- Joined
- Nov 10, 2023
- Messages
- 77
- Thread Author
- #1
அத்தியாயம் 14
இப்போது ஆதிமிக்கும் பயம் இல்லை சாராவின் வாடிய முகத்தை கண்ட நொடியில். " சாரா உனக்கு என்னாச்சு? உனக்கு என்னதான் நடந்தது " என்று ஆத்மி கேட்க அவள் முகம் பார்த்து சிரித்த சாரா
" அக்கா உங்களுக்கு நா ரொம்ப கடமை பட்ருக்கேன்.. நீங்க எங்க அம்மா அப்பாவ அடக்கம் பண்ணுறேன்னு நீங்க நெனச்சது எனக்கு தெரிஞ்சிது. ரொம்ப தேங்க்ஸ் " என்று புன்னகை செய்தவள் முகம் மீண்டும் இருண்டு போனது.
அதை கண்ட ஆத்மியும் மேகாவும் ஒருவரை ஒருவர் பார்த்தவர்கள் " என்னாச்சு சாரா உனக்கு. நீ எப்டி இறந்து போன " என்று மேகா கேட்க அவளுக்கு நடந்ததை கூறினாள்.
" ரொம்ப நாளா எங்க அப்பாவுக்கு சொந்த வீடு வாங்கணும்னு ஆசை. அந்த ஆசையும் நிறைவேறுச்சு. இந்த வீடு எங்களால வாங்க முடியற அளவுக்கு அதே சமயம் பிரமாண்டமாக இருந்ததால எதுவும் விசாரிக்காம எங்க அப்பா வாங்கிட்டாங்க. அதுக்கு அப்றம் நாங்க இந்த வீட்ல சந்தோசமா இருந்தோம். அன்னைக்கு ஒரு நாள் நா ஆர்வ கோளாறுல அண்டர்கிரௌண்ட் போய் என்ன இருக்குனு பார்த்தேன். அப்டி சுத்தி பார்த்துட்டு இருக்கும் போது ஒரு பொண்ணோட குரல் கேட்டுச்சு. எனக்கு பயமா இருந்தாலும் அந்த குரல் என்ன அது பக்கம் இழுத்துட்டு போச்சு. அந்த பெட்டியை திறக்க சொல்ல நானும் அது சொன்னது மாதிரி செஞ்ச அடுத்த நொடி ஏதோ ஒன்னு எனக்குள்ள வேகமாக புகுந்துச்சு.. வலியில நா கத்துனதுல என் அம்மா அப்பா என்ன வந்து தூக்கிட்டு போட்டாங்க..
அன்னையில இருந்து நானா இல்ல. திடீர்னு வலியில கத்துவேன் அது என்ன வலின்னு கூட யாராலும் கண்டு புடிக்க முடியல. மனநலம் பாதிக்க பட்ருச்சோன்னு என்ன அந்த ஹாஸ்பிடல்ல சேர்த்தாங்க. அங்கையும் எனக்கு எந்த குறையும் இல்லனு சொல்லிட்டாங்க. ஆனா என் உடம்புல ஏற்படுற வலியை மட்டும் யாராலும் கண்டு புடிக்க முடியல. ஒரு நாள் உயிரே போகுற வலி கத்தி கதறி செத்து போனேன் வெறும் முண்டமா. என்னோட இழப்ப தாங்க முடியாம என்ன பெத்தவங்களும் விஷம் குடிச்சி செத்து போனாங்க. எல்லாம் என்னால தான் . நா மட்டும் அங்க போகாம இருந்திருந்தால் என் அப்பா அம்மா செத்திருக்க மாட்டாங்க " என்று அழ ஆத்மிக்கு மேகாவுக்கும் கேட்கவே கஷ்டமாக இருந்தது.
