- Joined
- Nov 10, 2023
- Messages
- 77
- Thread Author
- #1
அத்தியாயம் 23
வேல்பாண்டியன் பங்களாவில் நடந்தவை..
இங்கு ஆத்மி நடக்க போகும் விபரீதத்தையும் அறியாமல் அந்த கேடு கெட்டவன் இருக்கும் பங்களாவில் நுழைந்தாள்.
ரெண்டு அடியாட்கள் மட்டும் துணைக்கு வெளியே இருந்தனர். அவர்கள் ஆத்மீ வருகையை கண்டு வெறி நாய் போல் பார்க்க அந்த அருவருப்பை எல்லாம் பொறுத்து கொண்டவள் வாசலை அடையும் கணம் அவள் உடல் அதிர்ந்து நின்றது.
கண்ணெல்லாம் சிவந்து இருக்க அவள் முகம் கொஞ்சம் மாறி போய் இருந்தது. பழி தீர்க்கும் வெறியோடு ஆத்மீ உடலின் உதவியில் அந்த வீட்டினுள் நுழைந்தாள் பவானி.
முகத்தை சாந்தமாக வைத்து கொண்டு வரவேற்பறை செல்ல மேலிருந்து " மேல வாமா " என்ற சத்தம் கேட்க ஒரு சிரிப்புடன் சென்றாள் ஆத்மீ.
மேல் தளத்தில் இருக்கும் ஒரு பெரிய அறையில் அமர்ந்து மேல் சட்டை இன்றி சரக்கு அடித்து கொண்டிருந்தான் வேல்பாண்டி.
" உள்ள வரலாமா " என்று மென்மையாக கேட்டவளை போதையில் போதையாக பார்க்க பவானிக்கு கோவம் நெருப்பாக எறிந்தது.
வேல்பாண்டியோ எழுந்தவன் ஆத்மீயை நோக்கி நடந்து கொண்டே " ப்பா ரொம்ப நாளுக்கு அப்றம் இப்டி தேவதைய பாக்குறேன் " என்றவாறு கதவை லாக் செய்ய சிரித்த பவானி ஆத்மீ உருவத்தில் இருந்து தன் உருவத்திற்கு மாறியவள்
" ரொம்ப நாளுக்கு முன்னாடி கதற கதற என்ன கொன்ன மாதிரி உன்ன கொல்ல வேண்டாமா " என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பிய வேல்பாண்டி பவானியை கண்டு மிரண்டு போனார்.
" நீ நீ. " என்று வேல்பாண்டி வாய் தந்தியடிக்க சத்தமாக சிரித்த பவானி
" உன் கையால செத்து போன பவானி" என்றவள் கண்ணாலே லாக் செய்தவள் வேல்பாண்டியை நோக்கி நடக்க வேலுக்கு அல்லு ஆனது.
" என் ராகவ் எங்க. சொல்லு " என்று வெறியோடு சொன்னவள் வேல் பாண்டியனின் கழுத்தை பிடித்து சுவரிலே அவனின் தலையை மோதினாள்.
வேல்பாண்டியனின் மண்டை உடைந்து ரத்தம் வழிய அவரின் போதை எல்லாம் தெளிந்து போனது. இன்னும் கொஞ்சம் தான் மனுஷன் சாகும் நிலையில் ஆத்மி உடல் நடுங்கியது.
கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து பவானி ஆவி ஆத்மீ உடல் விட்டு வெளியேறிட மயங்கி விழுந்தாள் ஆத்மீ. அதை கண்ட வேல் இது தான் வாய்ப்பு என்று உடைந்த கட்டிலின் காலால் ஆத்மீ மண்டையிலே " டங். " என்ற சத்தத்துடன் ஓங்கி அடைக்க ரத்தம் வழிந்தது.
அதன் பின் தான் வெளியே இருக்கும் தன் ஆட்களை வேல்பாண்டியன் அழைக்க அவனுங்க நடந்த அசம்பாவிதத்தை கண்டு ஒரு கணம் மிரண்டு போனவர்கள் பின் நிதானமாகி ஆத்மீயை கட்டி வைத்தனர்.
" டேய் அந்த பயல தூக்கிட்டு வாங்கடா " என்று வழியும் ரத்தத்தையும் பொருட்படுத்தாமல் பழி தீர்க்கும் வெறியில் சொல்ல அவர்களும் அதே போல் அந்த வீட்டில் அடைபட்டிருந்த ராகவை இழுத்து வந்தனர்.
