்

என்னுடைய உடம்பு கண்டிப்பா பூரணமா குணமடைந்து விடும் நான் என்னுடைய அம்மாவுக்கு மட்டும்தான் பிறந்தேன் அது எனக்கும் தெரியும். நான் சரியான அதுக்கப்புறம் உன் பக்கத்துல இருக்கானே அவன் உன்னை விட ஒரு நல்ல பிகர் கிடைச்சதுக்கு அப்புறம் கண்டிப்பா உன்னை கழட்டி விடுவான் அப்போ மறுபடியும் என்கிட்ட வரலாம்னு மட்டும் நீ நினைக்காத அப்படி வந்தனா நீ ஒரு அப்பனுக்கு பொறக்கலான நான் முடிவு பண்ணிக்கிறேன் இப்ப நீ போகலாம் என்று சொன்னவனை அவளால் முறைக்க மட்டும் தான் முடிந்தது.

அவர்கள் செல்வதையே வெறுப்பாக பார்த்தவன் பின் தனது அறைக்கு வந்தவன் அங்கே இருந்த அனைத்து பொருட்களையும் உடைத்து அறையை ஒரு வழி ஆக்கினான்.

சிறிது நேரம் கழித்து சாப்பிட சொல்லி அழைக்க வந்த சுரேஷையும் கடுமையான வார்த்தைகளில் திட்டி அனுப்பி விட

அதன் பிறகு வந்த நாட்கள் அனைத்தும் அவன் அறைக்குள் இருந்து வெளியே வராமலே இருந்தான்.

வசுந்திராவிடம் சுரேஷ் அனைத்து விஷயங்களையும் கூற தனது மகனை பார்க்க முயன்று தோற்றுப் போனார்.

அவன் அரை கதவை திறக்கவே இல்லை இரண்டு நாட்கள் சாப்பிடாமல் கொள்ளாமல் கோபத்தில் இருந்தவன் மூன்றாவது நாள் கதவு திறந்து வெளியே வந்தான்.

முகத்தில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் அதில் இருக்கம் , கோபம் இரண்டைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை.

தனது மகனை கண்டவர் சந்தோஷத்துடன் அவன் அருகில் பேச பார்வையாலேயே அவரை தள்ளி நிறுத்தியவன் , தன்னை சமன்படுத்திக் கொண்டு

சாரிமா! டென்ஷன்ல இருந்தேன் அதனால தான். கண்டிப்பா உங்கள ஹர்ட் பண்ணி இருப்பேன் அதனாலதான் வெளியே வரல என்ன மன்னிச்சிடுங்க என்று சொன்னவன்

சாப்பிட வாங்க நீங்களும் சரியா சாப்பிட மாட்டீங்கன்னு எனக்கு தெரியும் என்று கைப்பிடித்த அழைத்துக் கொண்டு டைனிங் டேபிளில் அமர வைத்து தானே அம்மாவிற்கு பரிமாறினான்.

இப்பொழுதாவது தனது மகன் தன்னைப் புரிந்து கொண்டான் என்று சந்தோஷப்பட்டவர் இவன் உடல்நிலை சரியானதும் அந்த காதலிக்கும் பெண்ணை அழைத்து வந்து கல்யாணம் செய்து வைக்கலாம் என்று நினைத்திருக்க

அதற்குள் முதலுக்கே மோசம் செய்வதுபோல் அந்தப் பெண்ணின் நடத்தை கேவலமாக இருப்பதை சுரேஷின் மூலம் தெரிந்து கொண்டவர் தனது மகன் வாழ்க்கை எப்படி செல்ல போகிறதோ என்று நினைத்து கவலை கொள்ள ஆரம்பித்தார்.

இப்படியே ஒரு வாரம் கடந்து செல்ல

அன்று காலை வசுந்தரா எப்பொழுதும் போல் காலேஜிற்கு சென்ற அலுவலக வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தவர் திடீர் என்று மயங்கி சரிய சிறிது நேரம் கழித்து அந்த அறைக்கு வந்த அவருடைய பி ஏ சேகர் இந்த காட்சியை பார்த்து பதட்டம் அடைந்தவன் அவரை எழுப்ப முயல

ஆனால் அவரோ அப்பொழுதும் மயக்கத்திலேயே இருந்தார்.

உடனே ஆம்புலன்ஸ்க்கு கால் செய்து அவரை எப்பொழுதும் சிகிச்சை பார்க்கும் மருத்துவமனையிலேயே அட்மிட் செய்தான் சேகர்.