" நீ வருத்த படாத சாரா " என்று ஆத்மி கூற அவள் முகம் பார்த்த சாரா
" என்னால வருத்த படாம இருக்க முடியாது. என்னால இங்கையும் வாழ முடியாம மேலையும் போக முடியுமா தவிச்சிட்டு இருக்கேன் " என்று சொல்லியதில் குழம்பி போனவர்கள்
" என்ன சொல்லுற சாரா? ஏன் அப்டி " என்று மேகா கேட்க
" ஆமா நா இப்போ அந்த துர் ஆத்மா கட்டுப்பாட்டுல இருக்கேன். அது அழிஞ்சா தான் என்னால மேலோகம் போக முடியும் " என்று சொல்ல சாராவை நெருங்கிய ஆத்மி
" நீ கவலைபடாத சாரா நா உனக்கு உதவியா இருப்பேன் " என்று ஆத்மி சொல்லியதில் சிரித்த சாரா காற்றோடு மறைந்து போக பட்டென தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தாள்.
" ஆத்மி ஆர் யூ ஆல்ரயிட் " என்ற மேகா அவளுக்கு குடிக்க தண்ணீர் குடுக்க குடித்தவள்
" தேங்க்ஸ் மேகா. நீ என் கூட இருந்தது எனக்கு எவ்ளோ பலமா இருக்கு தெரியுமா. ரொம்ப " என்றவளின் வாயை பொத்தியவள்
" ச்சு. இப்போ எதுக்கு தேங்க்ஸ்ஸா சொல்ற. உன்கிட்ட அவ்ளோ ஸ்டாக் இருந்தா நீயே வச்சிக்கோ. இப்போ தூங்குலாம் வா " என்றவள் படுத்துக்கொள்ள சிரித்த ஆத்மி போத்திகொண்டு உறங்கி போனாள்.
" ஏன்டா இப்டி காலையிலே வந்து என் உயிர வாங்குற. உனக்குலாம் வேலையே இல்லையா " என்று காலையிலே ஹோட்டல் வந்த கடுப்பில் ஆரவை திட்டி கொண்டிருந்தான் கணபதி. அது எல்லாம் அவன் காதில் விழுந்தால் தானே. நேத்து கன்னத்தில் ஒருத்தி அடித்து எழில் அறைக்கு போனாளே அவளின் நினைவில் தானே இருந்தான்.
அதான் காலையிலே எழிலை பார்க்க கணபதியை அழைக்க வந்துவிட்டான் ஆரவ். " என்ன மச்சி இதுலாம் ஒரு ஹோட்டல்னு இதுல இவ்ளோ பேரு வேற " என்ற ஆரவை முறைத்தவன்
" டேய் இவ்ளோ பேர் இங்க வரங்கான்னா நா வேர்வை சிந்தி சமைச்சிருக்கேன் " என்று கணபதி சொல்லியதில் அஷ்டகோணலாய் முகத்தை வைத்த ஆரவ்
" கருமம் கருமம் வேர்வை போட்டா சமைக்கிற. இது தெரியாம இவ்ளோ பேர் உன்ன நம்பி சாப்பிடுறாங்களே " என்றதில் அதிர்ந்து போன கணபதி இன்னும் கொஞ்ச நேரம் விட்டால் கடையை இழுத்து மூடிடுவான் என ஒருவனிடம் சொல்லிவிட்டு ஆரவை இழுத்து கொண்டு வெளியேறி விட்டான் கணபதி.
************ ********** ************
அனுமதி இல்லாமல் அடாவடியாக நுழைந்த ஆரவையும் கணபதியையும் முறைத்து பார்த்தாள் ஆத்மீ அருகில் இருந்த மேகா.
எழில் நண்பர்களை வரவேற்றவன் மேகாவிடம் " மேகா இவங்க என் பிரண்ட்ஸ் ஆரவ் அண்ட் கணபதி. டேய் இவங்க ஆத்மியோட கசின் மேகமலர் " என்று எழில் சொன்னதும் வாய் பொத்தி சிரித்த ஆரவ்
" டேய் மச்சி நேசமலர் தங்கச்சிடா " என்று கணபதியிடம் சொல்லி ஐ பை போட, பல்லை கடித்த மேகா ஆரவ் அருகில் வந்தவள் அவனிடம் என்ன சொன்னாளோ விழி பிதுங்கி நின்றான் ஆரவ்.
" ஓகே ஆத்மி நா ஈவினிங் வந்து உன்ன பிக்கப் பண்ணிக்கிறேன். எழில் சார் பாத்துக்கோங்க. அப்றம் மாங்காஸ் பாய் " என்றவள் சிரித்து கொண்டே வெளியேற ஆரவ் தான் சிலையாக இருந்தான்.