இதை எல்லாம் கண்டு கதறினாள் பவானி. " அய்யோ கடவுளே எனக்காக உதவி செய்ய போகி இப்போ அநியாயமா ரெண்டு உயிர் போக போகுதே. உனக்குலாம் கொஞ்சம் கூட இரக்கமே இல்லை. என்னைக்கு தான் நீ நல்லவர்களுக்கு கை கொடுக்க போற. எனக்கு தயவுசெய்து உதவி பண்ணு . என் அப்பா எனக்காக பன்ற தர்ப்பணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்து " ஒரு ஆவியாக கதறி அழ மனம் இறங்கி விட்டாரோ என இவளின் கதறல் அங்கு தர்ப்பணம் நடக்கும் இடத்தில் பேய் மழையாக பொழிய ஆரம்பித்து விட்டது.
எல்லாம் காற்று மழையில் பறக்க அய்யர் பவானியின் அப்பாவை பார்த்தவர் " ஐயா உங்க பொண்ணுக்கு இன்னைக்கு தர்ப்பணம் பண்ணுறது யாருக்கோ விருப்பம் இல்ல... கொஞ்சம் காலம் தள்ளி போடுங்க " என்று மட்டும் சொல்லிவிட்டு செல்ல பவானியின் தந்தை நடப்பதை புரியாமல் தவிப்போடு பார்த்தார்.
இங்கு பவானி மீண்டும் அதே சக்தியுடன் ஆத்மீ உடலுக்குள் புகுந்து கண் விழிக்க அதற்குள் வேல் ராகவ் கழுத்தில் கத்தியை வைத்தான்.
" ஒழுங்கா நீ இங்க இருந்து போகல. உன் காதலன் கழுத்து அறுத்து துடிக்க வச்சி கொல்வேன். டேய் உனக்கு உயிர் பிச்சை தரேன். ஒழுங்கா உன் காதலியை இங்க இருந்து போக சொல்லு " என்று மிரட்ட அவனோ நடப்பதை புரியாமல் பார்த்தவன்
" இவங்க யாரு. இவங்க என் பவானி இல்ல " என்றவனின் முடியை வலிக்க இழுத்த வேல்
" உன் செத்துப்போன பவானி தான் இப்போ அந்த பொண்ணு ஒடம்புல இருக்கா " என்றதில் அதிர்ந்து பார்க்க ஒரு கணம் ராகவ் கண்ணிற்கு அவனின் ஸ்னோ முகம் தெரிந்தது.
" ஸ்னோ ஸ்னோ. ஏண்டி என்ன மட்டும் விட்டு போன " என்று அழ
" அழாத ராகவ். இந்த கேடு கெட்டவன் நம்ப வாழ்க்கையையே அழிச்சிட்டான்... இவன கொன்னு உன்ன காப்பாத்த தான் வந்தேன் ராகவ். நீ வாழனும் " என்று ஆத்மீ உடலில் இருக்கும் பவானி சொல்ல
மறுப்பாக தலையசைத்த ராகவ் " நீ இல்லாம இந்த உலகத்துல இவ்ளோ நாள் நா வாழ்ந்ததே தப்பு ஸ்னோ. நானும் உன் கூடவே வரேண்டி. ஐ லவ் யூ ஸ்னோ " என்றவன் இதழில் அதே அழகான சிரிப்புடன் வேல் பாண்டியன் அவன் கழுத்தில் வைத்திருந்த கத்தியை அழுத்த ரத்தம் பீறிட்டு சரிந்து விழுந்த ராகவ் சில கணங்களிலே இறந்து போனான்.
தப்பிக்க கேடயமாக இருந்தவனும் செத்து போனதில் வேலு மிரண்டு போக பவானி நடந்த நிகழ்வில் வெறிபிடித்தவள் போல் ஆனாள்.
அருகில் இருந்த இருவரையும் கழுத்து எலும்பு உடைத்து கொன்றவள் வேல்பாண்டியனை ராகவ் சாக காரணமான கத்தியாலே சரமாரியாக கிழித்து கொடூரமாக கொன்னவள் ராகவ் உடலை கட்டி அணைத்து கதறினாள்.
"உன்னக்காக தானே இவ்ளோவும் பண்ணேன்.. நீ வாழணும்னு நெனச்சேனே. ஏன் ராகவ் இப்டி பண்ண " என்று அழ
" ஹேய் ஸ்னோ " என்ற அழகிய குரலில் திரும்பி பார்க்க ராகவ் தான் சிரித்த முகமாய் பொலிவாக நின்றான்.
அழுதவளை பார்த்து " இந்த உலகம் நமக்கு வேணாம் ஸ்னோ. வா நாம எங்கையாவது போயிருலாம் " என்று கை நீட்ட ஆத்மீ உடலில் இருந்த பவானியின் ஆவி அவளின் ராகவ் உடன் சந்தோசமாக சென்றது.