அட்மிட் செய்து விட்டு வெளியே வந்தவன் உடனடியாக அந்த விஷயத்தை சாகித்யாவிற்கு ஃபோன் செய்து கூறினான்.

அவனும் அடுத்த அரை மணி நேரத்தில் மருத்துவமனைக்கு வந்தவன் சேகர் இடம் விஷயத்தை கேட்டறிந்து தனது தாயை பார்க்க முனைய ஆனால் அவருக்கு ஓய்வு தேவை என்று அவன் கூறி விட உடனே அந்த மருத்துவரை காண சென்றான்.

மருத்துவர் அவன் உறவு முறையை கேட்டு தெரிந்து கொண்டு அவங்க எதையோ நினைச்சு மனச போட்டு ரொம்ப குழப்பிக்கிறாங்க அதனால தான் இந்த மாதிரி ஆயிருக்கு பிரஷர் ஜாஸ்தியாய் மயக்கம் போட்டு இருக்காங்க அவங்க மனசு கஷ்டப்படாம பாத்துக்கோங்க அண்ட் உங்க அம்மாவை இத்தனை வருஷமா ட்ரீட் பண்ணி பாக்குற ஒரு டாக்டரா இல்லாம வெல்விஷரா சொல்றேன். இனிமேலும் அவங்களுக்கு தனிமையை கொடுக்காதீங்க இத்தனை வருஷம் அவங்க நீங்களும் இல்லாம அவங்க ஹஸ்பண்டும் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க இனிமேலாவது உங்க அம்மாவை அரவணைப்பா பாத்துக்கோங்க என்று கூறிய அந்த பெண் மருத்துவர் சென்றுவிட்டார்.

சிறிது நேரத்தில் கண் விழித்த தனது தாயை பார்க்க சென்றவன் அவர் முகத்தில் இருந்த கவலையை எண்ணி அதை தன்னால்தான் என்று தன்னையே கடிந்து கொண்டவன் அவரை அரவணைத்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

தனது மகனின் துயரத்தை புரிந்து கொண்டவர் அவன் முதுகில் தட்டிக்கொடுத்து நான் நல்லா இருக்கேன் டா ஒன்னும் இல்ல உன்ன பத்தி தான் கவலை மற்றபடி இந்த அம்மாவுக்கு என்ன ஆயிடப்போகுது என்று உரைக்க

சாரி நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கீங்கன்னு எனக்கு புரியுது இனிமே நான் உங்களை விட்டு போக மாட்டேன் என்று அவர் கையைப் பிடித்து ஆறுதல் கூற அந்த வார்த்தையில் சந்தோஷம் கொண்டவர் அடுத்து ஒரு மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் ஆகி தனது மகனுடன் இல்லத்திற்கு வந்தார்.

அன்று இரவே ஒரு முடிவு எடுத்தவன் மறுநாள் காலை உணவு உண்ண மேஜைக்கு வந்தவன் தயாராக இருக்கும் தனது அம்மாவை கண்டு அம்மா எங்க கிளம்பிட்டீங்க உங்கள டாக்டர் ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க என்று உரைக்க

அதைக்
கேட்ட சாதித்யா அடுத்து சொன்ன பதிலில் ஆச்சரியமாக அவனே பார்த்தார்.

இதன் தொடர்ச்சி அடுத்த அத்தியாயத்தில்...
 

Author: kadhaa
Article Title: அத்தியாயம் - 4
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Aug 17, 2025
Messages
96
சுகாசினி நல்லவள் போலவும் சாகித்ய அவளை தவறுதலாக புரிந்து கொண்டான் என்பது போலவும் அபிஜித் பேசிக் கொண்டிருக்க

அவன் கூறியதை கேட்டு நக்கலாக ஒரு புன்னகையை உதிர்த்தான். ஆனால் அது அவர்களுக்கு அவன் நார்மலாக சிரிப்பது போல் இருந்தது.

அதைக் கேட்ட சுகாசினி அபிஜித்தை பார்த்து புன்னகை சிந்தியவள் திரும்பி தனது காதலனை பார்த்தவள்

பாரு உன்னுடைய பிரண்டுக்கு கூட என்னுடைய மனசுக்கு புரியுது உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது? உன் உடம்பு சரியா போகட்டும் அதன் பிறகு பார்த்துக்கலாம் என்று அவள் மீண்டும் மழுப்ப

அதைக்கேட்ட சாகித்திய சரி உனக்கு எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்னு தோணுதோ அப்பவே பண்ணிக்கலாம் என்று சொன்னவன்

அங்க டேபிள் மேல இருக்கிற அந்த பைலை மட்டும் எடு! முக்கியமான ஒரு பைல் என்று கூற அதைக் கேட்ட சுகாசினி அதை எடுத்துக்கொண்டு நடந்து வந்து கொண்டிருக்க

நம்ம ரெண்டு பேரும் ஷாப்பிங் போலாமா சுகா என்று கேட்டான்.