" என்கிட்டையே உன்ன பார்த்துக்க சொல்லிட்டு போறா. எனக்கு பார்த்துக்க தெரியாதா " என்றதில் சிரித்தவள்
" அவளுக்கு என் மேல அதிக பாசம். அதான் ஒரு அக்கறையில சொல்லிட்டு போறா " என்றவளை முறைத்தவன்
" டேய் என்னடா இவன் இப்டி ஆப் ஆகி நிக்குறான் " என்று எழில் கேட்க
" அதான் மச்சி எனக்கும் தெரியல. அந்த புள்ள என்ன சொன்னுச்சோ ஓட்ட ரேடியோ மாதிரி பேசுனவன் இப்போ இப்டி ஆப் ஆகி நிக்குறான் என்றவன் ஆரவிடம்
" அடேய் அப்டி அவ என்னதான்டா சொன்னா. கரண்ட் ஷாக் அடிச்ச காக்கா மாதிரி நிக்குற " என்று கத்தியதில் நிகழ்வுக்கு வந்தவன் அதே அதிர்ச்சி மாறாமல்
" மச்சி அவ சரியான ஜீன்ஸ் போட்ட சொர்ணாடா. அவ பேர் கிண்டல் பண்ணதுக்கு..இன்னொரு முறை இப்டி பண்ணா உன் பேம்பர்ஸ் போட்ட போட்டோவ மாடிபை பண்ணி நியூஸ் சேனல்னு போட்டுருவேன்னு சொல்லிட்டா மச்சி.. நீயே சொல்லு இப்போ என்ன பேம்பர்ஸ்ல பார்த்தா எப்டி இருக்கும்" என்று கலக்கமாக கேட்க
" நெனச்சி பார்க்கும் போதே நாராசமா இருக்கு . இதுல நேரா பார்த்தா கன்றாவியா இருக்கும் மச்சி " என்று கணபதி சொல்லவே
" அம்மே. " என அழ அவனை அனைத்து ஆறுதல் படுத்தினான் கணபதி. எழில் இருவரையும் கண்டு தலையில் அடித்து கொண்டவன் அவனின் வேலையை பார்க்க சென்று விட்டான்.
இங்கு ஆத்மி ஒரு பேஷண்டின் உடல்நிலையை செக் செய்து கொண்டிருந்தாள்.
"ம்ம்ம் குட் ஒழுங்கா சாப்ட்டு சரியா டேப்லெட் போட்டினா சீக்கிரம் நீ வீட்டுக்கு போலாம் " என்றவளை வெறித்து பார்த்தான் அவன்.
ஆத்மி குழம்பி போனவள் அவன் முகம் பார்க்க அவனோ ஆத்மியை பார்ப்பது பின்னால் பார்ப்பது என விழி விரித்து பார்க்க விளங்காமல் நிமிர்ந்து பார்க்க முன்னால் இருந்த கண்ணாடி வழியாக அவள் கண்ட காட்சியில் மிரண்டு போனாள் ஆத்மி.
அவள் பின்னால் வெறியோடு தலை வச்ச தாய்க்கிழவி தான் பறந்து கொண்டு இருக்க திகிலாகி போனவள் உணர்ச்சியற்று இருந்தவளை சரியாக எழில் வந்து அழைத்து போனான்.
அலுவலகம் சென்ற மேகாவுக்கு மனம் ஒருமாதிரியாக இருக்கவே எழிலை அழைத்து ஆத்மீயை பார்க்க சொன்னாள். அதே போல் தான் எழில் வந்தவன் அவன் கண்ட காட்சியில் ஆடிப்போனான். ஆனால் அவன் அந்த உருவம் கண்டு மிரண்டு போகவில்லை.