இது எல்லாம் நடந்து முடிந்த பின் தான் எழில் எல்லாரும் வந்தது. அங்கு இருந்த கோலத்தை கண்டு எல்லாரும் மிரண்டு போக ஆத்மீ ரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்டு எழில் ஆடிப்போனான்.
மேகா தான் தைரியத்தோடு அவளின் பல்ஸை தொட்டு பார்த்து உயிருடன் இருப்பதையும் மற்றவர்கள் இறந்து விட்டார்கள் எனவும் சொல்ல எழில் யாரையும் கண்டு கொள்ளாமல் ஆத்மியை தூக்கி கொண்டு காமினிக்கு விவரத்தை சொல்லி விட்டு வீட்டை நோக்கி கிளப்பினான்.
ராஜா இது மர்ம நபர் ஒருவர் திட்ட மீட்டு வேல்பாண்டியனையும் அவரின் ஆட்களையும் கொன்று விட்டார்கள் என கேஸை முடித்து விட்டான்.
எழிலும் அவனின் நண்பர்களுமே ராகவ் உடலை அடக்கம் செய்தனர்.
************** ************ *************
" இந்த நொடியில் இருந்து நீ என் சரி பாதி. எந்த கஷ்டத்திலும் சிக்கலான சூழ்நிலையிலும் உன் எழில் எப்பவும் உன் கூட இருப்பான் " என்று சொல்லியவன் தன்னை பிரமிப்பாய் விழி விரித்து பார்க்கும் ஆத்மி கழுத்தில் மூன்று முடிச்சை போட சுற்றி இருந்த இலா ருத்ரா எழிலின் தந்தை மற்றும் அவனின் நண்பர்கள் அச்சதை தூவி வாழ்த்தினர்.
எழில் சொன்னது போல் ரிஜிஸ்டர் செய்து விட்டு ஒரு சிறிய கோவிலில் மாலை மாற்றி தாலி கட்டி கொண்டனர் குடும்பத்தின் முன்னிலையில்.
எல்லாம் அழகாய் முடிய கணபதி " நாங்க அடுத்த மாசம் கல்யாணம் பண்ணிக்குலாம்னு முடிவு பண்ணிருக்கோம்... இலாம்மா நீதான்டா அப்பா கிட்ட சொல்லி சம்மதம் வாங்கணும் " என்று கெஞ்ச சிரித்த கணபதி தோழி
" நீயும் எவ்ளோ நாள் தான் சிங்கிளா இருப்பா. பொழச்சி போ " என்றதில் உற்சாகம் ஆக ருத்ரன் வேண்டுமென்றே எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக
" மச்சான் ஆரவ் உனக்கு. " என இழுக்கும் போதே சுள்ளென கோவம் ஆன ஆரவ்
" ஏன்டா ஏன். சோதிக்காதிங்கடா " என்றவன் கையோடு ஒரு கை கோர்க்க சந்தேகமாக பார்த்தான் ஆரவ்.
மேகா ஆரவ் விரலோடு விரல் கோர்த்தவள் அவனின் கண்களை பார்த்து " உன் வாழ்க்கை முழுக்க இப்டியே உன்கூட கை கோர்த்து வர ஆசைப்படுறேன். என் ஆசையை ஏற்று நிறைவேற்றுவியா '' ஏக்கம் கலந்து காதலோடு கேட்க அவளை இப்டி பார்க்காதவன் அதிர்ச்சி கலந்த சந்தோஷத்தில் இருந்தவன்
" என் மூச்சு இருக்குற வர உன் ஆசையை நிறைவேத்துவேன் " அந்த கணமே மேகா காதலுக்கு சம்மதம் சொல்ல எல்லாரும் கை தட்டி ஆர்ப்பரித்தனர்.
************* ************* ************
முதலிரவுக்காக எழில் காத்து கொண்டிருக்க ஆத்மிக்கு பதில் கணபதியும் ஆரவ்வும் வந்ததில் ஏக கடுப்பானான்.
" டேய் எருமைகளா நீங்க என்ன பற்றிங்க. வெளிய போங்கடா " என்று விரட்ட போகாத ஆரவ்
" அது எப்டி பேய ஓட்ட கூட வச்சிப்பாராம்... இப்போ தொரத்துறதா. நாங்க இங்கயே இருந்து ஏதாவது பேய் வருதான்னு பார்த்துட்டு தான் போவோம் " என்று முரண்டு பிடிக்க கணபதியும் நானும் தான் என அமர்ந்து கொள்ள எழில் காமினி மேகாவுக்கு அழைத்து விஷயத்தை சொல்லிவிட்டான்.