அந்த சந்தோஷத்தில் வேகமாக ஓடி வந்தவள் கால் டேபிளில் இடித்து கையில் இருந்த பைல் கீழே விழுந்து விட

அதிலிருந்த அத்தனை பேப்பர்களும் காற்றில் பறந்தது.

அதையெல்லாம் பார்த்த சாகித்ய அய்யய்யோ அதெல்லாம் எடு இம்பார்டன்டான பேப்பர் என்று கூற

அவளும் என்னோட கால் இடிச்சுக்கிட்டேன் என்று சொன்னவள் தன் அருகில் யாரோ வர நிமிர்ந்து பார்க்க

அங்கே அபிஜித் வேகமாக ஓடி வந்தவன் ஐயோ என்னாச்சு சுஹா உனக்கு என்று கேட்டுக்கொண்டே அவள் இடித்த இடத்தை தடவி கொடுத்தான்.

அதைக் கண்ட சாகித்ய பல்லை கடிக்க

சுகாசினி தான் அபி என்ன பண்ற தேவ் பாத்துட்டு இருக்கான் என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறியவள்

ஒன்னும் பிரச்சனை இல்ல நான் பாத்துக்குறேன் என்று சமாளிக்கும் விதமாக சத்தமாக கூறியவள் அவனிடம் இருந்து தள்ளி நின்றாள்.

சரி இந்த பேப்பர் கொண்டு வந்து குடு என்று கேட்டவுடன் அப்பொழுது தான் அந்த ஞாபகம் வர இருவரும் பேப்பரை எடுத்துக் கொண்டிருக்க எதைச்சையாக அதில் ஒரு பேப்பரை பார்த்த சுகாசினி அதில் அவளும் அபிஜித்தும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இருப்பதே கண்டு அப்படியே அந்த பேப்பரை நழுவி விட்டு திரும்பி தேவை பார்க்க

தன்னையே முறைத்து பார்த்துக் கொண்டிருக்கும் சாகித்யாவை பார்வையை கண்டு அதிர்ச்சி அடைந்தால்.

அவன் அவளைப் பார்த்து நக்கல் சிரிப்பு ஒன்றை உதிர்த்தவன் என்னாச்சு சுகா அந்த பேப்பர் இங்க கொண்டு வா! ரொம்ப முக்கியமான பேப்பர்ஸ். என்று சொன்னபொழுதும் அவள் அசையாமல் நிற்க

அதனால் கோபம் அடைந்தவன் அதை இங்க கொண்டு வா.... என்று அந்த ஹாலே அதிரும் வண்ணம் கத்தினான்.

அவன் கத்தலில் அங்கே இருந்த அனைவரின் மனதிலும் அச்சம் ஏற்பட

அவன் கத்திய சத்தத்தில் உடல் தூக்கி வாரி போட அதிர்ச்சியாக அவனைப் பார்த்து நின்று கொண்டிருந்தவள் கைகள் நடுங்க பேப்பரைக் கொண்டு வந்து அவன் கைகளில் கொடுத்தாள்.

அப்படியே பார்வையை அபிஜித் மீதும் திருப்பினான்.

அவனும் அதில் இருந்தவைகளை பார்த்து அச்சத்துடன் நண்பனை நோக்க

என்ன மிஸ்டர் அபிஜித் அதுல இருக்கிற விஷயங்கள் உண்மைதானே உங்க ரெண்டு பேரோட வண்டவாளம் தண்டவாளம் ஏறிடுச்சா ?

எனக்கு தெரிஞ்ச இன்னும் அதுல எனக்கு தெரியாத விஷயங்கள் கண்டிப்பா இருக்கும்னு நினைக்கிறேன். பட் உங்க ரெண்டு பேரோட கள்ளத்தொடர்பு ப்ரூப் பண்றதுக்கு இது போதும்! என்று சொன்னவன் கண்களில் நெருப்பு மட்டும் வந்திருந்தால் அதை வைத்தே இருவரையும் அந்த இடத்திலேயே சாம்பலாக்கி இருப்பான்.