இதற்குமேலும் பொறுமையாக இருக்க விரும்பவில்லை எழில். குறுக்கும் நெடுக்குமாக நடந்தவன் அவனின் நண்பர்கள் புறம் திரும்பி " நீங்க எனக்கு ஒன்னு பண்ணனும் " என்று சொல்ல ஒருவரை ஒருவர் பார்த்தவர்கள்
" என்ன உதவி மச்சான் " என்று கேட்ட குத்தத்திற்காக இருவரையும் பார்த்தவன்
" எனக்கு அந்த தலை பேயோட முடி வேனும். அது இல்லாம அந்த ஆவியை அழிக்க முடியாது " என்று சொன்னதில் ஆரவ் மயங்கியே விழ அரண்டு போன கணபதியோ
" டேய் அது என்ன மைக்கில் ஜாக்சன் விக்கா வச்சிருக்கு. முடி வேணும்னு கேக்குற " என்று ஆரவ் பயந்து சொல்ல
" நா அத எடுத்து வரேன் " என்றது ஒரு குரல்...
" யாருடா அந்த கிராஸ் டாக் " என்ற கணபதி பின்னால் பார்க்க மேகா தான் வந்திருந்தாள். ஆத்மிக்கு ஆபத்து என தெரிந்ததுமே ஓடி வந்து விட்டாள் மேகா.
" நா என் ஆத்மிக்காக எதுவேனாலும் பண்ண ரெடி " என்றவள் சொன்னதில் அதிர்ந்த ஆத்மி " ஆர் யூ மேட்.. இது ஒன்னும் பூ பறிக்கிற விஷயம் இல்ல. அதால உனக்கு எதாச்சும் ஆபத்து வந்துச்சுனா " என்று பதறி போனாள்.
" அதுக்கு இன்னொரு வழி இருக்கு. அது பவானி அண்ட் சாரா கண்டிப்பா அவங்களால நமக்கு ஹெல்ப் பண்ண முடியும் " என்று எழில் சொல்ல புரியாமல் பார்த்த ஆத்மி
" அது இருக்கட்டும் உனக்கு யாரு இதெல்லாம் சொன்னது " என்று கேட்கவே நேற்று இரவு நடந்ததை கூறினான் எழில்.
*********** ************ ************
நேற்று இரவு எழில் மீண்டும் அந்த வீட்டை பார்க்க சென்றான். பவானி உதவியுடன். இருவரும் அந்த வீட்டில் வித்தியாசமானதாக இருக்கிறதா என பார்த்து கொண்டிருக்கும் போது பவானி அழைக்கவே அவளின் குரல் வந்த திசைக்கு சென்றான்.
இருவரும் நின்றிருந்தது அந்த வீட்டின் அண்டர்கிரௌண்ட் தான். அவர்களுக்கு முன் இருந்த பெட்டியை தடவி பார்த்த பவானிக்கு ஒரு சில விஷயங்கள் தெரிந்தது. அதும் அந்த பெட்டி முழுவதும் ஒரு சில அரபு மந்திர வார்த்தைகள் பதிக்க பட்டிருப்பதையும் கண்டவள் ஓரளவு என்ன நடந்தது என ஊகித்து விட்டாள்.
" என்னாச்சு பவானி. உனக்கு எதாவது தெரிஞ்சதா " என்று எழில் கேட்க அவன் முகம் பார்த்தவள்
" எழில் இந்த காட்டு பகுதியில சுத்திட்டு இருந்த சூன்ய ஆவி இந்த வீட்ல முதல்ல இருந்த ஒரு பொண்ணோட உடல ஆக்கிரமிச்சிருச்சி... விஷயம் வெளிய தெரிய கூடாதுனு அந்த பொண்ணோட கணவர் ஆவி இருந்த தலையை மட்டும் இந்த மந்திர வார்த்தைகள் பதிந்த பெட்டிக்குள் அடைச்சிருக்கான். அது தெரியாம அந்த பொண்ணு விடுவிச்சதால அந்த ஆவி அந்த பொண்ண அபகரிச்சிடுச்சி எழில். இனி அந்த ஆவியை முழுசா அழிக்கணும்னா சாரா உடலோட அந்த ஆவி இருக்குற தலை முடியும் இருந்தா தான் நாம நெனச்சது நடக்கும் " என்று பவானி தனக்கு தெரிந்ததை சொல்லவே யோசித்தவன்
" அத அழிக்க நீ சொன்னதே பண்ணியே ஆகணும்னா. கண்டிப்பா அது பண்ணுலாம் " என்றவன் அந்த வீட்டை விட்டு வெளியேறினான்.