" மச்சான் இப்போ ரெண்டு பேய் வருங்க. சமாளிங்க " என்ற எழில் நக்கலில் இருவரும் வாசலை பார்க்க தங்களின் இணைகளை கண்டு மிரண்டு போனார்கள்.
" அய்யோ மச்சான் ஆத்மி வர வரைக்கும் உனக்கு கம்பெனி குடுக்க வந்தோம். நீ போ ன்னு சொல்லிருந்தா நாங்க போயிருப்போம். இதுக்குலாம் எதுக்கு " என்று இளித்து சமாளித்து தப்பித்தோம் பிழைத்தோம் என தெறித்து ஓட சிரித்த காமினி மேகா ஆத்மியை அறையில் விட்டுவிட்டு சென்றனர்.
ஆத்மி மெல்ல வந்து எழிலின் அருகில் சிறு புன்னகையுடன் தயக்கம் கலந்த வெட்கத்தில் அமர அவளை இழுத்து தன் மேல் போட்டு கொண்டான் எழில்.
" அய்யோ என்ன பன்ற எழில் " என்று அதிர்ந்து கேட்டவளின் முறைத்து பார்த்தவன்
" லூடோ விளையாடுறேன் வரியா. கேக்குறா கேள்வி இன்னைக்கு நமக்கு முதலிரவு ஆத்மீமா " என மடியில் இருந்தவளின் கழுத்தில் முத்தம் வைக்க கிறங்கி போனவள்
" எழில் எனக்கு ஒரு விஷயம் மட்டும் தெரிஞ்சிக்கணும். ராகவ்க்கு என்னாச்சு " என்று கேட்க அவளிடம் உண்மையை சொல்ல தயங்கியவன் மென்று முழுங்கி சொல்லியும் விட்டான்.
" அவன் செத்த பிறகும் அவன் உதடு சிரிப்போட இருந்துச்சு ஆத்மீ. அவனுக்கு அவ்ளோ சந்தோசம் சாகும் போது அவனோட பவானியை பாக்க போறேன்னு. இப்டி ஒரு காதல் சேராமல் போனது நினைக்கும் போது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு. அடுத்த ஜென்மத்திலாவது அவங்க காதல் சேரனும், எந்த பிரச்னையும் இல்லாம " என்று எழில் சொல்ல அவன் மேல் சாய்ந்து கொண்டவள் அமைதியாக கேட்டு கொண்டிருந்தாள்.
அவளின் முகத்தை பார்த்த எழில் " ஆத்மி உனக்கு விருப்பம் இல்லனா நாம இத தள்ளி வச்சுக்குலாம் " என்று சொல்ல மறுத்தவள்
" முடிஞ்சத நெனைக்குறதனால எதும் மாற போறது இல்ல. அத நெனச்சு இந்த நொடியை நா வீணடிக்க விரும்பல. ஐ லவ் யூ எழில்.என் வாழ்க்கையிலே எனக்கு கெடச்ச ஒரே சந்தோசம் நீ மட்டும் தான் " என்று கன்னம் கிள்ளி முத்தம் வைக்க அவன் அவளை மெத்தையில் தள்ளி அவளை ஆக்ரமித்தான்.
ஓய்ந்து களைத்து நடு இரவில் இருவரும் தூங்கி கொண்டிருக்க அந்த காட்டில் இருந்து வெளியேறிய அழுகிய கோர உருவம் நாலு காலால் பல்லி போல் ஊர்ந்து ஆத்மி முகம் அருகில் வர திடுக்கிட்டு விழித்தான் எழில்.
சுற்றி பார்க்க அவனின் உயிரானவள் அமைதியாக உறங்கி கொண்டிருக்கவே வெறும் கனவு என்று நினைக்கும் நேரத்தில் ஆத்மி அருகில் இருந்த ஒன்றை கண்டு மிரண்டு போனான் எழில்.
என்னதான் ஆரவ்க்கு எல்லாருக்கும் பிறகு கல்யாணம் ஆனாலும். முதலில் குழந்தை பெற்றது ஆரவ் மேகா தான். அவர்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு ராகவ் என்றும் அதன் பிறகு கணபதிக்கு பிறந்த பையனுக்கு கிஷாந்த் என்றும் கடைசியாக ஆத்மீ எழில் பெற்றெடுத்த இளம் ரோஜா மொட்டுக்கு பவானி என்றும் இறந்த காதலை புதுப்பிக்கும் வகையில் தங்கள் குழந்தைக்கு பெயர் வைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
இனி ஆத்மிக்கு எப்பேர்ப்பட்ட ஆபத்து வந்தாலும் எழில் ஒருவன் இருக்கும் வகையில் அவள் பயம் ஒன்றை பட தேவையில்லை.