அந்த கையில் இருந்த பேப்பரை கீழே போட்ட அபிஜித், சுஹாவின் அருகில் வந்தவன் அவள் தோள்களில் கையை போட்டுக்கொண்டு மற்றொரு கையை தனது பாக்கெட்டுக்குள் விட்டு தைரியமாக இவன் முன்பு நின்றவன்

ஆமா நானும் இவளும் காதலிக்கிறோம் அதுக்கு என்ன இப்போ நீ இல்லாத நேரத்துல அவ எனக்கு கம்பெனி கொடுத்தா ! அதனால இப்ப என்ன ? நீயே நொண்டி ஆகிட்ட? உன்னைய கட்டிக்கிட்டு காலம் புல்லா அவ எந்த சந்தோஷத்தையும் பார்க்காமல் இருக்கணுமா? அது மட்டும் இல்லாம மிலிட்டரிக்கு போயி உன் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வேலை பார்க்கிற உனக்கு எல்லாம் காதல் ஒரு கேடா டா! தேவ்வை பார்த்து கேட்டான்.

அதில் கோபமடைந்தவன் முறைத்து பார்க்க தற்பொழுது சுகாசினையும் தைரியத்தை வாரவழைத்துக்கொண்டு

அபி சொல்றதுல என்ன தப்பு இருக்கு! நீ விடுமுறைக்கு வந்தப்ப எல்லாம் உன்கிட்ட கிஸ் பண்ண ட்ரை பண்ணி இருக்கேன் ? எப்பவாவது விட்டு இருக்கியா? நீ சரியான பூமர் டா கல்யாணத்துக்கு அப்புறம் பாத்துக்கலாம்னு சொல்லி என்னோட உயிரை வாங்குவ? இந்த காலத்துல எல்லாரும் அப்படியா இருக்காங்க இவன் வருஷத்துக்கு போயிடுவானா அதுக்கப்புறம் இவன் வர்றப்ப நான் இவனை லவ் பண்ணனும் அதுவரைக்கும் எந்த சுகம் துக்கமும் இல்லாமல் நான் பாட்டுக்கு ஜடமா வாழ்றதுக்கு நான் என்ன கல்லா ? எனக்கு தெரிஞ்சு போச்சு உன்னால இனிமே எழுந்து நடக்கவே முடியாது அப்படி இருக்கிறப்போ நீ எப்படி கல்யாணத்தை பத்தி பேசலாம் அதுக்கெல்லாம் முதல்ல உனக்கு தகுதி இருக்கா? எத்தனை நாள் உன் பின்னாடி கெஞ்சி இருப்பேன் கல்யாணம் பண்ணிக்கலாம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு. அப்ப எல்லாம் பெரிய இவன் மாதிரி பேசுன? இப்ப சாருக்கு என்ன கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை வந்து இருக்கு முடியாதப்போ ? என்று அவள் குரல் உயர்த்த

கோபத்தில் தனது பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து அவர்கள் முன்பு நீட்ட அப்படியே கப்சிப் என்று அமைதியானது.

குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு இருந்தது அந்த அறை.

சுகாசினி ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "நீ ஒரு கோழை உண்மைய அக்சப்ட் பண்ண தெரியாதவன் அதனாலதான் நான் சொல்றத உன்னால ஏத்துக்க முடியல. இதுக்கு மேல உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை. நான் ஒன்னும் ஒன்னும் உண்மையா எல்லாம் காதலிக்கல! நீ ஒரு பெரிய பணக்கார வீட்டு பையன் ஒழுங்கா கட்டி கிட்ட சந்தோஷமா இருக்கலாம்னு நினைச்சு தான் காதலிச்சேன்.

ஆனா நீயும் இப்படி கால ஒடச்சுக்கிட்டு ஊனம் ஆகி வந்து நிக்குற இனிமேட்டு இவ்வளவு பணம் இருந்தா என்ன ஒரு பொண்ணுக்கு சுகம் கொடுக்க முடியாதவன் உனக்கெல்லாம் எதுக்கு மீசை அதை வழிச்சு எடுத்துடு வந்துட்டான் பெருசா பேசறதுக்கு! என்று கூறியவள்

நீ உண்மையான ஆம்பளையா? உங்க அம்மாவுக்கு மட்டும் பொறந்தவனா இருந்தனா இதுக்கு மேல என்ன தொல்லை பண்ணாத என்று அவள் வார்த்தைகளை விட

தனது கையில் இருந்து துப்பாக்கியை எடுத்து சீலிங்கை பார்த்து இரண்டு முறை சுட்டான்.