இப்போது ஆதிமிக்கும் பயம் இல்லை சாராவின் வாடிய முகத்தை கண்ட நொடியில். " சாரா உனக்கு என்னாச்சு? உனக்கு என்னதான் நடந்தது " என்று ஆத்மி கேட்க அவள் முகம் பார்த்து சிரித்த சாரா
" அக்கா உங்களுக்கு நா ரொம்ப கடமை பட்ருக்கேன்.. நீங்க எங்க அம்மா அப்பாவ அடக்கம் பண்ணுறேன்னு நீங்க நெனச்சது எனக்கு தெரிஞ்சிது. ரொம்ப தேங்க்ஸ் " என்று புன்னகை செய்தவள் முகம் மீண்டும் இருண்டு போனது.
அதை கண்ட ஆத்மியும் மேகாவும் ஒருவரை ஒருவர் பார்த்தவர்கள் " என்னாச்சு சாரா உனக்கு. நீ எப்டி இறந்து போன " என்று மேகா கேட்க அவளுக்கு நடந்ததை கூறினாள்.
" ரொம்ப நாளா எங்க அப்பாவுக்கு சொந்த வீடு வாங்கணும்னு ஆசை. அந்த ஆசையும் நிறைவேறுச்சு. இந்த வீடு எங்களால வாங்க முடியற அளவுக்கு அதே சமயம் பிரமாண்டமாக இருந்ததால எதுவும் விசாரிக்காம எங்க அப்பா வாங்கிட்டாங்க. அதுக்கு அப்றம் நாங்க இந்த வீட்ல சந்தோசமா இருந்தோம். அன்னைக்கு ஒரு நாள் நா ஆர்வ கோளாறுல அண்டர்கிரௌண்ட் போய் என்ன இருக்குனு பார்த்தேன். அப்டி சுத்தி பார்த்துட்டு இருக்கும் போது ஒரு பொண்ணோட குரல் கேட்டுச்சு. எனக்கு பயமா இருந்தாலும் அந்த குரல் என்ன அது பக்கம் இழுத்துட்டு போச்சு. அந்த பெட்டியை திறக்க சொல்ல நானும் அது சொன்னது மாதிரி செஞ்ச அடுத்த நொடி ஏதோ ஒன்னு எனக்குள்ள வேகமாக புகுந்துச்சு.. வலியில நா கத்துனதுல என் அம்மா அப்பா என்ன வந்து தூக்கிட்டு போட்டாங்க..
அன்னையில இருந்து நானா இல்ல. திடீர்னு வலியில கத்துவேன் அது என்ன வலின்னு கூட யாராலும் கண்டு புடிக்க முடியல. மனநலம் பாதிக்க பட்ருச்சோன்னு என்ன அந்த ஹாஸ்பிடல்ல சேர்த்தாங்க. அங்கையும் எனக்கு எந்த குறையும் இல்லனு சொல்லிட்டாங்க. ஆனா என் உடம்புல ஏற்படுற வலியை மட்டும் யாராலும் கண்டு புடிக்க முடியல. ஒரு நாள் உயிரே போகுற வலி கத்தி கதறி செத்து போனேன் வெறும் முண்டமா. என்னோட இழப்ப தாங்க முடியாம என்ன பெத்தவங்களும் விஷம் குடிச்சி செத்து போனாங்க. எல்லாம் என்னால தான் . நா மட்டும் அங்க போகாம இருந்திருந்தால் என் அப்பா அம்மா செத்திருக்க மாட்டாங்க " என்று அழ ஆத்மிக்கு மேகாவுக்கும் கேட்கவே கஷ்டமாக இருந்தது.
" நீ வருத்த படாத சாரா " என்று ஆத்மி கூற அவள் முகம் பார்த்த சாரா
" என்னால வருத்த படாம இருக்க முடியாது. என்னால இங்கையும் வாழ முடியாம மேலையும் போக முடியுமா தவிச்சிட்டு இருக்கேன் " என்று சொல்லியதில் குழம்பி போனவர்கள்
" என்ன சொல்லுற சாரா? ஏன் அப்டி " என்று மேகா கேட்க
" ஆமா நா இப்போ அந்த துர் ஆத்மா கட்டுப்பாட்டுல இருக்கேன். அது அழிஞ்சா தான் என்னால மேலோகம் போக முடியும் " என்று சொல்ல சாராவை நெருங்கிய ஆத்மி
" நீ கவலைபடாத சாரா நா உனக்கு உதவியா இருப்பேன் " என்று ஆத்மி சொல்லியதில் சிரித்த சாரா காற்றோடு மறைந்து போக பட்டென தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தாள்.