வேல்பாண்டியன் பங்களாவில் நடந்தவை..
இங்கு ஆத்மி நடக்க போகும் விபரீதத்தையும் அறியாமல் அந்த கேடு கெட்டவன் இருக்கும் பங்களாவில் நுழைந்தாள்.
ரெண்டு அடியாட்கள் மட்டும் துணைக்கு வெளியே இருந்தனர். அவர்கள் ஆத்மீ வருகையை கண்டு வெறி நாய் போல் பார்க்க அந்த அருவருப்பை எல்லாம் பொறுத்து கொண்டவள் வாசலை அடையும் கணம் அவள் உடல் அதிர்ந்து நின்றது.
கண்ணெல்லாம் சிவந்து இருக்க அவள் முகம் கொஞ்சம் மாறி போய் இருந்தது. பழி தீர்க்கும் வெறியோடு ஆத்மீ உடலின் உதவியில் அந்த வீட்டினுள் நுழைந்தாள் பவானி.
முகத்தை சாந்தமாக வைத்து கொண்டு வரவேற்பறை செல்ல மேலிருந்து " மேல வாமா " என்ற சத்தம் கேட்க ஒரு சிரிப்புடன் சென்றாள் ஆத்மீ.
மேல் தளத்தில் இருக்கும் ஒரு பெரிய அறையில் அமர்ந்து மேல் சட்டை இன்றி சரக்கு அடித்து கொண்டிருந்தான் வேல்பாண்டி.
" உள்ள வரலாமா " என்று மென்மையாக கேட்டவளை போதையில் போதையாக பார்க்க பவானிக்கு கோவம் நெருப்பாக எறிந்தது.
வேல்பாண்டியோ எழுந்தவன் ஆத்மீயை நோக்கி நடந்து கொண்டே " ப்பா ரொம்ப நாளுக்கு அப்றம் இப்டி தேவதைய பாக்குறேன் " என்றவாறு கதவை லாக் செய்ய சிரித்த பவானி ஆத்மீ உருவத்தில் இருந்து தன் உருவத்திற்கு மாறியவள்
" ரொம்ப நாளுக்கு முன்னாடி கதற கதற என்ன கொன்ன மாதிரி உன்ன கொல்ல வேண்டாமா " என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பிய வேல்பாண்டி பவானியை கண்டு மிரண்டு போனார்.
" நீ நீ. " என்று வேல்பாண்டி வாய் தந்தியடிக்க சத்தமாக சிரித்த பவானி
" உன் கையால செத்து போன பவானி" என்றவள் கண்ணாலே லாக் செய்தவள் வேல்பாண்டியை நோக்கி நடக்க வேலுக்கு அல்லு ஆனது.
" என் ராகவ் எங்க. சொல்லு " என்று வெறியோடு சொன்னவள் வேல் பாண்டியனின் கழுத்தை பிடித்து சுவரிலே அவனின் தலையை மோதினாள்.
வேல்பாண்டியனின் மண்டை உடைந்து ரத்தம் வழிய அவரின் போதை எல்லாம் தெளிந்து போனது. இன்னும் கொஞ்சம் தான் மனுஷன் சாகும் நிலையில் ஆத்மி உடல் நடுங்கியது.
கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து பவானி ஆவி ஆத்மீ உடல் விட்டு வெளியேறிட மயங்கி விழுந்தாள் ஆத்மீ. அதை கண்ட வேல் இது தான் வாய்ப்பு என்று உடைந்த கட்டிலின் காலால் ஆத்மீ மண்டையிலே " டங். " என்ற சத்தத்துடன் ஓங்கி அடைக்க ரத்தம் வழிந்தது.
அதன் பின் தான் வெளியே இருக்கும் தன் ஆட்களை வேல்பாண்டியன் அழைக்க அவனுங்க நடந்த அசம்பாவிதத்தை கண்டு ஒரு கணம் மிரண்டு போனவர்கள் பின் நிதானமாகி ஆத்மீயை கட்டி வைத்தனர்.
" டேய் அந்த பயல தூக்கிட்டு வாங்கடா " என்று வழியும் ரத்தத்தையும் பொருட்படுத்தாமல் பழி தீர்க்கும் வெறியில் சொல்ல அவர்களும் அதே போல் அந்த வீட்டில் அடைபட்டிருந்த ராகவை இழுத்து வந்தனர்.