அதில் அனைவருக்கும் சர்வமும் அடங்கிவிட ரெண்டு பேரும் வாய மூடிட்டு ஒழுங்கா மரியாதையா வெளியில போயிடுங்க. இதுக்கு மேல உங்களோட முகத்தை நான் பார்க்கவே கூடாது மீறி பார்த்தேன்னா அன்னைக்கு தான் உங்க ரெண்டு பேரோட கடைசி நாளா இருக்கும்! என்று சொன்னவன் பார்வையை திருப்பிக் கொள்ள

விட்டால் போதும் என்று இருவரும் அங்கிருந்து செல்ல முற்பட

சுகாசினியை சத்தமாக அழைத்து அவள் நடையை நிறுத்தியவன் ஒரு நிமிஷம்

என்ன என்பது போல் அவனை திரும்பி பார்க்க அந்த கண்களில் பயம் மட்டும்தான் இருந்தது அதை கண்டு நக்கலாக சிரித்தவன்

என்னுடைய உடம்பு கண்டிப்பா பூரணமா குணமடைந்து விடும் நான் என்னுடைய அம்மாவுக்கு மட்டும்தான் பிறந்தேன் அது எனக்கும் தெரியும். நான் சரியான அதுக்கப்புறம் உன் பக்கத்துல இருக்கானே அவன் உன்னை விட ஒரு நல்ல பிகர் கிடைச்சதுக்கு அப்புறம் கண்டிப்பா உன்னை கழட்டி விடுவான் அப்போ மறுபடியும் என்கிட்ட வரலாம்னு மட்டும் நீ நினைக்காத அப்படி வந்தனா நீ ஒரு அப்பனுக்கு பொறக்கலான நான் முடிவு பண்ணிக்கிறேன் இப்ப நீ போகலாம் என்று சொன்னவனை அவளால் முறைக்க மட்டும் தான் முடிந்தது.

அவர்கள் செல்வதையே வெறுப்பாக பார்த்தவன் பின் தனது அறைக்கு வந்தவன் அங்கே இருந்த அனைத்து பொருட்களையும் உடைத்து அறையை ஒரு வழி ஆக்கினான்.

சிறிது நேரம் கழித்து சாப்பிட சொல்லி அழைக்க வந்த சுரேஷையும் கடுமையான வார்த்தைகளில் திட்டி அனுப்பி விட

அதன் பிறகு வந்த நாட்கள் அனைத்தும் அவன் அறைக்குள் இருந்து வெளியே வராமலே இருந்தான்.

வசுந்திராவிடம் சுரேஷ் அனைத்து விஷயங்களையும் கூற தனது மகனை பார்க்க முயன்று தோற்றுப் போனார்.

அவன் அரை கதவை திறக்கவே இல்லை இரண்டு நாட்கள் சாப்பிடாமல் கொள்ளாமல் கோபத்தில் இருந்தவன் மூன்றாவது நாள் கதவு திறந்து வெளியே வந்தான்.

முகத்தில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் அதில் இருக்கம் , கோபம் இரண்டைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை.

தனது மகனை கண்டவர் சந்தோஷத்துடன் அவன் அருகில் பேச பார்வையாலேயே அவரை தள்ளி நிறுத்தியவன் , தன்னை சமன்படுத்திக் கொண்டு

சாரிமா! டென்ஷன்ல இருந்தேன் அதனால தான். கண்டிப்பா உங்கள ஹர்ட் பண்ணி இருப்பேன் அதனாலதான் வெளியே வரல என்ன மன்னிச்சிடுங்க என்று சொன்னவன்

சாப்பிட வாங்க நீங்களும் சரியா சாப்பிட மாட்டீங்கன்னு எனக்கு தெரியும் என்று கைப்பிடித்த அழைத்துக் கொண்டு டைனிங் டேபிளில் அமர வைத்து தானே அம்மாவிற்கு பரிமாறினான்.

இப்பொழுதாவது தனது மகன் தன்னைப் புரிந்து கொண்டான் என்று சந்தோஷப்பட்டவர் இவன் உடல்நிலை சரியானதும் அந்த காதலிக்கும் பெண்ணை அழைத்து வந்து கல்யாணம் செய்து வைக்கலாம் என்று நினைத்திருக்க

அதற்குள் முதலுக்கே மோசம் செய்வதுபோல் அந்தப் பெண்ணின் நடத்தை கேவலமாக இருப்பதை சுரேஷின் மூலம் தெரிந்து கொண்டவர் தனது மகன் வாழ்க்கை எப்படி செல்ல போகிறதோ என்று நினைத்து கவலை கொள்ள ஆரம்பித்தார்.