" ஆத்மி ஆர் யூ ஆல்ரயிட் " என்ற மேகா அவளுக்கு குடிக்க தண்ணீர் குடுக்க குடித்தவள்
" தேங்க்ஸ் மேகா. நீ என் கூட இருந்தது எனக்கு எவ்ளோ பலமா இருக்கு தெரியுமா. ரொம்ப " என்றவளின் வாயை பொத்தியவள்
" ச்சு. இப்போ எதுக்கு தேங்க்ஸ்ஸா சொல்ற. உன்கிட்ட அவ்ளோ ஸ்டாக் இருந்தா நீயே வச்சிக்கோ. இப்போ தூங்குலாம் வா " என்றவள் படுத்துக்கொள்ள சிரித்த ஆத்மி போத்திகொண்டு உறங்கி போனாள்.
" ஏன்டா இப்டி காலையிலே வந்து என் உயிர வாங்குற. உனக்குலாம் வேலையே இல்லையா " என்று காலையிலே ஹோட்டல் வந்த கடுப்பில் ஆரவை திட்டி கொண்டிருந்தான் கணபதி. அது எல்லாம் அவன் காதில் விழுந்தால் தானே. நேத்து கன்னத்தில் ஒருத்தி அடித்து எழில் அறைக்கு போனாளே அவளின் நினைவில் தானே இருந்தான்.
அதான் காலையிலே எழிலை பார்க்க கணபதியை அழைக்க வந்துவிட்டான் ஆரவ். " என்ன மச்சி இதுலாம் ஒரு ஹோட்டல்னு இதுல இவ்ளோ பேரு வேற " என்ற ஆரவை முறைத்தவன்
" டேய் இவ்ளோ பேர் இங்க வரங்கான்னா நா வேர்வை சிந்தி சமைச்சிருக்கேன் " என்று கணபதி சொல்லியதில் அஷ்டகோணலாய் முகத்தை வைத்த ஆரவ்
" கருமம் கருமம் வேர்வை போட்டா சமைக்கிற. இது தெரியாம இவ்ளோ பேர் உன்ன நம்பி சாப்பிடுறாங்களே " என்றதில் அதிர்ந்து போன கணபதி இன்னும் கொஞ்ச நேரம் விட்டால் கடையை இழுத்து மூடிடுவான் என ஒருவனிடம் சொல்லிவிட்டு ஆரவை இழுத்து கொண்டு வெளியேறி விட்டான் கணபதி.
************ ********** ************
அனுமதி இல்லாமல் அடாவடியாக நுழைந்த ஆரவையும் கணபதியையும் முறைத்து பார்த்தாள் ஆத்மீ அருகில் இருந்த மேகா.
எழில் நண்பர்களை வரவேற்றவன் மேகாவிடம் " மேகா இவங்க என் பிரண்ட்ஸ் ஆரவ் அண்ட் கணபதி. டேய் இவங்க ஆத்மியோட கசின் மேகமலர் " என்று எழில் சொன்னதும் வாய் பொத்தி சிரித்த ஆரவ்
" டேய் மச்சி நேசமலர் தங்கச்சிடா " என்று கணபதியிடம் சொல்லி ஐ பை போட, பல்லை கடித்த மேகா ஆரவ் அருகில் வந்தவள் அவனிடம் என்ன சொன்னாளோ விழி பிதுங்கி நின்றான் ஆரவ்.
" ஓகே ஆத்மி நா ஈவினிங் வந்து உன்ன பிக்கப் பண்ணிக்கிறேன். எழில் சார் பாத்துக்கோங்க. அப்றம் மாங்காஸ் பாய் " என்றவள் சிரித்து கொண்டே வெளியேற ஆரவ் தான் சிலையாக இருந்தான்.