இதை எல்லாம் கண்டு கதறினாள் பவானி. " அய்யோ கடவுளே எனக்காக உதவி செய்ய போகி இப்போ அநியாயமா ரெண்டு உயிர் போக போகுதே. உனக்குலாம் கொஞ்சம் கூட இரக்கமே இல்லை. என்னைக்கு தான் நீ நல்லவர்களுக்கு கை கொடுக்க போற. எனக்கு தயவுசெய்து உதவி பண்ணு . என் அப்பா எனக்காக பன்ற தர்ப்பணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்து " ஒரு ஆவியாக கதறி அழ மனம் இறங்கி விட்டாரோ என இவளின் கதறல் அங்கு தர்ப்பணம் நடக்கும் இடத்தில் பேய் மழையாக பொழிய ஆரம்பித்து விட்டது.
எல்லாம் காற்று மழையில் பறக்க அய்யர் பவானியின் அப்பாவை பார்த்தவர் " ஐயா உங்க பொண்ணுக்கு இன்னைக்கு தர்ப்பணம் பண்ணுறது யாருக்கோ விருப்பம் இல்ல... கொஞ்சம் காலம் தள்ளி போடுங்க " என்று மட்டும் சொல்லிவிட்டு செல்ல பவானியின் தந்தை நடப்பதை புரியாமல் தவிப்போடு பார்த்தார்.
இங்கு பவானி மீண்டும் அதே சக்தியுடன் ஆத்மீ உடலுக்குள் புகுந்து கண் விழிக்க அதற்குள் வேல் ராகவ் கழுத்தில் கத்தியை வைத்தான்.
" ஒழுங்கா நீ இங்க இருந்து போகல. உன் காதலன் கழுத்து அறுத்து துடிக்க வச்சி கொல்வேன். டேய் உனக்கு உயிர் பிச்சை தரேன். ஒழுங்கா உன் காதலியை இங்க இருந்து போக சொல்லு " என்று மிரட்ட அவனோ நடப்பதை புரியாமல் பார்த்தவன்
" இவங்க யாரு. இவங்க என் பவானி இல்ல " என்றவனின் முடியை வலிக்க இழுத்த வேல்
" உன் செத்துப்போன பவானி தான் இப்போ அந்த பொண்ணு ஒடம்புல இருக்கா " என்றதில் அதிர்ந்து பார்க்க ஒரு கணம் ராகவ் கண்ணிற்கு அவனின் ஸ்னோ முகம் தெரிந்தது.
" ஸ்னோ ஸ்னோ. ஏண்டி என்ன மட்டும் விட்டு போன " என்று அழ
" அழாத ராகவ். இந்த கேடு கெட்டவன் நம்ப வாழ்க்கையையே அழிச்சிட்டான்... இவன கொன்னு உன்ன காப்பாத்த தான் வந்தேன் ராகவ். நீ வாழனும் " என்று ஆத்மீ உடலில் இருக்கும் பவானி சொல்ல
மறுப்பாக தலையசைத்த ராகவ் " நீ இல்லாம இந்த உலகத்துல இவ்ளோ நாள் நா வாழ்ந்ததே தப்பு ஸ்னோ. நானும் உன் கூடவே வரேண்டி. ஐ லவ் யூ ஸ்னோ " என்றவன் இதழில் அதே அழகான சிரிப்புடன் வேல் பாண்டியன் அவன் கழுத்தில் வைத்திருந்த கத்தியை அழுத்த ரத்தம் பீறிட்டு சரிந்து விழுந்த ராகவ் சில கணங்களிலே இறந்து போனான்.
தப்பிக்க கேடயமாக இருந்தவனும் செத்து போனதில் வேலு மிரண்டு போக பவானி நடந்த நிகழ்வில் வெறிபிடித்தவள் போல் ஆனாள்.
அருகில் இருந்த இருவரையும் கழுத்து எலும்பு உடைத்து கொன்றவள் வேல்பாண்டியனை ராகவ் சாக காரணமான கத்தியாலே சரமாரியாக கிழித்து கொடூரமாக கொன்னவள் ராகவ் உடலை கட்டி அணைத்து கதறினாள்.
"உன்னக்காக தானே இவ்ளோவும் பண்ணேன்.. நீ வாழணும்னு நெனச்சேனே. ஏன் ராகவ் இப்டி பண்ண " என்று அழ
" ஹேய் ஸ்னோ " என்ற அழகிய குரலில் திரும்பி பார்க்க ராகவ் தான் சிரித்த முகமாய் பொலிவாக நின்றான்.
அழுதவளை பார்த்து " இந்த உலகம் நமக்கு வேணாம் ஸ்னோ. வா நாம எங்கையாவது போயிருலாம் " என்று கை நீட்ட ஆத்மீ உடலில் இருந்த பவானியின் ஆவி அவளின் ராகவ் உடன் சந்தோசமாக சென்றது.