இப்படியே ஒரு வாரம் கடந்து செல்ல

அன்று காலை வசுந்தரா எப்பொழுதும் போல் காலேஜிற்கு சென்ற அலுவலக வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தவர் திடீர் என்று மயங்கி சரிய சிறிது நேரம் கழித்து அந்த அறைக்கு வந்த அவருடைய பி ஏ சேகர் இந்த காட்சியை பார்த்து பதட்டம் அடைந்தவன் அவரை எழுப்ப முயல

ஆனால் அவரோ அப்பொழுதும் மயக்கத்திலேயே இருந்தார்.

உடனே ஆம்புலன்ஸ்க்கு கால் செய்து அவரை எப்பொழுதும் சிகிச்சை பார்க்கும் மருத்துவமனையிலேயே அட்மிட் செய்தான் சேகர்.

அட்மிட் செய்து விட்டு வெளியே வந்தவன் உடனடியாக அந்த விஷயத்தை சாகித்யாவிற்கு ஃபோன் செய்து கூறினான்.

அவனும் அடுத்த அரை மணி நேரத்தில் மருத்துவமனைக்கு வந்தவன் சேகர் இடம் விஷயத்தை கேட்டறிந்து தனது தாயை பார்க்க முனைய ஆனால் அவருக்கு ஓய்வு தேவை என்று அவன் கூறி விட உடனே அந்த மருத்துவரை காண சென்றான்.

மருத்துவர் அவன் உறவு முறையை கேட்டு தெரிந்து கொண்டு அவங்க எதையோ நினைச்சு மனச போட்டு ரொம்ப குழப்பிக்கிறாங்க அதனால தான் இந்த மாதிரி ஆயிருக்கு பிரஷர் ஜாஸ்தியாய் மயக்கம் போட்டு இருக்காங்க அவங்க மனசு கஷ்டப்படாம பாத்துக்கோங்க அண்ட் உங்க அம்மாவை இத்தனை வருஷமா ட்ரீட் பண்ணி பாக்குற ஒரு டாக்டரா இல்லாம வெல்விஷரா சொல்றேன். இனிமேலும் அவங்களுக்கு தனிமையை கொடுக்காதீங்க இத்தனை வருஷம் அவங்க நீங்களும் இல்லாம அவங்க ஹஸ்பண்டும் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க இனிமேலாவது உங்க அம்மாவை அரவணைப்பா பாத்துக்கோங்க என்று கூறிய அந்த பெண் மருத்துவர் சென்றுவிட்டார்.

சிறிது நேரத்தில் கண் விழித்த தனது தாயை பார்க்க சென்றவன் அவர் முகத்தில் இருந்த கவலையை எண்ணி அதை தன்னால்தான் என்று தன்னையே கடிந்து கொண்டவன் அவரை அரவணைத்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

தனது மகனின் துயரத்தை புரிந்து கொண்டவர் அவன் முதுகில் தட்டிக்கொடுத்து நான் நல்லா இருக்கேன் டா ஒன்னும் இல்ல உன்ன பத்தி தான் கவலை மற்றபடி இந்த அம்மாவுக்கு என்ன ஆயிடப்போகுது என்று உரைக்க

சாரி நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கீங்கன்னு எனக்கு புரியுது இனிமே நான் உங்களை விட்டு போக மாட்டேன் என்று அவர் கையைப் பிடித்து ஆறுதல் கூற அந்த வார்த்தையில் சந்தோஷம் கொண்டவர் அடுத்து ஒரு மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் ஆகி தனது மகனுடன் இல்லத்திற்கு வந்தார்.

அன்று இரவே ஒரு முடிவு எடுத்தவன் மறுநாள் காலை உணவு உண்ண மேஜைக்கு வந்தவன் தயாராக இருக்கும் தனது அம்மாவை கண்டு அம்மா எங்க கிளம்பிட்டீங்க உங்கள டாக்டர் ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க என்று உரைக்க

அதைக்
கேட்ட சாதித்யா அடுத்து சொன்ன பதிலில் ஆச்சரியமாக அவனே பார்த்தார்.

இதன் தொடர்ச்சி அடுத்த அத்தியாயத்தில்...
🤔🤔🤔🤔
 
Member
Joined
Nov 26, 2023
Messages
55
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Top