" என்கிட்டையே உன்ன பார்த்துக்க சொல்லிட்டு போறா. எனக்கு பார்த்துக்க தெரியாதா " என்றதில் சிரித்தவள்
" அவளுக்கு என் மேல அதிக பாசம். அதான் ஒரு அக்கறையில சொல்லிட்டு போறா " என்றவளை முறைத்தவன்
" டேய் என்னடா இவன் இப்டி ஆப் ஆகி நிக்குறான் " என்று எழில் கேட்க
" அதான் மச்சி எனக்கும் தெரியல. அந்த புள்ள என்ன சொன்னுச்சோ ஓட்ட ரேடியோ மாதிரி பேசுனவன் இப்போ இப்டி ஆப் ஆகி நிக்குறான் என்றவன் ஆரவிடம்
" அடேய் அப்டி அவ என்னதான்டா சொன்னா. கரண்ட் ஷாக் அடிச்ச காக்கா மாதிரி நிக்குற " என்று கத்தியதில் நிகழ்வுக்கு வந்தவன் அதே அதிர்ச்சி மாறாமல்
" மச்சி அவ சரியான ஜீன்ஸ் போட்ட சொர்ணாடா. அவ பேர் கிண்டல் பண்ணதுக்கு..இன்னொரு முறை இப்டி பண்ணா உன் பேம்பர்ஸ் போட்ட போட்டோவ மாடிபை பண்ணி நியூஸ் சேனல்னு போட்டுருவேன்னு சொல்லிட்டா மச்சி.. நீயே சொல்லு இப்போ என்ன பேம்பர்ஸ்ல பார்த்தா எப்டி இருக்கும்" என்று கலக்கமாக கேட்க
" நெனச்சி பார்க்கும் போதே நாராசமா இருக்கு . இதுல நேரா பார்த்தா கன்றாவியா இருக்கும் மச்சி " என்று கணபதி சொல்லவே
" அம்மே. " என அழ அவனை அனைத்து ஆறுதல் படுத்தினான் கணபதி. எழில் இருவரையும் கண்டு தலையில் அடித்து கொண்டவன் அவனின் வேலையை பார்க்க சென்று விட்டான்.
இங்கு ஆத்மி ஒரு பேஷண்டின் உடல்நிலையை செக் செய்து கொண்டிருந்தாள்.
"ம்ம்ம் குட் ஒழுங்கா சாப்ட்டு சரியா டேப்லெட் போட்டினா சீக்கிரம் நீ வீட்டுக்கு போலாம் " என்றவளை வெறித்து பார்த்தான் அவன்.
ஆத்மி குழம்பி போனவள் அவன் முகம் பார்க்க அவனோ ஆத்மியை பார்ப்பது பின்னால் பார்ப்பது என விழி விரித்து பார்க்க விளங்காமல் நிமிர்ந்து பார்க்க முன்னால் இருந்த கண்ணாடி வழியாக அவள் கண்ட காட்சியில் மிரண்டு போனாள் ஆத்மி.
அவள் பின்னால் வெறியோடு தலை வச்ச தாய்க்கிழவி தான் பறந்து கொண்டு இருக்க திகிலாகி போனவள் உணர்ச்சியற்று இருந்தவளை சரியாக எழில் வந்து அழைத்து போனான்.
அலுவலகம் சென்ற மேகாவுக்கு மனம் ஒருமாதிரியாக இருக்கவே எழிலை அழைத்து ஆத்மீயை பார்க்க சொன்னாள். அதே போல் தான் எழில் வந்தவன் அவன் கண்ட காட்சியில் ஆடிப்போனான். ஆனால் அவன் அந்த உருவம் கண்டு மிரண்டு போகவில்லை.