இது எல்லாம் நடந்து முடிந்த பின் தான் எழில் எல்லாரும் வந்தது. அங்கு இருந்த கோலத்தை கண்டு எல்லாரும் மிரண்டு போக ஆத்மீ ரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்டு எழில் ஆடிப்போனான்.
மேகா தான் தைரியத்தோடு அவளின் பல்ஸை தொட்டு பார்த்து உயிருடன் இருப்பதையும் மற்றவர்கள் இறந்து விட்டார்கள் எனவும் சொல்ல எழில் யாரையும் கண்டு கொள்ளாமல் ஆத்மியை தூக்கி கொண்டு காமினிக்கு விவரத்தை சொல்லி விட்டு வீட்டை நோக்கி கிளப்பினான்.
ராஜா இது மர்ம நபர் ஒருவர் திட்ட மீட்டு வேல்பாண்டியனையும் அவரின் ஆட்களையும் கொன்று விட்டார்கள் என கேஸை முடித்து விட்டான்.
எழிலும் அவனின் நண்பர்களுமே ராகவ் உடலை அடக்கம் செய்தனர்.
************** ************ *************
" இந்த நொடியில் இருந்து நீ என் சரி பாதி. எந்த கஷ்டத்திலும் சிக்கலான சூழ்நிலையிலும் உன் எழில் எப்பவும் உன் கூட இருப்பான் " என்று சொல்லியவன் தன்னை பிரமிப்பாய் விழி விரித்து பார்க்கும் ஆத்மி கழுத்தில் மூன்று முடிச்சை போட சுற்றி இருந்த இலா ருத்ரா எழிலின் தந்தை மற்றும் அவனின் நண்பர்கள் அச்சதை தூவி வாழ்த்தினர்.
எழில் சொன்னது போல் ரிஜிஸ்டர் செய்து விட்டு ஒரு சிறிய கோவிலில் மாலை மாற்றி தாலி கட்டி கொண்டனர் குடும்பத்தின் முன்னிலையில்.
எல்லாம் அழகாய் முடிய கணபதி " நாங்க அடுத்த மாசம் கல்யாணம் பண்ணிக்குலாம்னு முடிவு பண்ணிருக்கோம்... இலாம்மா நீதான்டா அப்பா கிட்ட சொல்லி சம்மதம் வாங்கணும் " என்று கெஞ்ச சிரித்த கணபதி தோழி
" நீயும் எவ்ளோ நாள் தான் சிங்கிளா இருப்பா. பொழச்சி போ " என்றதில் உற்சாகம் ஆக ருத்ரன் வேண்டுமென்றே எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக
" மச்சான் ஆரவ் உனக்கு. " என இழுக்கும் போதே சுள்ளென கோவம் ஆன ஆரவ்
" ஏன்டா ஏன். சோதிக்காதிங்கடா " என்றவன் கையோடு ஒரு கை கோர்க்க சந்தேகமாக பார்த்தான் ஆரவ்.
மேகா ஆரவ் விரலோடு விரல் கோர்த்தவள் அவனின் கண்களை பார்த்து " உன் வாழ்க்கை முழுக்க இப்டியே உன்கூட கை கோர்த்து வர ஆசைப்படுறேன். என் ஆசையை ஏற்று நிறைவேற்றுவியா '' ஏக்கம் கலந்து காதலோடு கேட்க அவளை இப்டி பார்க்காதவன் அதிர்ச்சி கலந்த சந்தோஷத்தில் இருந்தவன்
" என் மூச்சு இருக்குற வர உன் ஆசையை நிறைவேத்துவேன் " அந்த கணமே மேகா காதலுக்கு சம்மதம் சொல்ல எல்லாரும் கை தட்டி ஆர்ப்பரித்தனர்.
************* ************* ************
முதலிரவுக்காக எழில் காத்து கொண்டிருக்க ஆத்மிக்கு பதில் கணபதியும் ஆரவ்வும் வந்ததில் ஏக கடுப்பானான்.
" டேய் எருமைகளா நீங்க என்ன பற்றிங்க. வெளிய போங்கடா " என்று விரட்ட போகாத ஆரவ்
" அது எப்டி பேய ஓட்ட கூட வச்சிப்பாராம்... இப்போ தொரத்துறதா. நாங்க இங்கயே இருந்து ஏதாவது பேய் வருதான்னு பார்த்துட்டு தான் போவோம் " என்று முரண்டு பிடிக்க கணபதியும் நானும் தான் என அமர்ந்து கொள்ள எழில் காமினி மேகாவுக்கு அழைத்து விஷயத்தை சொல்லிவிட்டான்.