இதற்குமேலும் பொறுமையாக இருக்க விரும்பவில்லை எழில். குறுக்கும் நெடுக்குமாக நடந்தவன் அவனின் நண்பர்கள் புறம் திரும்பி " நீங்க எனக்கு ஒன்னு பண்ணனும் " என்று சொல்ல ஒருவரை ஒருவர் பார்த்தவர்கள்
" என்ன உதவி மச்சான் " என்று கேட்ட குத்தத்திற்காக இருவரையும் பார்த்தவன்
" எனக்கு அந்த தலை பேயோட முடி வேனும். அது இல்லாம அந்த ஆவியை அழிக்க முடியாது " என்று சொன்னதில் ஆரவ் மயங்கியே விழ அரண்டு போன கணபதியோ
" டேய் அது என்ன மைக்கில் ஜாக்சன் விக்கா வச்சிருக்கு. முடி வேணும்னு கேக்குற " என்று ஆரவ் பயந்து சொல்ல
" நா அத எடுத்து வரேன் " என்றது ஒரு குரல்...
" யாருடா அந்த கிராஸ் டாக் " என்ற கணபதி பின்னால் பார்க்க மேகா தான் வந்திருந்தாள். ஆத்மிக்கு ஆபத்து என தெரிந்ததுமே ஓடி வந்து விட்டாள் மேகா.
" நா என் ஆத்மிக்காக எதுவேனாலும் பண்ண ரெடி " என்றவள் சொன்னதில் அதிர்ந்த ஆத்மி " ஆர் யூ மேட்.. இது ஒன்னும் பூ பறிக்கிற விஷயம் இல்ல. அதால உனக்கு எதாச்சும் ஆபத்து வந்துச்சுனா " என்று பதறி போனாள்.
" அதுக்கு இன்னொரு வழி இருக்கு. அது பவானி அண்ட் சாரா கண்டிப்பா அவங்களால நமக்கு ஹெல்ப் பண்ண முடியும் " என்று எழில் சொல்ல புரியாமல் பார்த்த ஆத்மி
" அது இருக்கட்டும் உனக்கு யாரு இதெல்லாம் சொன்னது " என்று கேட்கவே நேற்று இரவு நடந்ததை கூறினான் எழில்.
*********** ************ ************
நேற்று இரவு எழில் மீண்டும் அந்த வீட்டை பார்க்க சென்றான். பவானி உதவியுடன். இருவரும் அந்த வீட்டில் வித்தியாசமானதாக இருக்கிறதா என பார்த்து கொண்டிருக்கும் போது பவானி அழைக்கவே அவளின் குரல் வந்த திசைக்கு சென்றான்.
இருவரும் நின்றிருந்தது அந்த வீட்டின் அண்டர்கிரௌண்ட் தான். அவர்களுக்கு முன் இருந்த பெட்டியை தடவி பார்த்த பவானிக்கு ஒரு சில விஷயங்கள் தெரிந்தது. அதும் அந்த பெட்டி முழுவதும் ஒரு சில அரபு மந்திர வார்த்தைகள் பதிக்க பட்டிருப்பதையும் கண்டவள் ஓரளவு என்ன நடந்தது என ஊகித்து விட்டாள்.
" என்னாச்சு பவானி. உனக்கு எதாவது தெரிஞ்சதா " என்று எழில் கேட்க அவன் முகம் பார்த்தவள்
" எழில் இந்த காட்டு பகுதியில சுத்திட்டு இருந்த சூன்ய ஆவி இந்த வீட்ல முதல்ல இருந்த ஒரு பொண்ணோட உடல ஆக்கிரமிச்சிருச்சி... விஷயம் வெளிய தெரிய கூடாதுனு அந்த பொண்ணோட கணவர் ஆவி இருந்த தலையை மட்டும் இந்த மந்திர வார்த்தைகள் பதிந்த பெட்டிக்குள் அடைச்சிருக்கான். அது தெரியாம அந்த பொண்ணு விடுவிச்சதால அந்த ஆவி அந்த பொண்ண அபகரிச்சிடுச்சி எழில். இனி அந்த ஆவியை முழுசா அழிக்கணும்னா சாரா உடலோட அந்த ஆவி இருக்குற தலை முடியும் இருந்தா தான் நாம நெனச்சது நடக்கும் " என்று பவானி தனக்கு தெரிந்ததை சொல்லவே யோசித்தவன்
" அத அழிக்க நீ சொன்னதே பண்ணியே ஆகணும்னா. கண்டிப்பா அது பண்ணுலாம் " என்றவன் அந்த வீட்டை விட்டு வெளியேறினான்.
Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 14
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் 14
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.