" மச்சான் இப்போ ரெண்டு பேய் வருங்க. சமாளிங்க " என்ற எழில் நக்கலில் இருவரும் வாசலை பார்க்க தங்களின் இணைகளை கண்டு மிரண்டு போனார்கள்.
" அய்யோ மச்சான் ஆத்மி வர வரைக்கும் உனக்கு கம்பெனி குடுக்க வந்தோம். நீ போ ன்னு சொல்லிருந்தா நாங்க போயிருப்போம். இதுக்குலாம் எதுக்கு " என்று இளித்து சமாளித்து தப்பித்தோம் பிழைத்தோம் என தெறித்து ஓட சிரித்த காமினி மேகா ஆத்மியை அறையில் விட்டுவிட்டு சென்றனர்.
ஆத்மி மெல்ல வந்து எழிலின் அருகில் சிறு புன்னகையுடன் தயக்கம் கலந்த வெட்கத்தில் அமர அவளை இழுத்து தன் மேல் போட்டு கொண்டான் எழில்.
" அய்யோ என்ன பன்ற எழில் " என்று அதிர்ந்து கேட்டவளின் முறைத்து பார்த்தவன்
" லூடோ விளையாடுறேன் வரியா. கேக்குறா கேள்வி இன்னைக்கு நமக்கு முதலிரவு ஆத்மீமா " என மடியில் இருந்தவளின் கழுத்தில் முத்தம் வைக்க கிறங்கி போனவள்
" எழில் எனக்கு ஒரு விஷயம் மட்டும் தெரிஞ்சிக்கணும். ராகவ்க்கு என்னாச்சு " என்று கேட்க அவளிடம் உண்மையை சொல்ல தயங்கியவன் மென்று முழுங்கி சொல்லியும் விட்டான்.
" அவன் செத்த பிறகும் அவன் உதடு சிரிப்போட இருந்துச்சு ஆத்மீ. அவனுக்கு அவ்ளோ சந்தோசம் சாகும் போது அவனோட பவானியை பாக்க போறேன்னு. இப்டி ஒரு காதல் சேராமல் போனது நினைக்கும் போது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு. அடுத்த ஜென்மத்திலாவது அவங்க காதல் சேரனும், எந்த பிரச்னையும் இல்லாம " என்று எழில் சொல்ல அவன் மேல் சாய்ந்து கொண்டவள் அமைதியாக கேட்டு கொண்டிருந்தாள்.
அவளின் முகத்தை பார்த்த எழில் " ஆத்மி உனக்கு விருப்பம் இல்லனா நாம இத தள்ளி வச்சுக்குலாம் " என்று சொல்ல மறுத்தவள்
" முடிஞ்சத நெனைக்குறதனால எதும் மாற போறது இல்ல. அத நெனச்சு இந்த நொடியை நா வீணடிக்க விரும்பல. ஐ லவ் யூ எழில்.என் வாழ்க்கையிலே எனக்கு கெடச்ச ஒரே சந்தோசம் நீ மட்டும் தான் " என்று கன்னம் கிள்ளி முத்தம் வைக்க அவன் அவளை மெத்தையில் தள்ளி அவளை ஆக்ரமித்தான்.
ஓய்ந்து களைத்து நடு இரவில் இருவரும் தூங்கி கொண்டிருக்க அந்த காட்டில் இருந்து வெளியேறிய அழுகிய கோர உருவம் நாலு காலால் பல்லி போல் ஊர்ந்து ஆத்மி முகம் அருகில் வர திடுக்கிட்டு விழித்தான் எழில்.
சுற்றி பார்க்க அவனின் உயிரானவள் அமைதியாக உறங்கி கொண்டிருக்கவே வெறும் கனவு என்று நினைக்கும் நேரத்தில் ஆத்மி அருகில் இருந்த ஒன்றை கண்டு மிரண்டு போனான் எழில்.
❤️முற்றும் ❤️
என்னதான் ஆரவ்க்கு எல்லாருக்கும் பிறகு கல்யாணம் ஆனாலும். முதலில் குழந்தை பெற்றது ஆரவ் மேகா தான். அவர்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு ராகவ் என்றும் அதன் பிறகு கணபதிக்கு பிறந்த பையனுக்கு கிஷாந்த் என்றும் கடைசியாக ஆத்மீ எழில் பெற்றெடுத்த இளம் ரோஜா மொட்டுக்கு பவானி என்றும் இறந்த காதலை புதுப்பிக்கும் வகையில் தங்கள் குழந்தைக்கு பெயர் வைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
இனி ஆத்மிக்கு எப்பேர்ப்பட்ட ஆபத்து வந்தாலும் எழில் ஒருவன் இருக்கும் வகையில் அவள் பயம் ஒன்றை பட தேவையில்லை.
Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 23
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் 23
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.